Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"அ" எழுதுதல்

Featured Replies

தமிழ்த் தேசியம் என்பதை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்கிறோம் என்பதே இம்மாவீரர் மாதத்தில் மாவீரர் களுக்கு நாம் வழங்கும் முதலாவது வணக்கம் என நம்பு கின்றேன். மாவீரர்கள் யாபேரும் தமிழ்த்தேசியத்தை முழுமையாகப் புரிந்துகொண்டுதான் போராளிகளாகி தம்மை ஆகுதியாக வழங்கி மாவீரர்கள் ஆனார்கள் என் பது எனது கருத்து அல்ல. தமிழ்த் தேசியத்தின் புரிதலு டன் போர்க்களத்தில் அவர்கள் புகுந்திருப்பார் எனில் அதன் பரிநாணம் வேறு. ஏனென்றால் தமிழ் தேசியத்தை இலட்சிய நெறியிலிருந்து வμவாது, கொள்கை பிடிப்பிலி ருந்து விலகாது, உறுதியுடனும், ஓர்மத்துடனும் முன் னெடுத்துச் செல்லும் தலைமையின் கீழ் போராளிகள் அணி திரண்டனர். இறுதி மூச்சுவிடும் தருணமும் `அண்ணன் பெயர்’ சொல்லி அவர்கள் மாவீரர் ஆயினர். அதுவே ஒரு விதத்தில் தமிழ்த் தேசியம் குறித்து அவர்களது உறுதியான புரிதலோ என்னவோ?

சென்ற புதன்கிழமை (22.10.2012) விஜயதசமி அன்று எனது பேரனின் (அவனது பெயர் ஈழவன்) ஏடு தொடக்கும் காரியம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். இலங்கையில் நான் ஆசிரியப் பணிபுரிந்தேன், அதிலும் குறிப்பாக தமிழ்ப் பாடம் கற்பித்தேன், என்பதனால்தான் ஏடு தொடக்கும் காரியத்திற்கு என்னை அழைக்கிறார்கள் என்று நம்பினேன். அக்கடும் குளிரிலும் தோய்ந்து, தோய்த்துலர்ந்த வேட்டி அணிந்து, ஆர்வமாக அக்கோவிலுக்குச் சென்றேன். என் மடியில் ஈழவன் இருக்கப்போகின்றான், இருந்தவாறு நெல்மணிகளின் இடையே `அ’ எழுதப்போகின்றான் என்ற மகிழ்வு என் வாகனத்தின் வேகத்தைக் கூட்டியது. ஆனால் அப்படி எதுவும் நடக்க அங்கு இருந்த பிள்ளையார் விட வில்லை. ஈழவன், குருக்களின் மடியிலிருந்து அரிசிமணி களிடையே `அ’ எழுதிக் கொண்டிருந்தான். அங்கு எனக்கு விதிக்கப்பட்ட பணி, ஈழவன் `அ’ எழுதுவதை படம் எடுப்ப தே. நான் பத்து, பதினைந்து படங்களாக பல்வேறு கோணங்களில் சுட்டுத் தள்ளினேன்.

என்னிடம் ஒரு கவலை தொற்றிக் கொண்டது. `அ’ எழுதப் பழக்கிய அந்தக் குருக்களிடம் கேட்டிருக்க வேண்டும் `தமிழில்’ எத்தனை எμத்துக்கள் உள்ளன? என்று. 247 எழுத்துக்கள் தமிழில் உள்ளன என்பது நிச்சயமாகக் குருக்களுக்குத் தெரியாது. `அ’ உட்பட்ட முதலெழுத் துக்கள் முப்பது என்பது கூட அவருக்குத் தெரிந்திருக்க ஞாயம் இல்லை. ஆனால், அவர் ஏடு தொடக்குகிறார். ஏடு தொடக்க அது தெரிந்திருக்க வேண்டுமா? என்று யாரும் கேட்டால் தெரிந்திருக்க வேண்டும் என்று அடித்துச் சொல்வேன். ``அதனை அதற்குரியவர் தான் செய்ய வேண்டும்’’ என்கின்றார் வள்ளுவர். நானும் அதனை வழி மொழிகின்றேன்.

