Jump to content

புறமுதுகு காட்டாமல் தன் மக்களுடன் இருந்து; உயிர் நீத்த பிரபாகரனை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் இல்லை - சங்கரி


Recommended Posts

குடும்பத்துடன் தப்பிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் இறுதிவரை புறமுதுகு காட்டாமல் தன் மக்களுடன் இருந்து; உயிர் நீத்த பிரபாகரனை விமர்சிக்கும்; உரிமை உலகிலுள்ள எவருக்கும் இல்லை - வீ. ஆனந்தசங்கரி
 
“மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்” என்ற பழமொழி இன்றையை சூழ்நிலையில் எனக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமென நான் என்றும் எண்ணியவன் அல்ல. அவர்கள் கையாண்ட சில வழி முறைகளை ஒழிவு மறைவின்றி சுட்டிக்காட்டியும் கண்டித்தும் வந்துள்ளேன். அவ்வாறு நான் நடந்து கொண்டமைக்கு முக்கிய காரணம் நான் வன்முறையை எதிர்க்கும் காந்தியவாதியாக ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தவன் என்பதாலேயாகும். நான் யாரையும் அடையாளம் காட்டி குற்றம் சாட்டுவேனாயின் அதை வைத்தே ஒரு பூகம்பத்தையே வெடிக்க வைத்திருப்பர்.  
 
கடந்த பல ஆண்டுகளாக விடாதே பிடி என்று அடம் பிடித்து தூண்டிவிட்டு ஒரு இக்கட்டான நிலைமைக்கு தமிழ் மக்களையும் விடுதலைப் போராளிகளையும் யார் கொண்டுவந்தார்களோ அவர்களில் அநேகர் இன்று குத்துக்கரணம் அடித்து அரசோடு ஒட்டிக்கொண்டு விட்டார்கள். அதனால் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டநிலையில் எதுவித மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை. இரட்டை வேடம் போட்ட சிலர் போராளிகளுக்கு துரோகம் செய்த கே.பி போன்ற பலர் பற்றி மூச்சு விடுவதில்லை. அத்தகையவர்களுடன் இவர்களுக்கு இரகசிய உறவும் உண்டு. இன்று தமிழ் மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்ற சிலர் அவர்களுடன் உறவு வைத்திருக்கிறார்கள். “வேலையற்றவர்கள்;தான் ஆயுதம் ஏந்தி போராடினார்கள்” என்று கூறியவர் உத்தமராக உலகுக்கு காட்டப்படுகின்றார். கல்வியை, உற்றார் உறவினர்களை துறந்து போராடிய இலட்சிய இளைஞன் வேலையற்றவன். இதில் என்ன நியாயம் இருக்கிறது. கடந்த வருடம் ஜெனீவா போகாமைக்கு பொய்யான காரணங்கள் பலவற்றைக் கூறி மக்களை ஏமாற்றியவர்கள் உண்மை விளம்பிகள். இன்று ஏன் ஜெனீவா செல்ல வேண்டும் என்பதற்கு போதிய விளக்கம் தர முடியாதவர்கள் விற்பன்னர்கள். 
 
