Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலச்சந்திரன் உயிருடன்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டமை - ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம் என்கின்றது அமெரிக்கா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
VictoriaNuland_USA_150.jpg

தேசியத் தலைவர் பிரபாகரனின் 12வயது மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா இராணுவத்தினரால் உயிருடன்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா, சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, ஆழ்ந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளது.. வொசிங்டனில் நேற்று இடம்பெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், பாலச்சந்திரன் தடுத்து வைக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ள ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளது குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

  

அதற்குப் பதிலளித்த அவர், சிறிலங்காவில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் மீறல்கள் குறித்து, தொடர்ந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம். ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாகவும் தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

 

சிறிலங்காவில் போரின் முடிவில், அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதமாபிமான சட்ட மீறல்களின் ஈடுபட்ட எல்லாத் தரப்பினரையும் முழுமையாக பொறுப்புக்கூறுவதற்கு ஆதரவளித்தோம். நீண்டகாலப் பிரச்சினையாக உள்ள நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்களுக்குத் தீர்வுகாண சிறிலங்கா அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடுமையான கவலை தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையையும் அமெரிக்கா வரவேற்கிறது.

 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நாம் இது தொடர்பாக, சொந்தமாக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அமெரிக்கா கடந்த நான்குவருடங்களாக கவலையும், கண்டனமுமாக காலத்தை கழிக்கின்றார்கள். இந்த முறையாவது உருப்படியான தீர்மானத்தினைக் கொண்டுவருவார்களா என்ன ? பார்க்கலாம்....!

 

http://www.seithy.com/breifNews.php?newsID=76449&category=TamilNews&language=tamil

அமெரிக்கா இலங்கை விடயத்தில் "U" turn எடுத்திருக்கும் நாடு என்பதை கவனிக்க வேண்டும். இந்தியா மாதிரி இரசாயனக்குண்டு கொடுக்கப் போகாவிட்டாலும் இலங்கைக்கு வெற்றி கிடைக்க காரணமாக இருந்த நாடு. இன்று இலங்கையை பதில் சொல்ல கேட்கும் அளவுக்கு 4 வருடங்களில் அதன் பாரிய அரசியல் இயந்திரம் திருப்பப்பட்டிருப்பது பெரிய சாதனை.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா இலங்கை விடயத்தில் "U" turn எடுத்திருக்கும் நாடு என்பதை கவனிக்க வேண்டும். இந்தியா மாதிரி இரசாயனக்குண்டு கொடுக்கப் போகாவிட்டாலும் இலங்கைக்கு வெற்றி கிடைக்க காரணமாக இருந்த நாடு. இன்று இலங்கையை பதில் சொல்ல கேட்கும் அளவுக்கு 4 வருடங்களில் அதன் பாரிய அரசியல் இயந்திரம் திருப்பப்பட்டிருப்பது பெரிய சாதனை.

 

அமெரிக்காவின் வியட்நாம் அட்டூழியங்கள் அடங்கிய காட்சிகளே அதனை அங்கு தோல்விக்கு வித்திட்டது. இன்று சிறீலங்கா விடயத்தில் கண்மூடித்தனமாக தனது பூகோள நலன் சார்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற வாசகத்துடன் ஒரு கொடிய இனப்படுகொலை அரசிற்கு முண்டு கொடுத்து நின்றமை காட்சிகளாக வரும் தருணத்தில் அமெரிக்கா மனித உரிமை குறித்துப் பேச நிற்பந்திக்கப்பட்டுள்ளது.

 

இதில்.. பாதிக்கப்பட்ட தமிழர்களைக் காட்டிலும் சனல் 4 மற்றும் சுயாதீன மனித உரிமை அமைப்புக்களும் ஆர்வலர்களும் செய்வதே அதிகம்..! அவர்களுக்கே அந்த மாண்ட மக்களின் ஆத்மா நன்றி சொல்லும்..!

  • கருத்துக்கள உறவுகள்
பாலச்சந்திரன் புகைப்படம் வெளியீட்டின் பின்னணியில் புலி ஆதரவு சக்திகள் : பி.காரியவசம்

 

kariyavasam.jpgபாலச்சந்திரன் கொலை புகைப்பட வெளியீட்டின் பின்னணியில் புலிகள் இயக்கத்தின் ஆதரவு சக்திகள் இருப்பதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,உள்நோக்கத்துடன் லண்டனில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு பின்னால் புலிகள் ஆதரவு சக்திகள் இருக்கின்றன. மேலும் இந்த குற்றச்சாட்டில் புதிதாக எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் மனித உரிமை மீறல் ஏதுமில்லை. இலங்கை அரசு மீது இதுபோன்ற ஆதாரமற்ற குற்றங்கள் கூறுவது வாடிக்கையாகிவிட்டது. என்று அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

இதில்.. பாதிக்கப்பட்ட தமிழர்களைக் காட்டிலும் சனல் 4 மற்றும் சுயாதீன மனித உரிமை அமைப்புக்களும் ஆர்வலர்களும் செய்வதே அதிகம்..!

 

புலத்தில் வாழும் பாதிக்கப்பட்டவர்கள் மறைமுகமாகவே சிலவற்றை செய்யும் சூழல் நிலவுகிறது. "அவர்கள் அதிகம் செய்யவில்லை" என்பது  உண்மை எனினும், அவர்களை குறைசொல்லும் சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லை.

இன்னும் சிலகாலமாவது புலத்தில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களை இன்னும் சிறப்பாக வழிநடத்த வேண்டிய கூட்டமைப்பும் பொருத்தமற்ற தலைமையினால் காலத்தைக் கடத்தியபடி உள்ளது.

ஆனால் புலம் பெயர்ந்து வாழும் தமிழர் தாம் செய்யக் கூடிய விடயங்களை சரியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில் இருந்து தப்ப முடியாது. இப்போதாவது விழித்து எழட்டும் புலம்பெயர் தமிழர்.

VictoriaNuland_USA_150.jpg

 

 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நாம் இது தொடர்பாக, சொந்தமாக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அமெரிக்கா கடந்த நான்குவருடங்களாக கவலையும், கண்டனமுமாக காலத்தை கழிக்கின்றார்கள். இந்த முறையாவது உருப்படியான தீர்மானத்தினைக் கொண்டுவருவார்களா என்ன ? பார்க்கலாம்....!

 

http://www.seithy.com/breifNews.php?newsID=76449&category=TamilNews&language=tamil

நான் நினைச்சன் இதையும் அவரே சொன்னாராக்குமேண்டு...  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Victoria_Nuland-200213-seithy-150.jpg

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவருவது உறுதியாகிவிட்டது என்று இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் தெரிவித்துள்ளார். சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் இலங்கையில் மீறப்பட்டமை குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். போரின் முடிவில், அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதமாபிமான சட்ட மீறல்களின் ஈடுபட்ட எல்லாத் தரப்பினரையும் முழுமையாக பொறுப்புக்கூறுவதற்கு ஆதரவளித்தோம என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

  

நீண்டகாலப் பிரச்சினையாக இருக்கின்ற நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்களுக்கு இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடுமையான கவலை தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=76489&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.