Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

63064_596071703738192_903246756_n.jpg

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சேவுக்கு இறுதி ஊர்வலம் நடத்தி,

மேளம் தாளம் ஆட்டம் பாட்டத்துடன்

தீ வைத்த மாணவர்கள்

rajapaksay-001.jpg

 

rajapaksay-002.jpg

 

 சென்னை கடற்கரையில் 20.03.2013 புதன்கிழமை பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, ராஜபக்சேவின் உருவபொம்மையை மேளம் தாளம் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று தீவைத்தனர்.

செய்தியின் மூலம்: நக்கீரன்.

படங்கள்: ஸ்டாலின்

Link to comment
Share on other sites

#Loyolahungerstrike

கல்லூரி சாலையில் மாணவர் பேரணி தொடங்கியது . மாணவர்கள் அதிரடி கோரிக்கை : 

ஐ.பி.எல் கிரிக்கெட் விளையாட்டில் சிங்களவர்களை தமிழ்நாட்டில் விளையாட நாங்கள் அனுமதியோம் . மீறி விளையாடினால் , விளையாட்டு மைதானத்தை மாணவர்கள் முற்றுகையிடுவோம் .

 

Rajkumar Palaniswamy

பேரணியாக சென்ற மாணவர்கள் காவல் துறையின் அடுக்குமுறையை மீறி சாலையில் ஓடத் தொடங்கினர் . காவல் துறை அவர்கள் பின்னல் ஓடுகின்றனர். மாணவர்கள் சாஸ்திரி பவன் அருகில் சாலை மறியல் . காவல் துறை தற்போது மாணவர்களை தாக்க முற்படுகின்றனர் . அடுக்குமுறையில் மாணவர்களை முடக்கி விடலாம் என காவல் துறை நினைக்கிறது . மாணவர் சாலை மறியலால் போக்குவரத்து இருபது நிமிடங்கள் முடக்கம் .

 

ஹரி ஹரன்

கல்லூரி சாலையில் பேரணியாக சென்ற மாணவர்கள் ப.சிதம்பரம் வீட்டையும் சாஸ்திரி பவனையும் முற்றுகையிட்டு, அமெரிக்க கொடி மற்றும் இலங்கை கொடியை எரித்துள்ளனர்...

 

ஹரி ஹரன்

 

 


ப.சிதம்பரம் வீட்டையும் சாஸ்திரி பவனையும் முற்றுகையிட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு ராஜ ரத்தினம் மைதானம் எழும்பூருக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். மாணவர்க்ளுக்கு செவ்வணக்கம்...

Link to comment
Share on other sites

மெய்ப்பொருள் காண்பது அறிவு: இன்றைய காலை பத்திரிகைகள் பற்றிய பார்வை

 

http://www.youtube.com/watch?v=KMJcuib82qs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Indian Students Supporting TN Students protest for Tamil EELAM

 

Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian students started supporting Tamil Nadu students Protest seeking justice for Srilankan Genocide. Dedicating this video to all the freedom fighters and people of Tamil EELAM ..

 

 

 

- முகநூல் -

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யோகேந்திரன் உங்களின் இந்த முயற்சி  பாராட்டுக்குரியது ...
 
நன்றிகள் ... 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தணிக்கையாளர்கள் போராட்டம் (படங்கள்)
 
cs-students.jpg

இலங்கையின் மனித உரிமை மீறலைக் கண்டித்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் இன்று தணிக்கையாளர்கள் மற்றும் உடனிகழ் தணிக்கையாளர் மாணவர்கள் இணைந்து கண்டன போராட்டம் நடத்தினர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த இந்த போராட்டத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் அமெரிக்கா முதன்முதலாக கொண்டு வந்த திருத்தம் செய்ப்படாத தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக வலுவான தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாக கூறினார். இதில் தமிழர்கள் மட்டும் இல்லாமல், தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி ஆடிட்டர்கள் கலந்து கொண்டனர்.

 
Link to comment
Share on other sites

நங்கள் பள்ளிகரனையை சார்ந்த மாணவர்கள் நங்கள் போராட்டம் நடத்த கூடதென்று காவல் துறை எங்களை முன்கூடியே எங்களை கைது செய்து ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர், எங்களுக்கு ஒரு சட்ட ஆலோசகர் தேவைபடுகிறது தயவு செய்து உதவவும்.