அன்று நான் எழுதிய கடிதங்கள் பலவற்றில் சிலவற்றையேனும் விடுதலைப் புலிகளின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தால் பிரபாகரனும், அவரின் குடும்பமும் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். ஜெனீவா பிரச்சனை என்ற ஒரு பிரச்சனையே இருந்திருக்காது. விடுதலைப் புலிகளை காலத்துக்குக் காலம் நல்வழிப்படுத்தி போராட்டத்துக்கு வலுச் சேர்க்கத் தவறிவிட்டு இன்று எல்லோரையும் பூண்டோடு பரலோகத்துக்கு அனுப்பி விட்டு உத்தமர்கள் போல் நடிப்பவர்கள் பலரில், முன்னிலையில் நிற்பவர்,பொய்யையும் புரட்டையும் கூறி என்மீது குற்றம் சாட்டும் அரியநேந்திரன் அவர்களிடம் ஒன்று கேட்க விரும்புகின்றேன். வன்னியில் ஏறக்குறைய பதினைந்து போராட்டங்கள் - கவனயீர்ப்பு போராட்டம், உண்ணா விரதப் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் என நடந்துள்ளன. இவற்றில் எந்தப் போராட்டத்தில் தலைவர் அவர்கள் கலந்து கொண்டார்கள்? இதுவரை பதினைந்து போராட்டங்களையும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிகரமாக நடத்தியிருந்தும் ஒன்றில் கூட பங்குபற்றாத ஒருவர், இதுபோன்ற ஒன்றையேனும் நடத்தாதவர் தம்பி அரியநேந்திரன., சத்தியம் தவறாது 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவன் நான், வன்முறையை கண்டித்தவன், பட்டம் பதவிகளுக்கு அலையாதவன,; எக்கருத்தையும் துணிந்து கூறிய, கூறிக் கொண்டிருக்கின்ற என்னை விமர்சிக்கும் தகுதி வேறு எவருக்கும் இருந்தாலும் வெறும் பொய்யிலேயே அரசியல் நடத்திய அரியநேந்திரன் என்பவருக்கு நிச்சயமாக இல்லை. அவருடைய அரசியல் கோழைத்தனமான அரசியல். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதுதான் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் சமாதானத்துக்கு வர ஆர்வம் காட்டியவேளை தன் பங்கை சரியாக செய்திருந்தால் ஜெனீவா பிரச்சனை இன்று இருந்திருக்காது.
 
எனது கண்ணிலிருந்து இலகுவாக கண்ணீர் எந்தச் சந்தர்ப்பத்திலும் வருவதில்லை. ஆனால் பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரனின் முதுகிலே அல்லாமல் நெஞ்சிலே குண்டு பாய்ந்த அடையாளத்தை கண்டவுடன் அதிர்ந்து போனேன். என்னையறியாமலேயே கண்ணீர் சிந்திவிட்டேன். சரி பிழை ஒருபுறமிருக்க, பிரபாகரனின் கழுத்தில் சயனைட் குப்பியும் கடைசி நேரத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றக்கூடிய வாய்ப்புக்களும் சாதனங்களும் பல இருந்தும் மக்களை விட்டு ஓட விரும்பாத காரணத்தினால் புறமுதுகு காட்டாமல் உயிர்நீத்த அவரைப் பற்றியோ வேறு யாரைப் பற்றியுமோ விமர்சிக்கின்ற உரிமை அரியநேந்திரனுக்கு மட்டுமல்ல உலகிலுள்ள எவருக்கும் இல்லை. இவ்வளவு தீவிரமாக செயல்படும் இவர் புலிகள் சரணடைய தயாராக இருந்த அந்த இக்கட்டான நேரத்தில் பேச வேண்டியவர்களுடன் பேசி அல்லது வற்புறுத்தியிருந்தால் நிச்சயமாக சகலரையும் காப்பாற்றியிருக்க முடியும். அப்படி செய்வார் என்றே நினைத்தேன். நானே முன்னின்று பாடுபட்டிருப்பேன்.
 
படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பாலச்சந்திரன் உட்பட கொலையுண்ட எமது மக்கள் அனைவரினது தொடர்பிலும் நீதி விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதற்கும் இடமில்லை என்பதனையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இதேநேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளில் இந்தியாவைப் பற்றி மாத்திரமே நான் கருத்துத் தெரிவித்தேன். ஏனைய நாடுகள் பற்றி எதுவுமே கூறவில்லை என்பதனை சரியாகப் புரிந்துகொள்ள இவர்கள் ஏன் மறுக்கின்றார்கள்? இந்தியா ஓh வல்லரசு. அவர்களுக்கு 47 நாட்டுத் தலைவர்களையும் தொடர்புகொள்வது பெரிய விடயமல்ல. அதை செய்துவிட்டு தன் பங்கை சிந்தித்து செய்திருக்கலாம். 
 
