Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலச்சந்திரனை இராணுவம் கொலை செய்யவில்லை; விசாரணைக்கு முகம் கொடுக்க தயார்! - சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மன்னிக்க வேண்டும் நீங்கள் இருவரும் கதைப்பது எனக்கு விளங்கவில்லை :D
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் நீங்கள் இருவரும் கதைப்பது எனக்கு விளங்கவில்லை :D

 

"முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா" எனும் பழமொழி விளங்காவிட்டால் நாங்கள் கதைப்பது விளங்காது :icon_mrgreen:

  • தொடங்கியவர்

இந்தச் சொற்காட்டிற்குள் எனக்கு வழி தெரியவில்லை என்பது உண்மைதான் :)

 

மேலும் துரோகம் என்ற வார்த்தையை வெறும் உணர்ச்சிக்காகப் பயன்படுத்தும் உங்கள் வியாக்கியானத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். நான் ஒருபோதும் கூட்டமைப்பு துரோகம் செய்தது என்று சொல்லவும் இல்லை, சிந்திக்கவும் இல்லை.

 

பல்வேறு அரசியல் கட்டுரைகளைப் படித்துத்தான் ஒரு நிலைப்பாட்டுக்கு ஒருவர் வரமுடியும். அதனால் நீங்கள் ஒரு நிலைப்பாட்டிலும் நான் ஒரு நிலைப்பாட்டிலும் இருக்கின்றோம். எனவே எனக்குப் சரியாகத் தெரிவது உங்களுக்குப் பிழையாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை. அத்தோடு நீங்களோ நானோ விவாதத்தில் வெல்வது வெல்லுபவருக்கு சிறு இன்பத்தைத் தரலாம். ஆனால் தமிழ் மக்களின் அரசியலுக்கு ஐந்து சதத்திற்கும் பிரயோசனமற்றது! :icon_mrgreen:

சொல்வதற்கு, விவாதிப்பதற்கு ஏதாவது இருந்திருந்தால் இதை தவிர்ப்பது அழகாக இருந்திருக்கும். மற்றமுறை யாழ் கருத்துக்களம் என்ர நினைவுடன் கருத்துகள் வைத்தால், "நான் படித்தான் ஆகையால் நான் சொல்வதையெல்லாம் மறுபெழுதாமல் எற்றுக்கொள்ளுங்கள்" என்றுப்ரொள்ப்ட எழுத கைவராது. பல்வேறு கட்டுரைகளை படித்து முடிவொன்றுக்கு வந்த விததை வெளிக்காட்ட மற்றவர்கள் கருதுகளத்தில் மிண்டி போடவேண்டிய தேவைக்கு பொறுத்திருக்க வேண்டியத்தில்லை.  எழுதியவருக்கு விளங்குதோ இல்லையோ, ஒருவர் எழுதிய கருத்து ஏற்புடையதாக   இருக்காவிட்டால், மாற்றுக்கருத்துவைக்க பின் நிற்கவேண்டியத்தில்லை. பொதுவில் வாசிப்பவர்கள் விளங்க்கிக் கொள்வார்கள். 

 

மீண்டும் சொல்வது இதுதான்..

 

கூட்டமைப்ப்பு அமெரிக்க, இந்திய ஆலோசனையுடன் கடந்த சனாதிபதி தேர்தலில் மகிந்தவை எதிர்த்து பொன்சேகாவை ஆதரிக்குமாறு தமிழ் மக்களைக் கோரியது அவர்களுக்கு சுயமாக அரசியல் செய்ய இன்னமும் தெரியவில்லை என்பதைத்தான் காட்டுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு இதுவரை ஒரு திடமான கொள்கைகளையும் முன்வைக்காமல் குழப்பமான நிலையில் இருக்கும் கூட்டமைப்பு எடுப்பார் கைப்பிள்ளைதான்.

 

எனவே கூட்டமைப்பு மீது நம்பிக்கை வைப்பதற்கு அவர்கள் இன்னமும் கடினமாகவும் வினைத்திறனுடனும் மக்கள் நம்பிக்கை கொள்ளத்தக்க வகையிலும் செயற்படவேண்டும்.

