Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவிற்கு இலங்கையில் தடை விதிக்க வேண்டும்: குடிவரவு - குடியகல்வு ஆணையாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
burha-seithy-150.jpg

முஸ்லிம் பெண்கள் தமது உடல் முழுதையும் மறைக்கும் வகையில் அணியும் புர்கா ஆடையானது கடவுச்சீட்டு விநியோகத்துக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்துதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மறைக்கும் வகையில் அணியும் புர்க்காவை அகற்றுமாறு உள்ளூர் தனியார் வானொலி செய்திச்சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

  

முன்னதாக குறித்த தனியார் வானொலி முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பொன்றையும் நடத்தியதாக தெரிகிறது. இதில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் புர்காவையோ அல்லது பர்தாவையோ அகற்றத் தயாரில்லை என தெரியவந்ததாகவும் அறியமுடிகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள குடிவரவு மற்றும் குடியழ்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா, இது தொடர்பில் ஆட்சேபனையுள்ளவர்கள் எந்தவொரு நேரத்திலும் தன்னை சந்திக்க முடியுமென தெரிவித்துள்ளார்.

 

எவ்வாறாயினும் குறித்த தனியார் வானொலியின் கருத்துக்கணிப்பின் போது, பொதுபலசேனா புர்காவை கொள்ளையர்களின் ஆடையாக அடையாளப்படுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. எனினும் இதற்கு பதிலளித்துள்ள உலமா சபை குறித்த ஆடையானது தமது மதத்தில் உள்ளதென்றும் அதனை ஒருபோதும் அகற்ற முடியாது எனவும் தெளிவாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=76183&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஆளின் அடையாளத்தை காட்டத்தான் படம் எடுத்து கடவுச்சீட்டு, அடையாள அட்டை வழங்கப்படுகிறது.அதையே மூடிக்கட்டி எடுத்து எந்த அடையாலத்தை காட்டப்போகிறார்கள்? கேட்டால் அல்லாவை சாட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணைக் கொண்டு அடையாளத்தைக் கண்டறியும் தொழில்நுட்பம் உள்ளது. அது செயற்படுத்தப்படும் வரையில் இவர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதை தவிர்க்கவேண்டும். அத்தகைய தொழில்நுட்பத்தைச் செயற்படுத்த மக்களின் வரிப்பணம் செலவாகும். அப்பணத்தையும் முஸ்லிம் மக்கள் வழங்கி உதவ வேண்டும். :rolleyes:

 

 

முகத்தை மறைக்கும் வகையில் அணியும் புர்க்கா படம் எடுத்தால் தானே சவூதி போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு போகலாம்? 

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தை மறைக்கும் வகையில் அணியும் புர்க்கா படம் எடுத்தால் தானே சவூதி போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு போகலாம்? 

 

சௌதிக்கு இவர்கள் போவதற்காக இவ்வாறான கடவுச்சீட்டுக்களை வழங்கினால் ஏனைய நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். மறைத்த முகத்துக்குப் பின் எந்தப் பயங்கரவாதியும் ஒளித்திருக்கலாம். :rolleyes:

Edited by இசைக்கலைஞன்

உடுப்பில் கேள்வி கேட்பது வெங்காயத்தை தோலுரிப்பது போன்றது.

 

ஆனால் குடிவரவு அதிகாரிகள் நியாமான வெளிப்புறத்தை பார்த்து அனுமதி வழங்க வசதிகள் இருக்க வேண்டும். போய்வரும் எல்லோருக்கும் DNA பரிசோதிக்கும் நடவடிக்கைகளை நடை முறைக்கு இழுத்துவரகூடாது. ஆகவே மதத்தை காட்டாமல் முகத்தை காட்ட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இதை நான் வரவேற்கின்றேன் அப்படி அவர்கள் புர்கா போட விரும்பினால் சவூதி அரேபியாவுக்கு போகட்டும் 
 
சிறிலங்காவில் பாலைவனப் புயலா வீசுகின்றது ? 
  • கருத்துக்கள உறவுகள்

இதை நான் வரவேற்கின்றேன் அப்படி அவர்கள் புர்கா போட விரும்பினால் சவூதி அரேபியாவுக்கு போகட்டும் 
 
சிறிலங்காவில் பாலைவனப் புயலா வீசுகின்றது ? 

