Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'களிமண் மூளை கொண்டவர்கள் நாட்டில் இல்லை'

Featured Replies

நீதியரசர்கள் தமது விருப்பத்தின் பிரகாரம் தீர்ப்புகளை கொடுத்த காலம் ஒன்று நாட்டில் இருந்தது. அந்த தீர்ப்புகளில் சில தீர்ப்புகள் தவறானவை என்று ஓய்வு பெற்றதன் பின்னர் நீதியரசர்கள் கூறுகின்றனர். அவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. தற்போது கூறுவதையெல்லாம் ஏற்றுக்கொள்வதற்கு 'களிமண் மூளை கொண்டவர்கள் நாட்டில் இல்லை' என்று சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா தெரிவித்தார்.

 

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

 

உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தின் பிரகாரம் தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கையானது அரசியலமைப்பிற்கு முரணானதாகும். அது சாதாரண மக்களுக்கும் தெரியும்.


குற்றப்பிரேரணை மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழு விவகாரத்தில் யார் வெற்றிப்பெற்றார். யார் யார் தோல்வியடைந்தனர் என்பது பிரச்சினையல்ல. நாட்டின் உயரிய சட்டமான அரசியலமைப்பை சகலரும் மதிக்கவேண்டும். ஆகையால் இந்த விவகாரத்தில் ஜனாதிபதி தனது அதிகாரங்களை பயன்படுத்தி இந்தவிவகாரத்தை இதற்கு மேல் கொண்டுச்செல்லாமல் நிறுத்தவேண்டும். அவ்வாறு நிறுத்தினால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைத்தவெற்றியாகும்.

 

களிமண் மூளை கொண்டவர்கள் நாட்டில் இல்லை என்பதனால் இந்த விவகாரத்தை இதற்கு மேலும் கொண்டுசெல்வது நாட்டின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு உகந்தது அல்ல என்றார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56494-2013-01-08-17-27-42.html

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடி அவ்வளவு உறுதியா சொல்லுறீங்கள்? :D

  • தொடங்கியவர்
நீதியரசர்கள் தமது விருப்பத்தின் பிரகாரம் தீர்ப்புகளை கொடுத்த காலம் ஒன்று நாட்டில் இருந்தது. அந்த தீர்ப்புகளில் சில தீர்ப்புகள் தவறானவை என்று ஓய்வு பெற்றதன் பின்னர் நீதியரசர்கள் கூறுகின்றனர். அவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. தற்போது கூறுவதையெல்லாம் ஏற்றுக்கொள்வதற்கு 'களிமண் மூளை கொண்டவர்கள் நாட்டில் இல்லை' என்று சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா தெரிவித்தார்.

 

முன்னாள் நீதி துறை அதிகாரிகளை மகிந்த கூட்டம் விலைக்கு வேண்டியும் காடைத்தனத்தால் வெருட்டியும் வைத்துள்ளது.

 

சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா  அவர்களின் துணிவிற்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சாதாரண ஜனநாயக நாட்டில் அரசியலமைப்புச் சீர்குலைவதைப் பற்றிக் கவலைப்படலாம்.

ஆனால் ஒரு ராணுவ ஆட்சி நடக்கும் இலங்கை  போன்ற நாட்டுகளில் இப்படியான பேச்சுக்கள் எடுபடுமா? 

அட1948 லிருந்து  இதுவரையில்  சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா போன்றவர்கள் இலங்கையில் பிறக்கவில்லை. இப்போ இந்த புத்தியீவி பிறந்திருக்கிறார். இனி நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கும். <_<

 

வகுப்புவாத மோடைய கூட்டம் 1956ல் தமிழரிடம் இருந்து பறித்த இடத்திலிருந்து பொருளாதாரத்தை தொடர்ந்திருந்தால் நாடு இன்று தென்கொறியாவுக்கு சரி நிகராக இருந்திருக்க வேண்டும், அல்லது மேலே போயிருக்க வேண்டும். ஆனால் நாடு போயிருக்கிற பாதை சர்வாதிகாரத்தில் வட கொறியாவுக்கு மேலே போய்விட்டது.

 

சரிதான் இவர் தனக்கு தான் மோடய மூளையில்லை இல்லை என்று சான்றிதல் கொடுக்கலாம். ஆனால் நாட்டில் நாலைந்து அதிகாரத்தில் இருக்கும் சகோதரர்களும், அவர்களை பதவிக்கு கொண்டுவந்தவர்களும் தான் இருக்கிறார்கள். சட்டத்துறைக்கு சவால் வந்த போது கொக்ககரிக்காமல் லசந்த தனது அனுபவத்தை பாட்டெழுதிவைத்துவிட்டுவிட்டு இறந்த போதாவது இந்த புத்தியீவி  விளித்தெழுந்திருக்க கூடாது?

 

நாடு முழுவதும் களிமண்தலை மோடையா கூட்டம்தான் வாழுகிறதா என்பதுதான் சந்தேகம்.

 

எல்லோரும் சேர்ந்து மாழுங்கோ. வாழ்க.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
ஒரு சாதாரண ஜனநாயக நாட்டில் அரசியலமைப்புச் சீர்குலைவதைப் பற்றிக் கவலைப்படலாம்.

ஆனால் ஒரு ராணுவ ஆட்சி நடக்கும் இலங்கை  போன்ற நாட்டுகளில் இப்படியான பேச்சுக்கள் எடுபடுமா? 

 

தமிழர்கள் அநீதியான முறையில் சிங்கள அரசியல்வாதிகளால் நடாத்தப்பட்டபொழுது, இனப்படுகொலை நடத்தப்பட்டபோழுது, இவர்கள், அதாவது படித்த சிங்களவர்கள், மௌனமாக இருந்தார்கள். இதன் விளைவே இன்றைய நிலை.

 

dbs+edited.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.