 

நிறையப்படிப்பதால் சில குழப்பங்கள் வருகிறது போலிருக்கு. தேர்தல் நேரம் வெளிவந்த  செய்திகளின் படி இந்தியா காட்டிகொடுத்துதான் மகிந்தா பொன்சேக்காவை பதவி நீக்கினார் என்ற உண்மை. சில மாதங்களுக்கு முன்னர், முதலாவது பிரேரணை நிறை வேற்றபட்ட பின்னர், மகிந்தா கூறியிருந்த கதை "நான் எனது நண்பன் பொன்சேக்காவை சிலரின் பேச்சை கேட்டு பதவி நீக்கியது தவறு" என்பதாகும். அவர் குறிப்பிட்டது இந்தியாவை. எனவே நீங்கள் சொல்வதான "இந்திய ஆலோசனையுடன் கடந்த சனாதிபதி தேர்தலில் மகிந்தவை எதிர்த்து" என்பது நீங்கள் எங்குமே படித்திராதது. அது பொய்.

 

"அமெரிக்க ஆலோசனையுடன் கடந்த சனாதிபதி தேர்தலில் மகிந்தவை எதிர்த்து"  இதில் தவறு இல்லை என்பது மட்டுமல்ல மிக சரியான நடத்தையும்தான் என்பது உண்மை.

 

நீங்கள் கருத்து எழுதும் போது கூட்டமைப்பு மற்றவர்கள் கருத்தை கேட்டு நடக்கிறது என்று குறைப்படுகிறீர்கள். அதே நேரம் கூட்டமைப்புக்கு புத்தி சொல்ல முன் வந்து என்கருத்தை மட்டும் கேளுங்கள் எங்கிறீர்கள். 

கூட்டமைப்பு என்பது ஒரு பலவீனமான நிலையில் உள்ள கட்சி. அதற்கு உள்ளது எல்லாம் இரகசியமாக வாக்களிக்க கூடிய மக்கள் மட்டும்தான். அதை வைத்தே அந்த கட்சி இவ்வளவு காலமும் இருப்பதே வெற்றிதான்.

 

 

அதேவேளை புலம்பெயர் தமிழர்கள் எந்த கட்சிக்கு செய்யும் உதவிகள் ... கிட்டத்தட்ட பூச்சியம்.

கூட்டமைப்பு என்பது ஒரு பலவீனமான நிலையில் உள்ள கட்சி. அதற்கு உள்ளது எல்லாம் இரகசியமாக வாக்களிக்க கூடிய மக்கள் மட்டும்தான். அதை வைத்தே அந்த கட்சி இவ்வளவு காலமும் இருப்பதே வெற்றிதான்.

 

 

அதேவேளை புலம்பெயர் தமிழர்கள் எந்த கட்சிக்கு செய்யும் உதவிகள் ... கிட்டத்தட்ட பூச்சியம்.

 

இல்லை! அந்தக் கட்சிக்கு புலம் பெயர் தமிழர் சிலரின் கணிசமான உதவிகள் கிடைக்கின்றன.

கட்சியின் பெரிய பிரச்சினையே - இந்தியாவை பெரிதும் சார்ந்திருக்கும் பொறுப்பற்ற தலைமை.

 

நியானி: கடுமையான வார்த்தை திருத்தம் செய்யப்பட்டுள்ளது

Edited by நியானி

cartoon2(355).jpg

  • கருத்துக்கள உறவுகள்

சொல்வதற்கு, விவாதிப்பதற்கு ஏதாவது இருந்திருந்தால் இதை தவிர்ப்பது அழகாக இருந்திருக்கும். மற்றமுறை யாழ் கருத்துக்களம் என்ர நினைவுடன் கருத்துகள் வைத்தால், "நான் படித்தான் ஆகையால் நான் சொல்வதையெல்லாம் மறுபெழுதாமல் எற்றுக்கொள்ளுங்கள்" என்றுப்ரொள்ப்ட எழுத கைவராது.

 

நீங்கள் கருத்து எழுதும் போது கூட்டமைப்பு மற்றவர்கள் கருத்தை கேட்டு நடக்கிறது என்று குறைப்படுகிறீர்கள். அதே நேரம் கூட்டமைப்புக்கு புத்தி சொல்ல முன் வந்து என்கருத்தை மட்டும் கேளுங்கள் எங்கிறீர்கள். 