 

 

எங்களுக்கு சட்ட ஆலோசகர் தேவை நண்பா
இப்படிக்கு தாமோதரன்
ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

9940246206

 

நம்முடைய வாக்காளர் அடையாள அட்டையை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம் திரும்ப ஒப்படைப்போம், நமக்கு தேவை இல்லை இந்த அரசியல் விளையாட்டு.

 

வாருங்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தை முற்றுகை இடுவோம்.

 

இப்படிக்கு
தாமோதரன்
9940246206

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காக்கிகளின் நக்கல் : 

போராடும் மாணவர்கள் கொந்தளிப்பு 

 

police%20kakki.jpg

 

 

 

 சேலம் பழைய பேருந்து நிலையம் எதிரேயே உள்ளது சேலம் மத்திய தபால் நிலையம் .இங்கே குவிந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாணவர்கள் ரோட்டிலேயே  அமர்ந்தனர்.

 

அரசு கலை கல்லூரி மாணவர் பகத்சிங் தலைமையில் திரண்ட மாணவர்கள் 'எங்கள் ரத்தம் தமிழ் ரத்தம் ஈழ ரத்தம் எங்கள் சொந்தம்' 'ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவி' என முழங்கினர்...அருகேயே இருந்த சேலம் டவுன் காவல்நிலைய  உடனடியாக அங்கே குவிந்தனர்.

 

'வயசு பசங்க காலேஜ கட் அடிச்சமா,சினிமா,பார்டின்னு போனமான்னு இல்லாம இங்க வந்து போராடிகிட்டு என்ன பசங்க நீங்க' என சில காக்கிகள் அசால்ட்டாக பேச கொந்தளித்துவிட்டனர் மாணவர்கள். 

 

ஆய்வாளர் சூரியமூர்த்தி போராடிய மாணவர்களை பார்த்து 'அனுமதி வாங்காம செய்றீங்க இது அபன்ஸ்' என்க 'நாங்க முறைப்படி அனுமதி கேட்டோம் நீங்க தரல  அதான் நாங்களா போராட உட்கார்ந்துட்டோம்.  எங்கள் ரத்த உறவுகள் அங்கே துடித்து கொண்டு இருக்கிறார்கள் இந்த முறையும் அவர்களை கைவிட்டால் எங்கள் மனசாட்சியே எங்களை அணுஅணுவாய் கொன்றுவிடும் எனவே நாங்கள் ஓயமாட்டோம்' என எழுச்சியாக பேச,

 

 அந்த சாலையை கடந்தவர்கள்  நின்று மாணவர்களுக்கு ஆதரவாக 'ஏம்பா இந்த வேகாத வெயில்ல அவங்க போராடுறத பார்த்து நாமெல்லாம் சந்தோசபடனும் அதவிட்டுட்டு இப்படி இழுத்துட்டு போக கூடாது' என காவல்துரையிடமே துணிச்சலாக பேசினர்.

 

ஒரு பெரியவர் 'ஏப்பா உடனே பத்ரிக்கைகாரங்கள கூப்பிடுங்க இந்த பசங்கள ஏதாவது பண்ணிட போறாங்க நம்மளால முடில அந்த பசங்களாவது செய்யட்டும் ஆனா பத்ரமா இருந்தா தான் எதையும் செய்ய முடியும்' என்றார் அன்போடு....

மாணவர்கள் போராட்டம் அனைத்துதரப்பட்ட மக்களின் ஆதரவோடு வீரியமாக பரவி செல்கிறது .

படங்கள்:  இளங்கோவன் 

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=94848

Link to comment
Share on other sites

Indian Students Supporting TN Students protest for Tamil EELAM

 

Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian students started supporting Tamil Nadu students Protest seeking justice for Srilankan Genocide. Dedicating this video to all the freedom fighters and people of Tamil EELAM ..

 

 

 

- முகநூல் -

 
 
 

 

நன்றி தமிழரசு..!

 

இந்தக் காணொளியை எல்லோரும் உங்கள் இந்திய நண்பர்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்..! அவசியம் செய்ய வேண்டியது..!!

