Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய செயற்பாட்டாளர் மீது பாரிசில் தேசவிரோதிகள் துப்பாக்கிச்சூடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரிதியின் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் பாம்புக்குழுவை சேர்ந்த பிறேம், ரமேஸ்

Published on November 23, 2012-12:23 pm · No Comments

கடந்த 8ஆம் திகதி இரவு பரிஸ் நகரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளரும் விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினருமான பரிதி என்று அழைக்கப்படும் நடராசா மதீந்திரனின் படுகொலையில் சம்பந்தப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் பிரான்ஸில் இயங்கும் பாம்புக்குழுவை சேர்ந்த பிறேம், மற்றும் ரமேஸ் என பரிஸ் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழர் ஒருவர் பரிஸ் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து முதலில் பிறேம் என்பவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ரமேஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

பரிஸில் இயங்கும் குழுகளில் பாம்புக்குழுவும் ஒன்று. இக்குழு பரிதியுடன் மிக நெருக்கமாக இருந்ததாகவும், தெரிவிக்கப்படுகிறது. பாம்புக்குழுவுக்கும் பரிதிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இக்கொலை நடந்ததா அல்லது பாம்புக்குழுவிற்கு பணத்தை கொடுத்து இக்கொலையை நடத்தப்பட்டதா என்பது பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பரிஸில் பாம்புக்குழு, வெண்ணிலாகுழு, முக்காப்பாலாகுழு, மின்னல்குழு என 30க்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்கி வருகின்றன. இவை கப்பம், கொலை, கொள்ளை, வாள்வெட்டு என்பவற்றில் ஈடுபட்டு வருகின்றன. கூலிக்கு கொலை செய்யும் வேலைகளிலும் இக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.

பரிஸில் இக்குழுக்களை வைத்தே பெரும்பாலான வன்முறைகள் நடத்தப்படுகின்றன. இக்கொலை தொடர்பாக இதுவரை 65பேர் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டுள்ளனர். 90வீத விசாரணைகள் முடிந்துள்ளதாகவும் விரைவில் அரச வழக்கு தொடுநரிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை பரிதியின் கொலை தொடர்பாக விடுதலைப்புலிகளின் தலைமை செயலகத்தை சேர்ந்த விநாயகம் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தி முற்றிலும் தவறானதாகும். வுpநாயகம் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.thinakkathir.com/?p=43867

  • Replies 240
  • Views 17.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பரிஸில் பாம்புக்குழு, வெண்ணிலாகுழு, முக்காப்பாலாகுழு, மின்னல்குழு என 30க்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்கி வருகின்றன. இவை கப்பம், கொலை, கொள்ளை, வாள்வெட்டு என்பவற்றில் ஈடுபட்டு வருகின்றன. கூலிக்கு கொலை செய்யும் வேலைகளிலும் இக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.

இதென்னப்பா ஊர் இது? எல்லாரையும் கூட்டி வழிச்சு நாட்டுக்கு அனுப்பவேணும்.. :blink:

1.கட்டுரை தொடர்ந்து கல்லுக்குத்தி தமிழரை மேலும் மேலும் பிரிக்க முயல்கிறது.

அல்லது

தமிழர்களின் பெயரைச் சொல்லி தமிழர்களையே கொலை செய்யும் அமைப்புகளை, கொலைக் குழுக்களை அதனுடன் தொடர்பு கொண்ட குண்டர்களைப் பற்றி எழுதுவதால் எப்படி தமிழர்க்ளுக்குள் பிரிவினை வரும்? இப்படியானவர்களை பற்றி மக்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்ற எண்ணம் தான் இப்படியெல்லாம் உங்களை எழுத வைக்கின்றது?

[size=4]பூச்சி,[/size][size=1]

[size=4]நான் நினைக்கிறேன் பிரெஞ்சு காவல்துறை வேண்டுமென்றே கண்களை மூடி உள்ளது. அது ஏன் என புரியாமல் உள்ளது. [/size][/size][size=1]

[size=4] அவர்கள் தமது வேலையை செய்தால் இதை நாம் அலசவேண்டி வந்திருக்காது. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னப்பா ஊர் இது? எல்லாரையும் கூட்டி வழிச்சு நாட்டுக்கு அனுப்பவேணும்.. :blink:

பிரான்ஸ் ஒரு உதவாத நாடு அது தான் அங்க இருக்கிற தமிழ்சனம் எல்லாம் uk போன்ற நாடுகளுக்கு ஓடி தப்பினம்

தமிழர்களின் பெயரைச் சொல்லி தமிழர்களையே கொலை செய்யும் அமைப்புகளை, கொலைக் குழுக்களை அதனுடன் தொடர்பு கொண்ட குண்டர்களைப் பற்றி எழுதுவதால் எப்படி தமிழர்க்ளுக்குள் பிரிவினை வரும்? இப்படியானவர்களை பற்றி மக்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்ற எண்ணம் தான் இப்படியெல்லாம் உங்களை எழுத வைக்கின்றது?

உங்கள் முடிவு சரியானது. அதாவது நான் அல்லது என்று போட்டு எழுதி இருக்கும் இரண்டாவது இந்த முதலாவதை விட கூட சரி என்பதுதான் உங்கள் வாதம்.

நிறைத்தான் பிரான்சு அமைப்புக்களை பற்றி தெரிந்தவர், நெருடலில் வந்த பிரான்சு கட்டுரை விட்டு விட்டு தங்கள் நாட்டில் நடந்தவற்றை எழுதினால் படிக்கலாம்.

உ+ம் அவிஸ்திரேலியாவில் எப்படி தமிழரின் அடாவடித்தனங்கள் என்பதை பற்றி ஒரு கட்டுரை எழுதலாமே.

Edited by மல்லையூரான்

இதென்னப்பா ஊர் இது? எல்லாரையும் கூட்டி வழிச்சு நாட்டுக்கு அனுப்பவேணும்.. :blink:

பாம்பு குழு என்ற பெயரில் சுவிஸில் இயங்கியவர்களை சுவிஸ் போலிஸ் பிடித்து அனுப்ப வெளிக்கிட அதிலிருந்தவர்கள் பிரான்சுக்கு போய் தஞ்சம் புகுந்தார்கள். :rolleyes: அதை விட எல்லா நாட்டிலுள்ள அடிதடி கும்பல்களும் கடைசியாக பிரான்சில் தான் போய் தஞ்சமடைவார்கள். :D பல குழுக்கள் இருப்பதற்கு அங்குள்ள போலீஸின் அக்கறையற்ற தன்மையும் ஒரு காரணம். <_<

[size=4]பூச்சி,[/size]

[size=1][size=4]நான் நினைக்கிறேன் பிரெஞ்சு காவல்துறை வேண்டுமென்றே கண்களை மூடி உள்ளது. அது ஏன் என புரியாமல் உள்ளது. [/size][/size]

[size=1][size=4]அவர்கள் தமது வேலையை செய்தால் இதை நாம் அலசவேண்டி வந்திருக்காது. [/size][/size]

சுவிஸ் என்றால் சிறிய நாடு, பண வசதி உள்ள நாடு. எத்தனை போலீஸை விட்டாவது உடனேயே குற்றவாளியை கண்டுபிடித்திருப்பார்கள். பிரான்சில் அவ்வாறான நிலை இல்லை.

பிரான்சில் கொலை நடப்பது புதிதில்லை. பல நாட்டவர்கள் தமக்குள் குத்துப்பட்டு இறப்பார்கள். அதையெல்லாம் சாதாரணமாக தான் பிரான்ஸ் போலிஸ் பார்ப்பது வழமை.

நாட்டிற்கெதிரான பெரிய பயங்கரவாதம் என்று வந்தால் பணம் செலவழித்து குற்றவாளியை கண்டுபிடிப்பார்கள். உதாரணமாக முஸ்லிம்கள் யாரும் பிரான்சில் பாடசாலை மாணவிகளை சுட்டிருந்தால் அவர்கள் பயங்கரவாதிகளா என்ற ஆராய்ச்சியில் இறங்கியிருப்பார்கள். :rolleyes:

நாங்கள் தமிழர்களாச்சே. தமிழன் மூலமாகவே கொலையையும் செய்துள்ளார்கள். :(

குற்றவாளியை கண்டுபிடிப்பார்களா அல்லது கைவிடுவார்களா :unsure: என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அட பிறகென்ன துளசி details எல்லாம் விரல் நுனிலா இருக்கு பாப்ஸ் எந்த குரூப்?