குருக்களாக இருந்தமையால் தான் அவர் ஏடு தொடக் குகிறார். குருக்களுக்கான அவரது தகுதி என்ன? பிராமண சமூகத்தில் அவர் பிறந்தமையே அவரது தகுதி. ஒன்றுமே புரியாத முட்டாள் சனங்களுக்காக கோயிலில் அவர் பூசை செய்வதற்கான தகுதி பற்றி, ஒன்றும் பேச விரும்ப வில்லை. ஆனால் ஏடு தொடக்குதல் பற்றியும் பிற தேசிய செயற்பாடுகள் பற்றியும் எமது தமிழ் மக்களுடன் நான் பேச சிலவாவது உண்டு.

மலையாள நாட்டில் ஏடு தொடக்கும் நாளன்று எழுத்தாளர்களின் வீட்டின் முன்னாள் நீண்ட வரிசை காத்து நிற்கும். எழுத்தை ஆழ்பவர் தனது பிள்ளைகளுக்கு முதலெழுத்தை எழுதப் பழக்க வேண்டும் என்பது மலையாளி களது பேராசை அப்பொμது தான் தனது பிள்ளைகளும், எழுத்தை ஆழ்வார்கள் என்பது அவர்களது நம்பிக்கை. நாங்கள் கூட இலங்கையில் சிறுவர்களாக இருந்த சமயம், ஏடு தொடக்குவதற்காகப் பள்ளிக்கூடம்தான் போவ துண்டு. அங்கும் முதலாம் வகுப்பு ஆசிரியர்தான் ஏடு தொடக்கினார். அது சாலப்பொருத்தமான செயல். ஆனால் இங்குள்ள கோவில்நிறுவனங்கள் யாவற்றையும் வியாபாரமாக்கியது போல, ஏடு தொடக்குதல் உட் பட்ட கல்வியையும் வியாபாரமாக்கி விட்டன. அது மாத்திர மல்ல, அந்நிய கலாசாரத்தையும் எம்மீது திணிக்கின்றனர். யாவற்றையும் கேட்டுக் கேள்வியில்லாமல் ஏற்கின்றோம். அஞ்சுகின்றேன் அப்பனே, அல்லலுயா, யெகோபா மாதிரியான நாசகாரசக்தி தான் இந்து மத கலாசாரமும். இவை தமிழ்சமூகத்திடையே புற்று நோய் போல பரவுகின்றன. அல்லலுயா, யெகோபா போன்ற அமைப்புக்கள் செய்யும் நாச வேலைகளை நம் சமூகம் நேரிடையாக அறியும். ஆனால், இத்தகைய சக்தி கள் செய்யும் நாசகாரியங்கள், நம் கலாசாரத்தின் உயிரி னுள் ஊடுருவி மெல்ல மெல்ல அழிக்கும். இவற்றை முளையிலேயே கிள்ளி விட வேண்டும். முற்றிய பின் எந்த மருத்துவத்திற்கும் கட்டுப்படாது.

அவைநிற்க, இவற்றுக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் இடையில் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம், நமது தமிழ்த் தேசியம் என்ற உணர்வு, ஆயுதப் போரின் தோல் வியுடனேயோ, விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடனேயோ, அற்றுப் போய்விட்டது என்று யாரும் எண்ணினால், அது மகா தவறு. உண்மையில் அவை உள்ளே கனன்று கொண்டிருக்கின்றது. வெளியே பூத்திருக்கின்றது சாம் பல், கிளறக்கிளற தணல் பிறக்கும், பிறக்க வேண்டும். தமிழ்த் தேசிய உணர்வை அப்படியே அணைத்துவிட, அழித்து விட, அழித்து சாம்பலாக்க முடியாது, உள்ளே தணர்ந்து கொண்டிருக்க வேண்டும். நாம் யாருக்கும் அடிமையல்ல என்ற உணர்வும், பயமற்ற வாழ்வு வாழவும், சிந்தனையில் சுதந்திரம் பெறவும், `நாமிருக்கும் நாடு, நமது’ என்று அறியவும், அந்த தமிழ்த் தேசியத் தணல் நமக்கு அவசியம் வேண்டும்.