 

மேற்கோளில் உள்ள எதுவுமே எனது கருத்தல்ல. அதனை எனது கருத்தாகத் திரிக்கும் ஒருவருடன் கருத்தாடல் புரிவது நேர விரயம். எனவே எனது காலுறைகளை அணிந்து எனது சப்பாத்துக்குள் உங்கள் கால்களை நுழைப்பதைத் தவிர்க்குமாறு வேண்டுகின்றேன். <_<

 

திரும்பவும் சொல்லுவது இதுதான்..

 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்த மேற்குலகமும், இந்தியாவும் விரும்பியிருந்தது. மேற்கு நாடுகளும், இந்தியாவும் வேறு வேறான வகையில் செயற்பட முனைந்தது என்பதற்கு எதுவித ஆதாரமுமில்லை. ஏனெனில் இரண்டுக்குமே மகிந்தவில் ஆட்சி தொடர்வது சீனாவின் கால் இலங்கையில் வலுவாக ஊன்ற வழி சமைக்கும் என்று தெரிந்திருந்தது (அது இப்போது உண்மையாக உள்ளது).

 

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி மேற்குலகின் சொல்லைக் கேட்டு நடக்கக்கூடிய பொன்சேகாவை ஜனாதிபதியாக்க எல்லா எதிர்க்கட்சிகளினதும், உதிரிக் கட்சிகளினதும் ஆதரவு தேவையென்பதால் எல்லாருடைய ஆதரவும் கோரப்பட்டிருந்தது. தமிழ் மக்களின் வாக்கைப் பிரிக்காமல் பொன்சேகாவிற்கு வாக்களிக்க கூட்டமைப்பிற்கு ஆலோசனை/அழுத்தம் எல்லாம் வழங்கப்பட்டிருந்தது. அதனால்தான் சுயேட்சையாக போட்டியிட்டிருந்த சிவாஜிலிங்கம் தேர்தல் சமயத்தில் இந்தியா சென்றிருந்தபோது திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.

 

இந்த சம்பவங்களின் கோர்வை காரண காரியங்களை அறியப் போதுமானது. அதை விடுத்து கூட்டமைப்பு சுயமாகச் சிந்தித்து ஆட்சி மாற்றத்திற்காகச் செயற்பட்டது என்பதெல்லாம் நகைச்சுவைக்காக மட்டுமே சொல்லலாம்.

 

மகிந்தவிற்குப் பதிலாக பொன்சேகா ஜனாதிபதியாக வந்திருந்தாலும் அவர் தனது சிங்கள மேலாதிக்க அடிப்படைக்க் குணத்தை மாற்றியிருக்கமாட்டார் என்பதுதான் இப்போது பாலச்சந்திரனின் படுகொலை சம்பந்தமாக அவர் கூறுவதிலிருந்து விளங்கிக்கொள்வது.

  • தொடங்கியவர்

மேற்கோளில் உள்ள எதுவுமே எனது கருத்தல்ல. அதனை எனது கருத்தாகத் திரிக்கும் ஒருவருடன் கருத்தாடல் புரிவது நேர விரயம். எனவே எனது காலுறைகளை அணிந்து எனது சப்பாத்துக்குள் உங்கள் கால்களை நுழைப்பதைத் தவிர்க்குமாறு வேண்டுகின்றேன். <_<

உங்களிடம் கருத்து எதுவுமே இல்லை என்று சொன்னாலும் அதுவும் ஏற்கப்படக்கூடியது. கருத்துகளத்தில் எழுதவந்தவர் ஒருவர் தான் என்ன சொல்கிறார் என்பதை வெளிப்படையாக சொல்தல் நல்லது. நான் அதை சொல்லவில்லை, இதை சொல்லவில்லை என்று தனது சப்பாத்துக்காலுறைகளுக்குள்தான் ஒழித்து விளையாட வேண்டியத்தில்லை. (தமிழில் எழுத வரும் போது தமிழில் எடுபடத்தக்கதாக பழமொழிகளை பாவித்தால் நல்லது. அப்படி செய்தால் பின்னர் "நான் அதை சொல்லவில்லை "சொல்லவேண்டிய கஸ்டம் வராது என்பது எனது சிந்தனை.

