Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணா குழுவை அடக்கினால் தாக்குதல்களை நிறுத்துவீர்களா?: மகிந்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணா குழுவை அடக்கினால் தாக்குதல்களை நிறுத்துவீர்களா?: மகிந்த இரகசிய ஒப்பந்தம்!!

இரு வாரங்களுக்கான தற்காலிக பயிற்சித் திட்டமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னெடுத்துள்ள அந்தரங்க முன்னெடுப்புக்கள், சிறிலங்கா அரசியல் உலகை அதிர வைத்துள்ளன.

சண்டே லீடர் வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் செய்தியின் படி, துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் தாக்குதல்களை முற்றுமுழுதாக நிறுத்திக் கொண்டால், விடுதலைப் புலிகளும் இராணுவத்தின் மீதான தாக்குதல்களை முற்றாக நிறுத்த முன்வருவார்களா என்று இரகசிய ஒப்பந்த ரீதியாக வினவியுள்ளார் என்று தகவல் வெளியிட்டுள்ளது.

யாழிலிருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் ஆசிரியர் என்.வித்யாதரன் மற்றும் அதன் வெளியீட்டாளர் ஈ.சரவணபவன் ஆகியோரிடம், கடந்த செவ்வாய்க்கிழமை (20.06.06) மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டதன்படி, இராணுவமும், விடுதலைப் புலிகளும் போரை ஆரம்பிக்கும் நிலையில் உள்ளதால், இதை நிறுத்த ஒரு மாற்று உத்தியை தான் முன்னெடுக்க யோசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரையும் கடந்த செவ்வாய்க்கிழமை மகிந்தவின் உத்தியோகபூர் வாசஸ்தலத்தில் சந்தித்த மகிந்த, இதற்கான இணக்கப்பாட்டை விடுதலைப் புலிகளிடமிருந்து கண்டறிந்து தனக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

போரொன்று ஆரம்பிக்கும் பட்சத்தில், சிறிலங்காவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிப்படையலாம் என்று குறிப்பிட்ட மகிந்த, சிறிலங்காவின் அனைத்து சமூகங்களும் இதனால் பாதிப்படைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்ததுடன், நோர்வேயின் அனுசரணையில் தங்கியிருக்காது, அவர்களை விலக்கிவிட்டு, நேரடிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அவசியம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இத்தகைய நேரடிப் பேச்சுவார்த்தைகளில் காணப்படும் இணக்கப்பாட்டை அமுல்படுத்த இரு வாரங்களுக்கு முயற்சித்துப் பார்த்து, அதில் வெற்றி காணும் பட்சத்தில் அந்த வெற்றியைத் தொடர்ந்து செயற்படுத்த இருதரப்பும் முயலலாம் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

இந்த இருவார காலப்பகுதியில், விடுதலைப் புலிகள் மீதோ அல்லது பொதுமக்கள் மீதோ, கருணா குழுவினர் எதுவித தாக்குதல்களையும் தொடுக்காது இருக்க தான் பொறுப்பெடுக்க முடியும் என்று தெரிவித்த மகிந்த, இத்தகைய இருவார நேரடி போர் நிறுத்தத்திற்கு விடுதலைப் புலிகள் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் இந்தக் கோரிக்கையை, உதயன் நாளேட்டைச் சேர்ந்த இவ்விருவரும் கடந்த புதன்கிழமை கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனிடம் விளக்கியதாகவும், அதற்கான பதிலை விடுதலைப் புலிகள் பின்னர் தெரிவிப்பதாக அவர்களிடம் கூறிவிட்டதாகவும், சண்டே லீடர் மேலும் தெரிவித்துள்ளது.

-புதினம்

நேரடிப் பேச்சு: பிரபாகரனுக்கு ராஜபக்ஷே அழைப்பு!

ஜூன் 25, 2006

கொழும்பு

இனப் பிரச்சினை தொடர்பாக நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு சிறபபு தூதர்கள் மூலம் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை அமைதிப் பேச்சுக்கள் தேக்க நிலையில் உள்ளன. ஐரோப்பிய யூனியன் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்துள்ளதால் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிலிருந்து ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் விலக வேண்டும்.

அப்புறம்தான் பேச்சு குறித்து யோசிக்க முடியும் என்று விடுதலைப் புலிகள் அறிவித்து விட்டனர். செப்டம்பர் 1ம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியன் நாடுகள் விலகிக் கொள்ள வேண்டும் என்றும் புலிகள் காலக்கெடு விதித்துள்ளனர்.

