Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கச்சத்தீவை மீட்டு தமிழர் உரிமையை நிலைநாட்டக் கோரி போராட்டம்; 100 பேர் கைது

Featured Replies

கச்சத்தீவை மீட்பதுடன் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டக் கோரி இராமேஸ்வரத்தில் கடலில் இறங்கி போராட்டம் மேற்கொண்ட 100 பேர் தமிழகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

இன்று காலை இராமேஸ்வரம் பகுதியில் ஒன்றுகூடிய மக்கள் விடுதலை கட்சியைச் சேர்ந்த 100 பேர் கடலை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தினர். ஆயினும் அதையும் மீறி அவர்கள் அனைவரும் அக்னி தீர்த்தம் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அவர்களை கைது செய்த காவல்துறையினர் வாகனங்களில் ஏற்ற முயன்றனர். அப்போது சிலர், மஹிந்த ராஜபக்சவின் உருவபொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கச்சதீவை மீட்டால் மட்டுமே தமிழகக் கடற்றொழிலாளர்களின் மீதான தாக்குதலை நிறுத்த முடியும் என முழக்கமிட்டனர்.


இப் போராட்டம் காரணமாக இராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=625721870202862480#sthash.AgVoJNWt.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

209167228images.jpg

கச்சதீவில் இந்திய கொடி ஏற்ற முற்பட்ட 300 பேர் கைது

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும் தாக்குதல் நீடித்தே வருகிறது. 

இந்த நிலைக்கு காரணம், கச்சத்தீவு, இலங்கைக்கு கொடுக்கப்பட்டதுதான் என குற்றம்சாட்டும் மக்கள் விடுதலை கட்சியினர் அங்கு இந்திய தேசிய கொடியை ஏற்றப்போவதாக அறிவித்தனர். 

இதற்காக, முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல் ராஜன் தலைமையிலான மக்கள் விடுதலை கட்சியினரும், ஆதிதமிழர் கட்சியினரும் இன்று (02) காலை ரெயில் மூலம் ராமேசுவரம் வந்தனர். இதனால் அங்கு பொலிஸாரும் குவிக்கப்பட்டனர். 

மீனவர்கள் யாரும், போராட்டக்காரர்களுக்கு படகுகளை கொடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நீந்தி சென்றாவது கச்சத்தீவில் கொடியேற்றுவோம் என்று போராட்டக்குழு அறிவித்தது. 

இந்த நிலையில் போராட்டத்திற்கு முருகவேல்ராஜன் தலைமையில் திரண்ட கட்சியினர் அக்னி தீர்த்த கடற்கரை நோக்கி சென்றனர். அங்கு அவர்களை பொலிஸார் தடுக்க முயன்றனர். இருப்பினும் 40-க்கும் மேற்பட்டோர் தடையை மீறி கடலுக்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்திய தேசிய கொடியை ஏந்தி பிடித்த அவர்கள் ராஜபக்ஷ உருவ பொம்மை மற்றும் இலங்கை கொடியினை செருப்பால் அடித்து கோஷங்கள் எழுப்பினர். 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொலிஸார் விரைந்து சென்று கடலுக்குள் போராட்டம் நடத்தியவர்களை கரைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து 300-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். 

(மாலை மலர்)

  • கருத்துக்கள உறவுகள்
kachchativu-020313-seithy-150.jpg

தமிழர்களின் உரிமையை நிலைநாட்டக் கோரியும், கச்சத்தீவை மீட்க கோரியும் இராமேஸ்வரத்தில் கடலில் இறங்கி போராட்டம் நடத்திய மக்கள் விடுதலை கட்சியினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர். மக்கள் விடுதலை கட்சியைச் சேர்ந்த 100 பேர் இன்று காலை இராமேஸ்வரம் சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்த நிறுத்தினர். இதையும் மீறி அவர்கள் அனைவரும் அக்னி தீர்த்தம் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த காவல்துறையினர் வாகனங்களில் ஏற்ற முயன்றனர். அப்போது சிலர், இலங்கை அதிபர் ராஜபக்சவின் உருவபொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

  

கச்சதீவை மீட்டால் மட்டுமே மீனவர் தாக்குதலை நிறுத்த முடியும் என முழக்கமிட்டனர். கச்சதீவை மீட்க கோரி திடீரென மக்கள் விடுதலை கட்சியினரின் போராட்டத்தால் இராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

kachchativu-020313-seithy1.jpg

 

 

kachchativu-020313-seithy2.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=77203&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்

கச்சத்தீவு மற்றும் அங்குள்ள புனித அந்தோணியார் தேவாலயம் குறித்த புவியியல் மற்றும் வரலாற்றுத் தகவல்கள்:

 

  • கருத்துக்கள உறவுகள்

Handschellen-60(1).jpgகச்சைத்தீவில் இந்திய கொடியை ஏற்றமுயற்சித்த 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்கள் விடுதலை கட்சியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும் தாக்குதல் நீடித்தே வருகிறது. 

இந்த நிலைக்கு காரணம், கச்சத்தீவு, இலங்கைக்கு கொடுக்கப்பட்டதுதான் என குற்றம்சாட்டும் மக்கள் விடுதலை கட்சியினர் அங்கு இந்திய தேசிய கொடியை ஏற்றப்போவதாக அறிவித்தனர். 

இதற்காக, முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல் ராஜன் தலைமையிலான மக்கள் விடுதலை கட்சியினரும், ஆதிதமிழர் கட்சியினரும் இன்று காலை ரெயில் மூலம் ராமேசுவரம் வந்தனர். இதனால் அங்கு பொலிஸாரும் குவிக்கப்பட்டனர். 

மீனவர்கள் யாரும், போராட்டக்காரர்களுக்கு படகுகளை கொடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. 

ஆனால் நீந்தி சென்றாவது கச்சத்தீவில் கொடியேற்றுவோம் என்று போராட்டக்குழு அறிவித்தது. 

இந்த நிலையில் போராட்டத்திற்கு முருகவேல்ராஜன் தலைமையில் திரண்ட கட்சியினர் அக்னி தீர்த்த கடற்கரை நோக்கி சென்றனர். அங்கு அவர்களை பொலிஸார் தடுக்க முயன்றனர். இருப்பினும் 40-க்கும் மேற்பட்டோர் தடையை மீறி கடலுக்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்திய தேசிய கொடியை ஏந்தி பிடித்த அவர்கள் இலங்கை ஜனாதிபதியின் உருவ பொம்மை மற்றும் இலங்கை கொடியினை செருப்பால் அடித்து கோஷங்கள் எழுப்பினர். 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொலிஸார் விரைந்து சென்று கடலுக்குள் போராட்டம் நடத்தியவர்களை கரைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து 350-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். - See more at: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59877--350-.html#sthash.5ENDUYDC.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.