 

கூட்டமைப்புக்கு புத்திமதி சொல்ல வெளிக்கிடுபவர் ஒருவர் கூட்டமைப்பு வெளியார் புத்திமதிகளை கேட்கிறது என்பது முன்னுக்குபின் முரனான கருத்து. கூட்டமைப்பு மகிந்தாவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்த்தது என்று சொல்லிவிட்டு அதை சடைய உயிரைகொடுத்து கூட்டமைப்பு வேறுயாரோ கதைகளை கேட்கிறது என்று மாற்றி, பின்னர் இந்தியாவுக்கு இ்ங்கையில், சீனா நிற்பத்தால் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது என்று மாற்றி, இப்படியெல்லாம் இல்லாதவற்றை நியாப்படுத்த ஒரு அவசியமும் இல்லை. இந்தியா பலமுறை சொல்லிவிட்டது இலங்கையில் சீனா இருப்பது பற்றி தங்களுக்கு கவலை இல்லை என்று. அதை ஏன் மூடி மறைப்பான். இந்தியாவின் இன்றை வரைக் கொள்கை சீனா இலங்கைக்கு செய்யும் உதவிகளுக்கு நிகரான அல்லது  அதை விட கூடிய உதவிகளை செய்து இலங்கையுடன் சிநேகிதத்தை வைத்துக்கொள்வதென்பதே. மேற்குலம் மட்டும்தான் இலங்கை அரசுக்கு எதிராக செயல் பட்டு சீனாவை வெளியே விடுவிக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது. இந்தியா பொன்சேக்காவை ஆதாரிக்கும்படி கேட்டதாக இந்தியா யாரின்  காதுக்குள் மட்டும் இரகசியமாக சொன்னதா எனக்குத் தெரியாது. ஆனால் இது வரையில் அப்படி ஒரு செய்தி வெளிவரவில்லை. இந்தியா பொன்சேக்காவுடன் பகமை பாராட்டுவதாகத்தான் பல செய்திகள் வெளிவந்தது. இதை மூடிமறைத்து எழுதுவது கூட்டமைப்பை எதிர்பதற்காக எதிர்க்க மட்டுமென்பதுதான் உண்மையாக இருக்க முடியும்.

 

 

திரும்பவும் சொல்லுவது இதுதான்..

கீழே உள்ளது திரும்ப சொல்வது அல்ல. கூட்டமைப்பு மகிந்தாவை எதிர்ப்பதற்காக மட்டும் எதிர்த்து என்பது கருத்துக்களத்தில் நின்றுபிடிக்க முடியாத கருத்து என்பதை கணடபின் போடப்படும் சறுக்கலின் புதுக் கதை.

 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்த மேற்குலகமும், இந்தியாவும் விரும்பியிருந்தது. மேற்கு நாடுகளும், இந்தியாவும் வேறு வேறான வகையில் செயற்பட முனைந்தது என்பதற்கு எதுவித ஆதாரமுமில்லை. ஏனெனில் இரண்டுக்குமே மகிந்தவில் ஆட்சி தொடர்வது சீனாவின் கால் இலங்கையில் வலுவாக ஊன்ற வழி சமைக்கும் என்று தெரிந்திருந்தது (அது இப்போது உண்மையாக உள்ளது).

இந்த நூற்றாண்டின் நகைசுவயான வாதம். தான் நினத்துகொள்வதுதான் சரி என்று மூடனும் முதலையும் போல நடந்துகொள்ள வேண்டும் எங்கிறார் கிருபன். எல்லோருக்கும் தெரிந்த செய்தியான "பொன்சேகாவுடன் இந்தியா ஒத்துப்போகவில்லை" என்ற செய்தியை அறிந்திருக்காத கிருபன் வலிந்து வலிந்து கூட்டமைப்புக்கு புத்தி சொல்ல வருகிறார். அப்போது அது தன் சொல்லைக்கேளாமல் மற்றவர்களின் சொல்லைமட்டும் கேட்கிறது என்றும் கவலைப்படுகிறார், இந்தியா இலங்கையுடன் சிநேகித்தை மட்டும் தான் தேடியது. இலனகை அரசை எதிர்து ஆட்சிமாறத்தை கொண்டுவரவில்லை. இவ்வளவு காலமும் பலர் இந்தியாவின் புவிசார் கொள்கைகளை பற்றி பீத்தினார்கள்.(இப்போது அப்படி ஒன்று இருப்பதாக சொல்ல யாருக்கும் துணிச்சல் இல்லை). இலங்கை ஒன்றாக இருப்பது இந்தியாவுக்கு நல்லது எனபது அவர்களின் விளக்கம்.இதனால்த்தான் இ்ங்கையை ஒன்றாக வைத்துகொள்ளத்தக்க மகிந்தாவுடன் இந்தியா சிநேகிதம் காட்டுகிறது என்பது அவர்களின் வாதம். இந்த கருத்துக்கள் யாழில் வந்த போது நான் எதிர்த்தேன். இதை கிருபன் ஒருதடவையும் எதிர்த்து இல்லை. இன்று கிருபன் இப்படியான ஒரு கருத்தை வைக்கிறார்.

