Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு முழுப் பொறுப்பு கூறவேண்டியது இவரா

Featured Replies

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு முழுப் பொறுப்பு கூறவேண்டியது இவரா ?

ON 28 DECEMBER 2012.

Mullivaikal-genocide0_eu28122012.png

video_photo_0_eu.gif

2009ம் ஆண்டு முள்ளிவய்க்காலில் நடந்த படுகொலைகளை, நோர்வே நிறுத்தியிருக்கலாம், இந்தியா தடுத்து நிறுத்தியிருக்கலாம், இல்லையேல் அமெரிக்கா தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்று பலர் விவாதிப்பது உண்டு. ஆனால் அப்போது நடந்துகொண்டிருந்த போரை ஒரு முடிவுக்கு கொண்டுவர... 

 

ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலால் மட்டும் தான் முடியும் என்பதே உண்மையாகும். இதில் பிரித்தானியத் தமிழர்கள் குறிப்பிடத்தக்க காய் நகர்வுகளை மேற்கொண்டனர். பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் கொடுத்த அழுத்தத்தால், அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த டேவிட் மிலபான் அவர்கள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை தொடர்பாக ஒரு பிரேரணையைக் கொண்டு வந்தார்.அதனை சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து ரத்துச் செய்தது. இதுவே இதுவரை வெளியான செய்திகள். ஆனால் சில இரகசியத் தகவல்கள் மேலும் கசிந்துள்ளது.

 

 

சமீபத்தில் இன்ரர் சிட்டி பிரஸ் வெளியிட்டுள்ள சில தகவல்களின் அடிப்படையில், 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மற்றும் ஏப்பிரல் மாதம் என 2 மாதங்களிலும் ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு பல அழுத்தங்கள் சென்றுள்ளது.அதாவது இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர சில நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளது. இருப்பினும் அப்போது ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக இருந்த ஜப்பானியரான யூக்கியோ தாக்காசு, இலங்கை அரசுக்கு சார்பாக நடந்துகொண்டுள்ளார்.

 

 

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் எந்த விவகாரம் விவாதத்திற்கு வரவேண்டும் என்பதனை தீர்மாணிக்கும் இவர், இலங்கை தொடர்பான விவாதங்களை வேண்டும் என்றே தவிர்த்துள்ளார் என்று கூறப்படுகிறது. விடுதலைப் புலிகள் தொடர்பாக பல தவறான அபிப்பிராயங்களை இவர் கொண்டிருந்தாகவும், இவர் ஒரு இலங்கை அரசின் அபிமானி என்றும் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக நாம் இங்கே இணைத்துள்ள வீடியோவைப் பார்க்கலாம். இதில் இலங்கை தொடர்பாக பேச ஆரம்பிக்கிறார் வீடியோவைப் பார்க்கலாம்.

 

 

அங்கே பென்காசி நகரில் ஆரம்பித்த ஆயுதப் போராட்டம் கிடுகிடுவென தலைநகர் திரிபோலிவரை செல்ல என்ன காரணம் ? கேணல் கடாஃபியின் படை எவ்வாறு அவ்வளவு எளிதில் தோற்கடிக்கப்படாது ? அனைத்துமே ஐ.-நா பாதுகாப்பு கவுன்சில் கொடுத்த அதிகாரம் தான். இதேபோல ஐ. நா பாதுகாப்பு கவுன்சில் இலங்கை விடையத்திலும் நடந்து கொண்டிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்?

 

 

உடனே நோ - பயர் சூன் : அதாவது சூனியப் பிரதேசமாக முள்ளிவாய்க்காலை அறிவித்திருப்பார்கள். இலங்கை விமானங்கள் அங்கே பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கும். உடனடியாக ஐ.நா பாதுகாப்பு படை முள்ளிவாய்க்காலில் தரையிறங்கியிருக்கும். புலிகளும் சுட முடியாது அதே வேளை இராணுவமும் சுட முடியாத நிலை தோன்றியிருக்கும். இராணுவம் மேற்கொண்டு ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாத நிலை தோன்றியிருக்கும்.

 

 

அதுமட்டுமா 40,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ( எம் உறவுகள்) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். ஒரு நல்ல ஒப்பந்தம் வரும்வரை ஐ.நாவின் இராணும் இன்றுவரை அங்கே நிலைகொண்டிருக்கும். இவை அனைத்துமே நடக்காமல் போக, ஜப்பான் உறுதுணையாக நின்றுள்ளது. சண்டை நடக்கும்போது குழுக்கள் பிரிவதுபோல, ரொபேட் ஓ பிளேக், ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அக்காசி, பாதுகாப்பு கவுன்சில் தலைவர் யூக்கியோ தாக்காசு, போன்றவர்கள் எல்லாம் ஒரு அணியில் நின்று செயல்பட்டுள்ளார்கள்.

 

 

மனிதப் படுகொலை நடந்தாலும் பரவாயில்லை புலிகள் இருக்கக்கூடாது என்பதே இவர்கள் எடுத்த முடிவாக இருந்திருக்கிறது. தற்போது கசிந்துள்ள ஐ.நாவின் அறிக்கை! வெளியாகிக்கொண்டு இருக்கும் ஆதாரங்கள்! சனல் 4 வெளியிட்ட கொலைக்களங்கள் என்பன தற்போது பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. 2009ம் ஆண்டு ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கு தலைவராக இருந்த யூக்கியோ தாக்காசுவே இக் கொலைகள் நடைபெற்றதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்!

 

 

ஐ.நா நினைத்திருந்தால் இப் பேரழிவைத் தடுத்திருக்கலாம். இதனைச் செய்ய மறுத்து பல்லாயிரக் கணக்கான மக்களை பலிகடவாக்கியது இந்த யூக்கியோ தாக்காசு தான் என்று அடித்துச் சொல்கிறார்கள் சில ஆய்வாளர்கள்.

http://eutamilar.com/6186-2012-12-28-11-08-18.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட.....சும்மா போங்கப்பா........எங்கடை வலி எங்களுக்குத்தான் தெரியும்.......விடுகதையும் விளக்கமும் இன்னும் நூறுவருசத்துக்கு தொடரும்.........

சரிப்பா இந்தாள் முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பொறுப்பாக இருக்கட்டும் ஆனால்  சமாதாணகாலத்தில்  இத்தாலியில்  புலிகள் யுத்ததை தொடங்கவேண்டும் என்று ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  தெரியுமா?

 

 

சரி யுத்தம் கிழக்கில் தொடங்கி கிழக்கு மாகாணம்   இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்கு போகும்வரை புலம்பெயர் நாட்டில் ஒரு ஆர்ப்பாட்டமும் நடைபெறவில்லை. ஏன்?

 

 

மக்களுக்காக உண்ணாவிரதம் இருந்து  பிரஜாஉரிமை பெற்றவனும் விசா கிடைக்க பெற்றவனையும் நம்ப்பினால் முள்ளிவாய்க்காலில் அழிவுவராம  வேற என்னத்தை எதிர்பாக்கலாம்.

இந்தாளை நாங்க ஏன் போர்குற்றவாளியாக அறிவிக்க கூடாது?
யாரவது இந்தாளை அரெஸ்ட் பண்ணுங்கப்பா..

UN-srilanka-Genocide-partners.jpg

Yukio Takasu One Of UN Officials Prevented Sri Lanka From Being Dragged Into The UNSC

http://tamilnet.com/art.html?catid=79&artid=35863

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.