Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கோப்பை தேநீர்...

Featured Replies

[size=5]ஒரு கோப்பை தேநீர்... [/size]

SRI_LANKA_(F)_0201_-_T%C3%A8.jpg

மண்புழுவினும் அதிகமாக

மண்ணில் நாங்கள் உழன்றதால்

எங்கள் சதைப் பிண்டங்கள்

நீங்கள் வளர்க்கும் தேயிலைக்கு உரமானது.

செழித்து வளர்ந்ததால் சந்தோசமாயிருந்தீர்கள்...

அட்டை உறிஞ்சியது போக

மிச்சமுள்ள எங்கள் குருதியேறி

செம்மண் இன்னும் சிவப்பானது.

மண்ணின் நிறமும் அதனால் தேயிலையின் தரமும்

சேர்ந்து உயர்ந்ததையெண்ணி கர்வமடைந்தீர்கள்...

உடல்சோர்வு நீங்க

நீங்கள் பருகும் தேநீர்

எங்கள் வியர்வையில் குளித்து வளர்ந்ததால்

கொஞ்சம் உவர்ப்பாயிருந்தது.

பருகுவது எங்கள் குருதியில் வளர்ந்த

வியர்வையாதலால் புதுசுவையென

இன்னும் இன்னும் அதிகம் பருகுனீர்கள்...

அப்படியே உங்கள் பதிவேட்டில்

எங்கள் எல்லோரது பெயர்களையும்

பாண்டி (எ) பட்டி என எழுதி வைத்தீர்கள்...

http://kathirvalaipoo.blogspot.fr/2012/11/blog-post_30.html

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்க வைக்கும், கவிதையை, இணைத்தமைக்கு நன்றிகள், கோமகன்!

நான் தேநீர் குடித்துப் பல வருடங்களாகி விட்டது! :D

சிறிலங்கா என்னும் நாடு இரண்டாக உடைந்து அங்கே தமிழீழம் மலரும் வரை இந்தக்கொடுமைகள் தொடரும் ...........எம்மவர் கவிதைகளும் தொடரும் ..................முற்றுப்புள்ளி வைக்காமல், கேள்விக்குறிகளை வைக்கும் வரை வசனங்கள் நீண்டு கொண்டே போகும் ,,,,,,,,,,,,,,,,,

இணைப்பிற்கு நன்றிகள்

  • தொடங்கியவர்

சிந்திக்க வைக்கும், கவிதையை, இணைத்தமைக்கு நன்றிகள், கோமகன்!

நான் தேநீர் குடித்துப் பல வருடங்களாகி விட்டது! :D

என்னைப் பொறுத்தவரையில் இந்தக்கவிதையின் செய்தி மனவலியைத் தந்தாலும் , மனிதவாழ்க்கை என்பதே ஒன்றுடன் ஒன்று சங்கிலிப் பின்னல்போல பின்னிப் பிணைந்ததுதானே . ஓர் சொலவடையும் என் நினைவில் வருகின்றது " உழுபவன் கணக்குப்பார்த்தால் ஆழாக்கும் மிஞ்சாது " என்று . ஒருவரது உழைப்பின் விளைச்சலை மற்றயவர் நுகருக்கின்றார் . இந்த உழைப்பில் எங்களுக்குரிய அங்கீகாரம் அல்லது கூலி கிடைக்கவில்லையென்று அந்த உழைப்பை அலட்சியம் செய்தால் , அவர் தனது பொறுப்பை தட்டிக்கழித்தவர் ஆகமாட்டாரா ?? ஏனெனில் பல படித்தவர்கள் தமது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்று விசனம் அடைவதை பார்த்திருக்கின்றேன் . இதுப்பறி உங்களது பார்வை என்ன ?? எது எப்படியோ இந்தத்தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றார்கள் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை . உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் புங்கையூரான் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை பகிர்வுக்கு நன்றி.

நான் குளிருக்கு சற்று அதிகமாகவே விதவிதமான தேனீர் குடிபேன்.

  • தொடங்கியவர்

நான் குளிருக்கு சற்று அதிகமாகவே விதவிதமான தேனீர் குடிபேன்.

இன்னும் சிறிது விளக்கினால் நன்றாக இருக்கும் . வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் கறுப்பி .

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சிறிது விளக்கினால் நன்றாக இருக்கும் . வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் கறுப்பி .

கறுப்பு தேனீர், பச்சை தேனீர். காய்ந்த பழங்களால் தயாரிக்கப்பட்ட தேனீர், தேசிக்காய் இஞ்சி கலந்த தேனீர்............ இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்

கறுப்பு தேனீர், பச்சை தேனீர். காய்ந்த பழங்களால் தயாரிக்கப்பட்ட தேனீர், தேசிக்காய் இஞ்சி கலந்த தேனீர்............ இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

 

நான் என்னமோ ஏதோ எண்டு செரியா பயந்து போனன் கறுப்பி  :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.