 

இது முளந்தாளுக்கும் மொட்டந்தலைக்கும் போட்ட முடிச்சு. இரண்டு நாடுகள் இலங்கையில் சீன்ன காலுண்றுகிறது என்று கண்டதால் இரண்டும் ஒன்றாகவே சிந்தித்து ஒன்றாக செயலபட்டது என்பது மட்டும்தான் உண்மை என்கிறார். நடந்த உண்மை எல்லோரும் கண்டது. 2009 பிறகு மேற்குநாடுகளின் "இலங்கையில் சீனா" கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. சீனாவுக்கு பயப்படாத மேற்குநாடுகள் வெளிப்படையாக இலங்கயில் இருந்து சீனாவை அகற்ற வியூகம் போட்டன.  மகிந்தாவை தோற்கடிக்க பொன்சேக்காவை நிறுத்தின. சீனாவை நேராக சந்திக்க தயாரில்லதா இந்தியா மகிந்தாவிற்கு சீனாமதிரியே உதவிகள் அளித்து சீனாவுக்கு சரியான அன்பொன்றை மகிந்தாவிடம் பெற முயன்றது. இந்த முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் ஒழிப்பது கூட்டமைப்பை எதிர்க்க வேண்டும் என்பதற்கு எதிர்ப்பதற்க்கமட்டுமாகத்தான் இருக்கமுடியும்.

 

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி மேற்குலகின் சொல்லைக் கேட்டு நடக்கக்கூடிய பொன்சேகாவை ஜனாதிபதியாக்க எல்லா எதிர்க்கட்சிகளினதும், உதிரிக் கட்சிகளினதும் ஆதரவு தேவையென்பதால் எல்லாருடைய ஆதரவும் கோரப்பட்டிருந்தது. தமிழ் மக்களின் வாக்கைப் பிரிக்காமல் பொன்சேகாவிற்கு வாக்களிக்க கூட்டமைப்பிற்கு ஆலோசனை/அழுத்தம் எல்லாம் வழங்கப்பட்டிருந்தது.

மேலே போவது உபயோகம் இல்லலாத சக்கை பொசேக்கா யார் சொல்லையும் கேட்டு நடக்கும் ஆள் இல்லை. அது மேற்குநாடுகளுக்கு தெரியாத  புதிர் அல்ல. அமெரிக்காவில் பொன்சேக்கா எந்த உடன்படிக்கைக்காவது வந்தார் என்று எப்போதும் எந்த செய்தியும் வெளிவந்து இல்லை. அவர்கள் பொன்சேகா வென்றிருந்தால் அவர் மீது தமது பலத்தை வேறு விதமாகவும் போட்டிருப்பர்கள். ஆனால் இன்று மகிந்தா வென்றாதால் ஐ.நா மூலம் போடுகிறார்கள். பொன்சேக்கவை கட்டுப்படுத்த அவர்கள் பொன்சேக்கா மீது போர்க்குறத்தை காட்டி மிரட்டியிருக்க மாட்டார்கள் என்று எவரும் வாதாட தேவை இல்லை.  அவர் மகிந்தாவையும் கேட்டு நடக்வில்லை. அவர் தனது தனிப்பட்ட கோபத்தை தமிழ் மக்கள் மீது காட்ட எப்போதும் சந்தர்பங்கள் தேடித்திருந்த ஆள். அவர் மகிந்தாவுடன் இணைந்த்தௌ தமிழரை பழிவாங்க மட்டுமே. கோத்தா தேவைகேற்ற தளபதியை தெரிந்திருந்தார் எபது யாருக்கும்புதியதல்ல.

 

அதனால்தான் சுயேட்சையாக போட்டியிட்டிருந்த சிவாஜிலிங்கம் தேர்தல் சமயத்தில் இந்தியா சென்றிருந்தபோது திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.