எங்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசு தீவிரப்படுத்தினால் தற்கொலைப் படைத் தாக்குதல்களை தொடங்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் புதிய திருப்பமாக, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு அதிபர் ராஜபக்ஷே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு தயாராக உள்ளது என்று அதில் ராஜபக்ஷே கூறியுள்ளார். உதயன் நாளிதழ் ஆசிரியர் வித்யாதரன், வெளியீட்டாளர் சரவணபவன் ஆகியோரிடம் இந்தக் கடிதத்தைக் கொடுத்து பிரபாகரனிடம் சேர்ப்பிக்குமாறு அவர் கோரியுள்ளார்.

அதன்படி இந்தக் கடிதம் பிரபாகரனிடம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ராஜபக்ஷேவை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்த வித்யாதரன் மற்றும் சரவணபவனிடம் தனது திட்டத்தை விளக்கி இக்கடிதத்தை ராஜபக்ஷே கொடுத்துள்ளார்.

அக்கடிதத்தில், கருணா குழுவினரின் செயல்பாடுகளை அடக்கினால் பேச்சுவார்த்தைக்கு சம்மதிப்பீர்களா என்றும் ராஜபக்ஷே கேட்டுள்ளார்.

மேலும், இப்போதைய நிலையில் போர் மூண்டால் இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். அப்படி நேர்ந்தால் இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

எனவே நார்வேயின் உதவியை தொடர்ந்து எதிர்பாராமல், நேரடியாக இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் என்ன? என்று ராஜபக்ஷே கேட்டுள்ளார்.

இரு தரப்பும் நேரடியாகப் பேசி அதில் ஏற்படும் உடன்பாட்டை 2 வாரங்களுக்கு அமல்படுத்திப் பார்ப்போம். அதில் வெற்றி கிடைத்தால், அந்த உடன்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளலாம்.

இந்த உடன்பாட்டுக் காலத்தின்போது கருணா குழுவினர் எந்தவிதமான தாக்குதலையும் மேற்கொள்ளாமல் இலங்கை அரசு பார்த்துக் கொள்ளும். அதற்கான பொறுப்பை நான் ஏற்கிறேன் என்று கூறியுள்ளார் ராஜபக்ஷே.

ராஜபக்ஷேவின் கடிதத்தையும், அவர் கூறிய விவரங்களையும் வித்யாதரனும், சரவண பவனும், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனிடம் சேர்ப்பித்துள்ளனர்.

இதுகுறித்து பின்னர் பதில் அளிப்பதாக அவர்களிடம் தமிழ்ச்செல்வன் பதில் கூறி அனுப்பியுள்ளார். ராஜபக்ஷேவின் அழைப்பை விடுதலைப் புலிகள் ஏற்பார்களா என்று தெரியவில்லை. இருப்பினும், போரை நிறுத்த இலங்கை அரசு மேற்கொள்ளும் ராஜதந்திரம் இது என்று விடுதலைப் புலிகள் தரப்பில் கருதப்படுவதாக கூறப்படுகிறது.

நன்றி தற்ஸ்தமிழ்

நோர்வே தரப்பை தவிர்த்துவிட்டு நேரடி பேச்சுக்கான முயற்சியை விடுதலைப்புலிகள் நிராகரித்தனர்

நோர்வே தரப்பினரை தவிர்த்துவிட்டு விடுதலைப்புலிகள் அமைப்புடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் முயற்சிகளை தாம் முற்றாக நிராகரித்துவிட்டதாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிபிசிக்கு செவ்வி வழங்கிய விடுதலைப்புலிகள் அமைப்பின் சமாதானச் செயலக பொறுப்பாளரான புலித்தேவன் அவர்கள், நோர்வே தரப்பின் ஊடாகவே இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையில் எந்தவிதமான பேச்சு வார்த்தைகளும் நடக்கும் என்றும், விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை நோர்வே தரப்பையே இந்த பேச்சுவார்த்தைகளுக்கான அதிகார பூர்வ தொடர்பாளர்களாக கருதுவதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து தாம் நோர்வேக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமாதானப் பேச்சுவார்த்தைகளின் கடந்த கால வரலாற்றைப் பார்க்கும் போது, போதுமான நம்பிக்கையின்மையும், தவறான நம்பிக்கைகளுமே இரு தரப்புக்கும் இடையே பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் புலித்தேவன், அதனால்தான் இந்த விடயத்தில் சர்வதேச மத்தியஸ்தம் ஏற்படுத்தப்பட்டது என்றும், அத்துடன் தற்போது நோர்வே அனுசரணையாளார்கள் இரு தரப்பையும் சமாதான பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர பல முயற்சிகளை எடுத்துள்ளார்கள் என்றும் கூறினார்.

