Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடபகுதிக்கு ஜனநாயகத்தைக் கொண்டு வந்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - இந்துசமய விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளர்

Featured Replies

16.12.2012 - ஞாயிற்றுக்கிழமை

வடபகுதிக்கு ஜனநாயகத்தைக் கொண்டு வந்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என இந்துசமய விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் பிரம்மசிறி ராமச்சந்திரக்குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகரசபையின் மக்கள் பங்களிப்புடனான அபிவிருத்திட்டம் அறிமுகவிழாவில் இன்றையதினம் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடபகுதியில் நிலவிய யுத்தத்தால் நீண்டகாலமாக ஜனநாயகம் இல்லாதொரு சூழல் நிலவி வந்த நிலையில் மீண்டும் ஜனநாயகத்தை இப்பகுதியில் நிலைநாட்டுவதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெரும்பங்காற்றி உழைத்தார்.

ஜனாதிபதியாக காலஞ்சென்ற பிரேமதாசா அவர்கள் இருந்த காலப்பகுதியில் வடபகுதிக்கு ஜனநாயகத்தை கொண்டு வந்த பெருமைக்குரியவராக அமைச்சர் அவர்கள் விளங்கும் அதேவேளை, இப்பகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்கும் முக்கியமானவராகவும் திகழ்கின்றார்.

இதனிடையே ஜப்பான் போன்றதொரு அபிவிருத்தி நோக்கி யாழ்ப்பாணம் முன்னேற வேண்டுமென்பதுடன் கலை, கலாசாரம் பண்பாடு மிக்கதொரு இடமாகவும் மிளிரவேண்டுமெனவும் அதற்கு துறைசார்ந்தவர்கள் துணைநின்றுழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் கீழான யாழ்.மாநகர சபையின் மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்திட்டம் என்ற நூலினை வெளியிட்டு ஏனைய சபைகளுக்கும் முன்மாதிரியாக செயற்படுகின்றமை வரவேற்கத்தக்கது என்றும் சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையுரையாற்றும்போது 2009 ம் ஆண்டு யாழ்.மாநகர சபையை பொறுப்பெடுத்தது முதல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனை வழிநடத்தலின் கீழ் நாம் பல்வேறு அபிவிருத்திதிட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

அத்துடன் அரசுக்கும் மக்களுக்குமிடையே பாலமாக இருந்து மக்கள் அபிவிருத்தி பணிகளில் பல்வேறு செயற்திட்டங்களை துறைசார்ந்தோரூடாக முன்னெடுத்துவரும் அமைச்சர் அவர்கள், யாழ்.மாநகர சபையூடான வீதிப்புனரமைப்பு, மின்சாரம், சுகாதாரம், புதுக்கட்டிடங்கள், கால்வாய்கள் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அத்துடன் எதிர்காலத்தில் அமைச்சரின் வழிகாட்டலுடன் யாழ்.மாநகர சபை பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுக்கும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

sarma1.JPG

sarma3.JPG

sarma4.JPG

sarma5.JPG

 


http://www.epdpnews.com/news.php?id=18261&ln=tamil

Edited by சண்டமாருதன்

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில்... எத்தனையோ... சைவக்கோவில்கள், புத்த கோவில்களாக மாறிவிட்டன.
அதனை எதிர்த்து, இந்தப் பிராமணி ஒரு குரல் கொடுக்கவில்லை. ஜனநாயகத்தைப் பற்றிப் பேச வெளிக்கிட்டார்கள், துப்புக் கெட்டவர்கள். :(

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டால் தான் அரசியலை விட்டு ஒதுங்குவதாகச் சொன்னவரும் டக்ளஸ் தேவானாந்தா அவர்களே!.

நாட்டை விட்டு எங்காவது போய் டக்லஸ் வாழ்வதே செய்யும் பெரிய சேவை !

 

 இதனிடையே ஜப்பான் போன்றதொரு அபிவிருத்தி நோக்கி யாழ்ப்பாணம் முன்னேற வேண்டுமென்பதுடன் கலை, கலாசாரம் பண்பாடு மிக்கதொரு இடமாகவும் மிளிரவேண்டுமெனவும் அதற்கு துறைசார்ந்தவர்கள் துணைநின்றுழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
 

 

நெடுத்தீவு சிங்கபூராகிவிட்டது <_< 
அடுத்து யாழ் ஜப்பானாக போகின்றது :icon_mrgreen: 

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.