Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அலட்சியப்படுத்தப்பட்டதன் விளைவே புலிகளின் உருவாக்கம் – பேராசிரியர் சற்குணராஜா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Prof-satkunam_CI-100x100.jpg

 

தமிழீழ விடுதலைப் புலிகளை  தமிழர்களும், பல்கலைக்கழக மாணவர்களுமே வளர்த்து விட்டதாக படைத்தரப்பும் அரசும் கூறினாலும் சிங்களவர்களும்  பிரேமதாஸ போன்ற அரசியல்வாதிகளும் சேர்ந்தே அவர்களை வளர்த்து விட்டனர் என கணிதவியல் பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா தெரிவித்துள்ளார்.

 

பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைதானதைத் தொடர்ந்து முடங்கியுள்ள கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஆராய யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், துறைத் தலைவர்கள், கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் ஆகியோரை யாழ். மாவட்டகட்டளைத் தளபதி ஹத்துருசிங்க பலாலி படைத் தளத்தில் சந்தித்தார். அங்கு உரையாற்றிய மஹிந்த ஹத்துருசிங்க, முப்பது வருட கால அழிவுக்கு புலிகளும் அவர்களை உருவாக்கி வளர்த்துவிட்ட தமிழர்களும் பல்கலைக்கழக சமூகமுமே காரணம் என்று அடிக்கடி கூறிக்கொண்டிருந்தார்.

 

இதன் போது குறுக்கிட்ட பேராசிரியர் சிறி சற்குணராஜா தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அலட்சியப்படுத்தப்பட்டதன் விளைவாகவே புலிகள் தோன்றினர். இன்று மீண்டும் புலிகளை உருவாக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது என்றால் அந்த அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதே அதற்குக் காரணம் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவுக்கு  நேரில் எடுத்துரைத்தார்.

 

நீங்கள் கூறுவது போன்று இத்தகைய அழிவுகளுக்கு தனியே புலிகளின் உருவாக்கம் மட்டுமே காரணம் அல்ல. தமிழர்களின் அடிப்படை மூலப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் அலட்சியப் படுத்தப்பட்டதாலேயே புலிகள் உருவானார்கள்.

 

1981 ஆம் ஆண்டு நீங்கள் படையில் இணைந்தபோது அப்போது இராணுவத்தின் எண்ணிக்கை வெறும் 12ஆயிரம் மட்டுமே என்று கூறினீர்கள். அந்தக் காலத்தில் புலிகளின் எண்ணிக்கைகூட 20 பேர் வரையில் மட்டுமே. அவ்வாறு சொற்ப எண்ணிக்கையாக இருந்த புலிகளை பெருகவைத்தமைக்கு காரணம் தமிழர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் மட்டுமல்ல, தொடர்ந்தும் அலட்சியப்படுத்தப்பட்ட

மூலப் பிரச்சினையும், சிங்கள அரசியல்வாதிகளுமே காரணம்.

 

இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்துவிடும் நிலையில் இருந்தபோது ஆயுதங்களை வழங்கி புலிகளின் அழிவைத் தடுத்தவர் அப்போதைய இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸ தான். இந்த நிலையில் தமிழ் மக்களும் பல்கலைக்கழக மாணவர்களுமே புலிகளை வளர்த்தார்கள் என்று சொல்வது என்ன நியாயம்?

 

படையினரால் கைது செய்யப்பட்ட விஞ்ஞானபீட மாணவனை நான் தனிப்பட்ட முறையிலும் என்னுடைய மாணவன் என்ற ரீதியிலும் நன்கறிவேன். குறித்த மாணவன் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவன் என்று நீங்கள் கூறுவதை ஒரு போதும் நான் ஏற்கமாட்டேன். ஏனெனில் அவன் அப்படிப்பட்ட மாணவன் அல்லன் என்பது எனக்கு தெரியும்.

