Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிற்சர்லாந்தில் நடிகை சினேகா தலைமையில் சுனாமி நினைவு...

Featured Replies

20 000 ஆயிரத்துக்கும் அதிகமான எங்கள் இரத்த உறவுகள் ஆழிப் பேரலை அனர்த்தத்தில் கொல்லப்பட்ட 8வது நினைவு நாளான நேற்றைய நாள் (26.12.2012) சுவிற்சர்லாந்தில் நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா தலைமையில் மானாட மயிலாட கலைஞர்கள் சேர்ந்தாட சூப்பர் சிங்கர் கலைஞர்கள் சேர்ந்துபாட குதூகலமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு சுவிஸ் தலைவர்தான் முடிவு சொல்லோனும் 

//20 000 ஆயிரத்துக்கும் அதிகமான எங்கள் இரத்த உறவுகள் ஆழிப் பேரலை அனர்த்தத்தில் கொல்லப்பட்ட 8வது நினைவு நாளான நேற்றைய நாள் (26.12.2012)//

 

//நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா தலைமையில் மானாட மயிலாட கலைஞர்கள் சேர்ந்தாட சூப்பர் சிங்கர் கலைஞர்கள் சேர்ந்துபாட குதூகலமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.//

 

இதுக்குள்ள என்ன தொடர்பு? எனக்கு ஒன்றுமே புரியல ? 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தை விட தமிழகத்திலேயே அதிக உயிரிழப்பு ஏற்பட்டது என நினைக்கிறேன்.

//20 000 ஆயிரத்துக்கும் அதிகமான எங்கள் இரத்த உறவுகள் ஆழிப் பேரலை அனர்த்தத்தில் கொல்லப்பட்ட 8வது நினைவு நாளான நேற்றைய நாள் (26.12.2012)//

 

//நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா தலைமையில் மானாட மயிலாட கலைஞர்கள் சேர்ந்தாட சூப்பர் சிங்கர் கலைஞர்கள் சேர்ந்துபாட குதூகலமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.//

 

இதுக்குள்ள என்ன தொடர்பு? எனக்கு ஒன்றுமே புரியல ? 

 

என்ன டாம்  பேசுறீங்கள்?

 

 சினேகாவிடம் தொப்பிள் இருக்கு   ஈழத்தில் உறவு இருக்கு சுவிஸில் கொடி(காசு) இருக்கு :icon_idea:

  • தொடங்கியவர்

சிநேகா தம்பதிகளுக்கு மட்டும் 35 000 சுவிஸ் பிராங்குகளுக்கு மேல் (கிட்டத்தட்ட 50 000 000 இல.ரூபா) கொடுப்பனவு முதல் வகுப்பு  பயணச்சீட்டு  நட்சத்திர விடுதி இன்றைய சூழ்நிலையில்  இது தேவையான ஒன்றா? இந்தியக் கலைஞர்களுக்கு இவ்வளவு தொகையை செலவு செய்யும் ஈழத்து நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் புலம்பெயர்ந்து வாழும் எங்களின் கலைஞர்களை வைத்து நிகழ்வு செய்யும்போது அவர்களை உரியமுறையில் அனுசரிக்சிறார்களோ என்றால் இல்லவே இல்லை. எமது கலைஞர்கள் தமது நேரத்தை ஒதுக்கி தமது செலவில் பயணஞ்செய்து தமது செலவில் உள்நுழைவு எடுத்து உணவுச் செலவையும் கவனித்து நிகழ்வுகளை செய்துவிட்டு வருகின்றார்கள்.

22.12.2012அன்று  60 இற்கும் மேற்பட்ட ஈழத்துப் பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் (முற்று முழுதாக சுவிஸ் ஈழத்துக் கலைஞர் களின் இசையில் தமிழக கலைஞர் கள் நடுவராக) இடம் பெரும் மாபெரும் இசைப் போட்டி நிகழ்வு 

நம்மாலும் முடியும் என்ற புலம்பெயர் ஈழத் தமிழரின் இசை நிகழ்வு நடந்தது நீங்க ஏன் வந்து ஊக்குவிக்கவில்லை?

