Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காந்தளூர் போர்

Featured Replies

நீண்ட நாட்களாக கோகுல் சேஷாத்ரி எழுதிய சேரர் கோட்டை படிக்க வேண்டும் என்று வைத்திருந்தேன். ஒருவாராக இந்த வார விடுமுறையில் வாசித்து விட்டேன். சோழ வரலாற்றைப் படித்தவர்களுக்கு இரண்டு விடயம் ஒரு தெளிவில்லாமலேயே இருக்கும். ஒன்று ஆதித்த கரிகாலன் கொலை மற்றொன்று "காந்தளூர்ச் சாலை கலமறுத்த" என்ற வாக்கியத்தின் பொருள். இதைப் பற்றி யாரும் தெளிவாக இதுவரை வரலாற்றுக் குறிப்புகளுடன் எழுதவில்லை. இந்த இரண்டையும் தேடி இணையத்தில் நான் அதிக நேரம் செலவிட்டு இருக்கிறேன். முதன் முதலாக  கோகுல் சேஷாத்ரி காந்தளூர்ச் சாலை பற்றி வரலாற்றுக் குறிப்புகளுடன் எழுதியுள்ளார்.

காந்தளூர்ச் சாலை பற்றி சுஜாதா "காந்தளூர் வசந்தகுமாரன் கதை" என்ற நாவல் எழுதியிருந்தார். ஏனோ அதை முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு சென்று விட்டார். வாசிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும் ஆனால் முடிவில்லாமல் இருப்பது மனதைக் குமையும். அந்த நாவலில் கந்தளூருக்கு அருள்மொழியின்(ராஜா ராஜனின்) தூதுவன் ஓலை கொண்டு செல்வதோடு நிறுத்தியிருப்பார். சோழத் தூதுவன் அவமதிக்கப்பட்டதாலே  கந்தளூர் போர் நடந்ததாக அவர் கூற்று.

ஆதித்த கரிகாலன் கொலைக்குப் பின் உத்தம சோழன் பண்ணிரண்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்து சளுக்கர்களுடன் நடந்த போரில் தோற்றத்தின் விளைவாக ஆட்சியிலிருந்து விலகுமாறு அரசியல் நிர்பந்தம். இந்தச் சூழலில் அருள்மொழி ஆட்சிக் கட்டிலில் ஏறுகிறான்.  அவன் ஆட்சி ஏற்றதும் செய்த முதற் போர் பாண்டி நாட்டில் என்றாலும், எல்லா கல்வெட்டிலும் காந்தளூர் போரைப் பற்றித்தான் புகழ்ந்து கூறுகிறார்கள். ராஜா ராஜன் தென்னிந்தியா முழுவதும் தனது கரத்தை விரிக்க இந்தப் போர்தான் முக்கிய காரணம் என்பதுடன், ஆதித்த கரிகாலன் கொலைக்கு முக்கிய காரணமான சேர நம்பூதிரிகளின் சதிக் கூடமாக இருந்த களரிச் சாலையை தரைமட்டமாக்கியதாலும் முக்கியத்துவம் பெறுகிறது.

காந்தளூர் படையெடுப்பை மையமாகக் கொண்டுதான் சேரர் கோட்டை நாவல் ஆரம்பிக்கிறது. இரண்டு பாகமும் வாசிக்க விருவிருப்பாக போகிறது. கல்கியின் எழுத்தில் காதல் ஒரு அளவோடு இருக்கும், சாண்டில்யன் எழுத்தில் காதல் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். விக்கிரமன், பார்த்தசாரதி என்று  எல்லாரும் காதலை தொட்டுச் செல்லாமல் வரலாற்றுப் புதினத்தை எழுதவில்லை. ஆனால் சேரர் கோட்டையில் காதல் சம்பந்தமாக எதுவுமே கிடையாது. காதலே இல்லாமல் ஒரு வரலாற்றுப் புதினத்தை இவ்வளவு அழகாக எழுத முடிந்தது  ஒரு பெரும் திறமையே. வரலாற்றுப் பிரியர்களுக்கு இந்த நூல் ஒரு இன்பமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும்.

Edited by ஆதித்ய இளம்பிறையன்

எங்கு வாங்கலாம் என்ற விபரத்தையும் தாருங்கள் முடிந்தால்..:)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு, வாசிக்க ஆவலை தூண்டுகின்றது

  • தொடங்கியவர்

அபராஜிதன் நான் இணையத்தில் http://www.udumalai.com/ ஆர்டர் பண்ணி வாங்கினேன். மேலதிக விபரங்களுக்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.அவர்களது தொலைபேசி எண் : +91 8925 456 330


உடையார் முடிந்தால் நாவலை வாசித்துப் பாருங்கள். கடுமையாக உழைத்து வரலாற்றுத் தவல்களை திரட்டி நாவலை எழுதியிருக்கார்.

 

Edited by ஆதித்ய இளம்பிறையன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.