Link to comment
Share on other sites

நாங்கள் எதற்கும் தயார், நாங்கள். வீர தமிழச்சிகள் @ Coimbatore

 

19196016.jpg85434967.jpg56553402.jpg

 

-முகநூல் -



சென்னை (நுங்கம்பாக்கம்) - காவல்துறை
தாக்கியதில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்­ அவசர சிகிச்சைப் பிரிவில்
மாணவர் கார்த்திக் கவலைக்கிடம் - அவசர தொடர்புக்கு ஒருங்கிணைப்பாளர் சீ
.தினேஷ் 9791162911.
--------------------------------
நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பயங்கர தடி அடி ... ஒரு மாணவர் மிகவும் கவலைக்கிடம் ....


சென்னையில் மத்திய அமைச்சர் ப .சிதம்பரம் வீடு முற்றுகை தமிழீழ
விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீ.தினேஷ் தலைமையில்
1000க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள்
முற்றுகையில் பங்கேற்றனர் .மாணவர்களை கைது செய்யும் போது காவல்துறைக்கும்­
மாணவர்களுக்கும்­ இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.இதி­ல் சில மாணவர்கள்
மயக்கமடைந்து ராயபேட்டை அரசு மருத்துவமனையில்­ அனுமதிக்கப்பட்ட­ுள்ளனர்
இந்த முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள
சாஸ்திரி பவனையும் மாணவர்கள் முற்றுகையிட்டனர­் .இதனால் அந்தப் பகுதியில்
போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது­ .தொடரும் மாணவர்களின் முற்றுகை
போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் காவல்துறையினர் திணறி
வருகின்றனர் .காவல்துறை தாக்கியதில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர­்களில்
ஒருவரான கார்த்தி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்­ அவசர சிகி.

93153520.jpg

Link to comment
Share on other sites

சூனியக்காரி சோனியா ,,ரத்தகாட்டேறி மன்மோஹன்சிங் , இனபடுகொலை கொடுங்கோலன் ராஜபக்சே மூவருக்கும் மதுரையில் தூக்கிலிட்ட மாணவர்கள்

 

10843541.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மீது பொருளாதார தடை விதி்க்ககோரி
புதுக்கோட்டை இளம் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

 

 
aarpat.jpg
   இலங்கை அரசு மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டும். தனித் தமிழ் ஈழமே ஈழத் தமிழர்களின் நிரந்தர தீர்வை தரும். அதனால் தனித் தமிழ் ஈழம் அமைய ஈழத் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். 

இனப்படுகொலை செய்த ராஜபக்சே மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு முன்வர வேண்டும் என்று புதுக்கோட்டையில் இளம் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

             - இரா.பகத்சிங்

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=94864

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டில் பொலிசு தமிழா அல்லது சிங்களமா? ஏன் இப்படி மாணவர்கள் மீது முறைக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

579214_596448180367211_1903090336_n.jpg

Loyolahungerstrike



திருப்பூரில் தற்போது நடந்து கொண்டு இருக்கும் 500 மேல் மாணவர்கள் கலந்து கொண்டு இருக்கும் பேரணி

மாணவர் முழ க்கம் " இலங்கை என்றால் இனிக்குதா தமிழ்நாடு நா கசக்குதா "
 
 

580886_596466580365371_881825829_n.jpg



Loyolahungerstrike

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மற்றவர்களுக்கு முன் மாதிரியான மாணவர்கள்!
*********************************************


இலங்கை பிரச்னை தொடர்பாக சென்னை, மெரினா கடற்கரையில் அனைத்து கல்லூரி மாணவர்களின் போராட்டம் நேற்று (மார்ச் 20) காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடந்தது. 

அப்போது குடிநீர் பாக்கெட், தாகம் தணிக்கும் பழங்கள், துண்டு பிரசுரங்கள் என பலவும் பயன்படுத்தப்பட்டன. மாலையில் காந்தி சிலை எதிரில் இலங்கைக்கு எதிராக கோஷம் எழுப்பிய, தீர்மான நகல்களையும் தீயிட்டும் கொளுத்தினர்.