மூன்று மாதங்களுக்கு முன் நடந்த இந்திய கலைஞ்சர்களின் நிகழ்விற்கு நீங்க அறிவிப்பு வேற செய்தீங்க அப்பா அது தப்பு எண்டு படலையா?

  • தொடங்கியவர்

22.12.2012அன்று  60 இற்கும் மேற்பட்ட ஈழத்துப் பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் (முற்று முழுதாக சுவிஸ் ஈழத்துக் கலைஞர் களின் இசையில் தமிழக கலைஞர் கள் நடுவராக) இடம் பெரும் மாபெரும் இசைப் போட்டி நிகழ்வு 

நம்மாலும் முடியும் என்ற புலம்பெயர் ஈழத் தமிழரின் இசை நிகழ்வு நடந்தது நீங்க ஏன் வந்து ஊக்குவிக்கவில்லை?

 

மூன்று மாதங்களுக்கு முன் நடந்த இந்திய கலைஞ்சர்களின் நிகழ்விற்கு நீங்க அறிவிப்பு வேற செய்தீங்க அப்பா அது தப்பு எண்டு படலையா?

 

22.12.2012இல் நடந்த நிகழ்வு இந்திய மலேசியக் கலைஞர்களின் தலையீடு இல்லாமல் நடைபெற்றது என்பதை உறுதிபடக் கூறமுடியுமா?

அது தப்பு என்று பட்டதால்தான் ஒதுங்கிக்கொண்டேன்.

அன்பு சுனாமி நினைவுநாளில் நடைபெற்ற அந்த கோலாகல களிப்பூட்டல் நிகழ்வை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு இழப்புகள் இல்லாத நாள் ஏது? ஒவொரு நாளிலும் ஒவொரு இழப்புகள் தான் இழப்புககை நெஞ்சங்களில் நிறுத்தி அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் சுனாமியால் பாதிக்கப்பட்ட கரையோர மக்கள் மிகவும் சிறப்பாக நத்தார் தினத்தை கொண்டாடுகிண்டார்கள் ஆக இழப்புகளை கடந்தும் எங்கள் வாழ்க்கை செல்ல வேண்டும் ஏன் என்றால் எங்கள் வாழ்கையே இழப்புக்கால் எழுதப்பட்ட ஒன்றல்லவா

20 000 ஆயிரத்துக்கும் அதிகமான எங்கள் இரத்த உறவுகள் ஆழிப் பேரலை அனர்த்தத்தில் கொல்லப்பட்ட 8வது நினைவு நாளான நேற்றைய நாள் (26.12.2012) சுவிற்சர்லாந்தில் நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா தலைமையில் மானாட மயிலாட கலைஞர்கள் சேர்ந்தாட சூப்பர் சிங்கர் கலைஞர்கள் சேர்ந்துபாட குதூகலமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

 

இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். ஆழிப்பேரலை தினமாக இல்லாமல் வேறு தினத்தில் இது நடைபெற்றிருந்தாலும் இதற்கு என் ஆதரவு இல்லை.

22.12.2012அன்று  60 இற்கும் மேற்பட்ட ஈழத்துப் பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் (முற்று முழுதாக சுவிஸ் ஈழத்துக் கலைஞர் களின் இசையில் தமிழக கலைஞர் கள் நடுவராக) இடம் பெரும் மாபெரும் இசைப் போட்டி நிகழ்வு 

நம்மாலும் முடியும் என்ற புலம்பெயர் ஈழத் தமிழரின் இசை நிகழ்வு நடந்தது நீங்க ஏன் வந்து ஊக்குவிக்கவில்லை?

மூன்று மாதங்களுக்கு முன் நடந்த இந்திய கலைஞ்சர்களின் நிகழ்விற்கு நீங்க அறிவிப்பு வேற செய்தீங்க அப்பா அது தப்பு எண்டு படலையா?

 

இன்றைய சூழ்நிலையில் நடுவராக தன்னும் தமிழக சினிமா கலைஞர்களை பணத்தை விரயமாக்கி புலம்பெயர் தேசத்திற்கு அழைப்பது நல்லதல்ல. இது என் தனிப்பட்ட கருத்து.

