Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்றின் வழிகாட்டுதலில் "கிளைமோர் முறியடிப்பு"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றின் வழிகாட்டுதலில் "கிளைமோர் முறியடிப்பு"

வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கிளைமோர்த் தாக்குதல்கள் என இப்போது தினசரி செய்திகள் வெளிவருகின்றன.

சிறிலங்கா அரசின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரே இவ்வாறு விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவிச் சென்று இந்த தாக்குதல்களை நடத்துகின்றார்கள். இதற்கு துணை இராணுவக் குழுக்களின் உதவியும் தாராளமாகக் கிடைக்கின்றது. இருந்த போதிலும், அண்மையில் ஆழ ஊடுருவும் படையணிகளைச் சேர்ந்த பலர் விடுதலைப் புலிகள் விரித்த வலையில் அகப்பட்டுள்ளார்கள். இதில் படையினர் சிலர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இந்த முறியடிப்பானது பல உண்மைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.

ஆழ ஊடுருவும் படையைப் பயன்படுத்தி எதிர்த்தரப்பினரது பகுதியில் தாக்குதலை நடத்துவது என்பது அமெரிக்காவின் தோற்றுப்போன ஒரு உத்தியாகும்.

வியட்நாம் போராளிகள் இறுதிக்கட்டமாக பிரான்ஸ் சமரசப் பேச்சுக்கள் இழுபறிப்பட்டு அமெரிக்கப் படைகளை விரட்டியடிக்க தயாரானபோது அதனை சிதைக்க ஆழ ஊடுருவும் படையணியை போராளிகளின் பகுதிகளுக்குள் தரை வழியிலும் இரகசியமாக உலங்குவானூர்திகளின் மூலமாகவும் கொண்டு சென்று ஊடுருவ விட்டு தாக்குதல்களை மேற்கொண்ட போதும் கடைசியில் அமெரிக்கப் படைகள் அவலப்பட்டே தப்பியோடின.

அமெரிக்கப் படைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக வியட்நாமில் வியட்கொங் போராளிகள் போராட்டம் நடத்தினர்.

போராளிகளின் கெரில்லா உத்திகள் அமெரிக்கப் படைகளை ஆட்டுவித்தன.

1960 ஆம் ஆண்டு காலப்பகுதிகளின் கடைசியில் பேச்சுவார்த்தை மூலம் போராட்டத்தை சிதைக்க நர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பிரான்ஸ் தலைநகரில் பேச்சுக்கள் நடந்தன. பேச்சுக்கள் இழுபறிப்பட்டன.

பேச்சு-மோதல், பேச்சு-மோதல் என்று நாட்கள் நகர்ந்தன. இந்த நிலையில் பேச்சுக்களில் நம்பிக்கை இழந்த போராளிகள் போருக்குத் தயாராகினர். அமெரிக்கப் படைகளுக்கு எதிராக டெட் வலிந்த தாக்குதல் என்ற நடவடிக்கையை போராளிகள் தொடங்கினர்.

1968 ஆம் ஆண்டில் தொடங்கிய டெட் நடவடிக்கை கட்டம் கட்டமாக நகர்த்தப்பட்டது.

இதற்கிடையில் 1964 ஆம் ஆண்டில் காட்டுப்போர் முறையாக ஆழ ஊடுருவும் படையணி அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.

6 பேர் கொண்ட பட்டாலியன், 12 பேர் கொண்ட பிரிக்கேட் என்று பெரும் படையணிகளுக்கு இணையான 6 பேர், 12 பேர் கொண்ட இராணுவத்தினர் என்று அவை உருவாக்கப்பட்டன.

டெட் நடவடிக்கை காலத்தில்தான் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனாலும் கட்டம், கட்டமாக டெட் தொடர்ந்தது. டெட் நடவடிக்கையில் இறுதிக் கட்டமாக அமெரிக்கப் படைகளை விரட்ட தயார்படுத்தல்களை போராளிகள் மேற்கொண்டனர். அதனை முறியடிக்க ஆழ ஊடுருவும் படைப்பிரிவு களம் இறக்கப்பட்டது.

பல ஆயிரம் கிலோ மீற்றர்கள் தொலைவிலான போராளிகளின் நிலைகளையும் அவர்களின் உயர்மட்டத் தளபதிகளையும் அழிக்க உலங்குவானூர்திகளில் இரகசியமான முறையில் காடுகளுக்குள் இந்த அணிகள் இறக்கி விடப்பட்டன. இதில் அமெரிக்கர்களும் வியட்நாமிய துணை இராணுவக் குழுவினரும் இருந்தனர். அத்துடன் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த வியட்நாமியர்களை மக்களுக்குள் ஊடுருவ விட்டனர். அவர்கள் மக்களோடு மக்களாக விவசாயக் கூலிகளாவும், தொழிலாளர்களாவும் ஊடுருவினர்.

மக்களிடம் பேசி போராளிகளின் நிலைகள் பற்றி அறிய இந்த ஊடுருவல் மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்களைப் பொறுத்த வரை தமக்குத் தெரிந்ததை தன் சகோதரனுக்கோ, பிள்ளைகளுக்கோ கூட சொல்லாத இரகசியம் காத்தலின் மூலம் அங்கு போராளிகள் பற்றிய தகவல் ஆழ ஊடுருவும் அணிக்கு அந்த வகையில் கிடைக்கவில்லை.

