Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனங்கள் கனக்கின்றது மாவீரரே..மீள் பிரசுரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ltte.jpg

மனங்கள் கனக்கின்றது மாவீரரே

சாத்திரி

மாவீரர் வாரம் நெருங்குகின்றது. இந்த வருடமும் கடந்த வருடத்தைப் போல தாயகத்தில் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையே ஏற்படும்.மாவீரர் நாள் வாரத்தில் இராணுவக் கெடுபிடிகள் அதிகரிக்கும். சில வேளை கிறீஸ் பூதங்கள் கூட இரவுகளில் அதிகளவில் வழுக்கித் திரியலாம். அஞ்சலி செலுத்துபவர்கள் அச்சுறுத்தப்படுவார்கள். எனவே அவர்களிற்கான அஞசலியை வெளிநாடுகளில் புலம் பெயர் தமிழர்களால்தான் சுதந்திரமாக செய்யமுடியும். ஆனால் அதற்கும் அண்மைக்காலங்களாக வருகின்ற செய்திகள் மனதை கலங்கடிப்பவையாகவே இருக்கின்றது. காரணம். இந்த முறை மாவீரர் நிகழ்வுகளை பிரிந்து நிற்கின்ற தமிழர் அமைப்புக்கள் தனித்தனியாக நடத்தப் போவதாக மட்டுமல்லாது மாவீரர் நாள் அறிக்கையும் தனித்தனியாக வெளியிடப் போவதாக தகவல்கள் ...

இந்தமுறை கலக்கப் போறது யாராம் என்று என்னோடை கதைக்கும் போது ஒரு நண்பன்என்னிடம் கேட்டான். அவன் தமிழ் தொலைக்காட்சியளிலை நடக்கிற கலக்கப் போறது யாரு அசத்தப் போவது யாரு எண்டிற நகைச்சுவை நிகழ்ச்சியை பற்றித்தான் கேக்கிறானாக்கும் என நினைச்சு நானும் என்னட்டை தமிழ் தொலைக்காட்சி ஒண்டும் கிடையாது அதுகளை பாக்கிற நேரமும் கிடையாது . ஏதாவது தேவையெண்டால் கணணியிலை தேடிப் பாத்திடுவன். எண்டன் ஏடேய் அதை நான் சொல்லேல்லை இந்த முறை மாவீரர் நாள் உரையை பற்றி கேட்டன் ..ஏனெண்டால் ஆளாளிற்கு அறிக்கை விடப் போறம் எண்டு கதையள் அடிபடுது அதைத்தான் கேட்டனான் எண்டான்.. அப்படி கேட்டது அவனுடைய தவறு இல்லை ..உலகமே உற்று நோக்கிய பிரபாகரனின் மாவீரர் நாள் கொள் கொள்கை விளக்க உரையை "கலக்கப் போவது யார்?? "என்று கேட்கின்ற அளவிற்கு 2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் தாங்களே தாயகத்திலுள்ள தமிழரிற்கான போராட்டங்களை முன்னெடுப்பதாக கூறிக்கொண்டு பல பிரிவுகளாகி நிற்கும்புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.

1989 ம் ஆண்டு முதலாவது மாவீரர் நாள் உரையானது மாவீரர்களிற்கான அஞ்சலியுடன் தொடங்கி புலிகள் அமைப்பின் கொள்கை விளக்கங்கங்களோடு புலிகள் அமைப்பானது அன்றைய காலகட்டங்களில் தமிழ் மக்களிற்கும் சர்வதேசத்திற்கும் என்னென்ன செய்திகளை சொல்லவிரும்புகின்றனர் . தாயகத்து மற்றும் புலம் பெயர் தமிழ் மக்களிடம் என்னென்ன எதிர்பார்க்கின்றனர் அவர்களது கடைமைகள் என்ன. சர்வதேசத்திடம் என்னென்ன எதிர்பார்க்கின்றனர்.என்கிற விடயங்கள் அடங்கியதாக இருக்கும். புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களால் நேரடியாக வாசிக்கப் படும் அந்த உரையினை உலகநாடுகளே உன்னிப்பாக அவதானித்தபடி இருக்கும். உரையில் பிரபாகரன் எந்தெந்த விடயங்களை அழுத்திச் சொல்கிறார். எங்கு நின்று நிதானித்து சொல்கிறார். எங்கு ஏற்ற இறக்கங்கள் வருகின்றது என்று அனைத்துமே அலசி ஆராயப்படும்.காரணம் வருடத்தில் ஒரு முறைமட்டுமே பேசுபவர் பிரபாகரன் அதுவும் அந்த மாவீரர் நாள் உரை மூலமாகத்தான். மிகுதி அனைத்திற்குமே செயல்வடிவம்தான் அதனால்தான் அதற்கு அத்தனை மதிப்பு..

2008 ம் ஆண்டுடன் மாவீர் நாள் கொள்கை விளக்கவுரை நின்று விட்டது. அதற்கு பின்னர் நடந்த சம்பவங்கள் அனைத்தும் உலகம் அறிந்ததுதான். ஆனால் எமக்காகவும் எமது மண்ணிற்காகவும் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கியவர்களின் நினைவிடங்களையும் கூட இலங்கை இராணுவம் சர்வதேச விதிகளையும் மீறி அழித்து தரைமட்டமாக்கப் பட்ட நிலையில். அங்கு வாழும் மக்களாலும் அவர்களிற்கான அஞ்சலியை செலுத்த முடியாத நிலையிலும். புலம் பெயர் தமிழர்கள் ஒன்று கூடி ஒற்றுமையாய் அந்த மாவீரர்களை நினைவு கூர்ந்து அவர்களின் கனவுகளை நினைவாக்க மனதில் உறுதியெடுத்து அவர்களிற்கான அஞ்சலிகளை செலுத்தவேண்டியது எமது கடைமையல்லவா??அதுதானே நாம் அவர்களிற்கு செய்யும் மரியாதையாகும்.