அதையடுத்து போராட்டம் முடிவுக்கு வரவே, கலைய ஆரம்பித்த மாணவர்களில் பலரும்… தாங்கள் போராட்டம் நடத்திய இடத்தில் கிடந்த தண்ணீர் பாக்கெட்டுகள், துண்டு பிரசுரங்கள், தேவையற்ற பிளாஸ்டிக் என அனைத்தையும் சேகரித்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, புறப்பட்டு சென்றனர்.
 
 

24434_596468463698516_581237477_n.jpg



Loyolahungerstrike



உண்ணாவிரத மேடையில் பேசியதெல்லாம் கேட்டு, எதிரில் இருந்த தன்னுடைய தேநீர்கடையை மூடிவிட்டு, மாலைவரை உண்ணாவிரதத்தில் இருந்து, பின் பேசும்போது "அங்க இவ்வளவு கஷ்டப்பட்டாங்களா மக்கள்? இந்த சின்னபுள்ளையையா கொன்னாங்க? என் மகன் மாதிரியே இருக்கான்" என்று அழுத மல்லிகா அக்கா...
 
 
 

602711_596468270365202_1735703497_n.jpg

 

Loyolahungerstrike




IIT BOMBAY STUDENTS STAGING PROTEST : HUNGER STRIKE YESTERDAY 20.03.2013

 

269295_624451774238216_1455586192_n.jpg

 

Loyolahungerstrike



488033_596477810364248_901637560_n.jpg

 

Loyolahungerstrike



23,582



Total Likes

Total Likes
Link to comment
Share on other sites

போராட்டம் , மாணவர் போராட்டம்தான் அது அந்த வடிவம் பெற்றது இந்த வடிவம் பெற்றது என்று எதுவும் இல்லை . எதுவும் மாறவில்லை .


ஒரு குழுவாக கூடும் மாணவர்கள் அவர்களிற்கு என்ன தோன்றுகிறதோ அதை
செய்வார்கள் . அதை செய்து கொண்டு உள்ளார்கள் . மானவர்களிற்கு தெரியும்
அவர்கள் பகுதியில் உள்ள உள்ளூர் நிலைகளிற்கு ஏற்ப எப்படி போராடுவது என்று.


மத்தியமாக கூடி ஒரு மிகபெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம்
வெகு விரைவில் வரும் இன்னும் சில நாட்களில் மாணவர்கள் அனைவர்களிடமும் இது
பற்றி பேசுவோம் . எந்த மாணவர் குழுவும் தொய்வடைந்து விடவில்லை .
இப்போதுதான் Warm-up ஆகி உள்ளார்கள் . அந்த முதல் நிலை போராட்டத்தை
மட்டுமே தமிழகம் இப்போது பார்த்து உள்ளது .

மாணவர்களின் முழு சக்தி இன்னமும் பிரயோகபடுத்தபடவில்லை . அதற்கான கால சூழல் மிக அருகில் வருகிறது.

-------------------------------------------------------------------------------

நாளை காலை 11.00 மணிக்கு தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின்
அடுத்தக்கட்ட போராட்ட வடிவம்,ஐ நா மனித உரிமையில் அமெரிக்க்க தீர்மான
வாக்கெடுப்புக்கு பிறகு மாணவர்களின்போராட்ட முடிவு பற்றிய பத்திரிக்கையாளர்
சந்திப்பு நடைபெற உள்ளது.இடம் -பத்திரிக்கையாளர்கள் மன்றம்,
சேப்பாக்கம்,சென்னை.

 

-----------------------------------------------------------

 

இருபது ஆண்டுகளிற்கு பின்னர் அரசு அனுமதி பெற்று கூடும் ஈழ தமிழர்கள் , வள்ளுவர் கோட்டத்தில் (சென்னை ) உண்ணா விரதம் :


வள்ளுவர் கோட்டத்தில் , காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை
தமிழகத்தில் உள்ள ஈழ தமிழர்கள் ஐந்தாயிரம் பேர் மாபெரும் உண்ணாவிரத
நிகழ்வினை ஒருங்கிணைத்து உள்ளார்கள் .

