Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

ஹைதராபத்தில் வேலை செய்யும் இளைஞர்கள் நாளை நடத்தவிருக்கும் போராட்டத்தின் சுவொரொட்டி

 

72351_463067827100509_1397535433_n.jpg

 

- முகநூல் -

  • Replies 1.3k
  • Views 119.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

- மன்னிக்கவும், ஏற்கனவே இணைக்கப்பட்டு விட்டது. :D -

Edited by துளசி

எமது விடுதலைக்கான புதியபாதை ஒன்றை தேர்ந்தெடுத்து அதன் வழிபோராடும் எமது தமிழக உறவுகளுக்கு முற்றுமுழுதான ஆதரவை தெரிவித்துகொள்கிறேன்.
 
    அந்த போராட்டங்களின் உண்மை நிலையை உடனுக்குடன் தெரிவிக்கும் யாழ்  உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

தமிழ்நாட்டின் அனைத்துக் கல்லூரி மாணவர்கள், மாணவிகள், மனித உரிமை ஆர்வலர்கள், தங்களின் நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைத்து தமிழர்களையும் கையெழுத்திட வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

http://www.change.org/petitions/president-of-the-eu-un-uk-us-france-foreign-ministers-tamils-need-justice

 

Loyolahungerstrike

-முகநூல் -

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்
poraddam.jpg
 
 

 

தமிழக மாணவர்களுக்கு ஆதரவளிக்க சோம் பிரகாஷ் MLA சென்னை வருகிறார்.


மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே, அகிம்சையை போதித்த மண்ணில் கால் வைக்கக் கூடாது என ராஜபக்சேவை புத்தகயாவில் கடும் எதிர்ப்பை தெரிவித்த பீகாரைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏசோம் பிரகாஷ் தமிழக மாணவர்களுக்கு ஆதரவளிக்க சென்னை வருகிறார்.

ஜெனிவாவில்..
இலங்கையில் தனி ஈழத்திற்க்கான கோரிக்கையை இந்தியா வைக்கவில்லை எனில் இனி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பணியில் தொடர கூடாது. மாணவர் மத்தியில் குறுஞ்செய்தியில் தகவல் பரிமாற்றம்.

இதை தவிர அவர்கள் எதையும் செய்து புடுங்க வேண்டாம். தனி ஈழ கோரிக்கை கேட்டு போராடுங்கள் இல்லையேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிமை படுத்தப்படுவீர்கள்
.

 

-முகநூல் -



இன்றைய தினம் குறிப்பிடும் படியாக வலிமை பெற்ற களங்கள் :


பாளை போராட்டம்.
கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி போராட்டம்.
கோவை மற்றும் ராமநாதபுரம் பள்ளி மாணவர்கள் போராட்டம்.
நெய்வேலி முன்னாள் மாணவர்கள் போராட்டம்.
சென்னை சட்ட கல்லூரி மற்றும் கலை கல்லூரிகள் போராட்டம்.
விருத்தாசலம் போராட்டம்.
மதுரை போராட்டம்.
ரயில் மறியல்.
தஞ்சை பெரியகோவில் போராட்டம்.
ப சிதம்பரத்துக்கு கருப்பு கொடி போராட்டம்.
பெப்சி ஆதரவு.
பொறியியல் கல்லூரிகள் போராட்டத்தில் குதிப்பு.
வழக்கறிஞர்கள் களத்தில் குதிப்பு.
கோயம்பேடு சந்தை ஊழியர்கள் ஆதரவு.
பெங்களூரு போராட்டம் முயற்சி.

 

-முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்
poraddam.jpg
 
 

விற்கு மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே, அகிம்சையை போதித்த மண்ணில் கால் வைக்கக் கூடாது என ராஜபக்சேவை புத்தகயாவில் திருப்பிகடும் எத்ரிப்பை திர்ப்பை தெரிவித்த அனுப்பிய பீகாரைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏசோம் பிரகாஷ் தமிழக மாணவர்களுக்கு ஆதரவளிக்க நாளை சென்னை வருகிறார்.

பீகார் ஒபரா தொகுதியை சேர்ந்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சோம் பிரகாஷ் சிங்(38), முன்னாள் காவல்துறை அதிகாரியான இவரது முக்கிய குறிக்கோளே லஞ்ச ஒழிப்பு தான். ஈழத் தமிழர்கள் அனுபவித்த கொடுமையை அறிந்த அவர், ராஜபக்ச வருகையை கண்டித்தார் 

சம தர்மத்தை போதித்த நமது பாரத தேசத்தின், அண்டை நாடான இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழம் அமைவதற்கும் போராடிக் கொண்டிருந்த தமிழர்களின் மீது இறுதிக் கட்ட போரில் நடந்த பேரிழப்புகள், துன்பங்கள் கணக்கில் அடங்காதவை.

