Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெற்றி வேர்வை சிந்தினோமே... முத்து, முத்தாக...
அதில் நெல்மணியாய் விளைஞ்சிருக்கு... கொத்து கொத்தாக...
பக்குவமாய்... அறுத்து, அதை கட்டுக்கட்டாக...
அடிச்சு பதரை நீக்கி, அடுக்கி வைப்போம்.... கட்டுக்கட்டாக.

 

கவிஞர் மருதகாசியின் வரிகள் மிக அருமையாக உள்ளது.
இணைப்பிற்கு நன்றி புங்கையூரான். :)

 

  • Replies 2.1k
  • Views 180.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல்தான் எனினும் காலையில் கேட்க எனக்கு இரசிக்கவில்லை.நன்றி ப-ஆடலுக்குப் புங்கை.

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பாடலுக்கு வந்த, தமிழ் சிறிக்கும், சுமேக்கும் நன்றிகள்!

 

இன்றைய பாடலாக, ஆனந்த பைரவி படத்திலிருந்து, கண்ணதாசனின் வரிகளில், கே.வி.மகாதேவனின் இசையில், ஜெமினி கணேசன், சௌகார் ஜானகியின் உருக்கமான நடிப்பில்........

'தன்னம் தனிமையிலே, உடல் தள்ளாடும் வயதினிலே......................

 

சுமே மன்னிக்கவும், நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இன்றைய தினத்தில் சோகப்பாடல் தான்!

 

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த நுணாவுக்கு நன்றிகள்!

 

இன்றைய பாடலாக, ஊமை விழிகள் படத்திலிருந்து,மனோஜ் கஜனின் இசையில், பி.பி.ஸ்ரீனிவாசின் குரலில், டாக்டர் ராஜ்குமாரின் கவி வரிகளில், தோல்வி நிலையென நினைத்தால்.......

 

நடிகர்கள்- ஜெயசங்கர், ஆபாவாணன்

 

  • கருத்துக்கள உறவுகள்
பாடல்: கண்ணால் பேசும் கண்ணால்
பாடியவர்கள்: ஜிக்கி , சுசிலா
படம்: வீட்டு மாப்பிள்ளை
இசை: ஏ.எம் ராஜா
 
  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த நுணா, உடையார், வந்தியத்தேவன் ஆகியோருக்கு நன்றிகள்!

 

இன்றைய பாடலாகத் தாழம்பூ திரைப்படத்திலிருந்து, கே.வி.மகாதேவனின் இசையில், பி.சுசீலாவின் குரலில், எம்.ஜி.ஆர், கே.ஆர்.விஜயா ஆகியோரின் நடிப்பில்,

 

வட்ட வட்டப் பாத்தி கட்டி, வண்ண வண்ணச் சேலை கட்டி.......எனும் பாடல்!

 

http://www.youtube.com/watch?v=mNqdGwPjH_w

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலை, இன்றுதான் முதன் முதலாகக் கேட்கின்றேன்.
இணைப்பிற்கு நன்றி புங்கையூரான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பாடலுக்கு வருகை தந்த, தமிழ் சிறிக்கு நன்றிகள்.

 

இன்றைய பாடலாக, தாய் சொல்லைத் தட்டாதே படத்திலிருந்து, கே.வி. மகாதேவனின் இசையில், பி.சுசீலாவின் குரலில், சரோஜாதேவியின் நடிப்பில், 

காட்டுக்குள்ளே திருவிழா......

 

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த நுணா, உடையார், வந்தியத்தேவன் ஆகியோருக்கு நன்றிகள்!

 

இன்றைய பாடலாகத் தாழம்பூ திரைப்படத்திலிருந்து, கே.வி.மகாதேவனின் இசையில், பி.சுசீலாவின் குரலில், எம்.ஜி.ஆர், கே.ஆர்.விஜயா ஆகியோரின் நடிப்பில்,

 

வட்ட வட்டப் பாத்தி கட்டி, வண்ண வண்ணச் சேலை கட்டி.......எனும் பாடல்!

 

http://www.youtube.com/watch?v=mNqdGwPjH_w

 

இப்பாடலில் வருவது கே ஆர் விஜயா இல்லை. பாடல்கள் நன்று நன்றி புங்கை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த வந்தி, உடையார், சுமே ஆகியோருக்கு நன்றிகள்!

 

இன்றைய பாடலாக, அவளுக்கென்று ஒரு மனம், படத்திலிருந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியனினதும், சுசீலாவினதும் குரலில், எம்.எஸ்.வியின் இசையமைப்பில், ஜெமினிகணேசன், காஞ்சனா, பாரதி ஆகியோரின் நடிப்பில்,

மங்கையரில் மகாராணி.................

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிமையான பாடல், நல்ல நடிப்பு, அழகான படப்பிடிப்பு.
இணைப்பிற்கு நன்றி, புங்கையூரான். :)

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல் நன்றி புங்கை.