சென்னையில் உள்ள நண்பர்கள் வள்ளுவர் கோட்டம் வாருங்கள் வந்து உண்ணா விரத நிலைக்கு ஆதரவு கொடுங்கள் .

Date : 22-03-13 morning 9 am to 5 pm , total expecting tamils around 5000 members+

 

-முகநூல்-

 

Link to comment
Share on other sites

தமிழ் இளைய சமுதாயமே , 1947இல் சுதந்திரம் கண்ட இந்தியா மீண்டும் கடந்த ஒன்பது
வருடங்களாக ஒரு வெள்ளைக்காரியிடம் அடிமைபட்டு கிடக்கிறது ; அவனும் இவனும்
மாறி மாறி ஆண்டு நம்மை மைவாங்கி விரல்களாக பயன்படுத்தியது போதும் ; இனி
தமிழரை வாக்கு வங்கியாக ஏலம் போடும் அரசியல்வாதிகள் நமக்கு தேவையில்லை ;
இனி தமிழர் எதிர்காலம் நம் மாணவர் கையில் ; எனவே வரும் நாடாளுமன்ற
தேர்தலில் தமிழ்நாட்டின் நாற்பது தொகுதிகளிலும் மாணவர் கூட்டமைப்பு சார்பாக
வேட்பாளரை நிறுத்துங்கள் ; கண்டிப்பாக அரசியல் வியாபாரிகளை தவிர எல்லோரும்
உங்களை ஆதரிப்பார்; நாற்பது தொகுதிகளிலும் உங்களுக்கு ஜெயம் நிச்சயம் ;
முதலில் தமிழகம் முழுவதும் மாணவர்களை ஒருங்கிணையுங்கள்; உங்களுக்குளே சட்ட
திட்டங்களை வகுங்கள்; அதற்க்கு அரசியல் சார்பற்ற தமிழ் சமூக ஆர்வலர்களை
உங்களோடு சேர்த்துகொள்ளுங்கள் ; ஒரு சுயகட்டுபாடான அமைப்பை உருவாக்குங்கள்
; இந்த ஒற்றுமையை பேணி காத்து வெற்றி கனியை பறியுங்கள்; உலக தமிழர்கள்
எல்லோரும் உங்கள் பின்னே ; தமிழன் மத்திய அரசிடம் இதுவரை குனிந்தது போதும் -
இனி தமிழனை நிமிர வைப்பது உங்கள் கையில் - நாற்பதை வென்றெடுத்து விட்டால்
இனி நடப்பதை தமிழன் முடிவு செய்வான் ..!
தயவு செய்து இதை எல்லோர்க்கும்
பகிர்ந்து கொள்ளவும் ; குறிப்பாக இளைய சமுதாயத்திற்கு ..!

 

-முகநூல்-

 

Link to comment
Share on other sites

மாணவர்களே, அடுத்தது என்ன, எப்படி?

புரட்சியைத் தொடங்குவது எளிது, ஆனால் தொடர்வது கடினம். ஒரு பெரும் புயலுக்கு நடுவே, ஒரு சின்ன அகல் விளக்கை அணையாமல் எடுத்துச் செல்லும் வித்தை போன்றது அது. அசாத்தியமானதல்ல என்றாலும் அசாதாரணமான சுய ஒழுக்கம், கட்டுப்பாடு அதிகம் தேவைப்படுகிறது.

களத்தில் நிற்கும் கல்லூரிகள், மாணவர்கள் அனைவரும் அவரவர் கல்லூரியில் அனைத்துத் தரப்பு மாணவ-மாணவியரை உள்ளடக்கிய 10 பேர் ஒருங்கிணைப்புக் குழுவை உடனடியாக ஏற்படுத்தியாக வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைவருமாக சேர்ந்து ஒரு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்துவதும் மிகவும் இன்றியமையாதது. பிற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுடனும் தொடர்பு ஏற்படுத்திப் பேசிக்கொண்டிருப்பது, தகவல் பரிமாறிக் கொள்வது மிக அவசியம்.

