Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2 கைகளையும் இழந்த மாணவி சாதனை

Featured Replies

hand5wf.th.jpg

2 கைகளையும் இழந்த மாணவி மாளவிகா 1137 மார்க் எடுத்து சாதனை

ஐ.ஏ.எஸ். படிக்க விரும்புகிறார்

சென்னை, மே 23-

குண்டடிபட்டு 2 கைகளையும் இழந்த ஒரு மாணவி பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1137 மார்க் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

`உடலில் ஏற்பட்ட ஊனங்கள் ஊனமல்ல' என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் மாணவி மாளவிகா.

குண்டு வெடித்தது

கும்பகோணத்தைச் சேர்ந்தவர் மாளவிகா. இவருடைய தந்தை கிருஷ்ணன் ராஜஸ்தானில் குடிநீர் வாரியத்தில் என்ஜினீயராக பணிபுரிகிறார். இதனால் மாளவிகா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை மற்றும் தாய் ஹேமமாலினியுடன் ராஜஸ்தானில் வசித்து வந்தார்.

அப்போது ராணுவத்தினர் பயிற்சியின் போது பயன்படுத்திய பெரிய வெடிகுண்டு ஒன்று தவறி மாளவிகாவின் வீட்டருகே விழுந்தது. அதை வீட்டில் எடுத்து வைத்திருந்த மாளவிகா, 8 மாதங்கள் கழித்து பந்தாக நினைத்து விளையாடிய போது திடீரென்று வெடித்தது.

ஊனத்தை வென்றவர்

இந்த விபத்தில் மாளவிகா துரதிருஷ்டவசமாக தனது 2 கைகளையும் இழந்தார். இதனால் படிப்பு பாதிக்கப்பட்டது. இருந்தாலும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அளித்த ஊக்கத்தின் காரணமாக மாளவிகா மனம் தளராமல் படித்து சாதித்துக் காட்ட முடிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து சென்னை செனாய்நகரில் உள்ள அருள் கோச்சிங் சென்டரில் படித்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார். அதில் 500-க்கு 483 மார்க் எடுத்து சாதனை புரிந்தார். கணிதத்தில் 100-க்கு 100 மார்க் எடுத்தார். இந்த சாதனை அவருக்கு மேலும் ஊக்கம்

தந்தது.பிளஸ்-2 தேர்வில் சாதனை

பின்னர் சென்னை அண்ணாநகரில் உள்ள ஆதர்ஸ் பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படித்தார். பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1137 மார்க் எடுத்துள்ளார். வணிகவியலில் 200-க்கு 200 எடுத்து சாதனை படைத்துள்ளார். சமஸ்கிருதத்தில் 198, ஆங்கிலத்தில் 182, பொருளாதாரம் 175, அக்கவுண்டன்சி 192, வர்த்தகக் கணிதம் 190 மார்க் பெற்றுள்ளார்.

அதிக மார்க் எடுத்து சாதனை படைத்தது பற்றி மாளவிகா கூறியதாவது:-

ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேன்

கைகளை நான் இழந்த போதும் நம்பிக்கையை இழக்கவில்லை. செயற்கை கைகளை பொருத்தி வாழ்கிறேன். என்னால் இரு கைகளாலும் எழுத முடியும். ஆனால், நீண்ட நேரம் எழுதினால் கைகள் வலிக்கும். எனவே, பிளஸ்-2 தேர்வில் வர்த்தகக் கணிதத் தேர்வை மட்டும் நான் எழுதினேன். மற்ற அனைத்து தேர்வுகளையும் தனி உதவியாளரை (ஸ்கிரைப்) வைத்து எழுதினேன்.

எனது நம்பிக்கை வீண் போகாமல் நல்ல மார்க் கிடைத்துள்ளது. அடுத்தகட்டமாக சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படிக்க இருக்கிறேன். பின்னர் ï.பி.எஸ்.சி. தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவதே எனது லட்சியம்.

இவ்வாறு மாளவிகா கூறினார். இவரது சாதனையை ஆசிரியர்களும் பொது மக்களும் வெகுவாகப் பாராட்டினர்.

டென்னிஸ் வீரர்

இதுபோல் மாநில மற்றும் தேசிய டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர் தாரிக் ஜேக்கப்பும் பள்ளி செல்லாமல் தனித் தேர்வராக இருந்து தேர்வு எழுதி சாதனை படைத்துள்ளார். இவர் 1200-க்கு 1083 மார்க் பெற்றுள்ளார்.