அதனால் அந்த வழியை தொடர்ந்தும் பயன்படுத்த விடுதலைப்புலிகள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

நன்றி பிபிசி தமிழோசை

«¼¼¡ À¢ À¢ º¢ ¾Á¢§Æ¡¨ºìÌõ ÒÄ¢¸û ±ýÚ ´Õ «¨ÁôÒ þÕôÀÐ ¸ñÏìÌ ¦¾Ã¢ó¾¢Õ츢ç¾? ¬îºÃ¢Âõ¾¡ý.

§¿¡÷§Å¨Â ¸ÆðÊ Å¢ð¼¡ø.....þó¾¢Â¡¨Å ¯ûѨÆÂ ¨ÅòÐ, ÒÄ¢¸ÙìÌõ þó¾¢Â¡×ìÌõ º¢ñÎ ÓÊ ¿¢¨É츢ȡ÷ Á¸¢ó¾.

ÒÄ¢¸Ç¡ ¦¸¡ì¸¡, «Ð¾¡ý þôÀÊ ´Õ À¾¢ÄÊ ¾óÐûÇÉ÷. Á¸¢ó¾¡×ìÌ ¿øÄ ãì¸ÚôÒ

«ÐºÃ¢ ¸Õ½¡ ¡÷ ±ýÀ§¾ ¾ÉìÌ ¦¾Ã¢Â¡Ð ±ýÚõ «Å÷¸û ¾õ À¢Ê¢ø þø¨Ä ±É×õ ¸¡ðÎì¸ò¾ø ¸ò¾¢É¡§Ã Á¸¢ó¾? þô§À¡Ð ±ôÀÊ¡õ «Å÷ ¸Õ½¡¨Å «¼ì¸ô §À¡¸¢È¡÷? «ôÀÊ¡¢ý ¸Õ½¡ ¾ÉÐ ¨¸ìÜÄ¢ ±ýÀ¨¾ Á¸¢ó¾¡§Å ´ôÒ즸¡û¸¢È¡Ã¡?

¸Õ½¡Å¢üìÌ ¿øÄ ¦ºÕôÀÊ.

¿ñÀ÷¸Ç¢üìÌ Ð§Ã¡¸õ ¦ºöÐ ±¾¢Ã¢¨Â ¿¡Êô §À¡ÅÀ÷¸û ±ýÈ¡ÅÐ ´Õ ¿¡û ±¾¢Ã¢Â¡ø þôÀÊ §¸ÅÄÁ¡¸ Å¢¨Ä §Àºô ÀÎÅ¡÷¸û.

¾ÉÐ ¸¡Ã¢Âõ ¬ÉÐõ, º¢È¢Äí¸¡ þô§À¡Ð ¸Õ½¡¨Å ¨¸ ¸ØÅ×õ ¾Â¡Ã¡¸¢ Å¢ð¼Ð.

À¡Åõ ¸Õ½¡ ±ôÀÊ þÕó¾Å ¨ÀÂý þôÀ þôÀÊ ¬¸¢ô §À¡öð¼¡ý.

´Õ Å¢¨Ä Á¡Ð¨Å Å¢¼×õ §¸ÅÄÁ¡¸ Á¸¢ó¾Ã¡ø Å¢¨Ä §Àºô ÀÎõ ¦À¡ÕÇ¡¸

கருனாவை தன்னால் கட்டுப்படுத்த முடியுமென்றால். ஒன்று கருணாவை இவர் பாதுகாக்கவேண்டும், அல்லது கருணாவின் பெயரை வைத்து இவர் நாடகம் நடத்தவேண்டும். அனேகமாக இரண்டாவது பொருந்திவரும்.

சரி நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு யார் பதில் அளிக்க வேண்டும் என்று விரும்புக்கிறிர்கள்??????????? :P :P

ஒட்டு மத்த தமிழருக்கு தெரிந்த விடயம் சர்வேதேசத்துக்கு மட்டும் தெரியாதா? :P :P

Ţɢò ¿£í¸û ±ýÉ¢¼Á¡ §¸ðË÷¸û?

þó¾ §¸ûÅ¢¸ÙìÌ ±ýÉ Á¸¢ó¾Å¡ ÅóÐ À¾¢ø ¦º¡øÄô §À¡¸¢È¡÷?

«øÄР¡ú ¾Çò¾¢ø ¿¡ý ±ØôÀ¢Â §¸ûÅ¢, ±ýÉ §ƒ¡ˆ Òý ¸¡¾¢Ä¡ Å¢Æô §À¡¸¢ÈÐ?

¿¡§Á §¸ûÅ¢ §¸ðÎ ¿¡§Á À¾¢ø ¦º¡øÄ §ÅñÊÂо¡ý :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.