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி, உடையார், வந்தி, சுமே ஆகியோருக்கு நன்றிகள்.

 

இன்றையபாடலாக, உயர்ந்த மனிதன் படத்திலிருந்து, எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில், பி. சுசீலாவின் குரலில், சிவாஜி கணேசன், வாணி ஸ்ரீ, ஆகியோரின் நடிப்பில்,

 

நாளை இந்த வேளை பார்த்து....................

 

https://www.youtube.com/watch?v=l_SpGUaXUqs

Edited by புங்கையூரன்

மனதுக்கு இனிமையான பாடல், நன்றி பகிர்வுக்கு புங்கை, எத்தனை தரம் கேட்டாலும் சலிக்காத பாடல்

 

 

எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் வெளிவந்த சிறந்தப் பாடல்களில் ஒன்று சுசீலா பாடிய, நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி வா நிலா என்ற உயர்ந்த மனிதன் படப்பாடல். தனிமையான இரவில் கேட்க நேரும் போதெல்லாம் உள்ளத்தில் சோகத்தின் சுனையை திறந்துவிடும் சக்தி கொண்ட பாடல். மெ‌ட்டும், வார்த்தைகளும் இயைந்து நம்மை மோனத்தில் ஆழ்த்துபவை.

நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமைக் கண்டு நின்று போய்விடு...
 

 

இந்த வ‌ரிகளை கேட்கையில் கண்ணதாசனின், வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை பாடலின் நடுவில் வரும், இன்பமும் காதலும் இயற்கையின் நீதி ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி என்ற வ‌ரிகள் நினைவுக்கு வரும். காதல் இயற்கையானது. பி‌ரிவு மனிதன் உருவாக்கியது. அதனால் காதல் கொண்டவர்கள் எப்போதும் இயற்கை சார்ந்தே உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் சோகத்தை நிலவுடனும், தென்றலுடனும் பகிர்ந்து கொள்கிறார்கள். நட்சத்திரங்களை திட்டி மறைந்துப் போகச் சொல்கிறார்கள். இது உயர்ந்த மனிதன் பாடலில் அற்புதமாக வெளிப்பட்டிருப்பதை பாருங்கள்.

காதலி நிலவை நாளை வரச் சொல்கிறாள், தென்றலை நின்று போகும்படி பணிக்கிறாள். பாடலின் தொடக்கத்தில் ஹைபிட்‌ச்சில் வரும், பால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய் என்ற வ‌‌ரி. என் தலைவனே இங்கில்லை, அப்புறம் நீயெல்லாம் யார் பார்க்கிறதுக்கு இங்கே வந்தாய் என்ற விரக்தியின்ன் தொனியில் ஆரம்பித்து நாளை தலைவன் வருவான் என்ற நம்பிக்கையில் விரகத்தின் மூடுக்கு செல்கிறது.

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன்மாலை சூடினான்
கன்னி அழகை பாடவோ அவன் கலைஞன் ஆகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞன் ஆகினான்.

இரண்டாவது சரணம் முழுக்க அவளின் காதலின் அலைக்கழிப்பை பற்றிப் பாடுகிறாள்.

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்.

சுசீலாவின் குரலில் எம்.எஸ்.வி-யின் அருமையான மெட்டில் கண்ணதாசனின் வ‌ரிகளில் எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத பாடலிது. இரவின் தனிமையில் கேட்டுப் பாருங்கள். நீங்கள் இழந்ததன் வலியையும், பெறப்போவதன் நிறைவையும் இந்தப் பாடல் ஒருசேரத் தரும்.
 

http://tamil.webdunia.com/entertainment/film/memorable/1204/20/1120420030_2.htm

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடல் முதலும் போட்டதே. புங்கைக்கும் வயசாப் போச்சு.  :D 

ஆனாலும் எனக்கு இந்தப் பாடல் எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பதில்லை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பாடலுக்கு வருகை தந்த, வந்திக்கும், சுமேக்கும் நன்றிகள். 

 

சுமே, இந்தப் பாடல் முன்பு இங்கு இணைக்கப்படவில்லை.

 

இன்றைய பாடலாக, மெல்லத்திறந்தது கதவு என்னும் திரைப்படத்திலிருந்து, கே.எஸ், சித்திராவின் குரலில், எம்.எஸ். விஸ்வநாதனின் இசையில்,மோகன், ராதாவின் நடிப்பில்,

 

'குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேக்கிதா'..............