வளர்மதி பரிசு

சென்னை நங்கநல்லூரில் உள்ள பிரின்ஸ் மெட்ரிக் பள்ளிக் கூட மாணவர் பரத்ராம் 1200-க்கு 1180 மார்க் பெற்று மாநிலத்தில் முதல் இடம் பிடித்தார். இதற்காக இவருக்கு முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி 5 ஆயிரம் ரூபாயை பரிசாக வழங்கினார்.

இது தவிர மேலும் நன்றாக படித்து வாழ்க்கையில் உயர்ந்து காட்ட வேண்டும் என்று பரத்ராமுக்கு பா.வளர்மதி வாழ்த்துத் தெரிவித்தார். வேறு எப்படிப்பட்ட உதவி தேவை என்றாலும் தன்னை தாராளமாக அணுகி கேட்கலாம் என்றும் உறுதி அளித்தார். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இது போன்ற உதவிகளை எப்போதும் மக்களுக்கு செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி இருப்பதாக மாணவர் பரத்ராமிடமும், அவரது பெற்றோரிடமும் பா.வளர்மதி கூறினார்.

சாதனை

சென்னை கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 4 பேர், பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் (ரேங்க்) பெற்றுள்ளனர்.

இந்த பள்ளியìல் படித்த விவேக் சந்தீப் மற்றும் சாந்த பிரகாஷ் ஆகிய மாணவர்கள் 1,179 மதிப்பெண்கள் பெற்று மொத்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் பட்டியலில், மாநிலத்தில் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

இதே பள்ளியைசë சேர்ந்த மாணவி சுஜாதா மற்றும் மாணவர் அருண்குமார் ஆகியோர் உயிரியல் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று அந்த பாடத்தில் மாநிலத்தில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே அளவு மொத்த மதிப்பெண்களையே (1,167) பெற்றுள்ளனர்.

அதாவது, ஒரே பள்ளியில் 4 மாணவர்கள் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

மு.வரதராசனாரின் கொள்ளுப்பேரன்

சென்னை அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மாணவர் ஏ.பி. நவீன் கணக்கு பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு. வரதராசனாரின் கொள்ளுப்பேரன் ஆவார்.

பிளஸ்-2 தேர்வில் சென்னை முத்துகுமாரசாமி தேவஸ்தானம் இந்து மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 90 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த பள்ளியின் முதல் மாணவி கே. சசிகலா 1200-க்கு 1105 மதிப்பெண்களும், 2-வது இடம் பெற்ற மாணவர் ஏ.ஆர்.ராஜ்குமார் 1051 மதிப்பெண்களும் பெற்று உள்ளனர். தமிழ், ஆங்கிலம், பொருளியல், கணக்கு பதிவியல், வணிகவியல், சிறப்பு தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளில் இந்த பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

ஊனத்தை வென்ற மாணவி மாளவிகா நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக எங்கள் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்

இந்த மாணவியின் பெற்றோருக்கும் எம் வாழ்த்துக்கள்

:wink: :wink: :wink: :wink:

hand5wf.th.jpg

மாணவி மாளவிகாவிற்க்கு வாழ்த்துக்கள்....!

கைகளை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை என்று மாணவி மாளவிகா நிரூபித்துள்ளார். அவருக்கும் அவரது பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

மாணவி மாளவிகா பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் நோய்நொடியின்றி வாழ வாழ்த்துக்கள்.

குண்டை எடுத்து பந்து என நினைச்சு விளையாடி ................ பாவம் :cry:

ஊனம் ஊனம் ஊனமில்லிங்கோ உடம்பிலுள்ள ஊனம் எல்லாம் ஊனமில்லிங்கோ. என்ற பாட்டு தான் ஞாபகம் வருது. ஊனத்தை ஒரு குறையாக நினைக்காது நம்பிக்கையுடன் போராடி வெற்றி பெற்ற மாணவி மாளவிகாக்கு எனது வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உடலில் சிறு குறையிருந்தாலும் சாதனை செய்த மாணவிக்கு வாழ்த்துக்கள்!

Á¡½Å¢ Á¡ÇÅ¢¸¡Å¢üÌ À¡Ã¡ðÎì¸û.

மாணவி மாளவிகாவிற்கு மனது நிறைந்த வாழ்த்துக்கள்.

ஊக்கம் கொடுத்த பெற்றோர்களுக்கு எமது பாராட்டுக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.