Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுப்புக்கூறுவதில் இருந்து சிறிலங்கா விலக முடியாது! - சுப்பிரமணிய சுவாமியின் கோரிக்கை நிராகரிப்பு!!

Featured Replies

பொறுப்புக்கூறுவதில் இருந்து சிறிலங்கா விலக முடியாது! - சுப்பிரமணிய சுவாமியின் கோரிக்கை நிராகரிப்பு!!

                                             2ff036db-4a8d-458c-960b-ee2170b5949b1.jp

                                        

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபை

மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்கா மீது அமெரிக்கா கொண்டு வந்துள்ள

தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என இந்திய ஜனதாக் கட்சியின்

தலைவர் சுப்பிரமணிய சுவாமி விடுத்த வேண்டுகோளை அமெரிக்கா முற்றாக

நிராகரித்துள்ளது.

 

அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை சுப்பிரமணிய

சுவாமியிடம் அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய

விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் நேரடியாக

தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின்

அழைப்பின் பேரில் கடந்த வாரம் கொழும்புக்கு விஜயம் செய்திருந்த இந்திய

ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த

ராஜபக்ச மற்றும் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரைச்

சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இதனையடுத்து

அமெரிக்காவுக்கு விஜயம் செய்த சுப்பிரமணிய சுவாமி அந்நாட்டின் தெற்கு

மற்றும் மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க அமைச்சர்

ரொபேர்ட் ஓ பிளேக்குடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இதன்போது

சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் படைத்துறைச் செயலாளர்

கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் தான் நடத்திய சந்திப்புக் குறித்து விரிவாக

விளக்கிய சுப்பிரமணிய சுவாமி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்கா

அழுத்தங்களைப் பிரயோகித்தால்  அது இந்தியாவுக்கு இராஜந்திர ரீதியில்

தாக்கங்களை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

அத்துடன்,

சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட சிறிலங்கா அரசாங்கம் விருப்புடன்

இருப்பதால் கொழும்பு மீதான அழுத்தங்கள் எதிர்காலத்தில் உள்நாட்டு தீர்வு

முயற்சிகளைப் பாதிக்கும் என்றும் சுப்பிரமணிய சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

சுப்பிரமணிய

சுவாமியின் கருத்துகளை செவிமடுத்த ரொபேட் ஓ பிளேக், பொறுப்புக்கூறும்

கடப்பாட்டிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் விலக முடியாது என்பதே வொஷிங்டனின்

நிலைப்பாடு எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஐ.நா

மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படவுள்ள சிறிலங்கா

மீதான தீர்மானத்தில் பாரிய திருத்தங்களை மேற்கொள்ள முடியாது என்றும் அவர்

குறிப்பிட்டுள்ளார்.

'இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு

விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் இதுவரை ஆக்கபூர்வமான பிரதிபலிப்பை

வெளிப்படுத்தவில்லை. இலங்கையில் மனிதவுரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக

விரோதச் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இவைகள் தொடர்பில்

சிறிலங்கா அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி காத்திரமான நடவடிக்கைகள்

எடுக்கும் வரை சர்வதேச சமூகம்  அழுத்தங்களைப் பிரயோகிக்கும்' என ரொபேர்ட் ஓ

பிளேக் சுப்பிரமணிய சுவாமியிடம் சுட்டிக்காட்டினார் என அமெரிக்க

இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

சுமார் ஒரு

மணி நேரம் இடம்பெற்ற ரொபேர்ட் ஓ பிளேக்குடனான சந்திப்பின் போது சிறிலங்கா

மீதான தீர்மானம் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு ஒரு உந்துசக்தியாக

அமையக் கூடாது எனவும், அது விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்கான

வாய்ப்பை அளித்துவிடும் எனவும் ரொபேர்ட் ஓ பிளேக்கிடம் சுப்பிரமணிய சுவாமி

குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான

சர்வதேச விசாரணைகள் மேற்கொள்வதை முற்றாக நிராகரித்திருந்த சுப்பிரமணிய

சுவாமி, இது தொடர்பில் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட சிறிலங்கா

அரசாங்கமே உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ரொபேர்ட் ஓ

பிளேக்கிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=2ff036db-4a8d-458c-960b-ee2170b5949b

அமெரிக்காவின் நிலைப்பாட்டை உறுதியாக்கிய சுவாமியை கொழும்பு மேற்கொண்டு அழைக்காது விடலாம் !

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போலக் கதவைப் பூட்டிப்போட்டுக் காலிலை விழுந்திருப்பார், சுவாமி! (இந்திய சாணக்கியம்???) :o

 

எதுக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்!

சுப்பு கதவு திறந்திருக்கவே காலில விழுந்திருக்கும்.
 
சுப்பு ஒரு ஊத்தை வாயன் என்ற படியால் ஒரு அரசியல் வாதிக்குரிய மரியாதையை அமெரிக்கா குடுத்திருக்கும். மேலும் இந்திய அரசியலில் செல்வாக்குச் செலுத்தவும் அமெரிக்காவுக்கு விருப்பம்.
 
அதோடு சுப்பு தான்தான் ஒரு தேசியவாதி மாதிரிக்காட்டுபவர். மேற்கு எதிர்ப்பாளர். அமெரிக்கா அவருடன் நட்பாக இருக்கிறது என்பது போல் காட்டினால் இந்தியாவில் போய் மேற்கு எதிர்ப்பு பீலா விட முடியாது.
 
அமேரிக்காவே இப்படியாக "தப்பு" செய்வதற்குரிய சந்தர்ப்பங்களை வழங்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.