போராட்டத்தை ஃபேஸ் புக் புரட்சியாக மாற்றி விடாமல், சிறு துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள், ஒட்டுப்படம் (sticker) போன்றவற்றை அச்சடித்து, உங்கள் பகுதியில் வீடு வீடாக சென்று விநியோகித்து, மக்களை சந்தித்துப் பேசி, உங்களுக்கு தேவையான பொருளுதவியையும் கேட்டுப் பெறலாம். மக்கள் ஆதரவும், பொருளுதவியும் ஒருங்கேக் கிடைக்க இது ஒன்றே வழி.

கல்லூரி நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள் போன்றோரிடம் உறுதியாக ஆனால் மரியாதையாகப் பேசுவது நல்லது. அவர்கள் நம்மை வெறுக்கும்படியான மொழி, உடல்மொழி, கோஷம், அணுகுமுறை, அராஜகம் வேண்டாம். அதுபோல ஊடகங்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்வது முக்கியமானது.

கல்லூரி நிர்வாகமோ, மத்திய, மாநில அரசுகளோ போராட்டங்களை விரும்புவதில்லை, சமூக-பொருளாதார-அரசியல் ஏற்பாடுகளை மாற்றியமைக்கவும் எளிதில் முன்வருவதில்லை. பொறுமையிழக்காமல், உறுதி பிறழாமல், நம்பிக்கையிழக்காமல் தொடர்ந்து முன்னேறுவதுதான் ஒரே வழி. தொலைநோக்குப் பார்வை, அறிவுபூர்வமான அணுகுமுறை, தொடர்ந்த கருத்துப் பரிமாற்றம் அவசியம் வேண்டும்.

பெற்றோரின் கடின உழைப்பையும், காசையும் பெற்று வாழ்கிற மாணவர்கள் அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். கூடவே சமூகக் கடமையை ஏற்றுக் கொள்வதால் அதற்காகவும் உழைக்க வேண்டும். இரண்டுமே முக்கியமானதால், இரு மடங்கு உழைப்பைக் கொடுக்க வேண்டும். இது ஒன்றும் கடினமானதல்ல. நேர மேலாண்மை ரகசியம் தெரிந்தால் போதும்.

“படிப்பைப் பார், தேவையற்ற வேலை எதற்கு” என்றெல்லாம் இடித்துரைப்பார்கள் பலரும். இப்படி நல்லவர் எல்லோருமே ஒதுங்கிப் போனதால்தான் ஓர் அவல நிலைக்குள் சிக்கிக் கிடக்கிறோம். எங்கள் உலகை நாங்கள் உருவாக்குகிறோம், எந்த கல்லூரியும், பேராசிரியரும் கற்றுத்தராத பல அற்புதமான வாழ்க்கைப் பாடங்களை நாங்கள் பயில்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துங்கள். நாம் வளர நாடு வாழ்வது அவசியம்.

இருளுக்குள் உழன்று கொண்டிருந்த தமிழினம் உங்களால் நம்பிக்கைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து அறவழியில் போராடுங்கள். ஒற்றுமையாய்ப் போராடுங்கள். ஐம்பது வருடங்களாக தொடர்ந்து ஏமாற்றப்பட்டிருக்கிற நம் தமிழ் மக்களுக்கு ஒரு புதிய வாழ்வு உங்களால் உருவாகட்டும்!

சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
மார்ச் 21, 2013

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்பிற்குரியீர்,

வணக்கம். தமிழீழ விடுதைலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நாளை (22.03.2013) காலை 11.30 மணிக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் (சென்னை பிரஸ்கிளப்பில்) பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர் போராட்டத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடு குறித்து இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கப்படவுள்ளது.

(சீ.தினேஷ்)
97911 62911
ஒருங்கிணைப்பாளர்

 

Loyolahungerstrike



போராட்டம் , மாணவர் போராட்டம்தான் அது அந்த வடிவம் பெற்றது இந்த வடிவம் பெற்றது என்று எதுவும் இல்லை . எதுவும் மாறவில்லை .

ஒரு குழுவாக கூடும் மாணவர்கள் அவர்களிற்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்வார்கள் . அதை செய்து கொண்டு உள்ளார்கள் . மானவர்களிற்கு தெரியும் அவர்கள் பகுதியில் உள்ள உள்ளூர் நிலைகளிற்கு ஏற்ப எப்படி போராடுவது என்று.