தமிழ்த் தேசிய உணர்வு என்பது ஆயுதப் போருக்கு ஆதரவு தெரிவிப்பதுடனோ மகிந்தா வருகின்றபோது திரும்பிப் போ என்று கத்துவதுடனோ மாவீரர் நாளுக்கு செல்வதனுடனோ முடிந்து விடுவதில்லை. நம் பாரம்பரியத்தைப் பேணிப்பாதுகாக்க வேண்டும். நமது பண் பாட்டை தொடர வேண்டும். `நாடும் மொழியும், நமது இரு கண்கள்’ என்ற உணர்வை நமது பிள்ளைகளுக்குப் பகிர வேண்டும். மேலாக நமது அடையாளங்களை, பண் பாட்டுக் கூறுகளை பிள்ளைகள் பெற்று அதனை அவர் களே முன்னெடுத்துச் செல்லும் வழிவகை செய்ய வேண்டும். கோவில் கூடாது என்று சொல்லவில்லை. கோவிலுக்குப் போவதும் எங்கள் பண்பாடுகளில் ஒன்று தான். ஆனால், இங்கு, இப்பொμது கோவில்கள், வியா பார நிறுவனங்களாக மாறிவிட்டன. மக்களிடம் கடவுள் மீதான அச்சத்தை உண்டாக்கி, அதனுாடாக பணம் பறிக் கின்றன கோவில் நிறுவனங்கள். அவற்றில் ஒன்று தான் ஏடு தொடக்கும் வியாபாரம்.

எங்கள் ஊரில் ஏடு தொடக்க கோவிலுக்கா சென் றோம். பாடசாலைக்குச் சென்றோம்? அல்லது படித்த தர்மம் மிகுந்த மனிதரை வீட்டுக்கு அழைத்து நம் பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கினோம். அதனை இங்கும் செய்யலாமே.

விஜயதசமி நாளில் ஒரு சின்னக் கவலை, என்னில் தொற்றிக் கொண்டதை உங்களுடன் பகிர்ந்தேன்.

- இரவி (ஒருபேப்பர்)

[size=4]

அவைநிற்க, இவற்றுக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் இடையில் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம், நமது தமிழ்த் தேசியம் என்ற உணர்வு, ஆயுதப் போரின் தோல் வியுடனேயோ, விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடனேயோ, அற்றுப் போய்விட்டது என்று யாரும் எண்ணினால், அது மகா தவறு.[/size]

[size=4]உண்மையில் அவை உள்ளே கனன்று கொண்டிருக்கின்றது. வெளியே பூத்திருக்கின்றது சாம் பல், கிளறக்கிளற தணல் பிறக்கும், பிறக்க வேண்டும். [/size]

[size=4]தமிழ்த் தேசிய உணர்வை அப்படியே அணைத்துவிட, அழித்து விட, அழித்து சாம்பலாக்க முடியாது, உள்ளே தணர்ந்து கொண்டிருக்க வேண்டும். நாம் யாருக்கும் அடிமையல்ல என்ற உணர்வும், பயமற்ற வாழ்வு வாழவும், சிந்தனையில் சுதந்திரம் பெறவும், `நாமிருக்கும் நாடு, நமது’ என்று அறியவும், அந்த தமிழ்த் தேசியத் தணல் நமக்கு அவசியம் வேண்டும்.