 

நீங்கள் (அரசும் இராணுவமும்) மூலப் பிரச்சினையைத் தீர்க்காமல் விளைவுக்கு மாத்திரம் அதனைக் காரணம் சொல்லி தீர்வு தேட நினைக்கிறீர்கள். ஆனால் மூலப் பிரச்சினையை தீர்க்காவிட்டால்  அதனால் உண்டாகின்ற   விளைவுகள் தொடரவே செய்யும் எனவும் பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா வலியுறுத்தியுள்ளார்.

http://www.sarithamnews.com/?p=1462

  • கருத்துக்கள உறவுகள்

துணைவேந்தரின் தைரியம் பாராட்டுதலுக்கு உரியது..! :rolleyes:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் பிரபாகரன் இருக்கும்  போது ஏன் சொல்லவில்லை 

இதன் போது குறுக்கிட்ட பேராசிரியர் சிறி சற்குணராஜா தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அலட்சியப்படுத்தப்பட்டதன் விளைவாகவே புலிகள் தோன்றினர். இன்று மீண்டும் புலிகளை உருவாக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது என்றால் அந்த அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதே அதற்குக் காரணம் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவுக்கு  நேரில் எடுத்துரைத்தார்.

 

 நிச்சயம் சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவ பிரதிநிதிக்கு தமிழர்கள் உணர்வுகளை அழிக்க முடியாது என்பதை உணர்த்திய கூற்று.

துணைவேந்தரின் தைரியம் பாராட்டுதலுக்கு உரியது..! :rolleyes:

 

பேராசிரியர் சற்குணராஜா துணைவேந்தர் இல்லை!

துணைவேந்தர் தைரியம் அற்றவர்! அவருக்கு முதுகெலும்பு இருந்திருந்தால் சிங்கள அரச பயங்கரவாதிகள் மாணவர்களை இலகுவில் கைது செய்திருக்க முடியாது.

புலிகளை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் சம்பந்தன், சுமந்திரன் போன்ற அரைவேக்காடுகளும் மாணவர்களின் சட்டவிரோத கைதுகளுக்கு, தொடர்ச்சியான  சட்டவிரோத தடுத்துவைப்புகளுக்கு மறைமுகமாக உதவியுள்ளனர்

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் சற்குணராஜா துணைவேந்தர் இல்லை!

துணைவேந்தர் தைரியம் அற்றவர்! அவருக்கு முதுகெலும்பு இருந்திருந்தால் சிங்கள அரச பயங்கரவாதிகள் மாணவர்களை இலகுவில் கைது செய்திருக்க முடியாது.

புலிகளை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் சம்பந்தன், சுமந்திரன் போன்ற அரைவேக்காடுகளும் மாணவர்களின் சட்டவிரோத கைதுகளுக்கு, தொடர்ச்சியான  சட்டவிரோத தடுத்துவைப்புகளுக்கு மறைமுகமாக உதவியுள்ளனர்

 

திருத்தியமைக்கு நன்றிகள் ஆராவமுதன்.

  • கருத்துக்கள உறவுகள்
இவர் பிரபாகரன் இருக்கும்  போது ஏன் சொல்லவில்லை 

 

எதைச் சொல்லவில்லை என்று சொல்ல வருகின்றீர்கள்?

 

யாழ் பல்கலைக் கழகத்தில் உள்ளவர்கள் எப்போதுமே அரசியலுடன் மிகவும் சம்பந்தப்பட்டவர்கள்தான்.  ஆனால் எல்லாம் எப்போதும் வெளிப்படையாகத் தெரிவதில்லை.

இவர் பிரபாகரன் இருக்கும்  போது ஏன் சொல்லவில்லை 

 

2 காரணமாக அவர் அப்போது அப்படியான கருத்தௌ கூறாமல் விட்டு இருக்கலாம்.

 

 

1< புலிகளுக்கு  இப்படி வீரமாக பேசி தங்களைவிட கைதட்டு வாங்குபவர்களை பிடிக்காது.

 

2) புலிகள் மற்றவர்களை  துரோகி என கூறிக் கொண்டு மாற்று இயக்கங்களில் ஏதோ ஒரு பாதிப்பில் இணைந்து கொள்ளையடித்தவனையும்  களவு எடுத்தவனையும் சுட்டுக் கொண்டு திரிய , இலங்கை அரசோ தமிழர்களில்  முக்கியமானவர்களை போட்டுத்தள்ளி கனக்கு தீர்த்துக் கொண்டு இருந்ததது. (உ+ம்) ஜோசப்பரராஜசிங்கம், ரவிராஜ்   பேராசிரியர் துரைராஜா,பொன்னபலம் ஆகியோரை ஓரளவுக்கு  சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 காரணமாக அவர் அப்போது அப்படியான கருத்தௌ கூறாமல் விட்டு இருக்கலாம்.

