Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பணத்துடன் காணாமல் போயுள்ள மனைவியைத் தேடும் கனடாவில் இருந்த வந்த கணவர்! வடமராட்சியில் சம்பவம்

Featured Replies

ld1362-293x150.jpg

 

 

 

வடமராட்சி பிரதேசத்தின் அல்வாய் மேற்கு, திக்கத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் 35 பவுண் தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபா பணத்துடன் காணாமற் போயுள்ளதாக நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனைவி காணாமல் போனதையறிந்து கனடாவிலிருந்து வருகை தந்த கணவனே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

நான்கு வயதுப் பிள்ளையின் தாயாரான க.வசந்தகுமாரி (வயது29) என்பவரே கடந்த வாரம் காணாமற்போயுள்ளார்.

இவரிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பணம் கேட்டு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையிலேயே இவர் காணாமற்போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

அல்வாய் மேற்கு திக்கத்தைச் சேர்ந்த இந்தப் பெண்ணின் கணவர் தொழில் நிமித்தம் கனடாவிற்குச் சென்றிருந்தார்.

இவரின் மனைவியும் நான்கு வயது பிள்ளையும் திக்கத்தில் வசித்து வந்தனர். அண்மையிலேயே இவர்கள் புதிய வீடொன்றைக் கட்டி புதுமனைப் புகுவிழாவையும் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில் கனடாவிலுள்ள இவரின் கணவரிடம் பணம் கேட்டு தொலைபேசி மூலமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட அதேவேளை, பணம் தராவிட்டால் வீண் விபரீதங்கள் ஏற்படுமென்று அச்சுறுத்தியதுடன், திக்கத்திலிருந்த மனைவிக்கும் இதேபோல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த அச்சுறுத்தல்களின் பின்னணியில் தேவரையாளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

http://www.canadamirror.com/canada/5356.html

 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

machaan_zps84cffc9b.jpg

 

சில நேரத்திலை கதை வேறை மாதிரியும் இருக்கும் :rolleyes:

பிள்ளை எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில்... கலியாணம் கட்டியிருக்கும் கணவன் மாரே.... கவனமாயிருங்கள்.
உங்கள், மனைவியும்... ஒரு நாள் ஓடிப் போகலாம்.
இரண்டு, மூன்று வேலை என்று... உடலை வருத்தி, கடையில்.. 5 சத  இடியப்பம் வாங்கிச் சாப்பிட, ஒரு மனைவிக்கும் பழக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில்... கலியாணம் கட்டியிருக்கும் கணவன் மாரே.... கவனமாயிருங்கள்.

உங்கள், மனைவியும்... ஒரு நாள் ஓடிப் போகலாம்.

இரண்டு, மூன்று வேலை என்று... உடலை வருத்தி, கடையில்.. 5 சத  இடியப்பம் வாங்கிச் சாப்பிட, ஒரு மனைவிக்கும் பழக்காதீர்கள்.

கோட்டைமாதிரி வாங்கின வீட்டுக்காசை கட்டிமுடிக்க வேணுமெல்லே சிறித்தம்பி!
முதல் வேலை முடிஞ்சு வீட்டை வாறது.....வாசல்லை நிக்கிறது.....பக்கெண்டு அடுத்த வேலைக்கு போறது........ பிறகு வீட்டை வாறது.......அப்பிடியே ஒரு குட்டி நித்தா கொள்ளுறது........திடுக்கிட்டு எழும்பி வேலைக்கு ஓடுறது...........
  • கருத்துக்கள உறவுகள்

கோட்டைமாதிரி வாங்கின வீட்டுக்காசை கட்டிமுடிக்க வேணுமெல்லே சிறித்தம்பி!
முதல் வேலை முடிஞ்சு வீட்டை வாறது.....வாசல்லை நிக்கிறது.....பக்கெண்டு அடுத்த வேலைக்கு போறது........ பிறகு வீட்டை வாறது.......அப்பிடியே ஒரு குட்டி நித்தா கொள்ளுறது........திடுக்கிட்டு எழும்பி வேலைக்கு ஓடுறது...........

 

ஒரு, மனிதன் தனது வயிற்றுப் பசிக்காகத்தான் வேலை செய்ய.. ஆரம்பிக்கின்றான்.

அதற்காகவே... பணம் கிடைக்கின்றது. அந்தப் பணம், அளவுக்கு மிஞ்சினால்... நஞ்சு.

பில் கேட்ஸ் உலகின் முதன்மை பணக்காரர், அவர் சேகரித்த பணத்தில்... உலகில் போலியோ என்னும்.. நோயை இல்லாமல் செய்துவிட்டார்.

இந்த நல்ல மனசு, ஆருக்கு வரும். இப்போ.. தனக்கு, பணம் என்பதே... தலையிடியாருக்கு.. என்கிறார்.

இவரிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பணம் கேட்டு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையிலேயே இவர் காணாமற்போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்றைய நிலைமையில் அவசரமாக யாரவது பொலிசுக்கு போகிற சந்தர்ப்பம் இருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்
இன்றைய நிலைமையில் அவசரமாக யாரவது பொலிசுக்கு போகிற சந்தர்ப்பம் இருக்கா?

 

பொலிசுக்குப் போனால், நியாயம் கிடைக்குமா?

