Jump to content

சிகரட் பிடிப்பவர்களுக்கு முகச்சுருக்கம் இருந்தால் நுரையீரல்ப


Recommended Posts

சிகரட் பிடிப்பவர்களுக்கு முகச் சுருக்கம் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வரும் அறிகுறி

[சிகரெட் பிடிப்பவர்களில் முகச்சுருக்கங்கள் இருக்குமானால், அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் என்று பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள் புதிய பீதியை கிளப்பியுள்ளனர்.

சிகரெட் பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் என்று ஆண்டாண்டு காலமாக சொல்லித்தான் வருகின்றனர். ஆனால், இன்னமும் பலரும் சிகரெட் பிடிப்பதை விடுவதே இல்லை. இளம் பருவத்தினரிடம் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது இந்த பழக்கம்.

சிகரெட் கெடுதல்கள் பற்றி இன்னமும், ஆராய்ச்சிகள் செய்த வண்ணம் தான் உள்ளனர் மருத்துவ நிபுணர்கள். சமீபத்தில் பிரிட்டன் நாட்டில் உள்ள ரோயல் தவோன் எக்சேடர் மருத்துவமனை நிபுணர்கள், ஆராய்ச்சி பேராசிரியர் பிபேன் படேல் தலைமையில் ஆராய்ந்தனர். லண்டனில் இருக்கும் இந்திய நிபுணரான படேல் தலைமையில் இந்தக் குழுவினர், சிகரெட் பிடிப்பவர்கள் பலரிடம் மதிப்பீடும் செய்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக சிகரெட் பிடிக்கும் 78 குடும்பங்களைச் சேர்ந்த 45 முதல் 70 வயது வரை உள்ள 149 பேரிடம் மதிப்பீடு எடுக்கப்பட்டது. அவர்களில் சிலருக்கு முகத்தில் சுருக்கங்கள் இருந்தன. இவற்றின் அடிப்படையில், குழுவினர் ஆராய்ச்சி செய்தனர்.

ஆராய்ச்சி முடிவுகள் வருமாறு: சிகரெட் பிடிக்கும் நீண்டகால பழக்கம் உள்ளவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதில் ஒன்று தான் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தான் முகத்தில் காணப்படும் சுருக்கங்களை வைத்து கண்டறியப்பட்டது. அந்த கோளாறுக்கு பெயர் `க்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்முனோரி டீசிஸ்' என்பது. நுரையீரல் நோய்களுக்கு பொதுவாக சொல்லப்படும் மருத்துவ தொழில்நுட்ப வார்த்தை இது என்றாலும், பலருக்கு இது ஏற்படுகிறது.

பிரிட்டனைப் பொறுத்தவரை பல இலட்சம் பேர் சிகரெட் பிடிக்கின்றனர். அவர்களில் 10 இலட்சம் பேருக்கு இத்தகைய பாதிப்பு உள்ளது. சிகரெட் பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் தான் மிக மோசமான, எளிதான பாதிப்பு என்று டாக்டர்கள் ஏற்கனவே கூறிவருகின்றனர். அடுத்த 2020 ஆம் ஆண்டில் இது தான் மிக அதிக உயிர்களை பலி கொல்லும் கோளாறாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

இதற்கு அறிகுறி தான் முகத்தில் காணும் சுருக்கங்கள். இப்படி சுருக்கங்கள் வந்தபின்னர் டாக்டரைப் பார்த்தால் நல்லது. இவ்வாறு நிபுணர்கள் தங்கள் ஆராய்ச்சி முடிவில் கூறியுள்ளனர்

http://www.thinakkural.com/news/2006/6/20/...ws_page4789.htm

Link to comment
Share on other sites

:oops: :oops: :oops: :oops:

என்ன வினித் அண்ணாச்சி இந்தப் பார்வை சரியில்லையே? சரி சும்மா சொல்லுங்க ஒரு நாளைக்கு எத்தனை>???

தகவலுக்கு நன்றி அட்சரன்

புகைப்பிடிக்கிறவைக்கு மட்டுமில்லை பக்கத்தில நிண்டு சுவாவிக்கிறவைக்கும் இதன் பாதிப்பு இருக்கு என்று ஆய்வுகள் கூறுகின்றன். :cry:

Link to comment
Share on other sites

நன்றி அட்ஷரன் உங்கள் தகவலுக்கு ..பலருக்கு பயனுள்ள தகவல்..எல்லா இடமும் போர்ட்..போஸ்ரர் ஒட்டி..ஏன் சிகரெட் பெட்டியிலேயே போட்டும்..யாரும் கேட்கல.. :? :evil:

.....................