[/size]

[size=4]பகிர்விற்கு நன்றிகள்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான சிந்தனை தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. இணைப்பைத் தந்த சனியன் அவர்களுக்கு நன்றி

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இதில் வியந்து பார்க்க ஏதும் இல்லை.......[/size]

[size=4]கடந்த ஆண்டு ஐரோப்பா போயிருந்தேன் அந்த நேரம் பார்த்து.... அந்தே நேரம் பார்த்து எனது ஒரு உறவினருடைய சிறுமி பூபெய்தி விட்டாள். [/size]

[size=4]நான் வேறு ஓர் இடத்தில் இருந்துகொண்டிருந்தேன். எனக்கும் தொலைபேசி மூலம் வர சொன்னார்கள் நானும் நண்பனுடன் சென்றேன்.[/size]

[size=4]எல்லாம் வழமையாக நடந்துகொண்டிருந்தது..... அவர்களுக்கு.[/size]

[size=4]எனக்கு எல்லாம் புதுமையாக இருந்தது. சாமத்திய வீடு எனக்கு புதிதில்லை எனக்கும் பெண்சகொதரர்கள் இருக்கிறார்கள் எங்கள் வீட்டிலும் இது நடந்திருக்கு. அயல் வீடுகளில் நடந்த எல்லா சமத்திய வீடிட்கும் சென்றிருக்கிறேன். இப்போது இங்கே நடப்பது ஒன்றுமே புரியவில்லை.[/size]

[size=4]என்ன செய்கிறோம்?[/size]

[size=4]ஏன் செய்கிறோம்?[/size]

[size=4]என்று எந்த கேள்விகளுமற்ற அறனையாக மாறியிருக்கிறார்கள். [/size]

[size=4]அதை முன் நின்று செய்வதே ஒரு பிராமணர்தான் அவர் இன்னும் வரவில்லையா என்ற எத்தனிப்பு நான் அங்கு சென்றதில் இருந்து எல்லோருடைய முகங்களிலும் சாதரணமாக இருந்தது. அவர் வந்தவுடன் எல்லோருடைய முகத்திலும் புன்சிருப்பு. [/size]

[size=4]இவர் என்ன செய்யபோகிறார் என்று நானும் வினாவினேன்.....[/size]

[size=4]அவர்தானாம் துடக்கு களிப்பாராம். சரி அந்த தொல்லை இந்த கூட்டத்திற்கு எப்போதும் இருப்பதுதானே என்று விட்டு அவர் வந்து செய்யும் வேடிக்கைகளை பார்த்துகொண்டிருந்தேன்.[/size]

[size=4]பின்பு மறுநாள் நான் கோவிலுக்கு செல்வதற்கு வெளிக்கிடும்போது எனது உறவினர் சொன்னார் நீ போகாதே உனக்கும் தொடக்கு இருக்கிறது என்று. அதுதானே நேற்று ஐயர் வந்து எல்லாம் தெளிச்சுட்டு போனவர் என்று. இல்லை அது முதல் நாள் பின்பு பூப்புனித நீராட்டு செய்யும் நாளில் அவர்தான் அதை வந்து செய்வது என்பதை முன்கூட்டிய சொல்லி கவுரவமாக அவரை அழைத்து அவர் வந்து செய்துவிட்டு போனவராம். ஆனால் இன்னமும் எமக்கு தொடக்கு இருக்காம் அது பின்பு தண்ணி வார்க்கும்போது அவர் வந்து மந்திரம் ஊத தான் போகுமாம்.[/size]

[size=4]இதில் வியப்பான விடயம் அங்கே இது சாதாரணமாக நடக்கிறது. யாபருக்கும் இது சாதாரணம் என்னை தவிர.[/size]

[size=4] [/size]

[size=4]ஊரில் ஐயர் வந்து நான் கண்டதே இல்லை.[/size]

[size=4]ஒரு பெண் பருவம் அடைந்தால்............. ஐயர் வந்து செய்ய என்ன இருக்கு?[/size]