இதை இந்தியா யாரின் காதுக்குள்ளும் மட்டும் சொல்லிவிடுகிறதா தெரியாது. சிவஜிலிங்கம் தன்னை இத்தியா திருப்பி அனுப்பியதற்கான காரணம் இதுவென்று சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லை. இது இன்னொரு திரிப்பு போலத்தான் படுகிறது. யாராவது "சிவாஜிலிங்கத்தை இந்தியா புலியாக மட்டும்தான் பார்த்தது" என்று சொன்னல் அதில் ஒரு பொருள் உண்டு. மகிந்தாவை வெளிபடையாக எதிர்த்தவர்களை இந்தியா ஆதரிக்கவில்லை.

 

இந்த சம்பவங்களின் கோர்வை காரண காரியங்களை அறியப் போதுமானது. அதை விடுத்து கூட்டமைப்பு சுயமாகச் சிந்தித்து ஆட்சி மாற்றத்திற்காகச் செயற்பட்டது என்பதெல்லாம் நகைச்சுவைக்காக மட்டுமே சொல்லலாம்.

இந்த முழந்தாளுக்கும் மொட்டந்தலைக்கும் போடும் முடிச்சை விட நகைச்சுவையாக வேறு ஒன்றும் இருக்க முடியாது.  மேலே ஒரு சம்பவங்களும் கோர்த்துக்ககாட்டப்படவில்லை அப்படி சம்பவங்களை தொகுத்துகாட்டியாத சொல்வது வெறும் கனவு. சொல்லபட்டிருப்பது எல்லாம் கூட்டமைப்பை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கும் தனது சொந்த அனுமாங்களே. எதிலும் உண்மை இல்லை.

 

மகிந்தவிற்குப் பதிலாக பொன்சேகா ஜனாதிபதியாக வந்திருந்தாலும் அவர் தனது சிங்கள மேலாதிக்க அடிப்படைக்க் குணத்தை மாற்றியிருக்கமாட்டார் என்பதுதான் இப்போது பாலச்சந்திரனின் படுகொலை சம்பந்தமாக அவர் கூறுவதிலிருந்து விளங்கிக்கொள்வது.

இது ஒரு பேபிக்கதை. பொன்சேக்கவை சிறையிலிருந்து வெளிவிடும்போதே அவர் ஆபத்தாவர் என்று எதிர்த்தவர்கள் நாம். பலதடவைகள் இவர் யாழ்ப்பணத்தில் சாதாரண பொறுப்பதிகாரியாக இருந்த காலம் தொடக்கம் தமிழரை அழிக்க சந்தர்ப்பம் தேடுபவர் என்பதை தொடர்ந்து சொல்பவர்கள் நாம். எமது இது பற்றிய கருத்து யாழில் பல திரிகளில் பதியப்பட்டிருக்கிறது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் கருத்து எதுவுமே இல்லை என்று சொன்னாலும் அதுவும் ஏற்கப்படக்கூடியது. கருத்துகளத்தில் எழுதவந்தவர் ஒருவர் தான் என்ன சொல்கிறார் என்பதை வெளிப்படையாக சொல்தல் நல்லது. நான் அதை சொல்லவில்லை, இதை சொல்லவில்லை என்று தனது சப்பாத்துக்காலுறைகளுக்குள்தான் ஒழித்து விளையாட வேண்டியத்தில்லை..

 

அதிகம் மினக்கெட்டு எழுதியிருக்கும் மல்லையூரானின் சொற்களுக்குள் உள்ள செய்தியை அறிந்துகொள்ளுமளவிற்கு எனக்கு கிரகிக்கும் ஆற்றல் இல்லை. ^_^  அத்தோடு விதண்டாவாதங்களில் பங்குகொண்டு எனது நேரத்தை வீணடிக்கவும் விரும்பவில்லை.

 

கூட்டமைப்பு பற்றிய எனது நிலைப்பாட்டை மாற்றக்கூடிய எந்தவிதமான ஆரோக்கியமான கருத்தையும் இந்தத் திரியில் காணவில்லை என்று சொல்லி விடைபெறுகின்றேன் :wub:

  • தொடங்கியவர்

அதிகம் மினக்கெட்டு எழுதியிருக்கும் மல்லையூரானின் சொற்களுக்குள் உள்ள செய்தியை அறிந்துகொள்ளுமளவிற்கு எனக்கு கிரகிக்கும் ஆற்றல் இல்லை. ^_^  அத்தோடு விதண்டாவாதங்களில் பங்குகொண்டு எனது நேரத்தை வீணடிக்கவும் விரும்பவில்லை.