தவறு, தமிழரசு!

 

நான் 'குரான்; முழுவதும் வாசித்திருக்கிறேன்!

 

அதில் சொல்லப்பட்ட படி, யுத்தங்களினால் ஆண்கள் இறந்துபோக, ஏராளமான பெண்கள் திருமணம் செய்யமுடியாமல் போய் விடும் நிலையொன்று ஏற்பட்ட காலத்தில், பலதார மணம் அனுமதிக்கப்பட்டது. அப்போது, முகமது நபிக்குப் பல மனைவிகள் இருந்தனர். அவர்களனைவரும், ஒரே இடத்தில் வாழ்ந்ததால், நபியின் பிரசங்களுக்கும், பிரார்த்தனைக்கும்  வருபவர்களால், இவரது மனைவிகளின் Privacy' பெரிதும் பாதிக்கப்பட்டது. இதைக்கருத்தில் கொண்டே நபி, இவர்களது முகத்தையும் உடலையும் மூடி உடைகளை அணியும் படி கூறினார், 

 

அதுவே இப்போது, இந்தக்கோலத்தில் வந்து நிற்கிறது. :icon_mrgreen:

 

கிறிஸ்தவ மதத்திலும், இந்த உடலை மூடிய உடை அணியும் முறை இருந்தாலும்,(முகம் தவிர்த்து) அதை என் ஒருவரும் விமர்சிப்பதில்லை?

பல மனைவிகளை வைத்துக்கொண்டு யாரை அழைத்துச் செல்கிறார் என்று ஊருக்கு தெரியாமல் இருக்க வேண்டுமானால் புர்கா உதவும். பல கள்ள வேலைகளுக்கும் இது உதவும்.

கடவுச் சீட்டு, அடையாள அட்டைகள் போன்றவற்றில் ஆள் அடையாளமும் ஒருமுக்கிய பகுதி. எனவே ஒன்றில் கடவுச்சீட்டுகளில் அனைவரின் படங்களையும் நீக்கவேண்டும் அல்லது புர்காவை நீக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தவறு, தமிழரசு!

 

நான் 'குரான்; முழுவதும் வாசித்திருக்கிறேன்!

 

அதில் சொல்லப்பட்ட படி, யுத்தங்களினால் ஆண்கள் இறந்துபோக, ஏராளமான பெண்கள் திருமணம் செய்யமுடியாமல் போய் விடும் நிலையொன்று ஏற்பட்ட காலத்தில், பலதார மணம் அனுமதிக்கப்பட்டது. அப்போது, முகமது நபிக்குப் பல மனைவிகள் இருந்தனர். அவர்களனைவரும், ஒரே இடத்தில் வாழ்ந்ததால், நபியின் பிரசங்களுக்கும், பிரார்த்தனைக்கும்  வருபவர்களால், இவரது மனைவிகளின் Privacy' பெரிதும் பாதிக்கப்பட்டது. இதைக்கருத்தில் கொண்டே நபி, இவர்களது முகத்தையும் உடலையும் மூடி உடைகளை அணியும் படி கூறினார், 

 

அதுவே இப்போது, இந்தக்கோலத்தில் வந்து நிற்கிறது. :icon_mrgreen:

 

கிறிஸ்தவ மதத்திலும், இந்த உடலை மூடிய உடை அணியும் முறை இருந்தாலும்,(முகம் தவிர்த்து) அதை என் ஒருவரும் விமர்சிப்பதில்லை?

 

விளக்கத்திற்கு நன்றி சகோதரா, 
 
அது அந்தக்காலத்துக்கு அந்த சூழ்நிலைக்கு சரியானதாக அமைந்திருக்கலாம், இப்போது ஒருமனைவியை வைத்து குடும்பம் நடத்துவதற்கே அல்லாடுகிறான் மனிதன் அப்படி இருக்கையில் இந்தக்காலத்திற்கு இந்த முறை பொருந்துமா ?  :rolleyes:  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.