Jump to content

சிங்களத்தின் அதிகாரம் ஏதுமற்ற தீர்வுப் பிச்சையை ஏந்தப்போகிறோமா?!


Recommended Posts

சூழ்ச்சிகள் மூலம் போரில் வென்றாலும் தமிழர்களின் ஒற்றுமையை சிதறடிக்க முடியாது என்பதை ஜெனீவாக் களம் பறைசாற்றியிருக்கின்றது. திட்டமிட்ட இன அழிப்பின் ஊடே போரில் வென்ற சிங்கள இனவாத அரசு முடிந்த அளவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் முரண்நிலைகளைத் தோற்றுவித்து பிரிவினைகளை ஏற்படுத்தவும் முற்பட்டது. இருப்பினும் சரியான நேரத்தில் அனைவரும் ஒரு சேரப் பயணிப்போம் என்பதனை தமிழர் பிரதிநிதிகள் தற்போது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
 
கடந்த ஜெனீவாக் கூட்டத் தொடரின் போது அரச தரப்பினைச் சேர்ந்த சிறுபான்மை அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் ஜெனீவா சென்று இனக்கொலைகளை நியாயப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போதிலும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் குறிப்பாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அங்கு செல்லாமை தொடர்பில் பலத்த விமர்சனங்களும் வெப்பியாரங்களும் வெளிவந்திருந்தன. இந்நிலையில் நடப்பு ஆண்டில் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் தொடர்பிலான சந்திப்புக்களிலும் அது சார்ந்த நிகழ்வுகளிலும் பங்குகொள்வதற்கென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏழுபேர் கொண்ட குழுவினர் ஐரோப்பாவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருக்கின்றனர். அதேபோல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய பிரமுகர்களும் அங்கு சென்றிருக்கின்றார்கள்.
 
இதேபோல் உலகத்தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழ அரசு என ஈழத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதிகள் ஒரே விடத்தினை வலியுறுத்தத் திரண்டிருக்கின்றமை மிகுந்த பாராட்டுதலுக்கும் ஆறுதலுக்கும் உரிய விடயமாகும். தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையில்லை என்ற குற்றச்சாட்டினை சர்வதேசத்தின் பார்வையில் இருந்து தகர்த்தெறிவதற்கு ஒரு சரியான சந்தர்ப்பமாக ஜெனீவாக் களம் திகழ்கின்றது என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்
.
மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் சமகாலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான ஆதாரங்கள் தாயகத்தில் உள்ள தமிழ் மக்களையும் மிகுந்த வேதனைக்கும் ஆத்திரத்திற்கும் உட்படுத்திருக்கின்றது.. குறிப்பாக தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தினை விமர்சனத்திற்கு உட்படுத்தியவர்களே  சிங்கள இராணுவப் படைகளை கடுமையாக எதிர் நிலையில் பார்க்கும் அளவிற்கு பாலச்சந்திரனின் உயிர்க்கொடை முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.
 
அதேபோல இறுதிப் போர் உக்கிரமடைந்திருந்த போது தமிழகம் எவ்வாறான கொதி நிலையில் இருந்ததோ அவ்வாறான ஒரு நிலை தற்போதும் அங்கு ஏற்பட்டிருக்கின்றது. சிங்களவர்கள் எவரும் தமிழகத்திற்குள் காலடி எடுத்துவைக்க முடியாது என்ற சூழல் ஏற்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் காங்கிரஸ் தவிர்ந்த அனைத்துக் கட்சிகளும் ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு எதிராக திரண்டிருக்கின்ற நிலை காணப்படுகின்றது.
 
கடந்த ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக இந்திய மத்திய அரசு தலையிட்டு தீர்மானங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்ததன் பின்னரே அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருந்தது. இதன் காரணமாகவே குறித்த தீர்மானம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தவல்ல ஒன்றாக அமைந்திருக்கவில்லை. இருப்பினும் இந்தியா கடந்த ஆண்டு எடுத்த நிலைப்பாடு தொடர்பிலும் எதுவித நன்றி உணர்வுகளும் அற்ற வகையிலேயே சிங்கள அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது என்பதற்கு இரண்டு ஆதாரங்களை முன்வைக்க முடியும்.
 