 

கூட்டமைப்பு பற்றிய எனது நிலைப்பாட்டை மாற்றக்கூடிய எந்தவிதமான ஆரோக்கியமான கருத்தையும் இந்தத் திரியில் காணவில்லை என்று சொல்லி விடைபெறுகின்றேன் :wub:

 

ஆரோக்கியமில்லாமல், கூட்டமைப்பை எதிர்க்கவென்று மட்டும் என்று ஒருவிவாதத்தை  ஆரம்பித்துவைப்பது நல்லது அல்ல. அது ஆரோக்கியமாக முடியாது. எப்படி தன் நேரத்தை வீணடிக்க கூடாது என்று நினைக்கிறார்களோ அதே மனச்சுத்தியுடன் யாழ் கருத்தாளர்கள், கூட்டமைப்பு, ........ வேறு யாரின் நேரத்தையும் வீணடிக்க என்று வீம்புக்காக கருத்துக்கள் வைக்க கூடாது. கருத்துக்களம் தானே என்றாலும் அது செய்யதக்க நல்ல செயல் அல்ல.

 

எல்லோருடைய அபிமானத்தையும் பெற்ற SJV கூட இலங்கை அரசுகளுடன் பேசி எதையும் முடித்துவைக்கவில்லை. கூட்டமைப்பு இழைக்கயிற்றில் நடந்து போகிறது.  அங்கே சாதிக்க பிரமாதமாக ஒன்றும் இல்லை. எல்லோரின் எதிர்பார்ப்பும் ஒன்றே ஒன்றுதான்:   தங்களுக்கு சுதந்திரம் வர இருந்த நேரம் அதை குழப்பிய சர்வதேசம் அதே கையால் திருத்த வேண்டும் என்பதே. தமிழர்களின் தீர்வின் பொறுப்பு அவர்களுடையதாக( சர்வதேசத்தினுடையதாக) இருக்க வேண்டும். புலத்திலும் தாயகத்திலும் இருக்கும் தமிழர்களிடம் இருந்து போகும் இந்த கோரிக்கைக்கு கூட்டமைப்பும், புலம் பெயர் அமைப்புக்களும் காதுகொடுக்க வேண்டும்.

 

தங்கள் ராஜதந்திர நடத்தைகளில் இந்த இரண்டு பக்கமும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் இந்தியாவின் சொல்லை கேட்கிறார்களா அல்லது சீனாவின் சொல்லை கேட்கிறார்கள் என்பதல்ல விவாதம். அவர்கள் SJV முயன்றது போல நாட்டுக்குள் சிங்கள அரசுடன் ஒப்பந்தம் எழுத முயலக்கூடாது. ஒழிவு மறைவில்லாத நேர்மையாமன அரசியல்வாதியான அவர் அதில் இனி பலன் இல்லை என்று தானே சொல்லிவிட்டுவிட்டுத்தான் போனார். கூட்டமைப்பு, சர்வதேசம் சொல்வதை கேட்டு அதன் படி நடந்து அவர்களை முன்னால் தள்ளி ஒரு தீர்வை கொண்டுவர முயல வேண்டும்.

 

மற்றைய தமிழர், பேருக்கு ஆசைப்பட்டு கூட்டமைப்பை மத்தளம் போல இரு கரைக்கும் அடிக்கும் செயல்ப்பாடுகளில் இறங்கக் கூடாது இது வரையும் புலிகள் சர்வதேசத்தை கேட்கவில்லை என்றவர்கள் இப்போ கூட்டமைப்பு சர்வதேசத்தை கேட்கிறது என்று சொல்லக் கூடாது. ஆற அமர யோசித்து தமிழருக்கு நன்மையான கருத்துக்களை எழுத வேண்டும். இந்த நேரம் பொது தத்துவங்களை பேசாமல் எதை செய்தால் என்ன விளைவு என்பதை தெளிவாக சுட்டிக்காட்டி கருத்து எழுத வேண்டும். அது கூட்டமைப்புக்கு வழிகாட்டத்தக்க கருத்தாக இருக்க வேண்டும். கூட்டமைப்பை திருத்தக்கதாக இருக்க வேண்டும். பழம் கதைகளில் பிழை பிடிக்கக் கூடாது.

 

நடப்பதெல்லாம் நன்மைக்கே.  நடக்க இருக்கிறதும் நல்லதுதான். :)

 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.