தமிழர்களின் உரிமை களை கொடுப்பதற்கு பதிலாக அவர்களிடம் இவர்கள் பறித்தது 1 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்களின் உயிர்கள். தமிழர்கள் இருந்தால் தானே அவர்கள் உரிமைகள் கேட்பதற்கு என்ற குறிக் கோளோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ராஜ பக்சே, தனது சொந்த மக்கள் மீது போர் தொடுத்து, நரபலியில் ஹிட்லரை பின்னுக்கு தள்ளி உள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு மனித மிருகம் வருவது நமது நாட்டிற்கே கேடு. உலகிற்கே அகிம்சையை போதித்த புத்தர் பிறந்த மண் புத்த கயா. சாம்ராட் அசோகர் தனது ஆயு தத்தை தூக்கி எறிந்து உலகம் முழுவதும் அகிம்சையை போதிப்பதற்கு இந்த இடத்திலிருந்து தான் பிரசாரம் தொடங்கினார்.

இந்த மண்ணில் தான், நமது சகோதரர்களான தமிழர்களையும் கூடவே மனிதாபிமானத்தையும் கொன்று குவித்த ராஜபக்ச வருவதற்கு நாம் என்றுமே அனுமதிக்க கூடாது. என்று ராஜபக்சேவின் வருகையை கண்டித்து போராட்டம் நடத்தியவர்

அகிம்சை வழி அரசுக்கு பிடிக்கவில்லை போலும். ஒடுக்க நினைக்கிறார்கள். நாளை மட்டுமே அவகாசம். போராட்ட உத்தி மாறப்போகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய தினம் கோவை மாணவர்கள் செய்த மாற்றத்தை தான் தமிழகம் எதிர்பாக்கிறது ! வெறும் உண்ணா நிலை போராட்டம் நமக்கு வலிமை சேர்க்காது ! கூடுவோம் ஒன்றாய் ! காட்டுவோம் நம் வலிமையை.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காரைக்குடியில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர் நால்வர் சற்று முன்பு கைது - போராட்டம் தொடரும் என அறிவிப்பு.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கவனத்திற்கு!!! பெங்களூரில் போராட்டம்.

"தமிழீழம்" ஆதரவு வேண்டி நாளை (17-03-2013) Town Hall அருகே "அடையாள உண்ணாநிலை" கண்டனப் போரட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். அனைத்து நண்பர்களும் தவறாமல் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுகொள்கிறோம்.

Place: Bangalore Town Hall
Time: 9 AM

தொடர்புக்கு,

பாலாஜி முருகன்: + 91-9986840809
தோழர் ஜகன்மணி : - +91-9035216094
தோழர் அருண் : +91-9620225885

 

- முகநூல் -

அன்று வெறும் 8 கைகள் தானே அடக்கி விடுவோம் என்று நினைத்தாய்.
இன்று 8 ஆயிரம் கைகள்.
நாளை பல லட்சம் கைகள்.
மாணவர்கள் மனது வைத்தால் பல கோடி கைகள் துணை நிற்கும்.

உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா !!!!!

 

- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்
54142224.jpg
 
 

 

தோழர்களே !!! அடுத்த தலைமுறை வந்துவிட்டது நமோடு போராட... வெற்றியை நோக்கி பயணிக்கிறோம் என்று நம்புவோம்... ஓசூரில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்துக்கு மாணவர்கள் ஆதரவு பெருகி கொண்டிருக்கும் இந்த கட்டத்தில்... நமது "தன்மானம் கலைகளத்தின்" மாணவனான கிட்டு என்கிற தமிழ்மாறன், 7 வகுப்பு மாணவன் வந்து உண்ணாநிலை போராட்டத்தில் அமர்ந்து உள்ளன்... தொடர்ந்து உன்னநிலையில் இருபதாக கூரிக்கொண்டிருக்கிறான் நாங்கள் அவனை அவன் நலம் கருதி அவன் உண்ணாநிலையில் இருக்க கூடாது என்று கேட்டுகொண்டோம் அவன் நானும் தமிழன் நான் இருப்பேன் என்று கூறி அமர்ந்திருந்தான்...பின் நங்கள் மிகவும் வேண்டி கேட்டுகொண்டதால் அவன் போரட்ட கூடத்தில் ஆதரவு மட்டும் தெரிவித்து சென்றான்... போராட களத்துக்கு வர பயப்படும் அணைத்து மாணவர்களுக்கும் ஒரு பதிலடி கொடுத்து நம்பிக்கை வரவைதுல்லான்...!!! உதவாது இனி ஒரு தாமதம் உடனே எழு தமிழா !!! இப்படிக்கு, என்றும், தோழமையுடன்.தன்மானம் சக்ரவர்த்தி.மு.ம

