Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரான் ஜனாதிபதி மீது கெய்ரோவில் சப்பாத்து வீச முயன்றவர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் ஜனாதிபதி மீது கெய்ரோவில் சப்பாத்து வீச முயன்றவர் கைது

கெய்ரோ: எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு விஜயம் செய்திருந்த, ஈரானிய ஜனாதிபதி முகமட் அகமதி நிஜாத் மீது சப்பாத்து வீச முயன்றவரை அவருடைய பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஒரு ‘கோழை’ எனக் கத்திக்கொண்டு சப்பாத்து ஒன்றை ஈரானிய ஜனாதிபதி மீது எறிந்தவரை, பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்கும் காட்சியடங்கிய ஒளிநாடா வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் தெரியவராத போதிலும், சப்பாத்து வீசியவர் ஈரானுக்கு எதிரியானவர் எனவும், சிரிய அரசிற்கு ஆதரவாகச் செயற்படுபவர் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவருகின்றது.

1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியின் பின் முதன்முதலாக ஈரான் ஜனாதிபதியாக முகமட் அகமதி நிஜாத் எகிப்திற்கு வந்துள்ள நிலையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரபுலகில் மிகவும் மோசமானதொரு அவதூறுச் சம்பவமாக இது பார்க்கப்படுகின்றது.

உலக முஸ்லிம் நாடுகளை ஒன்றிணைத்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நேற்று கெய்ரோவில் ஆரம்பமானது. இதில் கலந்துகொள்வதற்காகவே ஈரான் ஜனாதிபதி கெய்ரோ வந்திருந்தார்.

செவ்வாய்க்கிழமை கெய்ரோவிலுள்ள அல் ஹுசீன் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை நடத்திவிட்டு வெளியேறும்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கூடிநின்ற சனக் கூட்டங்களுக்கு மத்தியிலே கையிலே சப்பாத்தொன்றுடன் முன்னோக்கி வருவதையும், பின்னர் சிரிய மொழியிலே கத்திக்கொண்டு சப்பாத்தை வீசுவதை காட்சியாக்கி துருக்கியின் செய்தி முகவரைப்பு வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர் சிரியராக இருக்கலாமென கருதப்படுகிறது.

இதேவேளை, எகிப்தில் பெரும்பாலானோர் சன்னி முஸ்லிம்களாக உள்ள அதேவேளை, முகமட் அகமத், ஷியா மதப் பிரிவைச் சேர்ந்தவராவார்.

இச்சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, பள்ளிவாசலுக்கு வெளியே மேலும் 4 இளைஞர்கள் சிரியாவுக்கு ஈரான் ஆதரவளிப்பதாகக் கூறி ஈரானிய ஜனாதிபதிக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=2262:2013-02-06-10-52-53&catid=290:world&Itemid=461

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் அதிபர் மீது ஷூ வீச்சு

 

iran.jpgஎகிப்து சென்றுள்ள ஈரான் அதிபர் மஹ்மூத் அகமதி நிஜாத் மீது ஷூ வீசப்பட்டது. ஈரான் அதிபர் மஹ்மூத் அகமதி நிஜாத், 3 நாள் சுற்றுப்பயணமாக எகிப்து சென்றுள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்தும் வகையிலும், அங்கு நடைபெறவுள்ள இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்கும் வகையிலும் அவரின் பயணம் அமைந்துள்ளது.

அகமதி நிஜாதுக்கு, கெய்ரோ விமான நிலையத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. எகிப்து அதிபர் முகமது மோர்ஸி அவரை வரவேற்றார்.

ஆனால், கெய்ரோவில் உள்ள புராதனம் மிக்க மசூதிக்குச் சென்ற நிஜாதை முற்றுகையிட்ட சன்னி பிரிவு முஸ்லிம்கள், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் “கோழை’ என்று கூறியபடி அவர் மீது ஷூ வீசினார். ஷூ வீசியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், மசூதியின் பிரதான வாயிலில் சன்னி முஸ்லிம்கள் தங்களது ஷூக்களை உயர்த்திக் காண்பித்தபடி கோஷம் எழுப்பினர். இதையடுத்து பாதுகாவலர்கள் அகமதி நிஜாதை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை அல்-அஸாரில் நடைபெற்ற கருத்தரங்கில், அஹமதி நிஜாத் பேசுகையில், “”எனது இந்தப் பயணம் இரு நாட்டு மக்களுக்கு இடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன். ஈரான் மக்களின் இதயத்தில், எகிப்து மக்களுக்கு இடமுண்டு” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், அவரைத் தொடர்ந்து பேசிய மூத்த மத குரு ஹஸன் அல் ஷபி, “”சில ஷியா பிரிவினர் முகமது அலியின் கூட்டாளிகளை அவமதிக்கின்றனர்” என கடுமையாக விமர்சித்தார். இதனை நிஜாத் தர்மசங்கடத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

சிரியா அதிபர் பசார் அல் அஸாத்துக்கு ஆதரவாக ஈரான் செயல்படுவதைக் கண்டித்து, சன்னி பிரிவு முஸ்லிம்கள் இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகமுள்ள ஈரான், சன்னி பிரிவு நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு சன்னி பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளில் ஈரான் அதிபர் ஒருவர் எகிப்துக்கு வருவது இதுவே முதல் முறையாகும். எகிப்து முன்னாள் அதிபர் ஹோசினி முபாரக் இருக்கும் வரை அமெரிக்க ஆதரவுடன், ஈரானிடம் பகைமை பாராட்டி வந்தார். அவர் காலத்தில் ஈரான் அதிபர் எகிப்துக்கு வருவது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

மதகுருக்கள் கண்டனம்: கெய்ரோவில் உள்ள சன்னி பிரிவு முஸ்லிம்களின் உயர்ந்த போதனை அமைப்பான அல்-அஸார் மூத்த மதகுரு அகமது அல் தாயேப் கூறியது: சன்னி மக்களின் நாட்டில் ஷியா பிரிவை பரப்ப முயல்கிறார் அகமதி.

அரபு சகோதர தேசம் என்ற வகையில் பஹ்ரைனுக்கு உரிய மரியாதையை அகமதி அளிக்க வேண்டும். பஹ்ரைன் உள்பட வளைகுடா நாடுகளின் உள்விவகாரங்களில் அவர் தலையிடக் கூடாது. ஈரானில் உள்ள சிறுபான்மை சன்னி முஸ்லிம்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார். பஹ்ரைனில் சிறுபான்மை சன்னி பிரிவு மன்னராட்சிக்கு பெரும்பான்மை ஷியா பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஷியா பிரிவு போராட்டக்காரர்களுக்கு ஈரான் ஆதரவளித்து வருகிறது.

கடந்த அக்டோபர் மாதம், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பஹ்ரைன், ஈரான் தூதருக்கு சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.