எமது மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது இந்தியாவின் ஆதரவு இல்லாமல் ஒருபோதும் சாத்தியமாகாது. இலங்கை மீதான இந்தியாவின் செல்வாக்கு எந்த விதத்திலும் பாதிக்கப்படுவது எமது மக்களின் நலன்களுக்கு நல்லதல்ல என்பதே நான் நன்கு சிந்தித்து எடுத்த முடிவு. நான் கூறியது எனது கருத்தை. தவறு என்றால் சுட்டிக்காட்லாமே. நான் என்ன அடம் பிடித்தேனா?
 
ஊடகம் ஒன்றில் மிகப் பெரிய எழுத்தில் “ஆனந்தசங்கரி மறைமுகமாக அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றாரோ என ஐயம்” என அரியநேந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார். என்னால் எழுதப்பட்டதாக மூன்று கடிதங்களை ஆதாரமாக காட்டியிருந்தார். முதலாவது ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக வரும் பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டும் என கூட்டமைப்பும், தமிழ் மக்களும் சொல்கின்ற நிலையில் இதற்கு மாறாக இந்தியா நடுநிலைமை வகிக்க வேண்டும் என்று அவர் கூறுகின்றார். இவர் ஏதோ தமிழ் மக்கள் சார்பிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பிலும் ஏகபிரதிநிதி போல் பேசுகிறார். இந்த அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தார்? இரண்டாவது இலங்கை தொடர்பில் மென்போக்கை இந்தியா கடைபிடிக்க வேண்டும் என ஆலோசனை கூறியது என மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.  இத்தகைய பொய் உத்தமர்களுக்கு ஏற்றதல்ல. இத்தகைய கடிதம் ஒன்று இருப்பின் அதனை உடன் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். 
 
இறுதியாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் “உயர்மட்டக் குழு” அமைப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்ட நிலையில் அது சந்தேகம் எனக் கூறியது. இக் கூட்டத்தில் அடுத்த மாதம் 20ம் திகதி வரையில் தமிழரசுக் கட்சியின் செயற்குழுவை கூட்ட நேரமில்லை என்று அக் கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட பிரமுகர்கள் மூவரும் கூறினார்கள். இருந்தும் அடுத்த நாளே அவர்கள் கூடி வேறு சில முடிவுகளை எடுத்தார்கள். ஆனால் உயர்மட்டக்குழு அமைப்பதற்கு இரண்டு மணித்தியாலங்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை இதுவே எனது சந்தேகத்துக்குக் காரணம். இவர்களிடம் வேறு மாற்றுத் திட்டம் இருப்பதாக எண்ணினேன் அது தவறா? இதனால்தான் நான் அது சந்தேகம் என்று கூறினேன். அரசு எவ்வளவு தம்பட்டம் அடித்தாலும் மக்களை பட்டினி போட்டு சித்திரவதை செய்கிறது. பல தலைமுறையாக சேர்த்து வைத்த அத்தனை சொத்துக்களும் அழிக்கப்பட்டும், திருடப்பட்டும் முறையான வீடின்றி தகரக் கொட்டகைகளிலும் கூடாரங்களிலும், பாம்பு நுளம்பு போன்ற விஷசத்துக்களுக்கும் மத்தியில் வாழ்;ந்து கொண்டு எதுவித தொழில் வாய்ப்போ வருமானமோ இன்றி உற்றார் உறவினரை இழந்தும், பிரிந்தும் சொல்லொணா துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பது போதாதென்று பல் வேறு நாடுகளைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் புலிகளின் முகவர்கள்; என பொய் முத்திரைகுத்தி அத்தகைய நிறுவனங்களை வடக்கே காலடி எடுத்து வைக்காமல் அரசு தடைவிதித்த செயல் மிக மோசமானதும், கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். இந் நிறுவனங்கள் செயற்பாட்டில் இருந்த காலத்தில் இங்கு பட்டினிச் சாவுகள் இருக்கவில்லை. வேலை வாய்ப்புக்களும் கிடைத்தது. 
 
