Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணத்திலும் மனைவியை பிரியாத கணவர்: நினைவு நிகழ்வில் உயிர்விட்ட சோகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்திலும் மனைவியை பிரியாத கணவர்: நினைவு நிகழ்வில் உயிர்விட்ட சோகம்!

மனைவியின் மறைவை தாங்க முடியாத கணவரொருவர் அவரது நினைவு நிகழ்வில் கலந்துகொள்ள செல்லும் வழியில் உயிரிழந்த சோகமான சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவது,

அமெரிக்காவின் நிவ்யோர்க்கைச் சேர்ந்தவர் நோர்மன் ஹெண்ட்ரிக்ஷன் (94), இவரது மனைவி குவண்டோலின் (89).

இவர்  இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க இராணுவத்தில் கடமையாற்றியுள்ளார்.

Husband_dies_as_he_arrives_at_late_wife3

இவரது மனைவி பிரித்தானிய ரோயல் வான்படையில் பணிபுரிந்துள்ளார்.

ர். இதன்பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத்தொடங்கியுள்ளனர்.

இதன்போதே இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளன

 

பின்னர் குவண்டோலின் பிரித்தானியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் 1947 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இருவரும் 66 வருட காலமாக இணைபிரியாத ஜோடிகளாக இருந்துள்ளனர்.

 

இந்நிலையில் கடந்த 8 ஆம் திகதி குவண்டோலின் உயிரிழந்துள்ளார்.அவரின் மறைவை நோர்மனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

 

மேலும் தான் விரைவில் வந்து சேர்வேன் என அவரது மனைவியின் பூதவுடலைப் பார்த்துக் கூறியுள்ளார். 

இந்நிலையில் குவண்டோலினின் இறுதி நிகழ்வும் கடந்த 16 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

 

couplesadaw.jpg

இதில் பங்கேற்கும் பொருட்டு புறப்பட்டுச் சென்ற நோர்மன் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

அவர் தனது மனைவிக்கு கொடுத்த வார்த்தையை காப்பாற்றியுள்ளதாக அவரது பிள்ளைகளை தெரிவித்துள்ளனர்.

 

இச்சம்பவம் அப்பகுதிவாசிகள் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

http://www.virakesari.lk/article/world.php?vid=520

இந்த வயதில செத்தத இப்படி சொல்லுறியளே   

இப்படி ஒரு அன்பும் காதலும் லட்சத்தில் ஒரு தம்பதியிடம் தான் காணலாம். அவர்கள் இன்னும் ஒரு நாள் கூட வாழ்ந்தாலும் அது காவியமே.

சுதந்திரம் கிடைத்த சந்தோசத்தை தாங்கமுடியாமல் செத்து போயிருப்பார்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்ணின் இழப்பு என்பது ஆணுக்கு வரும் ஒரு பெரிய அதிர்ச்சி-மாறியும் தான்.அதைத்தொடர்ந்து வருகிற இழப்புக்கள் பொதுவானவை. நான் ஒரு திவச வீட்டிக்கு போயிருந்தேன், கணவர் துக்கத்தோடு இருக்க, .பெரிய பெரிய சடங்குகள் எல்லாம், அவருடைய மகனுக்கே/மகன்களுக்கே செய்தார்கள்..ஏன்  என்று விளங்கல்விலை..நிகழ்வு முடிய விட்டு ஐயரிடம் கேட்டபோது, தாயின் இழப்பு, மனைவின் இழப்பை விட பாதிப்பு கூடியது என்றார் ...நான் எனது ஆதாரங்களை சொன்னேன்..பெரிதாக ஏற்றுக்கொள்ளவில்லை..


 

நான் நினைக்கிறன், மற்றைய சமயங்கள் என்ன மாதிரியோ தெரியாது, எங்களது சமயம் நீண்ட நாள் வரும்படி சார்ந்தது என்று நினைக்கிறன்...மனைவிக்கு கணவன் திதி கொடுக்க வெளிகிட்டால் 4 - 5 வருடத்தில் அவரும் கைலாயம் போய்விடுவார், மகன், என்றால் இன்னும் 40- 50 வருடம் நிலைத்திருப்பார் என்கிற எண்ணமோ என தெரியவில்லை :)

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரம் கிடைத்த சந்தோசத்தை தாங்கமுடியாமல் செத்து போயிருப்பார்....

 

எல்லா மனைவிமாரும் சுதந்திரத்தைப் பறிக்கிறவை என்றில்லைத் தானே..! ஆண் - பெண் உறவில் எல்லை கடந்த அன்பால் பிணைக்கப்பட்ட சம்பந்திகளும் உள்ளனர் தானே..! அப்படி அமைவது மிகக் கடினம் என்றால் அதை ஏற்றுக் கொள்ளலாம்.

 

எங்கள் உறவினர் ஒருவரும்.. மனைவி இறந்ததை கேள்வியுற்றதுமே மாரடைப்பு வந்து இறந்து விட்டார்..!

 

இதில் கவனிக்கத்தக்க விடயம் என்ன என்றால்.. இரண்டிலும் மனைவி முன்னர் இறக்க கணவர் பின்னர் இறந்தது தான். ஆனால்.. கணவனை இழந்த சோகத்தில் ஏக்கத்தில்.. பெண்கள் இப்படி உயிர் விடுவது குறைவு..!

 

காதலிக்காக தாஜ்மகாலை கட்டினதும் ஆண் தான்.

 

ஆண்கள் பெண்கள் மீது செலுத்தும் அன்புக்கு அடிமையாவது அதிகம் என்று நினைக்கிறேன். ஆனால் பல பெண்களுக்கு அந்த அன்பின் பெறுமதி புரிவதில்லை..! அதிலும் சந்தேகம்..???!  :lol:

 

அவன் போனாப் போறான்.. தொல்லை நீங்கிச்சு.. நான் நிம்மதியா கொஞ்ச கொஞ்ச நாளைக்கு வாழுவம் என்று தான் நினைக்கிறவை போல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.