இதில் என் https://www.facebook.com/tamilnaduhungerstrike ஆதரவு போடாமல் அங்கு இருந்து copy பண்ணி தனிப்பட்ட முறையில் போடுகிர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என் https://www.facebook.com/tamilnaduhungerstrike ஆதரவு போடாமல் அங்கு இருந்து copy பண்ணி தனிப்பட்ட முறையில் போடுகிர்கள்

உறவே எல்லா யாழ் உறவுகளுக்கும் முக புத்தகம் இருக்கும் என்று தெரிய வில்லை...முக புத்தகம் இல்லாத ஆக்கல்...யாழில் வந்து பார்க்க சுகமாய் இருக்கும் எல்லோ..நான் அந்த லிங்சில like பண்ணிட்டன் மூன்று நாளுக்கு முதல் நண்பர்களுக்கு அறிய குடுத்து இருந்தேன்

நன்றி

இந்த திரியில் ஆரம்பத்தில் இருந்து கருத்து எழுதின ஆக்களின் கருத்தை வாசிச்ச தெரியும்....!

தவறாக கேட்டு இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
fghgfhfhgfh.jpg

இதில் என் https://www.facebook.com/tamilnaduhungerstrike ஆதரவு போடாமல் அங்கு இருந்து copy பண்ணி தனிப்பட்ட முறையில் போடுகிர்கள்

 

நல்லவேளை நான் ஏற்கனவே like போட்டிருக்கிறேன். :D எனவே நீங்கள் என்னை கேட்கவில்லை தானே? :icon_idea:

 

ஆனால் சிலவேளை நண்பர்கள் மூலம் பகிரப்பட்டு வந்தால் அதையும் இங்கு இணைப்பதுண்டு. அதற்குரியவர்கள் யார் என்று பார்ப்பதில்லை. :rolleyes: ஆனால் முகநூலில் இருந்து பெறப்பட்டது என்று போடுவேன்.

 

பையன் அண்ணாவும், மூலம்: முகநூல் என்று போட்டால் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும். :rolleyes:

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என் https://www.facebook.com/tamilnaduhungerstrike ஆதரவு போடாமல் அங்கு இருந்து copy பண்ணி தனிப்பட்ட முறையில் போடுகிர்கள்

உறவே மன்னிக்கவும் நீங்கள் கேட்ட கேள்ளி என்னவோ நான் அளித்த பதில் வேர...சரி அடுத்த‌ முறை போடுறன்.... :unsure:

நல்லவேளை நான் ஏற்கனவே like போட்டிருக்கிறேன். :D எனவே நீங்கள் என்னை கேட்கவில்லை தானே? :icon_idea:

 

ஆனால் சிலவேளை நண்பர்கள் மூலம் பகிரப்பட்டு வந்தால் அதையும் இங்கு இணைப்பதுண்டு. அதற்குரியவர்கள் யார் என்று பார்ப்பதில்லை. :rolleyes: ஆனால் முகநூலில் இருந்து பெறப்பட்டது என்று போடுவேன்.

 

பையன் அண்ணாவும், மூலம்: முகநூல் என்று போட்டால் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும். :rolleyes:

 

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி துளசி அக்கா

சென்னை-புதுகோட்டை-திருச்சி -திருநெல்வேலி-செங்கல்பட்டு-மதுரை-கோவை-திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாணவர் பிரதிநிதிகள் இன்று சென்னை வந்தனர். அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வர இயலாத மற்ற மாவட்ட தோழர்களுக்கும் அது தெரிவிக்கப்பட்டது..

கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டாலும் போராட்டம் முனை மழுங்காது நடக்கும்!!

 

480457_447393375336565_1009279116_n.jpg

 

530491_447394602003109_363233687_n.jpg

 

- முகநூல் -

Edited by துளசி

பழனி சுப்ரமணியா பொறியியல் கல்லூரி மாணவர்கள் தனித்தமிழீழம் வேண்டியும், இலங்கை மீது பொருளாதார தடை கோரியும், தமிழர் பகுதியிலிருந்து சிங்கள படைகளை விலக்க கோரியும், பூந்தமல்லி செங்கல்பட்டு அகதிமுகாமை மூட கோரியும் பழனியில் பேரணியும் ஆர்ப்பாட்டமும் அதன் பின் தபால் தந்தி நிலையத்தை முற்றுகையிட்டும் உள்நுழைந்து பூட்டியும் ராஜபக்ஸ, சோனியா காந்தியின் உருவ பொம்மைகளை எரித்தும் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். தொடர்ந்து தங்கள் போராட்டத்தை பல்வேறு தளங்களுக்கு கொண்டு செல்லும் அவர்களுக்கு நம் பாராட்டுகளை தெரிவிப்போம்.