ஏதாவது ஒரு நாடு துணிந்து வந்து தமிழ் மக்களுக்கு பல் வேறு உதவிகளையும் செய்து தொண்டாற்றி வருகிறது என்றால் அது இந்தியா மாத்திரமேயாகும். மற்றைய நாடுகள் அரசின் ஊடாகவே உதவின. இதில் மக்களுக்கு கிடைத்தது சிறு துளியேயாகும். இந்த அரசாங்கம் திட்டமிட்டு இந்தியாவின் உதவியை ஏற்க மறுத்து புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாகும் அதுவும் எமது மக்களையே பாதிக்கும். முன் யோசனை இன்றி நாம் செயல்படக்கூடாது. நாம் மேற்கொள்ளும் தவறான முடிவுகள் எமது மக்களை நிரந்தரமாக பாதிக்கக்கூடும். சோல்ல முடியாத துன்பமாகவும் அது ஏற்படலாமென நான் எண்ணினேன். இது தவறா? இது எனது மனதில் தோன்றியது தவறா? பெரிய குற்றமா? அப்படியானால் அரியநேந்திரனின் வழிகாட்டலில் நடக்கட்டும். நான் யார் அதை எதிர்ப்பதற்கு
 
சிறிமா பண்டாரநாயக்கா ஆட்சிக்காலத்தில் 1972 இல் தந்தை செல்வாவும், திரு.அமிர்தலிங்கம் குடும்பமும் இந்திய தலைவர்களை சந்திக்கச் சென்று திரும்பினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக முழு தமிழ்ச் சமுதாயமும் அரசுக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின்பே இந்தியா செல்ல முடியும் என கட்டுப்பாடு 1972 இல் விதிக்கப்பட்டது. (Exit permit) தந்தை செல்வாவோ அமிர் குடும்பமோ வெறுமனே வியாபாரத்துக்கு சென்றவர்கள் அல்ல. அவர்கள் சென்றது அரசியல் நோக்கமாகும். 
 
எது எப்படியிருந்தாலும் திரு அரியநேந்திரனுக்கு இருக்கும் அறிவுக்கும் ஆற்றலுக்கும் தூர நோக்கத்துக்கும் எனது அறிவு, ஆற்றல் ஈடு கொடுக்க முடியாது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். மக்கள் நலன் கருதியே நான் எனது கருத்துக்களை வெளியிட்டேன் அது தவறு எனின் மக்கள் என்னை மன்னிக்கட்டும். அரசாங்கம் சார்பில் பேசுகிறேன் அல்லது வக்காலத்து வாங்குகிறேன் என்று மக்களுக்கு யார் கூறினாலும் அவர்கள் நம்பமாட்டார்கள். ஏனெனில் நான் பட்டம், பதவி கேட்கவோ, வாங்கியோ பழக்கப்படாதவன் என்பது உலகறிந்த விடயமாகும். அரியநேந்திரனுக்கு பாராளுமன்ற பதவி எப்படி வந்தது என்பதை அறிய மக்கள் ஆவலாக உள்ளனர்.
 
 
வீ. ஆனந்தசங்கரி
செயலாளர்நாயகம்- த.வி.கூ
Link to comment
Share on other sites

 எனது கண்ணிலிருந்து இலகுவாக கண்ணீர் எந்தச் சந்தர்ப்பத்திலும் வருவதில்லை.

 

ஆனால் பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரனின் முதுகிலே அல்லாமல் நெஞ்சிலே குண்டு பாய்ந்த அடையாளத்தை கண்டவுடன் அதிர்ந்து போனேன். என்னையறியாமலேயே கண்ணீர் சிந்திவிட்டேன். சரி பிழை ஒருபுறமிருக்க, பிரபாகரனின் கழுத்தில் சயனைட் குப்பியும் கடைசி நேரத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றக்கூடிய வாய்ப்புக்களும் சாதனங்களும் பல இருந்தும் மக்களை விட்டு ஓட விரும்பாத காரணத்தினால் புறமுதுகு காட்டாமல் உயிர்நீத்த அவரைப் பற்றியோ வேறு யாரைப் பற்றியுமோ விமர்சிக்கின்ற உரிமை அரியநேந்திரனுக்கு மட்டுமல்ல உலகிலுள்ள எவருக்கும் இல்லை.