முதலாவதாக சிறிலங்காவின் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இந்தியாவை மிரட்டும் வகையில் கருத்துத் தெரிவித்திருப்பதனைச் சுட்டிக்காட்டலாம். இந்தியாவின் காஷ்மீரிலும் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டியது தனது கடமை என்பதை இந்தியா அறியும் என்பதன் ஊடாக இந்தியாவை மஹிந்த ராஜபக்ச மிரட்டுவதை அவதானிக்கலாம். போர் மூலம் தமிழின பேரழிவு நிகழ்ந்தேறியதற்கு காரணமாக இருந்த இந்திய மத்திய அரசு இவ்வாறான ஒரு நன்றிகெட்ட தனத்தை சிங்கள் அரசாங்கத்திடம் இருந்து எதிர்நோக்கும் என்பதை அரசியல் நோக்கர்கள் பல இடங்களில் சுட்டிக்காட்டியிருந்த போதிலும் இந்திய மத்திய அரசு அதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.
 
அதேபோல ஊடகத் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கருத்து வெளியிடுகையில், இந்தியா கடந்த ஆண்டு தீர்மானத்தின் போது இறுதி நேரத்தில் முடிவெடுத்தமை தமக்கு ஒரு பாடம் என்றும் அதனை ஒரு பாடமாக வைத்துக் கொண்டு தாம் செயற்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானம் செயலிழக்கக் காரணமாக இருந்தது இந்தியா தான் என்ற நன்றி உணர்வு ஜனாதிபதியிடமோ, ஊடகத்துறை அமைச்சரிடமோ காணமுடியவில்லை. அல்லது அமெரிக்கா, இந்தியா ஆகிய வல்லரசுகளுக்கு சவால் விடுக்கும் நிலையில் இருக்கும் சீனா என்கின்ற பலம் தனக்கு இருப்பதாக எண்ணியே சிங்கள அரசு நடந்துகொள்கின்றதா? என்ற கேள்வியும் எழுகிறது.
 
இந்த ஆண்டு நிறைவேறக்காத்திருக்கும் புதிய தீர்மானத்தினையாவது உரிய முறையில் நிறைவேறுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் கடப்பாடும் வல்லமையும் தமிழகத் தலைவர்களிடமும் மக்களிடமுமே உள்ளன. ஒற்றுமையே பலம் என்கின்ற கோட்பாட்டின் அடிப்படையில் தமிழகம் இறுதிவரை குரல்கொடுக்கவேண்டும் என்பதே ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.
 
எந்தச் சந்தர்ப்பத்திலும் கொண்டுவரப்படும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளப் போதில்லை என்று சிங்கள அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்திருக்கின்ற நிலையில் மீண்டும் மீண்டும் தோன்றும் முரண்நிலைகள் சர்வதேசத்தில் இருந்து சிறிலங்காவை அந்நியப்படவைக்கும் அல்லது சிறிலங்கா மீது சர்வதேச அழுத்தங்கள் ஏற்படும் என்ற பட்டவர்த்தனமான உண்மையை அரசு ஏன் புரிந்துகொள்ளத் தயங்குகின்றது என்பது மற்றொரு கேள்வியாகும்.
 
எமது விடுதலைக்காக பல்லாயிரம் மாவீரர்கள் பல்லாயிரம் மக்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கின்றார்கள். அவர்களின் வரிசையில் தேசியத் தலைவர் அவர்களின் தந்தை, தாய், தலைவர் அவர்களின் பிள்ளைகள் என நீண்ட அர்ப்பணிப்புக்கள் நிகழ்ந்தேறியிருக்கின்றன. அர்ப்ப சொற்ப சலுகைகளுக்காக இத்தனை உயிர்களும் வீண் போகவில்லை. அரசாங்கம் கொடுக்கும் அதிகாரம் ஏதுமற்ற தீர்வுக்காக இனியும் நாம் முரண்டுபிடிக்கவேண்டியதில்லை.
 
மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட எமது இனத்திற்கென்று ஒரு நாடு வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும் இதற்காகவே இத்தனையாயிரம் உயிர்க்கொடைகளும் நிகழ்ந்தேறியிருக்கின்றன. இனிவருங் காலம் சிங்கள அரசாங்கத்திற்கு நெருக்கடி மிகுந்ததாகவே இருக்கப்போகின்றது. போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்துவதன் நோக்கம் போர்வெறிகொண்டு இன அழிப்பை மேற்கொண்ட அரசை தண்டிப்பது அல்ல. மாறாக சர்வதேசம் கொடுக்கும் அழுத்தத்தின் ஊடே எமது இலக்கினை எட்டிவிடவேண்டும் என்பதுதான் அது.
 
