Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கார்த்திகை நாயகரே கைதொழுகின்றோம்

Featured Replies

[size=5]கார்த்திகை நாயகரே கைதொழுகின்றோம்[/size]

கோரங்கள் கண்டு கொதித்து

விடுதலைக் கொள்கைக்காகவே துடித்து

வீட்டினை உறவினை மறந்து

விடுதலை மண்காக்க விரைந்து

நேரிய எம் தலைவன் பாதையில்

நிமிர்ந்து களமாடி விழி தமூடி

மண்மாதா மடிமீது துயில்கொள்ளும்

கார்த்திகை நாயகரே – உமை

கண்ணிலொற்றுகின்றோம்

கைதொழுகின்றோம் - தூய

தீபம் ஏற்றியே வணங்குகின்றோம்…

கார்த்திகை மாதமது எம்மூரில்

கனத்த மழை பொழியும்

நீர் நிரம்பி நிலமெல்லாம்

மெதுமையாய்த் தானிருக்கும்…

பூச்சொரியும் மரங்களெல்லாம்

புன்னகைத்துக் காத்திருக்கும்

காற்று வந்து காதோரம்

மாவீரரர் கதைபேசும்…

ஆர்ப்பரிக்கும் அலைவந்து

நுரை நுரையாய் தானிரைக்கும்

நேற்றிருந்த வீரர் நினைவு தனைச்சுமந்து

முற்றத்து மல்லிகையின்

முகம் மலர்ந்த பூத்தொடுத்து

சுற்றமெல்லாம் கூடியே

ஒற்றுமையாய்ச் செல்வார்கள்

காவல் தெய்வங்களின் கல்லறைக்கு!

முத்தாகி முதல் வித்தாகி

மாவீரர் முடிசூடிய சங்கர் தொட்டு

முள்ளிவாய்க்கால் மௌனிப்புவரை

தமிழ் மான உணர்வின் போர்வைகளாய்

வீழ்ந்த பல்லாயிரம் வேங்கைகளின்

தியாக வடிவங்கள் ஒவ்வொன்றும் ஒருவகை…!

புலரும் திசை நோக்கிய புனிதப் பயணமதில்

நீலக் கடல் மீதில் வேகப் படகேறி

மேவும் படைவென்று வீழந்தோரே…

வானில் நிமர்ந்து தமிழனாய் உயர்ந்து

சீறும் சிங்களத்தின் சிரம் அறுத்து வென்றோரே

நாளும் முன்னேறும் ஈனர் படைக்கெதிராய்

பாயும் சன்னங்களாய் வேகமெடுத்தோரே…

கருவே ங்கை தானாகி கந்தகப் பொடி சுமந்து

தடையெனவிருந்த கொடும்பகையின்

இரும்புக் குகை தாகர்த்த நெம்புகளே….

இலக்கை வென்றபின்னும் - இன்னும்

பெயர் அறியாப் பூடகமாய்

நெஞ்சில் வாழும் மாவீர மகுடமே…

அகிம்சையின் உன்னதத்தை

அகிலத்திற்கு மீண்டும் உணர்த்திய உன்னதரே

எல்லைப் படைகளாகி துணைப் படைகளாகி

தோழர்க்கு தோள் தந்த வேங்கையரே…

நாட்டுப் பற்றாளர்களாய்

நன்மதிப்புப் பெற்றோரே

கண்ணிலொற்றுகின்றோம் - உமை

கைதொழுகின்றோம் தூய

தீபம் ஏற்றியே வணங்குகின்றோம்…

ஆர்ப்பரித்த தமிழ்க் குலத்தின்

குரல் வளையை அறுத்து விட்டதாய்…

படை திரண்ட தமிழ் வீரத்தை

அடியோடு ஒளித்துவிட்டதாய்….

முள்ளிவாய்க்காலே தமிழரின்

முடிவிடம் என்றெண்ணி

கொக்கரிக்கும் கொலைவெறிச் சிங்களமே….!

காத்திரு காலம் மீண்டும்

எமக்காய்ச் சுழன்று வரும.;…

வடிவங்கள் வேறாகிய எங்கள்

தியாகத்தின் கனதியில்

உலகம் மீண்டும் விழிக்கின்ற

நாள்வரும் பார்த்திரு….

எம் வாழ்வின் வசந்தங்களை

சூறையா:டும் பகைவனுக்கு

இரும்புக் கவசங்களையும்

இழிவான ஆலோசனைகளையும்

விருந்தாக்கி வழங்கிவரும்

உலக வல்லரசுகளே….!

