Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்துக் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவேண்டும்: சந்திரிக்கா அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துக் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவேண்டும்: சந்திரிக்கா அழைப்பு

 

chandrika-2-1.jpgவெள்ளை வான்களில் ஆட்களை கடத்துபவர்களால் நாட்டில் நல்லாட்சி ஒன்றை நடாத்த முடியாது என்று சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஒவ்வொரு கட்சியிலும் இருக்கின்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

விஜய குமாரதுங்கவின் 25 வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு கண்டி ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் இந்தக்கூட்டம் இடம் பெற்றது.

விஜய குமாரணதுங்கவின்  சிரார்த்த தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்கிவைத்து விட்டு அங்கு அவர் உரையாற்றுகையில்,

நாட்டை ஆட்சி செய்யும் அனைவரும் இன்று நாட்டில் நல்லாட்சி ஒன்றை நடாத்துவதற்கு முயற்சிப்பது இல்லை. வெள்ளை வான்களில் ஆட்களை கடத்துபவர்கள் மற்றும் மனிதர்களை மரத்தில் கட்டி வைத்து தண்டிப்பவர்களால் நாட்டில் நல்லாட்சியை நடாத்த முடியாது என்று சுட்டிக்காட்டினார்.

எல்லோரும் நினைக்கினறார்கள் ஹொரகொல்லையில் எங்களுக்கு பாரிய சொத்துக்கள் உள்ளன என்று. எங்களுக்கு 4000 ஆம் எக்கர் காணிகள் அங்கு இருந்தன. 1956 ஆம் ஆண்டு எனது தந்தை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை ஆரம்பித்து பாதுகாப்பதற்கு 500 ஏக்கர் காணியை விற்றார்.

பின்னர் எனது தாயும் எங்களை வளர்ப்பதற்கு காணிகளை விற்றார். எனது தாயாரே கொண்டுவந்த சட்ட மூலம் ஒன்றின் பிரகாரம் எங்களுக்கு சொந்தமான 3000 ஆம் ஏக்கர் காணியை அரசுக்கு வழங்கினார். எனக்கு மிகுதியானது 200 ஏக்கர் மட்டுமே.

நான்  ஜனாதிபதி பதவியை துறந்ததன்  பிறகு ஐந்து முறை காணியை விற்றுள்ளேன். எனக்கு வேரு எந்த ஒரு வருமானமும் இல்லை என்பதனை நினைவுப்படுத்த விரும்புகின்றேன்.

நான் ஜனாதிபதியாக இருந்த போது எனது இரு பிள்ளைகளுக்கும் ஒரேயொரு வாகனம் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. ஒருவர் பயணம் சென்றால் அவர் வரும் வரை மற்றவர் காத்திருக்க வேண்டும். இல்லை என்றால் இருவரும் சேர்ந்து போக வேண்டும். ஆனால் இன்று ஒருவரும் 11 வாகனங்கள்;, மற்றவருக்கு 12 வாகனங்கள் இன்னுமொருவருக்கு 15 வாகனங்கள் இருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்களில் படித்தவர்கள் கைவிரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் கூட இல்லை. மிகவும் குறைந்த படிப்பின் மூலமும் குறைந்த முயற்சியின் மூலமும் ஆகக்கூடிய பணத்தை சேர்த்துக் கொள்ளக் கூடிய துறையாக இன்று நாடாளுமன்ற அங்கத்தும் காணப்படுகிறது.

விஜய சிறைக்கு செல்லும் போது எனது மகனுக்கு மூன்று மாதங்கள். அப்போது பால் மா வாங்க கூட ஐந்து சதம் இருக்க வில்லை.

அந்தநேரம் மேர்வின் சில்வாவின் குடும்பமும் எங்கள் வீட்டில் தஞ்சம் புகுந்திருந்தன. மேர்வின் சில்வாவும் சிறையில் இருந்தார். இவர்கள் அனைவருக்கும் உணவளிப்பதற்காக ஐந்து சதம் கூட யாரிடமும் கேட்க வில்லை. எங்கள் காணியில் இருந்த மரங்களை விற்று அவர்களை நான் காப்பாற்றினேன்.

நான் ஜனாதிபதியாக இருந்த போது எனக்கு சொந்தம் இல்லாத ஐந்து சதத்தைக்கூட நான் எடுத்தது இல்லை. அதே போன்று எனது அரசாங்க அங்கத்தவர்களையும் இயன்ற அளவு அதிலிருந்து தடுத்தேன். ஆனால் இன்றைய நிலைமை மாறி விட்டது.