சிங்கள அரசின் இனவாதப் போக்கு சர்வதேசத்தின் கதவுகளை தட்டும். தமிழர்களுக்கு தனிநாடு தேவைதானா? என்ற கேள்விக்கான பதிலை சிங்கள் அரசின் செயற்பாடுகளே உணர்த்தப்போகின்றன. சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு போடப்போவதாகச் சொல்லிக் கொள்ளும் அதிகாரம் ஏதுமற்ற தீர்வுப் பிச்சையை கைநீட்டி ஏந்தப் போகிறோமா? அளவிட முடியாத தியாகங்களுக்கான பதிலினைத் தேடிக்கொள்ளப்போகிறோமா? என்பதை எமது மக்களின் பிரதிநிதிகள் முடிவெடுக்கவேண்டும்.
 
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒவ்வொரு சாரார் ஒவ்வொரு நிலைப்பாட்டினை எடுப்பதைத் தவிர்த்து எமக்கென்று ஒரு நாடு வேண்டும் என ஒரே குரலில் செயற்படுவதே வீழ்ந்து விதையாகிப்போன பல்லாயிரம் மாவீரர்களுக்கும் அனாதரவான நிலையில் பரிதவிக்கும் தமிழ் மக்களுக்கும் அரசியல் தலைவர்கள் செய்யும் கைமாறாகும்.
 
