Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இந்தியா, இலங்கைக்கு ஆதரவளிக்கும்

Featured Replies

 
 

 

india%20&%20srilanka_CI.png

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இந்தியா, இலங்கைக்கு ஆதரவளிக்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்து வருகின்றன.
 
இந்தத் தீர்மானத்தின் போது இந்தியா, இலங்கைக்கு சாதகமான முறையில் நடந்து கொள்ளுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.அண்டை மற்றும் நட்பு நாடு என்ற ரீதியில் மனித உரிமை விவகாரங்களின் போது இந்தியா, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்பதில் சந்தேகமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கடந்த தடவை இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்த போதிலும், அந்த விடயங்கள் குறித்து ராஜதந்திர ரீதியில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.காலத்துக்கு காலம் நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்ற போதிலும், நட்பு நாடு என்ற ரீதியில் இந்தியா, இலங்கைக்கு உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாது என அவா தெரிவித்துள்ளார்.குறிப்பாக வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

மனித உரிமை பேசுபவர்கள் Vs  காட்டுமிராண்டி உரிமை பேசுபவர்கள்

இலங்கைக்கு ஒரே வழி சர்வதேச விசாரணையே இந்தியா இதனை ஆதரிக்க வேண்டும் என்கிறது ஐ.தே.க.

 

சர்வதேச விசாரணைப் பொறிமுறையினூடாக மாத்திரமே இலங்கையில் நீதி, நியாயத்தை நிலைநாட்ட முடியும். எனவே, இலங்கை மக்களின் நலனில் இந்தியாவுக்கு அக்கறை இருக்குமானால், சர்வதேச விசாரணைக்கு அது ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நேற்று கோரிக்கை விடுத்துள்ளது.



ஜெனிவா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரை மையப்படுத்தியே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்குச் செல்லவுள்ளார் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் குழுவினர்,  ஐ.நா.மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் தமது நாடு இலங்கைக்கு எதிராக மற்றுமொரு புதிய தீர்மானத்தைக் கொண்டுவரவுள்ளதைப் பகிரங்கமாக அறிவித்தனர்.

இதனையடுத்து, இவ்விடயம் தொடர்பில் அரசும், எதிர்க்கட்சிகளும் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், இலங்கைக்கு எதிராகப் பிரேரணை வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அது விடயத்தில் இந்தியா எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என்பது தொடர்பிலும் அரசியல் களத்தில் சூடான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இவ்வாறு இலங்கை விடயத்தில் டில்லியின் நிலைப்பாடு தொடர்பில் எதிரும் புதிருமாகக் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல விடம் ஜெனிவா விவகாரம், அந்த மாநாட்டின்போது இந்தியாவின் நிலைப்பாடு ஆகியவை தொடர்பில் "உதயன்' வினவியது.

இதன்போது சர்வதேசத்தின் நடவடிக்கை நாட்டுக்கு எதிரானது அல்ல, அரசின் செயற்பாடுகளுக்கு எதிரானதே என்ற விடயத்தை ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டிய அவர், மேலும் கூறியவை வருமாறு:


நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து சர்வதேச சமூகத்துக்கு அரசு உறுதியளித்துள்ளது. அந்த அறிக்கையில் சுயாதீனக் குழுக்கள் நிறுவப்படவேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. எனவே, பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தால் பரவாயில்லை என்ற இராணுவ விசாரணை அறிக்கையின் சிபாரிசு குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இங்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையே முக்கியம் பெறுகின்றது.

சர்வதேச விசாரணை தேவை

அதேவேளை, கடந்த காலங்களில் நாட்டில் நீதித்துறை சுயாதீனமாகவுள்ளது என்று உலக நாடுகளிடம் தெரிவித்து, அந்நிறுவனத்தினூடாக மனித உரிமை மீறல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கூறியது. ஆனால், தற்போது நீதித்துறையின் சுயாதீனத்துக்கு என்ன நடந்துள்ளது? எதிர்காலத்தில் சொல்வதற்கு அரசிடம் எதுவுமே இல்லை.

செய்வதற்கு வழியில்லாத நிலையிலேயே அது ஜெனிவா மாநாட்டைச் சந்திக்கவுள்ளது.
அத்துடன், அரசு செய்வதாக உலக நாடுகளிடமும் உள்நாட்டிலும் கூறிவந்துள்ள எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஊடக அடக்குமுறை, வெள்ளைவான் கலாசாரம் ஆகியன தொடர்கின்றன.

வெள்ளைவான் கலாசாரம், சிவில் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான அடக்குமுறை, ஊடக அடக்குமுறை, நீதித்துறை, சுயாதீனத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் ஆகியன குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும்.

குறிப்பாக, தமிழ் மக்கள் மட்டுமல்ல, நாட்டில் தற்போது சிங்கள மக்களும் துன்பங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே, இலங்கை மக்களின் நலன் குறித்து இந்தியாவுக்கு அக்கறையிருந்தால் சர்வதேச விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும். நாட்டு மக்களின் நலனுக்காகவே நாம் இந்தக் கோரிக்கையை விடுக்கின்றோம் என்றார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2812

இவ்வளவு காலமும் இலங்கை இந்தியாவை சுத்தினது. இதில் இந்தியா தோற்க போகும் இலங்கைக்கு ஆதரவு மாதிரி நடித்து இலங்கையை நடு ஆறுவரைக்கும் அழைத்து சென்று மாட்டிவிடுகிற திட்டத்தில் செயல்படுகிறது. தமிழரருக்கு செய்த அதே நம்பிக்கை துரோகத்தை இந்த முறை இந்தியா மகிந்தாவுக்கு செய்ய தீர்மானிக்கிறது.

 

மகிந்தவிடம் ஒரு சின்ன ராஜதந்திர  உதவி இருந்தால் இந்தியாவை நம்பி இனி ஐ.நாவின் பிரேரணைக்கு எதிர்ப்பு காட்ட வேண்டாம் என்றுதான் அறிவுரை கூறுவார். இந்த முறை மகிந்தா ஐ.நாவுடன் ஒத்து போகாமல் பிரேரணையை எதிர்த்தால் அதன் பின்னர் இவர் இன்னொரு சிரிய அசாத்.

Edited by மல்லையூரான்

இப்பொழுது தமிழர்களுடன் சில பகுதி சிங்களவர்களும் இந்தியாவை கேட்கிறார்கள்  :o

cartoon-02.02.2013.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இந்தியா, இலங்கைக்கு ஆதரவளிக்கும்

 

ஆதரவு அளிக்குமா இல்லையா என்பதை குறைந்தபட்சம்  ஒரு வாரம் அல்லது 3 நாட்களுக்கு முன்னதாக தெரிந்துவிடும்.

டிஸ்கி:

எப்படி என்றால் எதாவது பாலியல் வல்லுறவு. அல்லது கலவரம்.. அல்லது கூடம் குளம் பிரச்சனை கிளப்பிவிடுதல்.. ஏதாவது ஒன்று நடக்கும் .. அதாவது எதிர்நோக்கும் சிக்கல்களில் இருந்து தப்பித்து கொள்ள் கவனத்தினை திருப்பிவிடணும்.  (இதெல்லாம் அர்த்த சாஸ்திரத்திலே சொல்லபட்டிருக்கு...)எல்லாம் என்னமோ அவன் வீட்டில் இழவு விழுந்தமாறி இங்கிட்டு கிந்தியன் கிந்தியன் என திரிவான்.. இந்த லாஜிக்கு பல ஆண்டுகளாக கடைபிடிக்கபட்டு வரும் ஒரு நடை முறை..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.