Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தினரின்: கிளைமோர்த் தாக்குதல் முயற்சி முறியடிப்பு-

Featured Replies

புலிச் சீருடையில் சிறிலங்கா இராணுவத்தினர்: கிளைமோர்த் தாக்குதல் முயற்சி முறியடிப்பு- ஒருவர் பலி

[செவ்வாய்க்கிழமை, 13 யூன் 2006, 19:27 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

வவுனியாவில் கிளைமோர்த் தாக்குதலை நடத்துவதற்குத் விடுதலைப் புலிகளின் சீருடையில் தயாராக இருந்த சிறிலங்கா இராணுவ அணியினர் மீது விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினர் நடத்திய தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

வவுனியா புளியங்குளம் நெடுங்கேணி வீதியில் பெரியதொரு தாக்குதலுக்காக சிறிலங்கா இராணுவ அணி ஒன்று 3 கிளைமோர்களைப் பொருத்தி தயாராக இருந்துள்ளனர்.

அப்பகுதியில் வீதிச் சோதனையை மேற்கொண்டு சென்ற விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினர் இன்று முற்பகல் 9.30 மணியளவில் அவர்களைக் கண்டதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதையடுத்து இருதரப்புக்கும் இடையில் துப்பாக்கி மோதல் நடைபெற்றது.

இம் மோதலின் போது சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.

தொடர்ந்து ஏனைய படையினருக்கும் விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினருக்கும் இடையில் மோதல் நடைபெற்றது. இதன் போது படையினர் தம்முடைய ஆயுதங்கள் பைகள் ஆகியவற்றைக் கைவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.

அவர்களைத் தேடுகின்ற நடவடிக்கை தொடர்கின்றது.

அவர்கள் கைவிட்டுச் சென்ற கிளைமோர்கள், ஆயுதங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், பைகள் ஆகியவை விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

அவர்களுடைய பொருட்களில் சிறிலங்கா இராணுவம் என்ற சின்னம் சிங்களத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களுடன் சிறிலங்கா இராணுவத்தில் அங்கம் வகிக்கும் றெஜிமென்ரின் சின்னமும் எடுக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய படையினர், விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடை அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்தவரது சடலம் மற்றும் பொருட்கள், தாக்குதல் நடந்த இடம் ஆகியவை குறித்து போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினருக்கு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் விளக்கியுள்ளார்.

இது தொடர்பிலான சந்திப்பு மாவட்ட அரசியல்துறை செயலகத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

கண்காணிப்புக் குழுவினருடன் வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானம், வவுனியா கட்டளைத்தளபதி வேலவன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

மேலும் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் சடலத்தை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக சிறிலங்கா படையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக கண்காணிப்புக்குழுவினர் தெரிவித்தனர் என்று ஞானம் கூறினார்.

சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்ற போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினர் அனைத்தையும் படம்பிடித்தனர்.

http://www.eelampage.com/?cn=26831

எவிடன்ஸ் கிடைச்சிருக்கு... கொண்டாட போய் இன்னும் ரெண்டு கான் வாங்கியாறன் பொறுங்கோ.... வந்து சந்திக்கிறன்...........

  • தொடங்கியவர்

எவிடன்ஸ் கிடைச்சிருக்கு... கொண்டாட போய் இன்னும் ரெண்டு கான் வாங்கியாறன் பொறுங்கோ.... வந்து சந்திக்கிறன்...........

உனது இந்த நக்களுக்கு தான் உனது அம்மாக்கு வரக்கூடாத நோய்டா வந்து இருக்கு :P

எவிடன்ஸ் கிடைச்சிருக்கு... கொண்டாட போய் இன்னும் ரெண்டு கான் வாங்கியாறன் பொறுங்கோ.... வந்து சந்திக்கிறன்...........

கிடைக்காட்டி என்ன தற்கொலையே செய்திருப்பீர்...???

என்ன தாலண்னை கட்டிலால விழுந்து முழிச்சனியளே!!! கதை அப்பிடித்தானிருக்கு. முட் சரிவர ரெண்டு கானை வேண்டி அடியும், நானும் உங்களமாதிரி எழுத வெளிக்கிட்டால் அலங்கொலமாப்போடும் கவனம்...........

கிடைக்காட்டி என்ன தற்கொலையே செய்திருப்பீர்...???

  • தொடங்கியவர்

130606dpu030mc.jpg

புலிச் சீருடையில் கொல்லப்பட்ட சிங்கள வெறிநாய்யின் படம்

130606dpu021tc.jpg

சிங்கள வெறிநாய்கள் அடிவாங்கி கொண்டு ஒடும் போது கொண்டு வந்ததௌ எல்லாத்தையும் விட்டு விட்டு ஒடிவிட்டார்கள்....

130606dpu011gp.jpg

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18491

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக இணைப்பு) கிளைமோர்த் தாக்குதல் முயற்சி முறியடிப்பு- இராணுவத்தரப்பில் ஒருவர் பலி- இரு தேசிய துணைப் படைவீரர்கள் வீரச்சாவு

வவுனியாவில் கிளைமோர்த் தாக்குதலை நடத்துவதற்குத் விடுதலைப் புலிகளின் சீருடையில் தயாராக இருந்த சிறிலங்கா இராணுவ அணியினர் மீது விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினர் நடத்திய தாக்குதலில் இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

வவுனியா புளியங்குளம் நெடுங்கேணி வீதியில் பெரியதொரு தாக்குதலுக்காக சிறிலங்கா இராணுவ அணி ஒன்று மூன்று கிளைமோர்களைப் பொருத்தி தயாராக இருந்துள்ளனர்.