 

 

இது மட்டும் நூறுவீதம் உண்மை !

Link to comment
Share on other sites

ஏன் விமர்சிக்கும் உரிமை இல்லை..?

 

போர் நடந்தபோது மற்றவரின் பிள்ளைகளை போருக்கு அனுப்பிவிட்டு தன் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார் என்றார்கள்..

 

போர் முடிந்தபின்னால் மொக்குத்தனமாக எல்லாமே அழிந்துவிட்டது என்கிறார்கள்..

 

ஆகவே இந்த உலகில் மாறாதது ஒன்று விமர்சனம் ஒன்றுதான்.. :rolleyes:

 

 

Link to comment
Share on other sites

எனது கண்ணிலிருந்து இலகுவாக கண்ணீர் எந்தச் சந்தர்ப்பத்திலும் வருவதில்லை.

ஆனால் பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரனின் முதுகிலே அல்லாமல் நெஞ்சிலே

குண்டு பாய்ந்த அடையாளத்தை கண்டவுடன் அதிர்ந்து போனேன். என்னையறியாமலேயே

கண்ணீர் சிந்திவிட்டேன். சரி பிழை ஒருபுறமிருக்க, பிரபாகரனின் கழுத்தில்

சயனைட் குப்பியும் கடைசி நேரத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும்

காப்பாற்றக்கூடிய வாய்ப்புக்களும் சாதனங்களும் பல இருந்தும் மக்களை விட்டு

ஓட விரும்பாத காரணத்தினால் புறமுதுகு காட்டாமல் உயிர்நீத்த அவரைப் பற்றியோ

வேறு யாரைப் பற்றியுமோ விமர்சிக்கின்ற உரிமை அரியநேந்திரனுக்கு மட்டுமல்ல

உலகிலுள்ள எவருக்கும் இல்லை.

இது மட்டும் நூறுவீதம் உண்மை !

Link to comment
Share on other sites

ஏதாவது ஒரு நாடு துணிந்து வந்து தமிழ் மக்களுக்கு பல் வேறு உதவிகளையும் செய்து தொண்டாற்றி வருகிறது என்றால் அது இந்தியா மாத்திரமேயாகும். மற்றைய நாடுகள் அரசின் ஊடாகவே உதவின. இதில் மக்களுக்கு கிடைத்தது சிறு துளியேயாகும்

"ஆயிரம் பொய்யை சொல்லித்தன்னும் ஒரு கலியாணத்தை கட்டு"

 

நான் நேரத்திற்கே இப்படி பிரச்சனை வரும் என்றதால்த்தான் ஆனந்த சங்கரியை யாரும் கூட்டமைப்பிலிருந்து தாக்க கூடாது. அது நமது உரிமை மட்டுமே என்று எழுதினனான்.

 

வெண்ணை திரண்டுவரும் நேரம், முதல் அமைச்சர் பதவிக்காக அவர் தாழியை உடைத்துவிடுவார் என்பது இந்த கூட்டமைபினருக்கு விள்ங்காது. 

 

எப்பிடியோ K.P.யயும் ஒரு போடு போட்டிருக்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பாலச்சந்திரனின் புகைப் படத்தைப் பார்த்து என்னை அறியாமலேயே கண்ணீர் சிந்தினேன்: ஆனந்தசங்கரி
  By General 
2013-03-04 09:25:40
படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரன் உட்பட கொலையுண்;ட எமது மக்கள் அனைவரினது தொடர்பிலும் நீதி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.
 
பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரனின் முதுகில் அல்லாமல் நெஞ்சிலே குண்டு பாய்ந்த அடையாளத்தை கண்டவுடன் அதிர்ந்து போனேன். என்னை அறியாமலேயே கண்ணீர் சிந்தி விட்டேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது.  இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.   நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.