 

 

1< புலிகளுக்கு  இப்படி வீரமாக பேசி தங்களைவிட கைதட்டு வாங்குபவர்களை பிடிக்காது.

 

2) புலிகள் மற்றவர்களை  துரோகி என கூறிக் கொண்டு மாற்று இயக்கங்களில் ஏதோ ஒரு பாதிப்பில் இணைந்து கொள்ளையடித்தவனையும்  களவு எடுத்தவனையும் சுட்டுக் கொண்டு திரிய , இலங்கை அரசோ தமிழர்களில்  முக்கியமானவர்களை போட்டுத்தள்ளி கனக்கு தீர்த்துக் கொண்டு இருந்ததது. (உ+ம்) ஜோசப்பரராஜசிங்கம், ரவிராஜ்   பேராசிரியர் துரைராஜா,பொன்னபலம் ஆகியோரை ஓரளவுக்கு  சொல்லலாம்.

 

 

1. இவர்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற காரணத்தால் பதுங்கி இருக்க.. (இப்ப மக்கள் இவர்களிடம் கேள்வி கேட்கமாட்டார்கள் என்று தெரியும்.. மக்களே துன்பத்தில பயத்தில..இருக்கினம்...கேள்வி கேட்கிற நிலையா அவையட்ட இருக்குது. புலிகள் இருந்தால் மக்களுக்காக கேள்வி கேட்டிருப்பார்கள். விளக்கம் சொல்ல வேண்டி வந்திருக்கும்..! இப்ப தானே யாரும் என்னவும் சொல்லலாம்.. பேசலாம்.. எழுதலாம். மக்கள் தலைவிதின்னு கேட்டுக்கிட்டு மெளனமா இருக்கனும். )

 

2..மாற்று இயக்கங்கள் என்போர் காட்டிக் கொடுத்து.. புலிகளை.. மக்களை சுட்டுக் கொண்டு திரிய..

 

இப்படியே கழிந்தன காலங்கள். நாங்கள் அந்த சைக்கிள் காப்பில.. அசைலம் அடிக்க ஓடி வந்திட்டம்.

 

இப்படியான உண்மைகளை ஏன் மறைக்கிறீர்கள். அதையும் பேசுங்களேன். :icon_idea::D

Edited by nedukkalapoovan

1. இவர்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற காரணத்தால் பதுங்கி இருக்க.. (இப்ப மக்கள் இவர்களிடம் கேள்வி கேட்கமாட்டார்கள் என்று தெரியும்.. மக்களே துன்பத்தில பயத்தில..இருக்கினம்...கேள்வி கேட்கிற நிலையா அவையட்ட இருக்குது. புலிகள் இருந்தால் மக்களுக்காக கேள்வி கேட்டிருப்பார்கள். விளக்கம் சொல்ல வேண்டி வந்திருக்கும்..! இப்ப தானே யாரும் என்னவும் சொல்லலாம்.. பேசலாம்.. எழுதலாம். மக்கள் தலைவிதின்னு கேட்டுக்கிட்டு மெளனமா இருக்கனும். )

 

2..மாற்று இயக்கங்கள் என்போர் காட்டிக் கொடுத்து.. புலிகளை.. மக்களை சுட்டுக் கொண்டு திரிய..

 

இப்படியே கழிந்தன காலங்கள். நாங்கள் அந்த சைக்கிள் காப்பில.. அசைலம் அடிக்க ஓடி வந்திட்டம்.

 

இப்படியான உண்மைகளை ஏன் மறைக்கிறீர்கள். அதையும் பேசுங்களேன். :icon_idea::D

 

 

 

மாற்று இயக்கங்களை சுட புலிகளுக்கு இருந்த காறனத்தை போலவே  மாற்று இயக்கங்களுக்கும் காரணங்கள் இருந்து இருக்கலாம்.

 

 புலிகளுக்கு உதவினார்கள் என்று  மக்களை  மாற்று இயக்கங்கள் சுட்டார்கள்  என்பதை போலவே  இராணுவ பகுதிக்கு தப்பிச் சென்ற மக்களையும்  சுட்டார்கள்.