பொலிசுக்குப் போனால், நியாயம் கிடைக்குமா?

 

ஏன் போனார்கள் என்பதுதான் புரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
ஏன் போனார்கள் என்பதுதான் புரியவில்லை?

 

ஒட்டுக்குழுக்கள் எல்லாம்.... சேர்ந்து போயிருக்கும்... அதில் நாம், ஆச்சரியப் பட ஒன்றுமே.. இல்லை. :rolleyes:

  • தொடங்கியவர்

கனடாவில்... கலியாணம் கட்டியிருக்கும் கணவன் மாரே.... கவனமாயிருங்கள்.

உங்கள், மனைவியும்... ஒரு நாள் ஓடிப் போகலாம்.

இரண்டு, மூன்று வேலை என்று... உடலை வருத்தி, கடையில்.. 5 சத  இடியப்பம் வாங்கிச் சாப்பிட, ஒரு மனைவிக்கும் பழக்காதீர்கள்.

 

யென்ன தமிழு நக்கலா? இங்கு நாம் இடியப்பம் வாங்குவதில்லை.முன்பு வாங்கினோம்.ஆனால் இங்கு இடியப்பத்தில் பொரித்த எண்ணையை விட்டு கலப்படம் பண்ணுகிறார்கள்.ஆகவே வேண்டுவதில்லை.கனடியன்சைப்பற்றி மட்டமான பேச்சுகளை நிறுத்துங்கள்.ஓடிப்போனால் விடத்தான் வேண்டும்.இல்லையேல் 911 தான் :icon_mrgreen:  :D  :icon_idea:

ஒரு, மனிதன் தனது வயிற்றுப் பசிக்காகத்தான் வேலை செய்ய.. ஆரம்பிக்கின்றான்.

அதற்காகவே... பணம் கிடைக்கின்றது. அந்தப் பணம், அளவுக்கு மிஞ்சினால்... நஞ்சு.

பில் கேட்ஸ் உலகின் முதன்மை பணக்காரர், அவர் சேகரித்த பணத்தில்... உலகில் போலியோ என்னும்.. நோயை இல்லாமல் செய்துவிட்டார்.

இந்த நல்ல மனசு, ஆருக்கு வரும். இப்போ.. தனக்கு, பணம் என்பதே... தலையிடியாருக்கு.. என்கிறார்.

 

எங்களின் பணம் போலியோவைவிட கொடூரமான வியாதியெல்லாம் வரப்பண்ணும் :blink:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணைக்காணக்காணவில்லை

ஏற்கனவே அவருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் அவர் ஓடிப்போனார் என்பது எப்படி ஊகிக்கப்பட்டது.

 

ரொம்ப வேதனையாக  இருக்கிறது.  செய்தியின் தலைப்பை இப்படி தயாரிப்பவர்கள் பற்றி................???? :(  :(  :(

 

  • கருத்துக்கள உறவுகள்

machaan_zps84cffc9b.jpg

 

சில நேரத்திலை கதை வேறை மாதிரியும் இருக்கும் :rolleyes:

பொசிட்டிவாக நினைக்கிறீங்களே

  • தொடங்கியவர்

வெளிநாட்டில் கணவன் உழைத்து அனுப்பிய 15இலட்சம் ரூபா பணம், 30பவுண் தங்க நகைகளுடன் கள்ளக்காதலுடன் பத்தினி ஒருத்தி தலைமறைவாகி உள்ளார்.  யாழ்ப்பாணம் அல்வாய் மேற்கில் வசித்துவந்த நான்கு வயது குழந்தையின் தாயே கள்ளக்காதலுடன் தலைமறைவாகியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நான்கு வயதுக் குழந்தையின் தாயாரான 29 வயதுடைய க.வசந்தகுமாரியே கள்ளக்காதலுடன் தலைமறைவாகியுள்ளார். கணவன் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் மாதாந்தம் அனுப்பும் பணத்தில் உல்லாசமாக வாழ்ந்து வந்தார். கூடவே கள்ளகாதலன் ஒருவரையும் வைத்திருந்தார்.

இப்போது 4 வயது குழந்தையும் கைவிட்டு விட்டு கள்ளக்காதலுடன் பணத்தையும் நகையையும் எடுத்து கொண்டு தலைமறைவாகி விட்டார்.

வெளிநாட்டில் இருக்கும் கணவன் இப்போது தலையில் அடித்து கொள்கிறாராம். கள்ளக்காதலுடன் ஓடியது பரவாயில்லை. நான் கோப்பை கழுவி கஸ்டப்பட்டு ஊழைத்த பணத்தையும் நகையையும் அல்லவா கொண்டு சென்று விட்டாள் என ஒப்பாவி வைக்கிறாராம்.

 

http://www.thinakkathir.com/?p=47539

கனடாவிலை 5 சத இடியப்பத்தை வாங்கி மைகுரோவெவில் சுடாக்கி குடும்பம் நடத்த கொடுத்துவைக்கவில்லை. லக்கில்லாத பெண். கோப்பை அடித்த கணவனுக்கு செய்த வேலைக்கு தான் இனி கரிப்பானையை உறுட்டி உறுட்டி கழுவட்டும்.  :(

 

திரியை நெடுக்கர் மட்டும் காண விட்டுடாதேயுங்கோ. :lol:  :lol:

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.