Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனோ தெரியவில்லை. நான் அழுகிறேன்.
விழிகளால் வழிகிற கண்ணீரால் நான் அசிங்கமாய் தெரிகிறேன்.ஏக்க விழிகளால் என்னைப்பார்த்த என் தேசத்தின் மகனால் நான் அம்மணமாக நிற்கிறேன்.குமுதினி படகில் பிள்ளையின் இதயத்தில் கத்தியை பாச்சிய கோரத்தினால் வீட்டை விட்டு வெளியேறினேன்.
கனவுகளில் நான் சுதந்திர மனிதனானேன்.தவறு என்னது இல்லாமல் திசைமாரிப்போனேன்.இன்று கனவினை புதைத்த தேசத்திலிருந்து கண்ணீர் வடிக்கிறேன்.
குமுதினியால் விட்டை விட்டு வெளியேறிய நான் முள்ளி வாய்க்காலால் எங்கிருந்து வெளியேற.சுயனலமறியாதவீரனின் மகனே உன் அப்பன் எது வந்த போதும் அங்கேயே இருந்தான்.நான் எதுவும் வராமலே ஓடிவந்தேன்.
நான் என்ன செய்ய அழுவதைத்தவிர.எழு'நில்  நட என உன் அப்பன் சொன்னான்.அதே போல மிகப்பெரிய ஆலமரமாய் நின்றான்.விழுதுகளே அந்த மரத்தை வீழ்தியதாம்.யாருக்குத்தெரியும்.ஓடிவந்த எனக்கு பேசும் தகுதி கிடையாது.ஆனாலும் உன் கடைசி நேரப்பார்வையின் ஏளனம் உலகத்தின் முன் எனை அம்மணமாகியதடா.
தீ எரித்த தேசத்தில் எரிந்த மனிதர்களுடன் நானும் எரிந்திருக்க வேண்டும்.என்னை மன்னித்து விடு பாலா நான் விழலுக்கு இறைத்த நீராகிப்போனேன்.

உண்மையில் அருமை தோழரே . எவனுக்கும் அஞ்சாத எங்கள் தேசத்தலைவனின் புதல்வன் எங்கள் பாலச்சந்திரன்

என்ன செய்ய, மொத்த உலகமே வேடிக்கை பார்க்க நடத்த இரத்த வேட்டை

 

காலம் பதில் சொல்லியே ஆக வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலம் பதில் சொல்லாது வந்தியத்தேவன் நாங்கள் தான் பதில் சொல்லவேண்டும்.புலம் பெயர் தமிழ் சமுகம் யானையின் பலம் மிக்கது. ஆனால் பலமறியாது உள்ளது நான் உட்பட. பணம் பாதாளம் வரை பாயும்.நாங்கள் நிர்ணயம் செய்ய வேண்டும்.எங்கள் எதிரியின் தலைக்கான விலையை.யார் கொய்து வந்தாலென்ன.கொண்டுவா நாங்கள் தருவோம் விலையென.கோடிகள் தாண்டினாலும் கொடுக்கும் ஆற்றல் எம்மிடமில்லையா?



துன்னையூரன் அந்த மனிதன் இல்லை என்ற பேச்சு வந்த பின்னர் புழுக்கூட எம்மிடம் வம்புக்கு வருகிறது.எம் ஆற்றாமையின் வெளிப்பாடே கண்ணீர்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதங்கள் எங்கள் எல்லோருக்குமுண்டு.

 

ஆனால் நாம் ஒன்றை உள்வாங்கவேண்டும்

முக்கிய  காலகட்டம் ஒன்றில் நாம் நிற்கின்றோம்.  பிரபாகரனது வீச்சு என்பது ஓரளவாவது எம்முள் இறங்கியுள்ளதா என்று நிரூபிக்கவேண்டுமல்லவா?

அதைவிடுத்து

அவருக்கே  உடன்பாடில்லாத விடயங்களைப்பேசி அழுது என்ன பயன்?

தலைவர் எப்பொழுதும் இலக்கு பற்றி  சிந்திப்பவர் நடைமுறைப்படுத்துபவர்.

அதை நோக்கி  நாம் நகராதுவிடில் அவர் துதி  பாடி என்ன பலன்???

 

பாலச்சந்திரனின் இழப்பு எம்மை பலவீனமாக்கக்கூடாது. அது ஒரு பொறியாக எம்முள் இறங்கணும்.  நாம் ஒற்றுமைப்படணும். இலக்கு நோக்கி  நகருகின்றோம் என்ற  செய்தியே தலைவரை பாலச்சந்திரனை நாம்  நேசிக்கின்றோம்  என்பதற்கான அத்தாட்சி.

செய்வோமா???

  • கருத்துக்கள உறவுகள்


பாலச்சந்த்திரன் போல் எத்தனை இளம் பிஞ்சுகளை நாம் இழந்தோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குந்தியிருந்து ஒப்பாரிவைக்கும் பழக்கம் என்னதில்லை விசுகு.அது ஒருபோதும் செய்தது கிடையாது.ஆனால் இது என்னால் தாங்க முடியாத வலிதந்ததால் என் உணர்வுகளை எழுதினேன்.மற்றும் இதில் எந்தத் துதி பாடலும் கிடையாது.என் கையறு நிலையே நான் எழுதினேன்.மற்றும் ஒற்றுமை படுவோமா?என கேட்டிருந்தீர்கள்.புலம் பெயர் தமிழ் சமுதாயம் ஈழம் நோக்கிய நகர்வில் பிளவு பட்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.இங்கு பிளவு பட்டிருப்பவர்கள் தலைவர்கள் என்பவர்களும் 'பிரதிநிதிகள் என்பவர்க்களுமாக உள்ளவர்களே தவிர என் போன்ற சாதாரணர்கள் கிடையாது.மற்றும் நடந்த கொடுமைகளை பார்த்த பொழுது ஆற்றாமையால் வந்த கண்ணிரே தவிர வேறு எந்த துதி பாடலும் கிடையாது.நன்றி விசுகு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை சுமேரியர் எத்தனையாயிரம் பிள்ளைகள் அவர்களுக்கு என்ன என்பது அறியாமலே கொல்லப்பட்டார்கள்.அவர்கள் எங்களை தோற்கடித்து நிலங்களை பிடித்தார்கள்.செத்தொழிந்து போனார்கள் எனவும் நினைத்தார்கள்.புலம் பெயர் தேச மக்கள் இன்னும் போர்க்குணம் இழக்கவில்லைஎன்பதும் போருக்கான இலக்கு எதோ ஒரு வடிவத்தில் முனை மழுங்காமல் உள்ளதை அறியத்தவறிவிட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.