 

 

நியானி: திரிக்கு சம்பந்தமற்ற பகுதிகள் தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்
மாற்று இயக்கங்களை சுட புலிகளுக்கு இருந்த காறனத்தை போலவே  மாற்று இயக்கங்களுக்கும் காரணங்கள் இருந்து இருக்கலாம்.

 

 புலிகளுக்கு உதவினார்கள் என்று  மக்களை  மாற்று இயக்கங்கள் சுட்டார்கள்  என்பதை போலவே  இராணுவ பகுதிக்கு தப்பிச் சென்ற மக்களையும்  சுட்டார்கள்.

 

மாற்று இயக்கங்கள் என்போர்.. மக்களுக்காகப் போராடியதில்லை. தமிழீழத்திற்காகப் போராடியதில்லை விடிவிக்கப்பட்ட நிலங்களை பாதுகாக்கப் போராடியதில்லை. மாறாக.. காட்டிக்கொடுப்புகளோடு தங்கள் இருப்பை காக்க எதிரியோடு நின்றார்கள். நில ஆக்கிரமிப்புக்கு உதவி தாயக இருப்பை இல்லாமல் செய்தார்கள். செய்யப்பட்ட அளப்பரிய தியாகங்களை வீணடித்தார்கள். அவர்களுக்கு மக்களைச் சுட்டுக்கொல்ல  எந்த ஒரு உருப்படியான காரணமும் இருக்கவில்லை. எஜமானர்களிடம் கொலைக்கு  பணமும் அரசியல் ஆதாயமும் அடைக்கலமும் பெறுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.. இதனை சர்வதேச மன்னிப்பு சபை.. ஐசிஆர்சி.. உட்பட எல்லாமே வெளி உலகிற்கு அழகாகப் பதிவு செய்துள்ளன.

 

எத்தனை வதைமுகாம்களை தீவகத்திலும்.. வவுனியாவிலும்.. வெலிகந்தையிலும் நடத்தினார்கள் என்பதை உலகம் அறியும். அவர்கள் யார் என்பதையும் உலகம் அறியும். மேலதிகமாக கொழும்பில் நின்று காட்டிக்கொடுத்தோர் பற்றியும்.. போராட்டத்தின் ஒவ்வொரு நகர்வுகளையும் தியாகங்களையும் சீரழித்தவர்களையும் மக்களை பலியிட்டவர்களையும் சிறையில் அடைத்தவர்களையும்.. எல்லோருக்கும் தெரியும்.

 

புலிகள்.. யாரும்.. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ள போகினம் என்று சுடுவதாக இருந்தால்.. நீங்கள் பலர் அசைலம் அடித்திருக்கவே முடியாது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் துரோக நோக்கங்கள் தவிர்ந்து வேறு எந்த நோக்கங்களுக்காகச் சென்ற எவரும் தடுக்கப்படவில்லை. மாறாக கண்காணிக்கப்பட்டு அனுப்பப்பட்டார்கள். அது போராட்ட காலத் தேவை. துரோகிகளின் எதிரிகளின் உளவாளிகளின்.. ஊடுருவலை தடுக்க அவசியமும் கூட. உலகில் எந்த நாடும் சுதந்திர எல்லையைக் கொண்டிருக்கவில்லை. எல்லா நாடும் எல்லைக் கட்டுப்பாடுகளைக் கொண்டே உள்ளன. புலிகளிடம் மட்டும் எதுவும் இருக்கக் கூடாது... ஆனால் துரோகிகளிடம் எல்லாம் இருக்கனும் என்பது தான் உங்கள் போன்றோரின் நிலைப்பாடு.

 

மக்களை.. இதய சுத்தியோடு.. தமிழீழத் தாயகம் காக்க மீட்கப் போராடிய போராளிகளைச் சுட்டுக்கொல்லவும்.. கூண்டோடு கூட்டிக்கொண்டு போய் காட்டிக்கொடுக்கவும்.. சுட்டுக்கொல்லவும்.. துரோகிகள் ஆன மாற்று ஒட்டுக்குழுக்களுக்கு எந்த நியாய தேவையும் இல்லை. அவர்களின் ஒரே தேவை.. எதிரிக்கு கூலிக்கு கொலை செய்தலே.

 

 

நியானி: திரிக்கு சம்பந்தமற்ற பகுதிகள் தணிக்கை

Edited by நியானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.