மொத்ததில France போலீஸ் ஒரு கையாலாகாத போலீஸ் எண்டு பாப்ஸ் சொல்லுறா இது என்ன பழக்கம்? இருக்கிரத்திக்கு நாடும் தந்து படிக்கிறதிக்கு காசும் தந்து விட்டால் இப்பிடியா சொல்லுறது?

அட பிறகென்ன துளசி details எல்லாம் விரல் நுனிலா இருக்கு பாப்ஸ் எந்த குரூப்?

மொத்ததில France போலீஸ் ஒரு கையாலாகாத போலீஸ் எண்டு பாப்ஸ் சொல்லுறா இது என்ன பழக்கம்? இருக்கிரத்திக்கு நாடும் தந்து படிக்கிறதிக்கு காசும் தந்து விட்டால் இப்பிடியா சொல்லுறது?

சுண்டல் குரூப் :D

இப்பிடி கேட்டால் கூட நான் எந்த நாட்டில் இருக்கிறன் என்று சொல்ல மாட்டன். :D

சுண்டல் குரூப் :D

இப்பிடி கேட்டால் கூட நான் எந்த நாட்டில் இருக்கிறன் என்று சொல்ல மாட்டன். :D

யாழைத்தவிர ,,,,,,,,,,,,,,,ஐ மீன் யாழ்ப்பாணம் =அவுஸ் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் குரூப் :D

இப்பிடி கேட்டால் கூட நான் எந்த நாட்டில் இருக்கிறன் என்று சொல்ல மாட்டன். :D

சுண்டல் குரூப் எண்டா சரி நான் வேற எதுவாக்குமோ எண்டு பயந்திட்டன் :D

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பு குழு என்ற பெயரில் சுவிஸில் இயங்கியவர்களை சுவிஸ் போலிஸ் பிடித்து அனுப்ப வெளிக்கிட அதிலிருந்தவர்கள் பிரான்சுக்கு போய் தஞ்சம் புகுந்தார்கள். :rolleyes: அதை விட எல்லா நாட்டிலுள்ள அடிதடி கும்பல்களும் கடைசியாக பிரான்சில் தான் போய் தஞ்சமடைவார்கள். :D பல குழுக்கள் இருப்பதற்கு அங்குள்ள போலீஸின் அக்கறையற்ற தன்மையும் ஒரு காரணம். <_<

சுவிஸ் என்றால் சிறிய நாடு, பண வசதி உள்ள நாடு. எத்தனை போலீஸை விட்டாவது உடனேயே குற்றவாளியை கண்டுபிடித்திருப்பார்கள். பிரான்சில் அவ்வாறான நிலை இல்லை.

பிரான்சில் கொலை நடப்பது புதிதில்லை. பல நாட்டவர்கள் தமக்குள் குத்துப்பட்டு இறப்பார்கள். அதையெல்லாம் சாதாரணமாக தான் பிரான்ஸ் போலிஸ் பார்ப்பது வழமை.

நாட்டிற்கெதிரான பெரிய பயங்கரவாதம் என்று வந்தால் பணம் செலவழித்து குற்றவாளியை கண்டுபிடிப்பார்கள். உதாரணமாக முஸ்லிம்கள் யாரும் பிரான்சில் பாடசாலை மாணவிகளை சுட்டிருந்தால் அவர்கள் பயங்கரவாதிகளா என்ற ஆராய்ச்சியில் இறங்கியிருப்பார்கள். :rolleyes:

நாங்கள் தமிழர்களாச்சே. தமிழன் மூலமாகவே கொலையையும் செய்துள்ளார்கள். :(

குற்றவாளியை கண்டுபிடிப்பார்களா அல்லது கைவிடுவார்களா :unsure: என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ம் கனக்க பழைய விடயங்கள் தெரிந்திருக்கு :lol:

ம் கனக்க பழைய விடயங்கள் தெரிந்திருக்கு :lol:

அதுக்காக நான் தொண்ணூறுகளில் இடம்பெயர்ந்த பழைய ஆள் என்று நினைச்சிடாதையுங்கோ. :lol: எனக்கு கொஞ்ச வயது தான்.

சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மன் பற்றிய விடயங்கள் ஓரளவுக்கு அறிவதில் ஆர்வம் உள்ளது. அந்நாட்டவர்களை சந்தித்தால் இப்படியான விடயங்களை பற்றி கேள்வி கேட்பது வழமை. ஒருவர் சொல்வதை வைத்து நம்ப மாட்டன். காதில் பூ சுற்றி விடுவார்கள். :icon_mrgreen: அதனால் பலர் ஒரே விடயத்தை சொன்னால் ஓரளவு நம்புவேன். அல்லது எனக்கு நம்பிக்கையானவர்கள் சொன்னால் நம்புவேன். :rolleyes:

  • தொடங்கியவர்

[size=4]முன்பு இலங்கை அரசாங்கத்தினாலும் ஒட்டுக் குழுக்களினாலும் வெளிநாடுகளுக்கு செய்த பிரச்சாரம் என்ன என்றால் புலம்பெயர் நாடுகளில் புலிகள் வன்முறை மூலமும் மிரட்டல் மூலமுமே பணம் வசூலிக்கிறார்கள் என்பது அதை சுவிஸ் நாட்டில் பல இடங்களில் இப்பிடியான முறையீடுகளை ஒட்டுக்குழுவினர் செய்தார்கள். அதை இப்ப உணமையாக்குவது போல இந்த நெருடல் செய்தி உள்ளது. தம்மை நடுநிலை என்று கூறும் நெருடல் எந்த இடத்திலும் நடுநிலைமைய காட்டவில்லை என்பது பிரதானம். இப்பிடியான தேசியவாதிகள் வாழ்க[/size]

ஒண்டும் தெரியாத பாப்பா பகலில போட்டாவாம் தாப்பா .

ஒட்டுக்குழுக்கள் சொல்லி கேட்கும் அளவிற்கு உலகம் இல்லை உதைதான் புலிகள் தங்கள் வாலுகளுக்கு காலம் காலமாக சொல்லி வருகின்றார்கள் . நான் இங்கு பரிதி என்ற தனிநபர் பற்றி எழுதவில்லை முழு புலி கும்பலும் உதே அடாவடியைத்தான் உலகம் முழுக்க செய்தார்கள் .HUMAN RIGHTS REPORT இல் தெட்ட தெளிவாக பதிவில் இருக்கு .கனடா அரசு போட்ட கிடுக்கு பிடியின் பின்னர் அவர்கள் செயற்பாட்டில் பெரும்மாற்றம் வந்தது .ஆனால் அது லேட்டாகிவிட்டது ஏனெனில் செய்த அடாவடிகளின் தாக்கம் எடுபட பலவருடங்கள் எடுத்தது .

முழுப் புலிகளையும் குற்றம் சொல்லும் அர்யுன் அவர்களே புலிகள் ஒண்டும் சாப்பாடுப் பாசலுக்காக போர்ராடவில்லை. உயிரைக் கொடுத்து உரிமைக்காக போராடியவர்கள் அவர்களுக்கு தமிழர் மத்தியில் அமோக ஆதரவு இருந்தது. அவர்கள் எங்கேயும் உங்கள் குழுவைப் போல யாரிடமும் வற்புறுத்தி பெறவில்லை. அப்பிடி பார்த்தால் மாலைதீவில் புரட்சி செய்ய முற்பட்ட உங்கள் அனைவரையும் முதலில் சிரச் சேதம் செய்யவேண்டும் ஒரு மாவீரனை பற்றி கண்டவர்களும் பேசும் காலம் இது கலி காலம்
  • தொடங்கியவர்

அஞ்சலி வெளியிட்டவர்கள்

எத்தனை பேர் இறுதி நிகழ்வு

முன் அறிவித்தல் செய்திகளை

வெளியிடுகின்றார்கள்

என உற்று அவதானியுங்கள் .

சிறீலங்கா அரசின் மாயக் கரங்கள் தெரியவரும் .

மாவீரருக்காக போலி அஞ்சலி செய்வோரை

அடையாளம் காண்பீர்கள் . உற்று பாருங்கள் .

கொலைகாரர்களுக்கு மறைமுக

ஆதரவு வழங்குவோர்

யாரென்று தெரியவரும் .

நீலிக் கண்ணீர் வடிப்பவர்களை இப்படி விடயங்களில் தான் அடையாளம் காணலாம் .

உற்று பாருங்கள் .கொலைகாரர்களின் உறவாடிகளை அடையாளம் காணுங்கள் . அணைத்து ஊடகங்களையும் ஒருக்கால் வட்டமடியுங்கள் .

மாயக் கரங்களை அடையாளம் காணுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.