ம்ம்..வினித் அண்ணாவோட முழுசல் எனக்கும் சரியாப்படல.. :roll: :roll:

புகைப்பிடிக்கிறவைக்கு மட்டுமில்லை பக்கத்தில நிண்டு சுவாவிக்கிறவைக்கும் இதன் பாதிப்பு இருக்கு என்று ஆய்வுகள் கூறுகின்றன்

இதை யார் யோசிக்கிறாங்க.. :evil: அவங்களை விட மற்றவைக்கு தான் பாதிப்பு கூடவாம்.. :evil: :evil: பஸ்ஸுக்கு நிக்கும் போது தான்..எனக்கு :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

இதை யார் யோசிக்கிறாங்க.. :evil: அவங்களை விட மற்றவைக்கு தான் பாதிப்பு கூடவாம்.. :evil: :evil: பஸ்ஸுக்கு நிக்கும் போது தான்..எனக்கு :evil: :evil: :evil: :evil:

ஓம் சகி பஸ்ஸுக்கு நிக்கும் போது மற்றது மோலுகளுக்கு வெளியால போற வாசல்களைல் மற்றும் பாடசாலைகளில் எண்டு அதலா போற வாற நாங்கள் ஒரு நாளை குறைஞ்சது 5 எண்டாலும் உள்ளுக்கு இழுக்கிறம். :cry: :cry: :cry: ஒரே நாத்தம். எப்படித்தான் அந்த கருமாந்திரத்தை ஊதி தள்ளுகினமோ :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை யார் யோசிக்கிறாங்க.. :evil: அவங்களை விட மற்றவைக்கு தான் பாதிப்பு கூடவாம்.. :evil: :evil: பஸ்ஸுக்கு நிக்கும் போது தான்..எனக்கு :evil: :evil: :evil: :evil:

பக்கத்தில் நிற்பவர்களுக்கு பாதிப்பு என்றால், உங்களுக்கு பாதிப்பை குறைக்க ஒரே வழி நீங்கள் பிடிப்பது தான். :wink: :P

Link to comment
Share on other sites

பக்கத்தில் நிற்பவர்களுக்கு பாதிப்பு என்றால், உங்களுக்கு பாதிப்பை குறைக்க ஒரே வழி நீங்கள் பிடிப்பது தான். :wink: :P

வந்திட்டார் அறிவுக்கொழுந்து :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப்ரியசகிக்கு நல்ல வழிகளைச் சொன்னால் பிடிக்காதே! உந்தப் பெண்களின் வேலையே உப்படித் தான். மற்றவர்களுக்கு நல்வழி காட்டினால் வயிற்றெரிந்து போவது! :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

ப்ரியசகிக்கு நல்ல வழிகளைச் சொன்னால் பிடிக்காதே! உந்தப் பெண்களின் வேலையே உப்படித் தான். மற்றவர்களுக்கு நல்வழி காட்டினால் வயிற்றெரிந்து போவது! :twisted: :twisted: :twisted:

என்ன தூயவன்..இது ஒரு நல்ல வழி என்று அக்காக்கு வயிறு எரியுதா...நல்ல ஜோக்.. :) எங்க எல்லாரும் ஒருக்கால் சிரிச்சு விடுங்கோ..பாவம் தூயவன்.. :P :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய உருப்படியான அறிவுரைகளைக் கேட்டுத் திருந்துவோம் என்றில்லை! நக்கலா அடிக்கின்றீர்!! இதுக்கெல்லாம் பிறகு வருத்தப்படுவீர்!! :twisted: :twisted: :oops:

Link to comment
Share on other sites

என்னுடைய உருப்படியான அறிவுரைகளைக் கேட்டுத் திருந்துவோம் என்றில்லை! நக்கலா அடிக்கின்றீர்!! இதுக்கெல்லாம் பிறகு வருத்தப்படுவீர்!! :twisted: :twisted: :oops:

ம்ம் உருப்படியான.. :):lol: திரும்ப திரும்ப ஜோக் அடிக்க்காதைங்கோ தூயவன்.. :P :wink:

Link to comment
Share on other sites

உந்தப் பெண்களின் வேலையே உப்படித் தான். மற்றவர்களுக்கு நல்வழி காட்டினால் வயிற்றெரிந்து போவது! :twisted: :twisted: :twisted:

தம்பி சரியா சொன்னாயப்பு நான் இதுக்கு புல் சப்போட் (அனுபவப்பட்டவன்)

Link to comment
Share on other sites

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்

பழைய பதிவுகளைப் படித்தபோது, நாங்களாக இப்படிக் கதைத்தோம் எனத் தோன்றியது... கிட்டத்தட்ட 6 வருடங்கள் முன்பு.. மறந்து விட்ட ஒரு நட்பு முகத்தார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.