  • தொடங்கியவர்
தமிழர்களுக்கு இழப்புகள் இல்லாத நாள் ஏது? ஒவொரு நாளிலும் ஒவொரு இழப்புகள் தான் இழப்புககை நெஞ்சங்களில் நிறுத்தி அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் சுனாமியால் பாதிக்கப்பட்ட கரையோர மக்கள் மிகவும் சிறப்பாக நத்தார் தினத்தை கொண்டாடுகிண்டார்கள் ஆக இழப்புகளை கடந்தும் எங்கள் வாழ்க்கை செல்ல வேண்டும் ஏன் என்றால் எங்கள் வாழ்கையே இழப்புக்கால் எழுதப்பட்ட ஒன்றல்லவா

 

சுண்டல் உங்கள் கருத்து சரியானதே? ஆனால் அதே நாளில் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒரு நிறுவனம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் மீள்வாழ்வுக்காக நினைவுகூரல் நிகழ்வொன்றினை செய்து அதனூடாக கிடைக்கின்ற நிதியில் தாயகத்தில் பல திட்டங்களை செய்துவருகின்றார்கள்.

 

அதே நாளில் இப்படியொரு களியாட்ட நிகழ்வினை முதன்முறையாக இவ்வாண்டு செய்திருப்பது வேதனை தருகின்றது,

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது அண்ணா திறமையான கலைஞர்கள் எங்கிருந்தாலும் மதிப்பளிக்கப்படுவதில் தவறில்லை இந்தியாவில் கலை வளர்ந்த அளவிற்கு அது எங்கள் மத்தியில் வளர்க்கப்பட வில்லை இல்லை வளரவில்லை இன்று எமது தமிழ் பெண்களிடம் கேட்டுபாருங்கள் நடிக்க வர சொல்லி படங்களில் நடிக்க வரமாட்டார்கள் அப்பிடி ஆசை இருந்தாலும் அவங்க அம்மா அப்பா விட மாட்டாங்க இது தானே உண்மை அப்பிடி வந்தாலும் ஒரு சிலரே

மேடையில் வந்து பாட சொல்லி ஆட சொல்லி கேட்டால் ஏன் மேடை ஏறி குதியன் குத்த போறியோ என்று கேட்கின்ற பெற்றோர்களும் இல்லாமல் இல்லை:D

நாங்கள் எப்பிடி இந்திய கலைஞர்களை அழைகின்றோமோ அதே மாதிரி அவர்களும் எமது கலைஞர்களை அழைக்க நாம் இன்னும் வளர வேண்டும்

எமது கலைஞர்களின் நிகழ்ச்சி என்றால் 100 டிக்கெட் விக்கிற அதே நேரம் இந்திய கலைஞர்கள் என்றால் 500 டிக்கெட் போகுது சோ லாபம் எங்கு இருக்கோ அங்கு தான் முதலிட முடியும்

  • தொடங்கியவர்

நான் இந்தியக் கலைஞர்களுக்கு எதிரானவன் இல்லை. நேரம் கிடைக்கும்போது திரைப்படங்கள் பார்ப்பேன். அதற்காக இவ்வளவு பணம் விரையும் செய்து இந்தியக் கலைஞர்களை இங்களைத்து கூத்தடிப்பது எனக்கு சரியாகப்படவில்லை. கிட்டத்தட்ட 2009வரையில் இந்தியக் கலைஞர்கள் சுவிற்சர்லாந்துக்குள் காலடி எடுத்து வைக்கவே பயப்பட்டார்கள். ஏனெனில் இந்தியக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்வுகள் படுதோல்வியில் முடிந்தன. அந்தக் காலப்பகுதியில் எமது கலைஞர்கள் சுவிற்சர்லாந்தில் ஏனைய நாடுகளுக்கு முன்னோடியாக அனைத்துத்துறையிலும் கால் பதித்தார்கள். சிறப்பாக வளர்ச்சியடைந்தார்கள்.

 

வருகை தந்த சினேகா 10 நிமிடங்களை மேடையில் செலவழித்துவிட்டு சுவிற்சர்லாந்தின் ஒரு தனிபரின் வருட வருமானத்தை ஊதியமாக அள்ளிச் செல்வது எப்படி???