பசுமை கொலுவிருந்த எம்

வாழ்விடங்களை இன்று

இரத்தமும் சதையுமான

நரபலிச் சகதியாக்கி

குடிசையும் கூடாரமுமான

நிற்கதி நிலையிலே வாழ்கிறோமே

எம்மைத் தெரியவில்லையா…?

வலிகளுக்குள் இருந்தே நாம்

வலிமையோடு நிமிர்வோம்….

நீளும் பெருவாழ்வில் நிச்சயம்

கொடி ஆள்வோம்.

அந்தநாள் வரும் போது

உங்கள் முகங்களை முந்தானையால்

இறுக மூடிக் கொள்ளுங்கள்….

ஏங்கும் இதயங்களோடும்

ஏந்தும் கரங்களோடும்

பசிக்கு உணவையும்

நிலைக்க உயர்வையும்

தேடும் எம் உறவுகள் அங்கே…

தேற்றுகிறோம் என்று சொல்லும்

உலக மனச்சாட்சியே நீ எங்கே…?

துயர அலைகள் உயர எழும்ப

துன்பப் பெருங் கடலில்

கரைசேர முடியாமல்

தத்தளிக்கும் எம்மினத்தை

கரை சேர்க்கும் திருநாளாய்

இந்நாளை பிரகடனம் செய்வோம்….

பாலைவனம்போல் வரண்டு போனது

ஈழத்தின் பெருவாழ்வு….

இனச் சுத்திகரிப்பும் கலாச்சார சீரழிவும்

மலிந்துவிட்டது தமிழர் நிலமதில்

உதிக்கும் திசை நோக்கிய பயணமதில்

நாம் செல்ல வேண்டிய தூரமதோ

நெடியதாய் விரிகிறது…

அகற்ற வேண்டிய தடைகளோ

ஏராளமாய் குவிகிறது…

பலவீனமான இனத்தின் பிரதிநிதிகளாய்

பல நாடுகளிலும் நாமின்று

மீண்டும் நிமிர வைக்க வேண்டிய

எம் தேசத்தின் தூண்களாய்

விசை கொண்டு நிமிர்வோம்

விரிசல்கள் வேண்டாம் - இதுவரை

இழந்தவை போதும

கரம் கோர்ப்;போம் பலம் பெறுவோம்…

தலைவனோடு வாழ்ந்த – அப்

பொற்காலத்தைப் பிறப்பிக்க

உறுதி கொள்வோம் - இப்

புனிதர் நாளில்…

கல்லறைகளை அழித்துவிட்டதாய்

கயவர்கள் மகிழலாம்

கெட்டித் தனமென எக்காளமிடலாம்….

எங்கள் தாயக உணர்வுகளை - இன்னும்

புரிந்தும் புரியாமல் உலகம் இருக்கலாம்….

காலம் இன்னும் எம்மைச் சோதித்து

காத்திருக்க வைக்கலாம்….

மனக்கதவை இறுக மூடியபடியே – ஏனோ

நீதிதேவதை மௌனியாகலாம்

இவையெல்லாம் என்றென்றும்

உண்மையையும் சத்தியத்தையும்

பொத்திவைக்க முடியாது

விடுதலை பெற்ற நாடுகள் பல

பகிர்ந்து கொண்ட சான்றுகள் இவை…

காப்பரணாய் விழித்திருந்து

காவியமாய் எம் நெஞ்சப் பசுமையில்

வாழும் புனித மகாத்துமாக்களே….!

உங்கள் நெஞ்சு கனத்த தாகமதை

பகிர்ந்து சுமந்தபடி தொடர்கின்றோம்

சுமக்கின்ற பெருமு; சுமைகளை

சுகமாக்கும் வரை – உங்கள்

சுவடுகளின் துணையில்

வடிவங்கள் வேறாகி

புலத்திலிருந்தும் புலரும்

திசை நோக்கிய எம்

பயணங்கள் தொடரும்….

வீண்போகா நம்பிக்கையுடன்

விழி மூடித் தூங்குங்கள்.

- இ.செம்பியன் -

ஒரு போராளியின் உள்ளத்திலிருந்து மாவீரர் தினத்தில் சிந்தியது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுக்கு

ஏங்கும் இதயங்களோடும்

ஏந்தும் கரங்களோடும்

பசிக்கு உணவையும்

நிலைக்க உயர்வையும்

தேடும் எம் உறவுகள் அங்கே…

தேற்றுகிறோம் என்று சொல்லும்

உலக மனச்சாட்சியே நீ எங்கே…?

இணைப்பிற்கு நன்றிகள் செம்பகன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.