Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டில்லி பாலியல் வல்லுறவு சம்பவம்: பிரதான சந்தேகநபர் சிறையில் தற்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
டில்லி பாலியல் வல்லுறவு சம்பவம்: பிரதான சந்தேகநபர் சிறையில் தற்கொலை
திங்கட்கிழமை, 11 மார்ச் 2013 10:35    
டில்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம் சிங் திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
 
கடந்த டிசெம்பர் மாதம் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு தெருவோரம் வீசப்பட்டார். 
 
இதில் படுகாயமடைந்த அவர் டெல்லி மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்.ஆனால் சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் கடந்த டிசெம்பர் 29ம் தேதி உயிர் இழந்தார். 
 
இந்த வழக்கில் சிறுவன் உட்;பட 6 பேரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதில் பஸ் சாரதியான ராம் சிங் தான் முக்கிய குற்றவாளியாக கண்டறியப்பட்டார். இந்த வழக்கில் அவரது தம்பி முகேஷும் கைது செய்யப்பட்டார்.
 
கைது செய்யப்பட்டதில் சிறுவனை தவிர மீதமுள்ள 5 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் பிற கைதிகள் தவிர தங்களுக்குள்ளும் பேசிக் கொள்வதை நிறுத்திவிட்டனர். இதையடுத்து அவர்கள் எங்கே தற்கொலை செய்து கொள்வார்களோ என்ற சந்தேகத்தின்பேரில் அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
 
இந்நிலையில் சிறை எண் 3ல் அடைக்கப்பட்டிருந்த ராம் சிங் இன்று காலை 5 மணிக்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் தீன் தயாள் உபத்யாய மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் நீதி தேவதை, இதிகாசங்களால் சிறைப்பிடிக்கப் பட்டு விட்டாள்! :D

 

====சுய தணிக்கை=====

Edited by புங்கையூரன்

இது கொலையாக கூட இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கைதிகள் வலுக்கட்டாயமாக உறவு வைத்ததால் என் மகன் பலி: ராம் சிங்கின் தந்தை புகார்!
Posted by: Siva Published: Monday, March 11, 2013, 15:00 [iST]
டெல்லி: டெல்லி பாலியல் வல்லுறவு வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் தற்கொலை செய்திருந்திருக்க முடியாது என்றும், அதை கொலையாகக் கருத வேண்டும் என்றும் அவரது பெற்றோர் மற்றும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பஸ் டிரைவர் ராம் சிங் திகார்
சிறையில் இன்று காலை 5 மணிக்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இது தற்கொலையல்ல கொலை என்கின்றார் அவரது தந்தை மாங்கே லால் சிங்.
இது குறித்து அவர் கூறுகையில்,
எனது மகன் தற்கொலை செய்யவில்லை. கடந்த 6 நாட்களுக்கு முன்பு நான் அவரை சந்தித்து பேசினேன். அப்போது அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறியதுடன் சக கைதிகள் தன்னிடம் வலுக்கட்டாயமாக உறவு வைத்ததாகவும் தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் அவரது கையில் பலத்த அடிபட்டது. அதனால் அவரால் தனது துணியை தூக்கு கயிறாக மாற்றியிருக்க முடியாது. ஒரு கையை வைத்து தூக்கு போட்டிருக்க முடியாது என்றார்.
ராம் சிங்கின் தாய் கல்யாணி தேவி கூறுகையில்,
கைது செய்யப்பட்டதில் இருந்து எனது மகனை கொடுமைப்படுத்தியுள்ளனர். அதனால் அவரது உடம்பில் ஏற்பட்ட தழும்புகளை என்னிடம் காட்டினார். அவர் தப்பு செய்துவிட்டார். அதை அவர் எங்களிடம் ஒப்புக் கொண்டார். கடவுள் கூட ஒரு குற்றம் செய்தால் மன்னிப்பார். ஆனால் அவருக்கு வருந்த வாய்ப்பளிக்கவில்லை என்றார்.
தனது கட்சிக்காரர் ராம்சிங்கின் மரணத்தை கொலையாகக் கருத வேண்டும் என்று வழக்கறிஞர் வி.கே. ஆனந்த் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், அவர் தற்கொலை செய்திருக்க முடியாது. நான் அவருடன் தினமும் தொடர்பில் இருந்தேன். அவர் தற்கொலை செய்திருந்தால் கடிதம் இருந்திருக்க வேண்டும். இது குறித்து சுதந்திரமான விசாரணை தேவை. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான சிசிடிவி வீடியோ இல்லை. அவர் கடந்த 2 மாதங்களாக பல முறை கொடுமைப்பத்தப்பட்டார் என்றார்.
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கை ஏலாது ரைட்டு.. :unsure: ஆனால் பஸ் மட்டும் ஓட்ட முடியுமா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கைதிகள் வலுக்கட்டாயமாக உறவு வைத்ததால் என் மகன் பலி: ராம் சிங்கின் தந்தை புகார்!
Posted by: Siva Published: Monday, March 11, 2013, 15:00 [iST]
 சக கைதிகள் தன்னிடம் வலுக்கட்டாயமாக உறவு வைத்ததாகவும் தெரிவித்தார்.

 

என்னப்பா

சிறையிலுள்ளவர்கள் பலருக்கு  இவரைவிட தண்டனை அதிகம் கொடுக்கணும் போல இருக்கே..

Edited by விசுகு

பாலியல் பலாத்காரம் செய்யும் அளவிற்கு திறனுள்ள கைகளால் தற்கொலைக்கான தூக்கு கயிறை மாட்ட முடியாதா என்ன? தூக்குபோடும் நபருக்கு ஒரு வேலை மிச்சமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படியோ, வேளை முடிஞ்சது. என்ன தண்டனை தருவது என்று இனி யாரும் மண்டைய பிச்சிக்க மாட்டாங்க!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கை ஏலாது ரைட்டு.. :unsure: ஆனால் பஸ் மட்டும் ஓட்ட முடியுமா? :rolleyes:

ஒரு கையிலேயே ஓட்டி இருப்பார் போல!!??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

" திகாரில் அடைப்பதற்கு பதிலாக எங்களை சுட்டு கொன்றுவிடுங்கள்

செவ்வாய், 12 மார்ச் 2013( 10:17 IST )

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள், தங்களை சுட்டுக் கொன்று விடுங்கள் எனவும், ஆனால் திகார் சிறையில் மட்டும் அடைக்க வேண்டாம் எனவும் நீதிமன்றத்தில் கதறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைநகர் டெல்லியில் ஓட்டும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பேருந்து ஓட்டுனர், திகார் சிறையில் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள மற்ற 5 குற்றவாளிகளும் விசாரணைக்காக நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் குற்றவாளிகள் 5 பேரையும் திகாரில் உள்ள வேறு சிறைக்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டார். அப்போது தங்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுமாறும், திகார் சிறையில் அடைக்க வேண்டாம் எனவும் குற்றவாளிகள் 5 பேரும் நீதிபதியிடம் கூறியிருப்பதாக தெரிகிறது.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1303/12/1130312002_1.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.