 

  • கருத்துக்கள உறவுகள்

படம்: கண்மணிராஜா

நடிகர்: சிவக்குமார்

பாடியவர்கள்: எஸ்.பி.பாலு, பி.சுசீலா 

ஓஓஓஓஒ.. ஹோஓஓஓஓ

ஓஓஓஓஒ.. ஹோஓஓஓஓ

ஓஓஓஓஒ.. ஹோஓஓஓஓ

ஓஓஓஓஒ.. ஹோஓஓஓஓ

ஓடம் கடலோடும்

அது சொல்லும் பொருள் என்ன

அலைகள் கரையேறும்

அது தேடும் துணை என்ன

6fki7iu.jpg 

ஓடம் கடலோடும்

அது சொல்லும் பொருள் என்ன

அலைகள் கரையேறும்

அது தேடும் துணை என்ன

ஏதோ அதில் ஏதோ

அதை நானும் நினக்கின்றேன்

ஏதோ அதில் ஏதோ

அதை நானும் நினக்கின்றேன்

ஏனோ அது ஏனோ

அதை நானும் ரசிக்கின்றேன்

ஏதோ அதில் ஏதோ

அதை நானும் நினக்கின்றேன்

ஏனோ அது ஏனோ

அதை நானும் ரசிக்கின்றேன்

மேகங்கள் மோதுவதால்

மின்னல் வருவது எதனாலே 

எதனாலே..

4z0pxy8.jpg 

தேகங்கள் கூடுவதால்

இன்பம் வருமே அதுபோலே

ஓடம் கடலோடும்

அது சொல்லும் பொருள் என்ன

அலைகள் கரையேறும்

அது தேடும் துணை என்ன

நாடிகளில் புதுவெள்ளம்

ஓடுதல் போலே தெரிகின்றது

6fgp7v7.jpg 

நாடிகளில் புதுவெள்ளம்

ஓடுதல் போலே தெரிகின்றது

நல்லது தான் தெரியட்டுமே

உலகம் மெதுவாய் புரிகின்றது

நல்லது தான் தெரியட்டுமே

உலகம் மெதுவாய் புரிகின்றது

பகலினிலே வருவதில்லை

இரவினில் ஏதோ வருகின்றதே

பகலினிலே வருவதில்லை

இரவினில் ஏதோ வருகின்றதே

இரவு என்னும் நேரமெல்லாம்

இருவருக்கென்றே வருகிறதே

இரவு என்னும் நேரமெல்லாம்

இருவருக்கென்றே வருகிறதே

ஓடம் கடலோடும்

அது சொல்லும் பொருள் என்ன

அலைகள் கரையேறும்

அது தேடும் துணை என்ன

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டும் நல்ல பாடல்கள் தான். நன்றி புங்கை,நுணா. நுணா, விடிய இப்பிடியான பாட்டுப் போட்டா வேலை செய்யிறேல்லையோ??? :D

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பாடலுக்கு வருகை தந்த, நுணா, உடையார், சுமே ஆகியோருக்கு நன்றிகள்!

 

இன்றைய பாடலாக ஒரு வித்தியாசமான பாடல். 

 

மேஜர் சந்திரகாந்த் படத்திலிருந்து, கவிஞர் வாலியின் வரிகளில், வி. குமாரின் இசையில்,பி.சுசீலாவின் இனிய குரலில், எனது அபிமான நடிகர் நாகேஸ், ஜெயலலிதா ஆகியோரின் அழகிய நடிப்பில்,

 

ஒரு நாள் யாரோ, என்னபாடல்.......

 

http://www.youtube.com/watch?v=KEgGwyE2Xn8

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பாடலாக, மறைந்த இசை மாமேதை, டி.எம்.சௌந்தரராஜன் நினைவாக, கவிஞர் கண்ணதாசனின் வரிகளில், மறைந்த இசைமேதையின் கணீரென்ற குரலில்,

 

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே.......

 

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது  பாடல் எனக்கு மிகவும் பிடித்தபாடல். நன்றி புங்கை பாடல்களுக்கு. ஜெயலலிதா எவ்வளவு அழகாக இருக்கிறார்.அவரின் நடிப்புக் கூட எனக்குப் பிடிக்கும் புங்கை.

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பாடலுக்கு வருகை தந்த, சுமேக்கும், வந்திக்கும் நன்றிகள்.

 

இன்றையபாடலாக, பாதகாணிக்கை என்னும் திரைப்படத்திலிருந்து, கவிஞர் கண்ணதாசனின் வரிகளில், சாவித்திரியின் அற்புத நடிப்பில், கவிக்குயில் சுசீலாவின் குரலில்,

 

எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் ..................................

 

http://www.youtube.com/watch?v=NLeQ2aY_EYE

இன்றைய பாடலுக்கு வருகை தந்த, சுமேக்கும், வந்திக்கும் நன்றிகள்.

 

இன்றையபாடலாக, பாதகாணிக்கை என்னும் திரைப்படத்திலிருந்து, கவிஞர் கண்ணதாசனின் வரிகளில், சாவித்திரியின் அற்புத நடிப்பில், கவிக்குயில் சுசீலாவின் குரலில்,

 

எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் ..................................

 

 

 

 

இதைமாற்றி பாட  :lol:  

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல்தான். வயதுபோற காலத்தில இப்பிடியான பழைய படங்களைப் பாத்துக் காலம் கழிச்சிடலாம். :D

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.