அமெரிக்க ஹொலிவூட் படங்களில் வருவது போல இந்த ஆழ ஊடுருவும் அணியினரால் பெரிய அழிவைப் போராளிளுக்கு ஏற்படுத்த முடியவில்லை.

பல, பல அணிகளாக அமெரி;க்காவின் ஆழ ஊடுருவும் அணிகள் வியட்நாம் போராளிகளின் பகுதிளுக்குள் தீவிரமாக ஊடுருவ விடப்பட்டன.

துணை இராணுவக் குழு, வியட்நாமியர்கள் புலனாய்வுத் தகவல்களுக்கு ஊடுருவ விடப்பட்டனர்.

உலகில் இந்த அணிக்கு அமெரிக்கா பெரும் பரப்புரை செய்து வியட்நாம் மக்களை பீதியுற வைக்கும் உளவியல் போரும் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் வியட்நாம் தளபதி ஜெனரல் கியாப்பின் முறியடிப்பு உத்திகள் அவர்களை கதிகலங்க வைத்தன.

காடுகளை கரைத்துக் குடித்த போரளிகளுக்கு அமெரிக்கப் படைகளுக்கு கலக்கத்தை கொடுத்தது ஆச்சரியமான விடயம் அல்ல.

கெரில்லாப் போராளிகளுக்கு இடையில் கெரில்லாப் போர் முறையினை ஒரு மரபாக கொண்டு வந்தபோது தொடக்கத்தில் திகைத்த போராட்ட அணியினர் ஒரு குறிப்பிட்ட காலத்தை அமெரிக்க உத்திகளை பகுப்பாய்வு செய்ய செலவிட்டனர்.

இதன் பின் அவர்களின் உத்திகளை கற்றுக்கொண்டு அவர்கள் முறியடிப்பை தொடங்கினர்.

இதன் விளைவாக அமெரிக்கத் தளங்களில் ஊடுருவி தாக்குதல்களை நடத்தி பெரும் போர்மூலம் அமெரிக்கப் படைகளை ஓட, ஓட விரட்டின. வல்லரசுப்படைகள் ஓடின. கடைசியில் கப்பலில் இருந்த உலங்குவானூர்திகள் மற்றும் பெரும் போர்க்கலங்களை கடலில் தள்ளி விட்டு தப்பியோடியதுதான் பெரும் அவலம்.

உலக விடுதலை வரலாறில் மிப்பெரும் வரலாறறுச் சாதனை அது.

அதே அமெரிக்கச் சூத்திரத்தை சிறிலங்காப் படைகள் இங்கு மேற்கொள்கின்றன.

தமிழரின் இறுதிப்போரை சிதைக்கும் நோக்கில் அமெரிக்கப் பாணி ஆழ ஊடுருவும் அணிளை கொண்டு தீவிரமாக தாக்குகின்றனர்.

அதன் பாணியை பகுப்பாய்வு செய்யும் காலம் முடிவடைந்து முறியடிப்புக்கான காலம் நகர்கின்றது.

எதிரிகள் எதைச் செய்கின்றார்களோ அதுவே அவர்களின் அழிவுக்கு காரணமாகும் என்ற வரலாற்றின் முன்னோடியான வியட்நாம் தமிழீழ மக்களுக்கு படிப்பினையான ஒன்று.

அமெரிக்கப் படைகளைப் போல சிறிலங்காவின் யாழ்ப்பாண இராணுவத்துக்கும் மன்னார் மற்றும் மட்டக்களப்பு இராணுவத்துக்கும் அவலம் காத்திருக்கின்றது.

ஏனைய மாவட்டங்களில் காடுகள் வழி படையினர் சிங்கள தேசத்துக்கு தப்பியோடி விடுவர்.

அமெரிக்கா, வியட்நாமில் பொறியில் சிக்கியது போல இப்போது யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் படைகளும், மன்னாரில் 8 ஆயிரம் படைகளும், மட்டக்களப்பில் 10 ஆயிரம் படைகளும் இருக்கின்றன.

இவர்களை பொறிக்குள் சிக்க வைத்து விடுதலையை வென்றெடுக்கும் காலம் நெருங்கின்றது.

வரலாறு நமக்கு வழிகாட்டியாக இருக்கின்றது.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

தன்னம்பிக்கை ஊட்டு கின்ற கட்டுரை நன்றிகள்...

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் காலத்தில் இது மாதிரி எமது வரலாறு மேற்க்கோள் காட்டபடும்.

நல்லதொரு தரமான ஆய்வு.

அண்மைக்காலமாக சங்கதி இணையமும் தமது ஆசிரியர் குழுவின் ஆய்வு என்று எழுதுகிறார்கள் அடிக்கடி எழுதுகிறார்கள். அதன் தரம் ஆசிரியர் குழு என்று கையெழுத்து வைக்கிற தரத்தில் இல்லை. யாழ்களத்திலை வேலையில்லாததுகள் பொழுது போக எழுதிறது மாதிரி பருப்பு பப்படம் பாயாசம் என்று போகுது. சங்கதி ஆசிரியர் குழுவும் புதினம் போன்று கொஞ்சம் தரமான ஆய்வுகளை செய்ய முற்பாட்டால் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.