நாட்டின் ஆட்சியை பற்றி மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. பெருமளவு வல்லுறவு செய்பவர்கள் அரச தரப்பு கிராமிய மட்ட உறுப்பினர்களாக இருக்கின்றனர்

இவைகளை தடுப்பதற்கு கூட அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்க வில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

http://tamilleader.com/?p=6410

கேட்க நல்லாயிருக்கு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ்,லண்டனில் மில்லியன்கள் பெறுமதியில் உள்ள வீடுகள்,சொத்துக்கள் பற்றி அம்மையார் வாய் திறக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
எனது ஆட்சியில் ஒரு மகனிடம் 11 வாகனங்களும் மற்றுமொரு மகனிடம் 15 வாகனங்களும் இருக்கவில்லை : சந்திரிக்கா
    By Hafeez 
2013-03-01 11:42:27
 
என்னுடைய ஆட்சி காலத்தில் இன்று போன்று ஒரு மகனிடம் 11 வாகனங்களும் மற்றுமொரு மகனிடம் 15 வாகனங்களும் இருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
 
கண்டி ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தாவது,

DSC07874.jpg

எமது நாட்டில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என சுமார் இரண்டாயிரம் பேர் அதிகாரத்தில் இருக்கின்றனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆக குறைந்த கல்வி தமைமையுடையவர்களாவர். இந்நிலையில் எமது நாடு எவ்வாறு வளர்ச்சி அடையும்.

எனது ஆட்சி காலத்தில் எனக்கு உரிமை இல்லாத ஐந்து சதத்தை கூட நான் எடுத்தது கிடையாது. மேலும் எனக்கு வாக்களித்தவர்களுக்கு விருந்தளிக்கவும் இல்லை. எனது தந்தை அரசியலுக்காக நான்காயிரம் ஏக்கர் காணியில் 500 ஏக்கர் காணியை விற்றார். இதேவேளை அரசியலுக்காக எமது வீட்டையும் அடகு வைத்தோம்.DSC07858.jpg

இன்று போன்று ஒரு மகனிடம் 11 வாகனங்களும் மற்றுமொரு மகனிடம் 15 வாகனங்களும் இருக்கவில்லை. ஒரு வாகனத்தையே எமது பிள்ளைகளுக்கு பயன்படுத்த ஒதுக்கியிருந்தோம். இவ்வாறான வீண்விரயங்களை குறைத்து ஆட்சி புரிந்தமையாலேயே 150 கோடி ரூபாவிற்கு ஒரு கிபீர் விமானம் வீதம் எம்மால் யுத்தத்திற்கு செலவிட முடிந்து. எனவேதான் யுத்தத்தையும் வெற்றிகொள்ள முடிந்தது.

DSC07852.jpg

http://www.virakesari.lk/article/local.php?vid=3259

அம்மா பதவிக்கு வர சந்திர மண்டலம் போய் அரசி கொண்டுவருவேன் என்றவ. பொய்யிலே பிறந்த வளர்ந்த குடும்பம்.

 

இவ  பிள்ளைக்கு பால் மா வாங்க காசுக்கு ஜனாதிபதி பதவி கேட்கிறா. இவ்வளவுக்கு தங்களை அத்தனகலை அரச குடும்பம் என்று விவரிக்கிறவர்கள். சரியான தரம் குறைஞ்ச ஆள். அப்பா ஒக்ஸ்போட்டில் படித்தவர், பிரதமர். அம்மா ஜனாதிபதி. தான் பரிசில் படித்தவ. தான் ஜனாதிபதி. சகோதரன் சபாநாயகர். கேவலத்தனமாக படித்த கல்விக்கு இழுக்காக பஞ்சம் கொட்டி பதவிக்கு வர முயல்கிறா. சரியான கீழத்தரம். 

 

  அந்த நேரம் இவவின்  அம்மா தற்போதைய அரச குடும்பம் மாதிரி சொத்து குவித்துக்கொண்டிருந்த காலம். வீட்டோடை கோவிச்சுகொண்டு விஜயகுமார துங்காவோடு போய் இருந்தவ. குமாரதுங்கா அம்மாவின் எதிரி. அவர் கொலை செய்யப்படும் வரை அம்ம வீட்டில் இடம் கொடுக்கவில்லை. இதனால் வீட்டால் கழித்து வைக்கப்பட்டிருந்தவ. இதனால் இவவுக்கு காண்டி வித்து செலவழிக்க அம்மா உறுதிகளை கொடுக்கவில்லை. அந்த ஆதங்கத்தை இப்போது பேசுகிறா. 

 

அம்மாவின் அமைச்சர் ரோணி-டி-மெல் இறந்து விட்டார் என்று  நினைத்து இப்படி பேசுகிறா. மகிந்தாவுக்கு தேவையாய் இருந்தால் அம்மாவின் கொள்ளை அடிகளை பற்றி ரோனி-டி-மெல் பேசியவற்றை திருப்பி எடுத்து போட முடியும். 

 

இலங்கை சொத்துக்களை நேரத்திற்கே ஒழித்துவிட்டா ஏன் எனில் தான் பதவிக்கு வாறத்திற்கு போட்டி போட அதை பாதுகாக்கிறா. இல்லையேல் சட்டப்படி அரச குடும்பம் திரும்ப எடுத்து போடும் என்ற பயம்.

என்னுடைய ஆட்சி காலத்தில் இன்று போன்று ஒரு மகனிடம் 11 வாகனங்களும் மற்றுமொரு மகனிடம் 15 வாகனங்களும் இருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

 

 

சதாம் ஹுசைனின் பிள்ளைகள் மகிந்தாவின் பிள்ளைகள் போலவே இருந்தனர்  :icon_idea:

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.