Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட இந்திய ஜனாதிபதி மாளிகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மொகலாய மன்னர்கள், நம் நாட்டை ஆண்ட போதெல்லாம், அவர்களது தலைநகரம், இன்றயை பழைய டில்லி தான். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், 1911ல், அதாவது இன்றைக்கு, 100 ஆண்டுகளுக்கு முன், இங்கிலாந்தில் மன்னராக இருந்த, ஐந்தாம் ஜார்ஜ், டில்லி வந்தார். இந்தியாவில், பிரிட்டிஷ் அரசுக்கு, புதியதொரு தலைநகரம் நிர்மாணிக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்தார். அதன்படி உருவானதே, இன்றைய புதுடில்லி.

புதுடில்லி நகரின் நடுநாயகமாக விளங்குவது, ஜனாதிபதி மாளிகை. 1931ல், இது கட்டி முடிக்கப்பட்டது. இதற்குத் தேவையான, வெள்ளை மற்றும் சிவப்புக் கற்கள், தொலைவில் உள்ள பகுதிகளில் தான் கிடைத்தன. அவற்றை, லாரிகளில் கொண்டு வருவதெனில், அதிக செலவாகும். அதனால், ரயிலில் கொண்டு வந்தனர். மேற்படி பகுதிகளுக்கு, அப்போது ரயில் பாதை இல்லை. அதனால், புதிதாக ரயில் பாதையும் போட்டனர்.

புதுடில்லி நகரத்தை நிர்மாணிப்பதில், பெரும்பங்கு வகித்த அப்போதைய வைஸ்ராயாக இருந்த ஹார்டிஞ்ச் பிரபுவுக்கு, இந்த இடத்தில் ஜனாதிபதி மாளிகை அமைக்க பிடிக்கவில்லை. காரணம், அந்த இடம், ஒரு கொலைக் களமாக இருந்தது தான். அதாவது, 14ம் நூற்றாண்டில் படையெடுத்து வந்த டாமர்லேன் என்ற மங்கோலிய ஆக்கிரமிப்பாளன், தன்னை எதிர்த்த லட்சக்கணக்கான பாரத மக்களை, இந்த இடத்தில் தான் படுகொலை செய்தான். எனவே, இந்த இடத்தை ரத்தக்கறை படிந்த இடமாகவே, அவர் கருதினார். ஆயினும், அவரது அதிருப்தியையும், ஆட்சேபனையையும் பொருட்படுத்தாமல், மாளிகையை அதே இடத்தில் எழுப்பிவிட்டனர்.

ஜனாதிபதி மாளிகையில், மொத்தம் உள்ள அறைகளின் எண்ணிக்கை, 340. இவற்றில், சிலவற்றைத்தான், நம் ஜனாதிபதிகள் பயன்படுத்துகின்றனர். மாளிகையின் பின்புறம், அழகிய பிரமாண்டமான பூங்கா உண்டு. எங்கு பார்த்தாலும், மரம், செடி, கொடி, பூக்கள். ஆங்காங்கே, செயற்கை நீர் ஊற்றுகள். இந்திய சுதந்திர தின மற்றும் குடியரசு தின கொண்டாட்டங்களின் போது, ஜனாதிபதி, விருந்து ஒன்று அளிப்பார். அது, இந்த,"மொகல் கார்டனில்' தான் நடைபெறும்.

—"ராஷ்டிரபதி பவன் - ஒரு சிறப்பு பார்வை' நூலிலிருந்து

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மங்கோலிய மன்னர்கள் படையெடுக்காத நாடே இல்லைப்போல

தமிழர்கள் ஆட்சிப் பக்கம் அவர்கள் தலை வைக்கவில்லை.

உலகிலேயே பெரிய ஜனாதிபதி வீடு இதுதான் என நினைக்கின்றேன் .நியுடெல்லி முழுக்க ஒரு இராஜந்திரிகள் வாழும் இடம் .இந்தியாவில் சுத்தமான இடம் இது ஒன்றுதான் .பாராளுமன்றம் அரசியல்வாதிகளின் வீடு ,இராஜதந்திரிகளின் இல்லங்கள் அலுவலகங்கள் ,காந்தி சமாதி ,நேரு பூங்கா .

ஜனாதிபதியின் பலசில் இருந்து இருபக்கமும் போகும் வீதிகளின் பெயர் தான் north ave,south ave.இங்குதான் இந்தியா முழுவதிலும் இருந்து வரும் M.P மாரின் வீடுகள்,புலனாய்வு ஆபிசர்களின் வீடு இருக்க அதனால் இங்குதான் இந்தியாவின் உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகள் தீர்மானிக்கபடுகின்றது என்பார்கள் .

161 north avenue தான் நான் சிலகாலம் தங்கியிருந்தேன் .

Edited by arjun

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.