  • தொடங்கியவர்

மற்றது அண்ணா திறமையான கலைஞர்கள் எங்கிருந்தாலும் மதிப்பளிக்கப்படுவதில் தவறில்லை இந்தியாவில் கலை வளர்ந்த அளவிற்கு அது எங்கள் மத்தியில் வளர்க்கப்பட வில்லை இல்லை வளரவில்லை இன்று எமது தமிழ் பெண்களிடம் கேட்டுபாருங்கள் நடிக்க வர சொல்லி படங்களில் நடிக்க வரமாட்டார்கள் அப்பிடி ஆசை இருந்தாலும் அவங்க அம்மா அப்பா விட மாட்டாங்க இது தானே உண்மை அப்பிடி வந்தாலும் ஒரு சிலரே

மேடையில் வந்து பாட சொல்லி ஆட சொல்லி கேட்டால் ஏன் மேடை ஏறி குதியன் குத்த போறியோ என்று கேட்கின்ற பெற்றோர்களும் இல்லாமல் இல்லை :D

நாங்கள் எப்பிடி இந்திய கலைஞர்களை அழைகின்றோமோ அதே மாதிரி அவர்களும் எமது கலைஞர்களை அழைக்க நாம் இன்னும் வளர வேண்டும்

எமது கலைஞர்களின் நிகழ்ச்சி என்றால் 100 டிக்கெட் விக்கிற அதே நேரம் இந்திய கலைஞர்கள் என்றால் 500 டிக்கெட் போகுது சோ லாபம் எங்கு இருக்கோ அங்கு தான் முதலிட முடியும்

 

சுண்டல் சுவிற்சர்லாந்தைப் பொறுத்தவரையில் நடிப்புத்துறை வரை பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு செயற்படுகின்றார்கள். நான் இங்கு வாழ்வதற்காகச் சொல்லவில்லை. இங்குள்ள இளைய தலைமுறையினர் அனைத்துத் துறைகளிலும் அகலக் கால்பதித்து செயற்படுகின்றார்கள். இங்கு பிறந்தவர்களே இசையமைக்கின்றார்கள். பாடல் எழுதுகின்றார்கள்.

சுண்டல் சுவிற்சர்லாந்தைப் பொறுத்தவரை இந்தியக் கலைஞர்களைவிட எங்கள் கலைஞர்களைத்தான் மக்கள் அதிகம் மதிக்கிறார்கள். எங்கள் கலைஞர்கள் நிகழ்வுக்ள் மண்டபம் நிறைந்து காணப்படுகின்றது.

உண்மையை சொல்லப்போனால் எங்கள் கலைஞர்களை வைத்து நிகழ்வை செய்யும்போது குறைந்த செலவோடு நிறைந;த வருவாய் கிடைக்கின்றது. இந்தியக் கலைஞர்களை அழைக்கும்போது நிகழ்வினால் கிடைக்குமு; வருமானத்தை அவர்களுக்கே கொடுக்க வேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்த ஒரு கவர்ச்சி தேவைப்படுகின்றது அந்த கவர்ச்சி ஸ்னேஹா வின் சிரிப்பில் இருந்திருக்கின்றது மக்கள்வும் அவா சிரிக்கிறதா நேர பாக்கணும் எண்டு வந்திருக்கினம்

மக்களுக்கும் ஒரு வித்தியாசமா இருக்கட்டுமே அண்ணா எபவும் ஒரே கலைஞர்கள் ஒரே மாதிரி நிகழ்வுகள் என்றா போர் அடிக்கும் தானே

மேலே உள்ள கருத்துக்களின் இந்த நிகழ்விலும் சில தவறுகள் இருந்தாலும் கனடாவிற்கு வர இருக்கும் இளையராஜாவின் நிகழ்ச்சியை விட மேலானது.

22.12.2012இல் நடந்த நிகழ்வு இந்திய மலேசியக் கலைஞர்களின் தலையீடு இல்லாமல் நடைபெற்றது என்பதை உறுதிபடக் கூறமுடியுமா?

அது தப்பு என்று பட்டதால்தான் ஒதுங்கிக்கொண்டேன்.