மத்தியமாக கூடி ஒரு மிகபெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் வெகு விரைவில் வரும் இன்னும் சில நாட்களில் மாணவர்கள் அனைவர்களிடமும் இது பற்றி பேசுவோம் . எந்த மாணவர் குழுவும் தொய்வடைந்து விடவில்லை . இப்போதுதான் Warm-up ஆகி உள்ளார்கள் . அந்த முதல் நிலை போராட்டத்தை மட்டுமே தமிழகம் இப்போது பார்த்து உள்ளது .

மாணவர்களின் முழு சக்தி இன்னமும் பிரயோகபடுத்தபடவில்லை . அதற்கான கால சூழல் மிக அருகில் வருகிறது.
 

 

Loyolahungerstrike



Total Likes
24,076
Link to comment
Share on other sites

தமிழக போராட்ட செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள அனைவரும் loyolahungerstrike இன் இந்த இணைப்பில் இணைந்திருங்கள். இப்பொழுது 24,078 likes

http://www.facebook.com/tamilnaduhungerstrike

Link to comment
Share on other sites

எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும்.

 

(முகநூல்: loyolahungerstrike)



இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்று எந்த ஒரு நாடும் கூறவில்லை. எனவே அமெரிக்கா கொண்டுவந்த இந்த தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு மறைமுக வெற்றியே கிடைத்துள்ளது.
-சுப்பிரமணிய சாமி-

வீட்டுக்குள் இருந்து அறிக்கை விடும் சூ . சாமி அவர்களே தமிழ்நாடு பக்கம் வரலாமே.

 

