Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பனைமரக்காடே.......

Featured Replies

வடக்கு வேலிக்கப்பால் வளர்ந்திருந்த பனைமரங்கள்

காலையிலே கள்ளிறக்கி காவோலை விற்று…
பாத்தியிலே போட்டு பனங்கிழங்கு விற்று…
அந்தக் கறுப்பன்களால் அசைந்த எம்வாழ்க்கை…….
 

palmyrah.jpg
 
சொந்த இடம் விட்டு சோறளித்த மண் விட்டு
குந்த இடமின்றி கூடாரம் துணை கொண்டு
சொந்தபந்தம் விட்டு தொலைதூரம் வந்து
வெந்த புண்ணில் வேல்தாங்கி வெளியூரில் குடிபுகுந்தோம்

அன்னை மடி காண ஆவலுடன் நானன்று

பண்ணைப்பாலமதை தாண்டிப்பார்க்கையிலே
என்னை வரவேற்க எதிரே ஓர் காவலரண்
எங்கேயோ பார்த்ததாக என்னுள்ளே ஞாபகம்
 
மஞ்சள் பெயின்ராலே மச்சான் போட்ட நம்பர்
மங்கிப்போய்க் கிடந்தந்த மாற்றானின் அரணில்
எங்களுக்கு வாழ்வளித்த எம்மண்ணின் பனைமரங்கள்
எமனுக்கே காவலாய் இருக்குமென்று நினைத்ததில்லை
 
எங்கடவூர்ப்பனைமரங்கள் எங்களைப்போலத்தான்
எதிரிகளால் பிணமாகி எழிலிழந்து கிடந்தன
எல்லாமே இழந்த எம்மவரை புதைத்திருந்த
கல்லறையில் கண்ணீர்விட வடலி கூட மிச்சமில்லை.

Cemetery.jpg

(எமது சொந்தமண்ணில் வாழ்ந்த பனைமரங்கள் மட்டுமல்ல வடலிகளும்தான் வலியவர்களின் காலில் மிதிபட்டே இறந்தன. எம் கல்லறைகளில் கண்ணீர்விட எம் குழந்தைகளையாவது விட்டுவையுங்கள். இது என் அன்னை மண் தீவகத்தின் அரவணைப்பை பெறச்செல்லும்போது ஏற்பட்ட எண்ணக்குமுறல்)

 

http://slgobinath.blogspot.fr/2011/11/blog-post_12.html

  • கருத்துக்கள உறவுகள்

உருக்குலைந்து கிடக்கும் தெருக்களையும் உயிரிழந்து நிற்கும் வீடுகளையும் சிங்காரமிழந்து கிடக்கும் வயல்களையும் சீரழிந்து கிடக்கும் ஊர்களையும் பார்த்தபோது மனதில் சொல்ல முடியாத வேதனை. கவிதைக்கு பாராட்டுக்கள் தமிழீழன்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கும், வலி சுமந்த நினைவுகளைக் கீறிவிட்டமைக்கும்  நன்றிகள், தமிழீழன்!

 

நீங்கள் தீவகத்தைச் சேர்ந்தவரா?   

சொந்த இடம் விட்டு சோறளித்த மண் விட்டு
குந்த இடமின்றி கூடாரம் துணை கொண்டு
சொந்தபந்தம் விட்டு தொலைதூரம் வந்து
வெந்த புண்ணில் வேல்தாங்கி வெளியூரில் குடிபுகுந்தோம்

அன்னை மடி காண ஆவலுடன் நானன்று

பண்ணைப்பாலமதை தாண்டிப்பார்க்கையிலே
என்னை வரவேற்க எதிரே ஓர் காவலரண்
எங்கேயோ பார்த்ததாக என்னுள்ளே ஞாபகம்

 

எங்கள் விடுதலை வாழ்வுடனும் வரலாற்றுடனும் அந்நியோன்னியமாக  பிணைந்தது இந்த கற்பகத்தரு !

  • தொடங்கியவர்
கவிதைக்கும், வலி சுமந்த நினைவுகளைக் கீறிவிட்டமைக்கும்  நன்றிகள், தமிழீழன்!

 

நீங்கள் தீவகத்தைச் சேர்ந்தவரா?   

 

அன்பு உறவு புங்கையூரன், இந்த கவிதைக்கு சொந்தக்காரன் நான் அல்ல எனினும், அதில் வழிந்தோடும் உணர்வுக்கு நானும் சொந்தக்காரன். தீபகமும் என்னூரே..வன்னியும் என்னூரே..மட்டு, யாழ், மன்னாரும், திருமலையும் என்னூரே.. தென் கிழக்கு அம்பாறையும் என்னூரே. நன்றி.

இதைப் படித்தும் கவிஞர் வைரமுத்து எழுதிய வரிகள் தான் ஞாபகத்திற்கு வந்து சென்றது.

செங்காடே சிறுகரடே போய்வரவா
காடுகளே கல்லிகளே போய்வரவா

பொத்தக் கள்ளியும் முள்ளுத் தச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துட்டோம்
கண்ணில் இல்லையே நீரு!!

வலிகள் தோய்ந்து எழுதப்பட்ட இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரன் வலியையும், உங்களின் உணர்வுகளிலும்  நானும் பங்கு கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலிகள் சுமப்பதத்கானதல்ல.உயிர்ப்புடன் இருப்பதர்கானது.சிங்களம் எம் உயிர் குடித்தார்கள்.உணர்வுகளை?
அவர்கள் எங்களை வதைத்துக் கொண்டே இருக்கவேண்டும்.அதனால் மட்டுமே எம் மனதுள் எரியும் தீ அணையாது காக்கப்படும்.அவர்கள் எம் தோளில் கை போட்டு நீயும் நானும் தோழர்கள் என்றால் நாம் தோற்றுப்போய் விடுவோம்.எம்மை நீ சிறையிடு எம் கனவுகள் விடுதலையை பிரசவிக்கும்.ஈழம் எனும் எம் தாயை கைவிட்டு வந்தவர்கள் நாம்.தாய்ப்பாசமும் தாயை இழந்த வலியும் அறிந்தவர்கள்.ஆனால் பிளவு பட்டுக்கிடந்தது புறம் சொல்லி மாள்கின்றோம்.ஒன்றாய் எழுந்தால் மாற்றம் கட்டாயம் உருவாகும். நன்றி தமிழ்ஈழன் பனை தமிழரின் கற்பகத்தரு.

நன்றி, தமிழீழன். ஓவ்வொரு பனை மரமும் எத்தனை உயிர்களை காத்தது தம்முயிரைவிட்டு, மறக்க முடியுமா? என் வீடும் பனங்காட்டுக்குள்தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.