மயூரன் இதுக்கு தமிழ்நாட்டில் இருந்து இசை அமைப்பாளர் சத்யனும் (தாயகப் பாடலுக்கு இசை அமைத்தவர்)மலேசியாவில் இருந்து இன உணர்வாளர் ராஜராஜ சோழனும் வந்து நடுவராக பணி புரிந்தனர். எதிர்காலத்தில் எமது பாடகர்களுக்கு திரைப்படங்களில் பாட சந்தர்ப்பம் தருவாதாக சத்யன் உறுதி அளித்தார்.ராஜராஜ சோழன் மலேசியாவில் வந்து தங்கள் நிகழ்வுகளில் பாடும் படியும் இதற்கு தாங்கள் உதவுவதாகும் முழுச் செலவையும் ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார். எமது நாட்டு கலைங்கர்களுக்கு இப்பிடி சந்தர்ப்பம் கிடைப்பது அரிது. நான் கேட்ட கேள்வி நீங்கள்மூன்று மாதங்களுக்கு முன் நடந்த நட்சத்திர இரவில் எந்த அடிப்படையில் மேடை ஏறி அறிவுப்பு செய்தீங்கள். அதிலும் நடிகை வந்திருந்தார். அப்போ அதுபணம் வீண் என்று நீங்க எண்ணலியே?

மேலே உள்ள கருத்துக்களின் இந்த நிகழ்விலும் சில தவறுகள் இருந்தாலும் கனடாவிற்கு வர இருக்கும் இளையராஜாவின் நிகழ்ச்சியை விட மேலானது.

 

கனடாவில் உள்ள முன்னால் உ.த அமைப்பில் இருந்தவர்களுக்கும், மாவீரர்களின் தியாகத்தை வியாபாரமாக்கிய உங்களைப் போன்றவர்களுக்கும் சுவிஸில் நிகழ்ச்சி நடந்தால் காசு பார்க்க முடியாது என்பதைத் தவிர வேறு எந்த விதத்தில் இது மேலானது?

 

அல்லது இளையராஜா சேலை கட்டவில்லை என்பதால் உங்கள் எதிர்ப்பு இல்லையா? 

 

இளையராஜாவின் நிகழ்ச்சி தவறு என்றால் இது எந்தவிதத்தில் மேலானது?

 

இலங்கைப் பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரிகளின் பிச்சைக்  காசில் அமைப்புகள் நடத்துவதால் இலங்கைப் பொருட்களை புறக்கணி என்று அவர்களைப் பார்த்து சொல்ல நேர்மை அற்ற உங்களைப் போன்றை பழைய ஆட்களை நம்பி ஒரு கூட்டமும் இனி இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 

டும் டும் டும்

புலி வேசம் கலைந்து போச்சு

டும் டும் டும்

 

கெட்டிக் காரன்

புளுகு அவிழ்ந்து போச்சு

டும் டும் டும்

சுண்டல் உங்கள் கருத்து சரியானதே? ஆனால் அதே நாளில் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒரு நிறுவனம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் மீள்வாழ்வுக்காக நினைவுகூரல் நிகழ்வொன்றினை செய்து அதனூடாக கிடைக்கின்ற நிதியில் தாயகத்தில் பல திட்டங்களை செய்துவருகின்றார்கள்.

 

அதே நாளில் இப்படியொரு களியாட்ட நிகழ்வினை முதன்முறையாக இவ்வாண்டு செய்திருப்பது வேதனை தருகின்றது,

 

அண்ணை எல்லாம் வியாபாரம்

 

அனைத்துலகச் செயலகத்துக்கு முண்டு கொடுக்கும் யாழ் அன்பு, அகூதா போன்றவர்களிடம் எல்லாம் இதற்கான நேர்மையான பதிலைச் வாங்க முடியாது அண்ணை.

 

சுனாமி நாளில் களியாட்டம் போட்ட கூட்டதுக்கு முட்டையில் *** இல்லையாம். 

இளையராஜாவின் நிகழ்ச்சி தவறு என்றால் இது எந்தவிதத்தில் மேலானது?

 

இளையராஜாவின் நிகழ்ச்சி நிகழ்வு முழுக்க முழுக்க தனிநபர் இலாபத்தை கொண்டது.