அதே நேரம் புலம் பெயர் நாடுகளில் உள்ள அனைத்து அமைப்புக்களும் தங்கள் அமைப்பின் சார்பில் ஓவ்வொரு அஞசலி அறிக்கையை விடலாம்.ஆனால் அது மாவீரர் நாள் புலிகள் அமைப்பின் கொள்கை விளக்க உரையாக அமையாது. தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் வாசிக்கப்படாத எந்தவொரு உரையும் மாவீரர் நாளின் புலிகள் அமைப்பினது கொள்கை விளக்க உரையாக அமையாது.அதனை எந்தவொரு தமிழர் மட்டுமல்ல சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளாது. மற்றைய அனைத்து உரைகளுமே மாவீரர்களிற்கான அஞ்சலி உரையாகவே கணிக்கப்படும்.

மாவீரர் வாரத்தை பிரிந்து நின்று வெறுமனே அனுட்டிப்பதில் பயனில்லை மாவீரர் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் திறனும் ஆற்றலும் புலம்பெயர் தமிழர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எத்தனை துரோகங்களிலும் தடைகளிலும் அதை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டில் நாமிருக்கிறோம்.

தமிழீழ விடுதலை என்பது வெறும் கனவல்ல என்று உலகமும் சிங்களமும் ஒருநாளில் அறிந்து கொள்ளட்டும்.

தியாகங்களால் எம் மாவீரர்கள் விடுதலை பயணத்தை உச்சத்தில் வைத்தனர். எதையும் முடிக்கும் வல்லமை காட்டினர். தமிழரின் வீரம் பிறப்பிலென்று பறை சாற்றினர். காலங்காலமாய் எமது விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளை எங்கள் மாவீரர்களே உடைத்து வெற்றி கொண்டனர். தியாகத்தின் எல்லையை தொட்டு நின்றனர்.அந்த வீரர்களின் தியாகத்துக்காய் இந்த வாரம் நாம் சிந்தும் கண்ணீரே நாம் அவர்களுக்கு செய்யும் மிகச் சிறிய நன்றிக்கடன் என கொள்வோம்

நம் கோவில்களான கல்லறைகளை உடைத்து விடுவதால் எங்கள் மனங்களின் தொழுகைகளை நிறுத்த முடியாது சொந்த குருதி வடியும்போது சந்தோசம் வருமா எங்கிருந்தாவது? தமிழராக முன்பு மனிதனாக வேண்டும்.மனிதராவோம்.

கார்த்திகையில் வானம் கூட அழுது தொழும் எம் செல்வங்களை ..கார்த்திகைப் பூவும் பூத்து வணங்கிக்கொள்ளும் உலகத் தமிழர் ஒன்றிணைந்து நாமும் மாவீரர் புகள்பாடுவோம்.

அதே நேரம் புலம் பெயர் நாடுகளில் உள்ள அனைத்து அமைப்புக்களும் தங்கள் அமைப்பின் சார்பில் ஓவ்வொரு அஞசலி அறிக்கையை விடலாம்.ஆனால் அது மாவீரர் நாள் புலிகள் அமைப்பின் கொள்கை விளக்க உரையாக அமையாது. தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் வாசிக்கப்படாத எந்தவொரு உரையும் மாவீரர் நாளின் புலிகள் அமைப்பினது கொள்கை விளக்க உரையாக அமையாது.அதனை எந்தவொரு தமிழர் மட்டுமல்ல சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளாது. மற்றைய அனைத்து உரைகளுமே மாவீரர்களிற்கான அஞ்சலி உரையாகவே கணிக்கப்படும்.

உண்மைகள் என்றுமே கசப்பானவை . இவைகளை ஏற்கின்ற மனப்பக்குவம் வருமா ?? ஏமாற்றமே விடையாகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத்திரி

[size=5]தமிழராக முன்பு மனிதனாக வேண்டும்.மனிதராவோம்.[/size]

[size=6]கார்த்திகையில் வானம் கூட அழுது தொழும் எம் செல்வங்களை ..கார்த்திகைப் பூவும் பூத்து வணங்கிக்கொள்ளும் உலகத் தமிழர் ஒன்றிணைந்து நாமும் மாவீரர் புகள்பாடுவோம்.[/size]

[size=4]இன்றியமையாதவை .............

...நன்றி அண்ணா இணைப்பிற்கு [/size]

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதங்கம் புரிகிறது சாத்திரி

நீங்களும் பலமுறை இதை எதிர்த்து குரல் கொடுத்ததும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதும் தெரியும்.

ஆனால் இதற்கான அத்திவாரம் என்னவென்றால் தலைவர் இருக்கிறார் அல்லது இல்லை என்பதே.

இதற்கு ஒரு நிலைப்பாடு எடுக்காமல் மாவீரர் நாளை ஒருமுகப்படுத்திவிடமுடியாது என்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.

இப்போ

நீங்களே தலைவருக்கு அஞ்சலி செலுத்துபவர்

நான் அதை மறுப்பவன்

எனவே எமக்குள்ளேயே சிக்கல்களும் கருத்து வேறுபாடுகளும் உண்டு.

இதை வைத்துக்கொண்டு மாவீரர்நாள் செய்யும்போது நீங்கள் தலைவருக்கு மாலைபோட எத்தனிப்பீர்கள்

நான் அதை எதிர்ப்பேன்.

எனவே குளப்பம் வரும்.

இது தான் இன்றையநிலை.

இதற்கு முடிவு என்ன?????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.