Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹேல அதிரடி அரைச்சதம் : தொடரை கைப்பற்றியது இலங்கை

Featured Replies

இலங்கை-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 2ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களைப்;பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அதிகூடிய ஓட்டங்களாக மஹேல ஜயவர்த்தன ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த இலங்கை அணிக்கு மஹேல - ஜீவன் மெண்டிஸ் (25) ஆகியோரின் சிறப்பான இணைப்பாட்டம் கைகொடுக்க 16ஆவது ஓவரில் 100 ஓட்டங்களைக் கடந்தது. தொடர்ந்து இறுதியில் மஹேலவுடன் இணைந்து கொண்டார் திசார பெரேரா. இருவரும் இணைந்து ஆட்டமிழக்காது அதிரடியாக துடுப்பெடுத்தாட 4.4 ஓவர்களில் 59 ஓட்டங்களைப் பெற இலங்கை 161 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலியா அணி சார்பாக பந்துவீசசில் மெக்ஸ்வெல், போல்க்னர், லோப்லின் மற்றும் டொஹார்ட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

தொடர்ந்து 162 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கியது அவுஸ்திரேலியா. ஆரம்பவீரர்களாக களமிறங்கிய பின்ச் (7)மற்றும் வோணர் (7) சொற்ப ஓட்டங்களுடன் அரங்கு திரும்ப அவுஸ்திரேலியாவிற்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது.

இதனையடுத்து இணைந்துகொண்ட அணித் தலைவர் ஜோர்ஜ் பெய்லி - சோன் மார்ஸ் ஜோடி சிறப்பாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த வேளையில் 10 ஓவர் முடிவில் மழை குறுக்கிட்ட டக்வோர்த் லூயிஸ் முறையில் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு அவுஸ்திரேலிய அணிக்கு 122 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து மீண்டும் களமிறங்கிய பெய்லி (45) - மார்ஸ் (45) ஜோடி அதிரடியாக துடுப்பெடுத்தாடி இணைப்பாட்டமாக 86 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை.

இறுதியில் அவுஸ்திரேலிய அணி 15 ஓவர்கள் நிறைவில் 119 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 3 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது. பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக குலசேகர, அஜந்த மெண்டிஸ் மற்றும் பெரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரை அவுஸ்திரேலிய மண்ணில் மெத்தியூஸின் தலைமையில் 2-0 என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3-0 என்ற ரீதியில் இழந்த இலங்கை அணி ஒரு நாள் தொடரை 2-2 என்ற ரீதியில் சமப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் திசார பெரேரா தெரிவுசெய்யப்பட்டார்.

http://www.virakesari.lk/article/sports.php?vid=451

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பந்து வீச்சு மிகவும் பலமாய் இருக்கு... அது தான் தொடர்ந்து இரண்டு தோல்வி....

  • கருத்துக்கள உறவுகள்

முழு மச்சையும் பார்த்தேன். அவுஸ்திரேலிய சனல் 9 இன் வர்ணனையாளர்கள் மிக
மிக பக்கச் சார்பாக கதைத்தார்கள். இலங்கை வென்றது, அதுவும் மகெலவின் அதிரடி
வேறு பல நல்ல செய்திகளுடன் சேர்ந்து எனது வார இறுதியை மிக மகிழ்ச்சியானதாக மாற்றிவிட்டது.

தோல்வியை ஆஸி வீரர்களால் தாங்கமுடியவில்லை .முடிவில் ஒரே வாய்த்தர்க்கம் .

இரண்டுமே மிக மிக விறு விறுப்பான ஆட்டங்கள் .

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியா வீரர்கள் தோல்வியை தாங்காமல் அருவருக்கதக்க முறையில் நடந்து கொண்டார்கள்.

கடைசி பந்துவீச்சுக்கு பின் நடந்த வாய்த்தர்க்கம் சம்பந்தமான வீடியோவை இங்கு இணைக்கமுடியவில்லை.

http://video.theaustralian.com.au/2329931621/Fiery-end-to-second-T20-international-in-Melbourne-291?area=videoindex8

  • தொடங்கியவர்

இலங்கை - அவுஸ்ரேலிய வீரர்கள் சமரசம்         

            செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2013 18:49                                            
Glenn.jpgஅவுஸ்ரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், அவுஸ்ரேலிய அணிக்குமிடையிலான இறுதி டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டியில் ஏற்பட்ட மோதலின் பின்னர் இரு அணியினரும் சமரசம் மேற்கொண்டுள்ளனர்.

இரண்டாவது போட்டியின் 20வது ஓவரின் 5வது பந்தில் அவுஸ்ரேலிய அணியின் வீரர் கிளென் மக்ஸ்வெல் 4 ஓட்டங்களை அடிக்க, இறுதிப் பந்தில் அவுஸ்ரேலிய அணி வெற்றிபெற 3 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

இறுதிப் பந்தை வீசுவதற்கு இலங்கை வீரர்கள் தாமதிக்க, அதை விரும்பாத துடுப்பாட்ட வீரரான கிளென் மக்ஸ்வெல் இலங்கை வீரர்களுடன் தகராறில் ஈடுபட, இலங்கை வீரர்கள் திரும்பவும் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டனர்.

இதில் மஹேல ஜெயவர்தன மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி மக்ஸ்வெல்லைத் திட்டியிருந்தார்.

இலங்கை அணி வெற்றிபெற்ற பின்னர் கைகுலுக்கும் போது இரு தரப்பினரிடையே மீண்டும் வாய்த் தர்க்கங்கள் ஏற்பட்டிருந்தன. அதன் போது அணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லி, விக்கெட் காப்பாளர் மத்தியூ வேட் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள கிளென் மக்ஸ்வெல், போட்டியின் பின்னர் தான் இலங்கை வீரர்களின் அறைக்குள் சென்றதாகவும், தங்கள் அளவை மீறிச் சென்றமைக்காக இலங்கை வீரர்கள் தன்னிடம் மன்னிப்புக் கோரியதாகவும், தானும் மன்னிப்புக் கோரியதாகவும் தெரிவித்துள்ளார்..

மஹேல ஜெயவர்தனவுடன் தான் சிறந்த உறவைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அந்த உறவு எப்போதும் அவ்வாறே இருக்கும் எனத் தெரிவித்தார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.