  • தொடங்கியவர்

அதைத்தான் அன்பு சொன்னேனே அது தப்பு என்றுபட்டதால்தான் ஒதுங்கிக் கொண்டேன் என்று. அந்த நிகழ்வுக்கு எவ்வளவு பணம் செலவிடப்ப்ட்டது. எவ்வளவு பார்வையாளர்கள் வந்தார்கள்?

அன்பு என் கேள்விக்கு இன்னும் உங்கள் பதில் வரவில்லையே? சுனாமி நினைவுநாளில் இது போன்ற ஒரு கேளிக்கை நிகழ்வு தேவையா?..

இலங்கைப் பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரிகளின் பிச்சைக்  காசில் அமைப்புகள் நடத்துவதால் இலங்கைப் பொருட்களை புறக்கணி என்று அவர்களைப் பார்த்து சொல்ல நேர்மை அற்ற உங்களைப் போன்றை பழைய ஆட்களை நம்பி ஒரு கூட்டமும் இனி இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 

வேற்று நாட்டவர்களும் 'புறக்கணி சிங்களம்' என்கிறார்கள்.

 

6850272021_4a792f6ed3_z.jpg

டும் டும் டும்

புலி வேசம் கலைந்து போச்சு

டும் டும் டும்

 

கெட்டிக் காரன்

புளுகு அவிழ்ந்து போச்சு

டும் டும் டும்

 

 நன்றிகள்.

  • தொடங்கியவர்

வேற்று நாட்டவர்களும் 'புறக்கணி சிங்களம்' என்கிறார்கள்.

6850272021_4a792f6ed3_z.jpg

நன்றிகள்.

வேற்று நாட்டவனிம் புறக்கணி மட்டையை கொடுத்துவிட்டு நாம் ஆட்டிறைசிக்கு ஶ்ரீலங்கா மிளகாய்த்தூளையும் கறிவேப்பிலையையும் சரிக்கு சமனாப்போட்டு பிரட்டி ஒரு வெட்டு வெட்டுவம்.

வேற்று நாட்டவனிம் புறக்கணி மட்டையை கொடுத்துவிட்டு நாம் ஆட்டிறைசிக்கு ஶ்ரீலங்கா மிளகாய்த்தூளையும் கறிவேப்பிலையையும் சரிக்கு சமனாப்போட்டு பிரட்டி ஒரு வெட்டு வெட்டுவம்.

 

சிங்கள ஆடை ஏற்றுமதி மொத்த ஏற்றுமதியில் அண்ணளவாக - 38%

கறிவேற்பிலை உட்பட்ட பலசரக்கு ஏற்றுமதிகள் அதனுடன் ஒப்பிடும்பொழுது மிகச்சிறியது.

 

 

http://www.socialist-alliance.org/page.php?page=286

அந்த அமைப்பிற்கும் எம்மவர்களுக்கும் சம்பந்தம் இல்லை. அவர்களாகவே செய்யும் 'புறக்கணி சிறிலங்கா' போராட்டம்.

22.12.2012அன்று  60 இற்கும் மேற்பட்ட ஈழத்துப் பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் (முற்று முழுதாக சுவிஸ் ஈழத்துக் கலைஞர் களின் இசையில் தமிழக கலைஞர் கள் நடுவராக) இடம் பெரும் மாபெரும் இசைப் போட்டி நிகழ்வு 

நம்மாலும் முடியும் என்ற புலம்பெயர் ஈழத் தமிழரின் இசை நிகழ்வு நடந்தது நீங்க ஏன் வந்து ஊக்குவிக்கவில்லை?

மூன்று மாதங்களுக்கு முன் நடந்த இந்திய கலைஞ்சர்களின் நிகழ்விற்கு நீங்க அறிவிப்பு வேற செய்தீங்க அப்பா அது தப்பு எண்டு படலையா?

 

அன்பு என்றாலும் நீங்கள் செய்தது .....அறிவிப்பாளர் உட்பட ஈழத்து கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இவ்வளவு பிரச்னையும் வந்திருக்காது ........... :rolleyes:  :(

 

எலோருக்கும் பிரச்னை மேடை. இத கொடுத்தா யாரும் ஒன்றும் பேச மாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.