(முகநூல்: loyolahungerstrike)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 06        [1] குமரிக் கண்டம் :        தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிரிக்கா, வடக்கே தற்போது உள்ள இந்தியா முதலியவற்றை தொட்டுக் கொண்டு இலங்கையையும் உள்ளடக்கிக் கிடந்தது குமரிக்கண்டம் என்று வாதாடுபவர்கள் இன்னும் சிலர் உள்ளனர்.  இதுவே உலக நாகரிகத்தின் தொட்டில்; கன்னித் தமிழ் முன்னோரின் இருப்பிடம் என்று அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்கிறார்கள். எப்படி பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதோ, அப்படி, இதுவும், ஆனால் மாபெரும் அனர்த்தத்தால் மூழ்கியிருக்கலாம் என நம்புகிறார்கள்??       ஸ்பென்சர் வேல்ஸ் [Spencer Wells] இனதும் பிச்சப்பன் [Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்களின் கவனத்தை இந்திய [குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை. பிரித்தானிய கடல் துறை தொல் பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக் [Graham Hancock]  பூம்புகாரின் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஆய்வின் பொழுது, கடலடியில்  நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கருதப் படுகிறது. அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே [Dr.Glen Milne  / The Durham geologists] உறுதி செய்துள்ளார். எனவே, பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தை விடவும்  சிந்துவெளி நாகரிகத்தை விடவும், அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கருத்து கூறினார். முன்பு பனி யுகம் [ICE AGE  / பனி உருக்கு காலம்] எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து உள்ளதாக வரலாறு கூறும். அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின என அறிகிறோம். அவ்வாறே, கடைசி பனி உருகும் காலத்தில், அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில் பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்.     தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது. அப்பொழுது அங்கே கண்டு பிடிக்கப் பட்டவை, கிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது. ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும்  கண்டறியப் பட்டன [படம்: 01]. இவை அனைத்தும் பூம்புகார் கடற் பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான  கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக் கூடியதாக உள்ளது.      இங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது. 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228, 256 முதுமக்கள் தாழி [burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.     "கலம் செய்கோவே கலம் செய்கோவே அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே."    [புறநானூறு 256]     ஒருபெண் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தாள். அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் [ஆரம் = ஆர்க்கால்] பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப் படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.     குமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெரு நிலப்பரப்பாகும். இது இந்தியா கடலில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக் காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது. இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது. அது தான் கடற் கோள் ஆகும் . இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும்.     தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் [Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும் போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட  வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்கும் மிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலாகவோ அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம்?  இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும். ஆகவே இந்த கட்டுமானம் மெசொப்பொத்தாமியா கட்டமைப்பை விட 5000 - 5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள், புவியியல் சான்றுகள், முதலாவது தமிழ் சங்க காலத்தில், தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள். அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். சோழப் பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த  நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று எண்கிறேன்.     பாளி புத்த காப்பியம் 'மகாவம்சம்', புத்தர் காலத்தில் இலங்கையில் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட உயிரினமே [sub-human beings] இருந்ததாக குறிப்பிட்டு இருந்தாலும், உண்மையில் அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக தொல் பொருள் ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இலங்கையின் பாகியன் குகையில் (Fa Hien Cave), மேற்கொண்ட ஆய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதி மனிதயெலும்புகள், அப்பெரிய குகையில் 37 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தொடர்ச்சியாகப் பல தலைமுறையினர் வாழ்ந்தனர் என்பது காணப்பட்டுள்ளது. மேலும் சில குகைகளிலும் இப்படி காணப்பட்டுள்ளன. அத்துடன் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் அங்கு அவர்களின் சமூக வாழ்வை உறுதிப் படுத்து கின்றன. இவர்களை பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis, Balangoda Man) என்று அழைக்கிறார்கள். இந்த பலாங்கொடை மனிதன் 174 செ.மீ. (ஐந்து அடி எட்டு அரை அங்குலம்) உயரம் உடையவனாகவும் காணப்படுகிறது. திரு R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’] தனது 'உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயிகள்' என்ற ஆய்வு கட்டுரையில், ஆரம்ப இரும்பு  காலத்தில், கி மு 900 ஆண்டில், குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி, மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் காணப்பட்டதாகவும்,  கி மு 15,500 ஆண்டு அளவில் அங்கு பார்லி / வாற்கோதுமை மற்றும் ஓட்ஸின் / காடைக்கண்ணியின் [barley and oats] தொடக்க மேலாண்மை இருந்ததாகவும் கூறுகிறார் . அதே போல,   பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு  தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார்.  இவை எல்லாம், தென் இந்தியாவும் இலங்கையும் ஒரு நிலப்பரப்பாக இருந்ததையும், ஒரே மொழி பேசும் இன மக்கள் [ திராவிடம் அல்லது தமிழ்] இரு இடமும் உலாவியதையும், புத்தர் காலத்துக்கு முன்பே இலங்கையில் நாகரிக மக்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     பகுதி :07 தொடரும்       பி கு : படம் 02 : பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி / burial urn found at Poompuhar         
    • 😀........ நீங்கள் இலங்கை அணியை மட்டும் தான் சொல்கிறீர்களா அல்லது இலங்கை அணி தோற்க வேண்டும் என்று இங்கு கும்பிட்ட 21 பேரையும் சேர்த்தும் சொல்கிறீர்களா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்குது........🤣.
    • எல்லோருக்கும் நன்றி  "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு"  
    • உண்மை தான்.. ஆசிரியர் மாணவர்களும் நல்ல கட்டுப்பாடு. அதற்கு பிறகு எல்லாம் ஒரே மேய்ச்சல்.   அதிபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
    • எங்களுக்கு தகவல்கள் துண்டு துண்டாகவே கிடைக்கின்றன. முழுமையான தகவல்களுடன் செய்தி வருவதும் குறைவு, செய்தியை பிரசுரம் செய்பவர்களும் அக்கறை எடுப்பது இல்லை. செய்தியை கிரகிப்பவர்களும் மட்டுப்படுத்தப்பட்ட  அறிவுடன் தமக்கு தெரிந்ததை விளங்கிக்கொள்கின்றார்கள்.  கல்வித்திணைக்களத்தின்/பரீட்சை திணைக்களத்தின் பங்கு இங்கு உள்ளது. நான் நினைக்கின்றேன் விசாரணைகளின் பின் பரீட்சை முடிவுகள் வெளிவிடப்படும். அல்லது இம்மாணவர்களுக்கு மீண்டும் பிரத்தியேக பரீட்சை வைக்கவேண்டும்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.