தொடர்புகளுக்கு: தமிழ்ச்செல்வன்- 8940254065

 

- முகநூல் -

Edited by துளசி

நாமக்கலில் இருக்கும் மாணவர்கள் போராட்டத்தில் இணைய தொடர்பு கொள்ளுங்கள் 9688818828

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

வருகிற 21-ந்தேதி 40 எம்.பி.க்கள் அலுவலகங்களிலும் மாணவர்கள் முற்றுகை போராட்டம்: மாணவர் கூட்டமைப்பினர் அறிவிப்பு.

 

- முகநூல் -

Edited by துளசி

இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து இந்தியாவை தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி எண்ணூர் அசோக்லேலண்டு வாயிலில் நாளை-(மார்ச்-17) தொழிலாளர் உண்ணாவிரதம்.

இலங்கை அரசு செய்த தமிழினப் படுகொலையைக் கண்டித்தும், இனப்படுகொலையைக் கண்டிக்கும் தீர்மானத்தை ஐ.நா.மாநாட்டில் இந்தியாவே கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியும், சர்வதேச சுதந்திர விசாரணைக்கு வழிவகுக்கக் கோரியும், தனித் தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரியும் - அசோக் லேலண்டு தொழிற்சாலை வாயிலில் தொழிலாளர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் 17.03.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அசோக் லேலண்டு தமிழின உணர்வாளர்கள் இயக்கம் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஒருங்கிணைக்கிறது.

எண்ணூர் அசோக்லேலண்டு பிரதான வாயிலில் நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தை மார்ச் 17 ஞாயிற்றுக்கிழமை காலையில் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் தொடங்கிவைக்கிறார்.

முற்பகல் 11.30 மணிக்கு நடக்கும் சிறப்பு வாயில் கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

மாலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவைக்கிறார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இரா.வந்தியத்தேவன் தலைமை வகிக்கிறார்.

தொழில் நகரமான வடசென்னையில் அசோக் லேலண்டு தொழிலாளர்கள் ஒருங்கிணைக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், மற்ற தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்கின்றனர் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி... வணக்கம்!

ஒருங்கிணைப்புக் குழுவுக்காக,
இரா.பழனி (எ) வந்தியத்தேவன்.
அலைபேசி: 98400 53710, 98408 35458.

- முகநூல் -

வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன்பு இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

 

வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன்பு இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தினர். இலங்கை அதிபரை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரியும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதற்காக இப்போராட்டம் நடத்தபடுவதாகவும் இப்போராட்டத்தின் ஒருங்கினைப்பாளர் வெற்றிவேல் கூறினார்.


இது தொடர்பாக மத்திய,மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் நாங்கள் போராட்டம் நடத்துகின்றோம் அரசின் அலச்சியபோக்கு நீடித்தால் எங்கள் போராட்டம் தொடர் உண்ணாவிரதம் போராட்டமாக மாறிவிடும் நம் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள் அங்கே சித்தரவதை செய்யப்பட்டு தினமும் கொல்லபடுகின்றனர். அவர்களை மீட்க நாங்கள் உயிர் உள்ளவரை போராடுவோம் இப்போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு கொடுக்கவேண்டும் இவ்வாறு வெற்றிசெல்வன் கூறினார்.

 

இப்போராட்டத்தில் சுமார் 500 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.  இதனால் போக்குவரத்துக்கு ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது காவல் துறையினர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட கோரி கேட்டனர். ஆனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.


 முகநூல் -

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் சீமான்.

 

http://www.youtube.com/watch?v=LNuJlU1jMdk

இங்கே ராஜபக்சவை தண்டிக்க வேண்டும் என்பது தவறு, இது தமிழனுக்கும் ராஜபக்சவுக்கும் இடையிலான போர் அல்ல, இது தமிழ் இனத்துக்கும் சிங்கள இனத்துக்கும் இடையிலான போர்.

இங்கே ராஜபக்சவை தண்டிக்க வேண்டும் என்பது தவறு, இது தமிழனுக்கும் ராஜபக்சவுக்கும் இடையிலான போர் அல்ல, இது தமிழ் இனத்துக்கும் சிங்கள இனத்துக்கும் இடையிலான போர்.

உண்மையில் அவர்கள் கோருவது இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்று இலங்கை மீது சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் மற்றும் சுதந்திர தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து ஐநாவில் தீர்மானம் கொண்டுவரும்படி...

 

அவர்கள் கோரிக்கைகளில் சில இந்த இணைப்பில் உள்ளன.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119014&p=875618

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

"போராட்ட வழி முறைகள் மாறலாம் இலட்சியம் மாறது" என்ற அடிப்படையில் மாணவர்களின் வலிமையை காட்டுவதற்கு அணியமாகின்றனர் தமிழக மாணவர்கள் படையணி.

734438_272021656265916_1489426465_n.jpg

 

 - முகநூல் -

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.