Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சிங்கள – முஸ்லிம் இன கலவரம் நடக்கிறதா? அரசு இன்று பதில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சிங்கள – முஸ்லிம் இன கலவரம் நடக்கிறதா? அரசு இன்று பதில்

 

 

நாட்டுக்குள் இன ரீதியான மத ரீதியான முறுகல் நிலை தோன்றியிருப்பதாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இவற்றின் உண்மை நிலையை அரசு இன்று (07) விளக்கமளிக்கும் என சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

எதிர்க் கட்சித் தலைவர் ஆங்காங்கே சில சம்பவங்கள் நடைபெறுவதாக முஸ்லிம்களுக்கும், பெளத்தர்களுக்கும் இடையே மத ரீதியான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

இது தொடர்பாக உண்மை நிலையை விளக்க வேண்டிய பொறுப்பு அரசுக்குள்ளது. இன்று சபையில் இது தொடர்பான விளக்கமளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிலையியற் கட்டளை 23/2 இன் பிரகாரம் பேசும்போது முஸ்லிம்களுக்கு எதிராக சில பெளத்த குழுக்கள் செயற்படுவதாகவும் குளியாபிட்டியில் சில சம்பவங்கள் நடைபெற்றதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேபோன்று பிரதி அமைச்சர் எம். கே. டி. எஸ். குணரத்தனாவும் நாட்டின் இன, மத ரீதியான முறுகல் நிலை இல்லை என்றார். எனினும் அன்றே குளியாப்பிட்டியில் முஸ்லிம்களின் பள்ளிவாசல் தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதில் பேசிய சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா, இன்று சபையில் தெளிவான விளக்கமளிக்கப்படும் என்றார்.

http://meenakam.com/blog/2013/02/07/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%25bf%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b2

 

பதில் என்னவாகும் - இல்லை என்பதே.

 

அரசுதானே கலவரத்தை உருவாக்குகின்றது :rolleyes:

இல்லாத பொய்களைக் கூறி எதிர்க்கட்சி இனக்கலவரத்தை கொண்டுவர முயற்சிக்கிறது. அரசு அதற்கு அனுமதிக்கப் போவதில்லை. 30 வருட புலிகளின் இன அழிப்பிலிருந்து நாட்டை அரசர் காப்பாற்றி சிருபான்மையினரான முஸ்லீம்களை வாழ வைத்திருக்கிறார். இதை கிழக்கு மாகாண முஸ்லீம்கள் அரசை பதவியில் அமர்த்தி நிரூபித்திருக்கிறார்கள். அமைச்சர் கக்கீம் இதற்கு சாட்சி.

 

மேலே இருப்பது நான் எழுதிய கற்பனை.

 

உண்மை செய்தி:

 

 

பள்ளி உடைப்புக்கு ஆதாரங்கள் உண்டா? முடிந்தால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்குக!; ரணிலுக்கு அரசின் சார்பில் அமைச்சர் நிமால் சவால்
palli.jpg

நாட்டில் முஸ்லிம்களின் எந்தவொரு பள்ளிவாசலும் தாக்கப்படவில்லை என்றும்,  அரசுடன் இணைந்திருக்கும் முஸ்லிம்களை அரசிலிருந்து பிரிப்பதற்காகச் சிலர் சதி செய்கின்றனர் என்றும் அரசு நேற்று நாடாளுமன்றில் அறிவித்தது. 

 
அவ்வாறான சம்பவங்கள் நடந்தமைக்கான ஆதாரங்களை முடிந்தால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு அரசு ரணில் விக்கிரமசிங்கவிடம் சவால் விடுத்துள்ளது.
 
முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் நாட்டில் இடம் பெறுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் சபையில் ஆற்றிய உரைக்கு அரசின் சார்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பதிலளித்தார். அப்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
 
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக சம்பவங்கள் பல இடம்பெற்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (நேற்றுமுன்தினம்) இந்தச் சபையில்  பொய்யான தகவல்களை முன்வைத்தார். 
 
அவர் முன்வைத்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. முஸ்லிம்களுக்கு எதிராக சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை. 10 பள்ளிவாசல்கள் தாக்கப்பட் டன என்று ரணில் விக்கிரம சிங்க கூறினார். அதை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். 
 
நாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் அனைத்தையும் அவர் முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களாகக் காண்பிக்க முற்படுகிறார். ஆனால், ஹலால் உணவுகளை உட்கொள்வதற்கு எதிராக சில சம்பவங்கள் இடம்பெற்றன. அது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
குளியாப்பிட்டியில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர் பில் பொலிஸார் பிக்குமார்களை அழைத்து இவ்வாறு செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுத்தனர். அதேபோல், பொதுபலசேனா அமைப்பையும் பொலிஸுக்கு அழைத்து இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் வகையில் செயற்படுமாறு கூறப்பட்டது.
 
நாடு முழுவதிலும் அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வமத குழுக்கள் 140 உள்ளன. அந்தக் குழுக்கள் இன ஒற்றுமையை எற்படுத்தும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
 
ஹலால் சான்றிதழ் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்துத் தொடர்பில் நாம் கவலையடைகிறோம். ஹலால் சான்றிதழ், வர்த்தகத்துக்குக் கட்டாயம் தேவை என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். 
 
இஸ்லாமியருக்கு எதிராக இணையதளங்கள் பல செயற்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். இந்த இணையங்கள் அரசுக்கு சேறுபூசும் விதத்தில் எதிர்க்கட்சியின் ஆதரவுடன் தான் செயற்படுகின்றன. 
 
இணையதளங்களைப் பொறுத்தவரை அவற்றை இன்று தடைசெய்தால் நாளை வேறு ஒரு பெயரில் ஆரம்பிக்கக்கூடிய தொழில்நுட்பப் பிரச்சினை உள்ளது. இது தொடர்பில் நாம் கவனம் செலுத்துகின்றோம்.
 
இனப்பிரச்சினையையும், மதப்பிரச்சினையையும் தூண்டு வதற்குச் சில குழுக்கள் சதி செய்கின்றன என்பதை எதிர்க் கட்சித் தலைவரின் கூற்றிலிருந்து விளங்கிக்கொள்ள  முடிகிறது.
  
உண்மையில் அரசுடன் இணைந்திருக்கின்ற முஸ்லிம்களை அரசிலிருந்து பிரிப்பதற்காகச் சிலர் சதி செய்கின்றனர். அதற்கு நாம் இடங்கொடுக்கமாட்டோம். 
இந்த நாட்டில் இனப் பிரச்சினையை ஏற்படுத்த நாம் ஒருபோதும் இடங்கொடுக்க மாட்டோம்.
 
இலங்கைக்கு எதிராக ஜெனி வாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அரசுக்கு ஆத ரவாக நின்ற உலமா சபையை நாம் மறந்து விடவில்லை. அவர்கள் எமக்குச்  செய்த இந்த உதவிக்கு நாம் எமது நன்றிகளை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
 

 

 

 

 


அரசு விடுத்த சவாலை துணிந்து ஏற்றார் ரணில்; ஆட்சியாளரைக் காப்பாற்ற ஹக்கீம் குறுக்கீடு
ranil1.jpg

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக சம்பவங்கள் இடம்பெற்றன என்பதற்கான ஆதாரங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றில் கூறினார்.

 
முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவொரு சம்பவமும் இடம் பெறவில்லை என்று தெரி வித்து அவ்வாறு நடந்திருந்தால் அதற்கான ஆதாரங்களை சபையில் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா சபையில் கேட்டுக்கொண்டதற்கு அமையவே ரணில் மேற்கண்டவாறு கூறினார்.
 
அப்போது குறுக்கீடு செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், இந்த விடயத்தை அரசியலாக்கக் கூடாது. எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும் இணைந்து தான் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றார்.
 
அத்தோடு, நிமல் சிறி பால டி சில்வா சபையில் வெளியிட்ட அறிக்கை தம்மோடு கலந்தாலோசித்து தமது கருத்துக்களை உள்வாங்கித் தயாரிக்கப்பட்டதே என்றும் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
 
அப்போது குறுக்கீடு செய்த ஐ.தே.கவின் எம்.பி. கபீர் ஹாசிம், முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் அமைதியாக இருக்க அவர்களின் பணியை எதிர்க்கட்சித் தலைவர் செய்திருக்கிறார் என்று கூறினார்.
 

 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.