அப்பகுதியில் வீதிச் சோதனையை மேற்கொண்டு சென்ற விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினர் இன்று முற்பகல் 9.30 மணியளவில் அவர்களைக் கண்டதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதையடுத்து இருதரப்புக்கும் இடையில் துப்பாக்கி மோதல் இடம்பெற்றது.

இம் மோதலின் போது சிறிலங்காப் இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.

தொடர்ந்து ஏனைய இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது. இதன் போது இராணுவத்தினர் தம்முடைய ஆயுதங்கள், பைகள் ஆகியவற்றைக் கைவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.

அவர்களைத் தேடுகின்ற நடவடிக்கை தொடர்கின்றது.

அவர்கள் கைவிட்டுச் சென்ற கிளைமோர்கள், ஆயுதங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், பைகள் ஆகியவை விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

அவர்களுடைய பொருட்களில் சிறிலங்கா இராணுவம் என்ற சின்னம் சிங்களத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களுடன் சிறிலங்கா இராணுவத்தில் அங்கம் வகிக்கும் றெஜிமென்ரின் சின்னமும் எடுக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய இராணுவத்தினர், விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடை அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் சிறிலங்கா இராணுவத்தரப்பைச் சேர்ந்தவரது சடலம் மற்றும் பொருட்கள், தாக்குதல் இடம்பெற்ற இடம் ஆகியவை குறித்து போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினருக்கு வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானம் விளக்கி கூறியுள்ளார்.

இது தொடர்பிலான சந்திப்பு மாவட்ட அரசியல்துறைச் செயலகத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

கண்காணிப்புக்குழுவினருடன் வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானம், வவுனியா கட்டளைத் தளபதி வேலவன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

மேலும் இராணுவத்தரப்பைச் சேர்ந்தவரின் சடலத்தை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக சிறிலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக கண்காணிப்புக்குழுவினர் தெரிவித்ததாக ஞானம் கூறினார்.

சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்ற போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினர் அனைத்தையும் படம் பிடித்தனர்.

இக்கிளைமோர்த் தாக்குதல் முறியடிப்பில் இரு தேசிய துணைப் படைவீரர்கள் வீரச்சாவடைந்திருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று நெடுங்கேணி வீதியில் சன்னாசி பரந்தனுக்கும் புளியங்குளத்திற்குமிடையில் தமிழீழ தேசிய துணைப்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நடவடிக்கையின் போது சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மூன்று கிளைமோர் கண்ணிவெடிகளை வெடிக்க வைக்க தயாராக்கிக்கொண்டிருந்தனர்.

தமிழீழ தேசியத் துணைப்படை வீரர்கள் அந்த இடத்தை நெருங்கியபோது ஆழ ஊடுருவும் அணியினருக்கும் தேசியத் துணைப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றது.

இச்சண்டையின் போது ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த ஓருவர் கொல்லப்பட்டார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்திருந்தார். இவரது சடலம் தமிழீழ தேசியத் துணைப்படை வீரர்களினால் கைப்பற்றப்பட்டது.

ஏனைய இராணுவத்தினர் காயங்களுடன் தப்பியோடி விட்டனர். இத்தாக்குதலின் போது ஆழ ஊடுருவும் இராணுவத்தினரிடமிருந்து ஆயுத, தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இத்தாக்குதல் சம்பவம் குறித்து வவுனியா இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிற்கு வவுனியா மாவட்ட அரசியல்துறையினரால் அறிவிக்கப்பட்டு, கண்காணிப்புக்குழுவினர் சம்பவம் இடம்பெற்ற இடத்தையும், ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்தவரின் உடலையும் பார்வையிட்டனர்.

இச்சண்டையின் விவரங்களை கட்டளைத் தளபதி வேலவன் இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினருக்கு விளக்கிக் கூறினார்.

சண்டையின் போது இரு தேசிய துணைப் படை வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள் என்று விடுதலைப் புலிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

வவுனியாவில் மற்றொரு கிளைமோர்த் தாக்குதல் முயற்சி முறியடிப்பு

வவுனியா வடக்கில் சிறிலங்கா இராணுவத்தினரின் மற்றொரு கிளைமோர்த் தாக்குதல் முயற்சி இன்று வியாழக்கிழமை முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த முறியடிப்புத் தாக்குதலில் இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்.

சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதல் முயற்சி நேற்று முன்னாள் தமிழீழத் தேசிய துணைப்படை சிறப்பணியினரால் முறியடிக்கப்பட்டு இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். அப்போது இராணுவத்தினர் தமது உடமைகளை விட்டுத் தப்பினர். ஒருவர் கொல்லப்பட்டார். அந்நபர் விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடையை அணிந்திருந்தார்.

இதையடுத்து ஊடுருவியுள்ளோரைத் தேடும் நடவடிக்கையை விடுதலைப் புலிகள் தொடர்ந்து மேற்கொண்டனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையின் போது வவுனியாவின் வடக்கில் கிளைமோர்த் தாக்குதல் நடத்த முயற்சித்த இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தைச் சேர்ந்தவரும் விடுதலைப்புலிகளின் இராணுவச் சீருடையணிந்திருந்தார். அவரிடம் துப்பாக்கி குண்டுகள் இருந்துள்ளன.

புதினம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓமந்தையில் இராணுவ லெப்டினென்ட் காணவில்லை

ஓமந்தையில் சிறிலங்கா இராணுவ லெப்.எல்.ஜி. ராஜபக்ச காணாமல் போயுள்ளதாக வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஓமந்தை சிறிலங்கா இராணுவ முன்னரங்க காவலரணுக்கு லெப்.எல்.ஜி. ராஜபக்ச சென்ற போது அவர் காணாமல் போனதாக அவருடன் சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் கடத்தப்பட்டாரா என்பது குறித்து சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.