  • கருத்துக்கள உறவுகள்

மலையாள நாட்டில் ஏடு தொடக்கும் நாளன்று எழுத்தாளர்களின் வீட்டின் முன்னாள் நீண்ட வரிசை காத்து நிற்கும். எழுத்தை ஆழ்பவர் தனது பிள்ளைகளுக்கு முதலெழுத்தை எழுதப் பழக்க வேண்டும் என்பது மலையாளி களது பேராசை அப்பொμது தான் தனது பிள்ளைகளும், எழுத்தை ஆழ்வார்கள் என்பது அவர்களது நம்பிக்கை. நாங்கள் கூட இலங்கையில் சிறுவர்களாக இருந்த சமயம், ஏடு தொடக்குவதற்காகப் பள்ளிக்கூடம்தான் போவ துண்டு. அங்கும் முதலாம் வகுப்பு ஆசிரியர்தான் ஏடு தொடக்கினார். அது சாலப்பொருத்தமான செயல். ஆனால் இங்குள்ள கோவில்நிறுவனங்கள் யாவற்றையும் வியாபாரமாக்கியது போல, ஏடு தொடக்குதல் உட் பட்ட கல்வியையும் வியாபாரமாக்கி விட்டன. அது மாத்திர மல்ல, அந்நிய கலாசாரத்தையும் எம்மீது திணிக்கின்றனர். யாவற்றையும் கேட்டுக் கேள்வியில்லாமல் ஏற்கின்றோம். அஞ்சுகின்றேன் அப்பனே, அல்லலுயா, யெகோபா மாதிரியான நாசகாரசக்தி தான் இந்து மத கலாசாரமும். இவை தமிழ்சமூகத்திடையே புற்று நோய் போல பரவுகின்றன. அல்லலுயா, யெகோபா போன்ற அமைப்புக்கள் செய்யும் நாச வேலைகளை நம் சமூகம் நேரிடையாக அறியும். ஆனால், இத்தகைய சக்தி கள் செய்யும் நாசகாரியங்கள், நம் கலாசாரத்தின் உயிரி னுள் ஊடுருவி மெல்ல மெல்ல அழிக்கும். இவற்றை முளையிலேயே கிள்ளி விட வேண்டும். முற்றிய பின் எந்த மருத்துவத்திற்கும் கட்டுப்படாது.

- இரவி (ஒருபேப்பர்)

[size=4]உண்மையான வரிகள் [/size]

[size=4]இதோடு நின்று கொள்ளுங்கள். கொஞ்சம் விரிவாய் வெளிக்கிட்டால் உங்களை கிறிஸ்தவன் ஆகிவிடுவார்கள். அதுகூட பரவயில்லை பாவபட்ட ஜேசு மீது இறந்த உடல் என்ற கருணைகூட ( இந்துவாக இருந்தால் கருணை இருக்ககூடாது என்பது எழுதபடதா விதியோ என்னமோ) இன்றி கல் எறிவார்கள்.[/size]

நல்லதொரு பதிவு.

ஊரில் பாடசாலையில் படித்தவர்களைக் கொண்டுதான் ஏடு தொடக்குவார்கள். இங்கு எல்லா முறைகளையும் மாற்றிக் குழப்புகிறார்கள். இந்தியாவில் உள்ள முறைகளை எல்லாம் பின்பற்றுகிறார்கள். தமிழ்த் திருமண விழாக்களில் சீக்கியர்களின் 'பங்கரா' மேளம் அடிக்கிறார்கள்.

வீட்டு சுப நிகழ்வுகளில் பிச்சைக்காரனின் சாப்பாட்டுத் தட்டில் உள்ள உணவு மாதிரி, இந்திய சகல மாநிலங்களிலும் உள்ள கலாச்சார நிகழ்வுகளைப் பின்பற்றத் தொடங்கியுள்ளார்கள். இதை யாரும் இவர்கள் மேல் திணிக்கவில்லை. குறவர் கூட்டத்திற்குக் கூட தனிக் கலாச்சாரம் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.