-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்னும் உந்த மேற்கின் ஊடகங்களை நம்புகிறீர்களா?  ஆச்சரியமாய் இருக்கிறது. 
    • தலைப்பை மாத்திவிடுங்கள் ( டக்கி புலம்பெயர் தமிழர்கள் தலைவருக்கு நன்றிக்கடனாக இருக்கட்டாம் என்று) இல்லாவிட்டால் இப்படியான செய்திகளை வாசிக்கமாட்டேன்
    • "மாயா"     செப்டம்பர் 22, 1995 , என்னால் மறக்க முடியாத ஒருநாளாக இன்னும் என் மனதை வருத்திக்கொண்டு இருக்கிறது. அன்று தான் என் அன்பு சிநேகிதி இறந்த தினம். அவர் சாதாரணமாக இறக்கவில்லை, அந்த கொடுமையை நினைத்தால் எவருமே கதிகலங்குவார்கள். அவளும் அவளின் மாணவிகளும் புத்தரின் தர்ம போதனைக்கும் உலக நீதிக்கும் எதிராக துண்டு துண்டாக உடல்கள் சிதறி நாகர்கோவில் மகாவித்தியாலத்தில் பிற்பகல் 12.50 மணியளவில் விமானப் படையினரின் குண்டுத் தாக்குதலில் 21 - 26 மாணவர்கள் உட்பட கொல்லப் பட்ட தினம் ஆகும். அது தான் நான் இன்று, இந்த கார்த்திகை தினத்தில் நேரத்துடன் துயிலில் இருந்து எழும்பி யன்னல் வழியாக ஆகாயத்தை வெறுத்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.   அரசியல், யுத்தம், சமதானம் என்பவற்றைப் பற்றிப் புத்தர் தெளிவான கருத்துடையவராயிருந்தார். அஹிம்சையும் சமாதானமுமே பௌத்தம் உலகுக்கு விடுக்கும் செய்தி. இது எல்லாராலும் நன்கு அறியப்பட்டதொரு விஷயம். எந்தவிதமான பலாத்காரத்தையும் அது ஏற்றுக்கொள்வதில்லை. கொல்லாமையே அதன் மூலாதாரமான கொள்கை. 'நீதியான யுத்தம்' என்று சொல்லக் கூடியது ஒன்றுமில்லை. இது ஒரு போலிப் பெயர். துவேஷம், கொடுமை, இம்சை, கொலை என்பவை நேர்மையானவையெனக் காட்டும் நோக்கமாக ஆக்கப்பட்டதொரு அர்த்தமற்ற வார்த்தை.   பௌத்த மதத்தின்படி 'நீதியான யுத்தம்' என்று ஒன்றுமில்லை. 'இது நீதி, இது அநீதி' என்று தீர்மானிப்பது யார்? நாங்கள் துவங்கும் யுத்தம் எப்பொழுதும் நீதியானது. மற்றவர்கள் துவங்கும் யுத்தம் அநீதியானது. பௌத்தம் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்வதில்லை.   ரோஹினி ஆற்று நீர்ப் பிரச்சினை சம்பந்தமாகச் சாக்கியரும், கோலியரும் பிணங்கிக் கொண்டு சண்டை செய்ய முற்பட்டபோது பகவான் யுத்தகளத்துக்குப் போய் பிணக்கைத் தீர்த்துச் சண்டையை நிறுத்தினார். அஹிம்சையை அவர் போதித்தது மாத்திரமன்றி, சமாதானத்தை நிலை நாட்டக் காரிய பூர்வமான நடவடிக்கையை எடுத்தார். பகவானுடைய அறிவுரையைக் கேட்டு அஜாதசத்து என்ற மன்னன் வஜ்ஜிராச்சியத்தோடு உண்டான சண்டையை நிறுத்தினான்.   நான் சைவ மதத்தவன் என்றாலும் புத்த பெருமானை நேசிக்கிறேன் அவரின் இந்த கொள்கைக்காக! ஆனால் இன்று அவரின் புதல்வர்கள் என்று கூறும் பலர், இதை பின்பற்றுவதாக எனக்குத் தெரியவில்லை. அது தான் அந்த குண்டுகள் பொழிந்த ஆகாயத்தை பார்த்தபடி என் சினேகிதியை இந்த கார்த்திகை நாளில் நினைவு கூறுகிறேன்!   