Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கடல் எல்லையில் 'ஹெலி' ரோந்து: நாராயணசாமி

Featured Replies

இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்ற நிலையில் இந்திய அரசாங்கத்தின் கோரிக்கையை கவனத்தில் எடுக்காது இலங்கை அரசு செயற்படுவது கண்டனத்திற்குரியது. தமிழக, காரைக்கால் மீனவர்களை பாதுகாக்க இலங்கை கடல் எல்லையில் ஹெலிக்கெப்டர் ரோந்து பணியை தீவிரப்படுத்தவேண்டும் என்று இணை அமைச்சர்  நாராயணசாமி
தெரிவித்தார்.

 

 

காரைக்காலில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


''கடந்த சில தினங்களாக காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்களை பாதுகாக்க இந்திய அரசு பலமுறை இலங்கை அரசுடன் பேசி உள்ளது.

 

ஆனாலும் இலங்கை அரசு அதற்கு செவி சாய்க்காமல், அராஜக போக்குடன் நடந்து வருவது கண்டனத்திற்குரியது. தமிழக, காரைக்கால் மீனவர்களை பாதுகாக்க நமது கடற்பகுதியில் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும்.

 

நமது மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்திய, இலங்கை கடல் எல்லைப் பகுதியில் நமது கடற்படையினரின் ரோந்து நடமாட்டத்தை அதிகரிக்க வேண்டும். இதுதொடர்பாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரை  சந்தித்து பேச உள்ளேன்.


மேலும், இந்திய கடலோரக் காவல்படை தலைவர் சர்மாவையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன்.

 

ஹெலிகாப்டர் மூலமும் நமது கடற்பகுதியில் ரோந்து பணியை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.


தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தும் வகையில் இந்திய மீனவ சமுதாய தலைவர்கள் மற்றும் இலங்கை மீனவ சமுதாயத் தலைவர்களும் சந்தித்து பேசி ஒரு ஒப்பந்த அடிப்படையில் வழி காண இலங்கை அரசை இந்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் அதற்கு இலங்கை அரசு செவி சாய்க்காமல் இருந்து வந்தது.

 

இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து தமிழக தலைமைச் செயலருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், இலங்கை மீனவர்கள், தமிழக மீனவ சமுதாயத்தினரை சந்தித்து பேச தயாராக உள்ளனர். எனவே அதற்கு தமிழக அரசு பூரண ஒத்துழைப்பு தரவேண்டும். சுமூகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு பதிலளிக்கவில்லை.


கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அதற்கும் தமிழக அரசிடமிருந்து பதில் கடிதம் இல்லை. தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் தாக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால், இந்திய இலங்கை மீனவ தலைவர்கள் அமர்ந்து பேசி சுமூகமான தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும்.

 

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் துப்பாக்கிக்குண்டு பட்டு காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கிளிஞ்சல்மேட்டை சேர்ந்த மீனவர் செண்பகத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.


கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதற்காக இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா சபையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவால் தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்றும் அவர் சொன்னார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60501-2013-03-11-18-58-33.html

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர் பிரச்சினையைக் காட்டி உள்ளே போவார்களோ? :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர் பிரச்சினையைக் காட்டி உள்ளே போவார்களோ? :rolleyes::unsure:

காயப் பட்ட சிங்கள கடற்ப்படையினரைக் காவிக் கொண்டுபோய்க் கொழும்பில விட்டிட்டு வரவா இருக்கும்! :wub:

 

நாரயணசாமியிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

காயப் பட்ட சிங்கள கடற்ப்படையினரைக் காவிக் கொண்டுபோய்க் கொழும்பில விட்டிட்டு வரவா இருக்கும்! :wub:

 

நாரயணசாமியிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

 

இந்தியா ஒரு சந்தர்ப்பத்தைப் பார்த்திருப்பதைப் போலவும், உள்ளே சென்று குழப்பத்தை ஏற்படுத்தி தன்னைப் பாதுகாக்கும் வாய்ப்பைத் தேடுவது போலவும் என உள்ளுணர்வு சொல்லுது புங்கை.. :D

இந்தியா ஒரு சந்தர்ப்பத்தைப் பார்த்திருப்பதைப் போலவும், உள்ளே சென்று குழப்பத்தை ஏற்படுத்தி தன்னைப் பாதுகாக்கும் வாய்ப்பைத் தேடுவது போலவும் என உள்ளுணர்வு சொல்லுது புங்கை.. :D

 

அவ்வாறு ஒரு நோக்கம் இருந்தால் தமிழர்கள் வட கிழக்கை இந்தியாவுடன் இணைத்த ஒரு மாநிலமாக்கும்படி இந்திய நடுவண் அரசை வலியுறுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வாறு ஒரு நோக்கம் இருந்தால் தமிழர்கள் வட கிழக்கை இந்தியாவுடன் இணைத்த ஒரு மாநிலமாக்கும்படி இந்திய நடுவண் அரசை வலியுறுத்த வேண்டும்.

 

அது நல்ல ஐடியா.. பிறகு தமிழக மீனவர்கள் சூடு வாங்கவேண்டியதில்லை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஏன் சேர்ந்து இழந்தோமென புடுங்குபாடு பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு குழுவுமா? நல்ல வேடிக்கை!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஏன் சேர்ந்து இழந்தோமென புடுங்குபாடு பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு குழுவுமா? நல்ல வேடிக்கை!

ஆனால், இலங்கையின் வடபகுதியில் இந்தியா செய்யும் கூத்துக்களைப் பார்க்கும்போது இந்தியாவுக்க இந்தத் திட்டம் இருக்கின்றது என்பதில், சந்தேகமில்லை! :D

 

ஆனால் இந்தியாவிடம் 'VISION' என்றுமே இருந்ததில்லை! :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.