என் சினேகிதியை தற்செயலாக தற்காலிக இடமாற்றத்தை அடுத்து வேலையை பாரம் எடுக்க பருத்தித்துறைக்கு சென்ற பொழுது, பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் சந்தித்தேன். அவர் ஒரு இளம் ஆரம்ப பள்ளி ஆசிரியை. அவர் தான் என் புது அலுவலகத்துக்கான பாதைக்கு வழி காட்டியதுடன், தன் வீடும் அதற்கு அருகில் என்று, கூடவே கதைத்து கொண்டும் வந்தார். ஒரு சில நிமிடங்களில் பரிமாறி கொண்ட கவர்ச்சிகரமான அப்பாவித்தனமான பார்வைகள் அவளின் குறும்புத்தனம் மிக்க இனிய குரல்கள், பெண்மையின் வளைவு நெளிவுகளை வெளிப்படுத்தும் அவளின் அழகிய கோலமும் குனிந்த நடையும் வாரம் நகர்ந்தும் என்னால் மறக்க முடியவில்லை. அவளின் பெயர் மாயாதேவி , நாகர்கோவில் மகாவித்தியால ஆசிரியை, இவ்வளவும் தான் எனக்குத் தெரியும். ஒரு சில நிமிடங்கள் தானே அவளுடன் பழக்கம். அவளை முழுமையாக அறிய அன்று ஆவல் இருந்தாலும், எடுத்தவுடன் அதுகளை கேட்டு குழப்பக்கூடாது என்று பேசாமல் இருந்துவிட்டேன்.   முதிர்ச்சியற்ற காதல் இப்படிச் சொல்லும்: `நான் உன்னைக் காதலிக்கிறேன். ஏனென்றால் நீ எனக்கு வேண்டும்.’ முதிர்ச்சியடைந்த காதல் இப்படிச் சொல்லும்: `எனக்கு நீ வேண்டும். ஏனென்றால், நான் உன்னைக் காதலிக்கிறேன்.’ ‘ - இதைச் சொன்னவர் அமெரிக்க சமூக உளவியலாளர் எரிக் ஃப்ரோம் (Erich Fromm). காதலுக்குத் தேவையான அடிப்படையான மனப்பக்குவம் இதுதான். அப்படித்தான் நானும் இருந்தேன்.   அவள் விண்ணில் இருந்து வந்த தேவதையின் உடல் எடுத்து வந்தது போல் இருந்தாள். அவளை சுற்றி ஒரு பிரகாச சூழ்நிலை நிலவிக்கொண்டு இருப்பதாய் அன்று அவதானித்தேன். அந்த அழகு எப்படி வர்ணிப்பது என்று எனக்கு தெரியவில்லை. அவளின் படைப்பில் வெறுக்கிற மாதிரி ஒரு அம்சம் கூட இல்லை. நான் சும்மா சொல்லவில்லை. அவள் மலர்ந்துகொண்டு இருக்கும் ஒரு பன்னீர் மலர்! 'பன்னீர் மலர் சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய் அழகை பாடுங்களே!' என்று ஒரு பாடல் கேட்ட ஞாபகம். உண்மையில் 'பன்னீர் மலர் சொரியும் மேகங்களே என் நண்பியின் மெய் அழகை பாடுங்களே!' என்று தான் என் உள்ளம் அசை போடுகிறது!. எப்படியும் அவளை சந்திக்கவேண்டும் என்று அன்று ஒரு நாள், அவள் பாடசாலை முடிய வரும் பேருந்துக்காக, நேரத்துடன் வேலையில் இருந்து புறப்பட்டு காத்திருந்தேன்.   'இளந்தளிரைப் போன்று மென்மையாகவும் தாமரைக்கொடியைப் போன்ற மெதுமெதுவென்று இருக்கும் கரங்கள் என்னைத் தழுவவேண்டும். அவளின் வசீகரமான புன்முறுவல் என் மார்பில் சாய்ந்து கொட்டிடவேண்டும். அப்பொழுது உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள் இன்பத்தை பொழியவேண்டும்' இப்படி என் மனம் மகிழ்ந்து கொண்டு, நான் என்னையே மறந்து கனவில் மிதந்த அந்த தருவாயில், 'ஹாய்' என்ற அந்த அவளின் இனிய குரல் என்னை மீண்டும் பூமிக்கு வர வைத்தது. 'ம்ம்ம் என்ன இன்று நேரத்துடன் வேலை முடிந்ததா ?' அவள் தான் தொடர்ந்தாள், நான் என்னை சமாளித்துக்கொண்டு, இல்லை ஒரு தனிப்பட்ட விடயமாக கொஞ்சம் வெளியே வந்தேன், இனி திரும்பவும் வேலைக்கு போகப் போகிறேன் என என் கதையை மாற்றினேன். அப்ப தான் அவளுடன் ஒன்றாய் நடக்க முடியும்!   கொஞ்சம் எனக்கு பசி, வாங்க தேநீரும் வடையும் சாப்பிட்டுவிட்டு போவோம் என கூப்பிட, அவள் கொஞ்சம் தயங்கினாலும், பின் ஓகே என்று வந்தாள். அது தான் என் முதல் வெற்றி! கொஞ்சம் கொஞ்சமாக அவளை அறியத் தொடங்கியதுடன் என்னைப்பற்றியும் சொன்னேன். அவள் தொடக்கத்தில் கொஞ்சம் அச்சம் நாணம் கொண்டாலும், போகப் போக அன்னியோன்னியமாக பழகத் தொடங்கினாள். அது என் இரண்டாவது வெற்றி!   அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற் குரிய என்ப."   என்றார் தொல்காப்பியர். இது களவியலுக்கு மட்டும் தான்! ஒரு காதல் சுவைக்கு மட்டும் தான் என்ற உண்மையை அவளிடம் கண்டேன்! இப்ப நான் மட்டும் அல்ல அவளும் எனக்காக காத்திருக்கிறாள். இப்ப நான் மோட்டார் சைக்கிளில் வர ஆரம்பித்ததால், நான் காலை நேரத்துடன் வந்து அவளை பாடசாலையில் இறக்கிவிட தொடங்கினேன். அவள் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு செல்லக் கதைகளும் பேச தொடங்கிவிட்டாள். அந்த சிலநிமிட பயணம், சொர்க்கம் என்று ஒன்று இருந்ததால் அங்கே போனமாதிரி இருந்தது!   ஒரு சில மாதம் கழிய, செப்டம்பர் 22, 1995 , அவளுக்கு என் காதலின் அடையாளமாக ஒரு அழகிய மோதிரம் எம் இருவரின் படத்துடன், அன்று அவளை, பாடசாலையில் இறக்கிவிடும் பொழுது, திடீரென ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, அவளின் விரலில் நானே போட்டுவிட்டேன். அவள் அப்படியே திகைத்து நின்றாள், ஒன்றுமே பேசவில்லை, ஆனந்த கண்ணீர் சொட்டு சொட்டாக அவள் கன்னத்தை நனைத்தன. அது தான் நான் கொடுத்த முதல் முத்தம் கூட. திரும்பி, சுற்றி பார்த்தாள், நாம் ஒரு மரத்தின் அடியில் நின்றதால், எம்மைக் காணக்கூடியதாக ஒருவரும் தெரியவில்லை. திடீரென அவசரம் அவசரமாக என்னை இழுத்து, வாயுடன் வாய்சேர்த்து முத்தம் தந்துவிட்டு, சட்டென அந்த மோதிர விரலை பார்த்தபடியே பாடசாலைக்குள் ஓடி விட்டாள். வழமையாக சொல்லும் 'போயிட்டு வருகிறேன்' கூட சொல்லவில்லை ?   அவள் இன்று ஒன்றும் சொல்லாமல் பாடசாலைக்குள் போனது எனோ எனக்கு ஒரு மாதிரி இருக்க, என் மதிய இடைவெளியில், சாப்பிடுவதை தவிர்த்து, அவளை ஒருக்கா பார்க்க வேண்டும் என்ற அவா உந்த, மோட்டார் சைக்கிளில் அவளிடம் போனேன். போகும் பொழுது, பாடசாலைக்கு கொஞ்சம் அருகில் இருந்த கடை ஒன்றில் அவளுக்கு, அவள் மிகவும் விரும்பும் இருதய அமைப்பில் அமைந்த ஆல்கஹால் பிரீ டார்க் சாக்லேட் [alcohol free dark chocolate] பெட்டி ஒன்றை வாங்கி, மீண்டும் மோட்டார் சைக்கிளில் எற, பெரும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் பாடசாலை பக்கம் இருந்து கேட்டது. போர்விமானமும் கூவிக்கொண்டு பறந்தன, கடைக்கார முதலாளி கடையை உடனடியாக மூடிக்கொண்டு, தம்பி, ஒரு இடமும் போகவேண்டாம் என்று என்னையும் பதுங்கு குழிக்குள் இழுத்து சென்றார்.   நான் ரசித்த உடல் துண்டு துண்டாக அன்று மாலை என்னால் போய் பார்க்க முடிந்தது. அவளின் மற்றும் மாணவர்களின் பெற்றோரின் அழுகுரல் ஒரே சோகமயமாக அங்கு காட்சி அளித்தது. நான் அவளின் கையை, நான் போட்டுவிட்ட மோதிரம் மூலம் அடையாளம் கண்டேன்.     "அழகான என் செல்ல நண்பியே அன்பான ஒரே நம்பிக்கை நட்சத்திரமே அளப்பெரும் துயரில் என்னைத் தள்ளி அமைதியாய் சொல்லாமல் மறைந்தது ஏனோ ?"   "வாய் மூடி தலை குனிந்து வான் உயர துள்ளி குதித்து வாழ்க்கை காண கனவு கண்டவளே வாட்டம் தந்து மௌனமாகியது எனோ?"   "என் அழகான காதல் செல்லமே என்னை விட்டு போக வேண்டாம்? என் குறும்பு இளவரசி இல்லாமல் எனக்கு இனி மகிழ்ச்சி எனோ?"   "பள்ளி அறையில் புத்தகங்களுக்கு இடையில் பகுதி பகுதியாக உன்னை கண்டுஎடுத்தேன் பரவி இருந்த இரத்த சொட்டுக்குள் பச்சை சேலை சிவந்தது எனோ?"   "மச்சம் கொண்ட உன் இளம்கால் மல்லாந்து என்னைப் பார்ப்பதைக் கண்டேன் மயான அமைதியில் உற்று நோக்கினேன் மடிந்தவிரலில் மோதிரம் என்னை அழைப்பதுஎனோ?"     நேரம் இப்ப அதிகாலை இரண்டு மணி, இன்னும் நல்ல இருட்டு, பனி எங்கும் பொழிந்து கொண்டு இருந்தது. நான் இப்ப வெளிநாட்டில், மனைவி பிள்ளைகளுடன் வாழ்கிறேன். அது உலக வாழ்க்கை. ஆனால் என் மனம் இன்னும் அவளையே நினைக்கிறது. அவளுக்காக ஒரு தீபம் ஏற்ற இப்பவே இந்த கார்த்திகை தினத்தில் எழும்பிவிட்டேன். என் மனைவி இன்னும் சரியான தூக்கத்தில், பிள்ளைகள் தங்கள் தங்கள் அறையில். யன்னலுக்கு வெளியே, இது கிராமப்புறம் என்பதால் சிறு மரப்பத்தைகள் [woods]. வானம் அமைதியாக இருந்தது. நான் கொஞ்சம் என் பார்வையை கிழே இறக்கி மரப்பத்தையை பார்த்தேன்.   கழுத்தில் இருந்து கால்வரை வெள்ளை நிற முழு அங்கியுடன், தனது முகத்தை நீண்ட கரும் கூந்தலால் மறைத்துக்கொண்டு, என்னை நோக்கி என் மாயாவின் உடல் அமைப்பிலேயே ஒரு பெண் உருவம் வருவதைக் கண்டேன்!   அருகில் அருகில் வர, தன் முடியை, தன் வலது கையால் வாரி முதுகுப் பின்னல் போட்டாள். நான் போட்டுவிட்ட அந்த மோதிரம் இன்னும் அந்த விரலில் இருப்பதைக் கண்டேன். அது ஒளிர்ந்து கொண்டு இருந்தது. அதே புன்முறுவல், அதே நாணம், அதே நடை! என்னால் நம்பவே முடியவில்லை!. 'ம்ம் வாங்க, உங்க மாயா கூப்பிடுகிறாள், நான் தான் உங்க மனைவி, உதறித்த தள்ளுங்கள் அவளை, கட்டிலில் படுத்திருப்பவளை'   இரண்டு கைகளையும் நீட்டி என்னை அழைத்தபடி நெருங்கி வந்து கொண்டு இருந்தது. என்னை அறியாமலே நான் யன்னலூடாக குதித்து வெளியே போக, யன்னலை அகல துறந்து, அதில் எற, ஒரு காலை தூக்கி வைத்தும் விட்டேன். மற்ற காலை தூக்க முயலும் பொழுது தான் , யாரோ என் காலை பிடித்து இழுப்பது தெரிந்தது. நான் திரும்பி பார்க்கவே இல்லை, என் மாயாவையே, அந்த அழகு தேவதையே பார்த்துக் கொண்டு ' மாயா, என் செல்லமே, நான் வாரெனடா கண்ணு' என்று சத்தம் போட்டு அலறியே விட்டேன்.   பிள்ளைகளும் சத்தம் கேட்டு ஓடிவந்து அப்பா, அப்பா என , மனைவியுடன் சேர்ந்து என்னை யன்னலால் குதிக்க விடாமல் உள்ளுக்குள் இழுத்துவிடார்கள். மனைவி என்னை கட்டிப்பிடித்து, உங்கள் மாயா எனக்கும் சகோதரி தான், எனக்கும் நண்பி தான். காலை நாம் குடும்பமாக இந்த , இனிவரும் ஒவ்வொரு கார்த்திகை தினத்திலும் விளக்கேற்றுவோம். இப்ப வந்து படுங்க, என பிள்ளைகளும் சேர்ந்து என்னை மீண்டும் கட்டிலில் படுக்க வைத்தனர். நான் அவர்களுக்காக கண்மூடி விடியும் மட்டும் இருந்தாலும், அந்த உருவம், என் மாயா என் மனதில் இருந்து அகலவே இல்லை !   "இறந்த அவளின் சூக்கும உடல் இளமுறுவலுடன் என் முன் வந்தது இலக்குமி போல அழகாய் தோன்றி இதழ் குவித்து முத்தம் தந்து"   "பழைய மெல்லிசை முணுமுணுத்து பதுங்கி என் கண்கள் பார்த்து பதுமையாக என் முன் நின்று பணிந்து அழைத்து வா என்றது"   "என் அழகிய குட்டி கண்மணியே எதற்காக உன் உயிரை மாய்த்தாய்? எழுச்சி தந்து நம்பிக்கை விதைத்து என்னை விட்டு விலகியது எனோ?"   "இறந்ததாக நான் உன்னை நம்பவில்லை இன்றும் உனக்காக நான் காத்திருக்கிறேன் இளந் தென்றல் தொடும் அடிவானத்தில் இரவும்பகலும் உன்னைத் தேடி அலைகிறேன் ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.