Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் அடுத்த படைப்பு 'ஈழ காவியம்'.. அதற்காக இலங்கை போக விரும்புகிறேன்!

Featured Replies

மூன்றாவது உலகப் போர் என்ற நாவலைத் தொடர்ந்து, ஈழத்தையும் அதன் மனிதர்களையும் மையப்படுத்தி தன் அடுத்த படைப்பை உருவாக்குகிறார் வைரமுத்து.

 

வைரமுத்துவின் சமீபத்திய படைப்பான மூன்றாவது உலகப் போர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நாவலுக்கு இலக்கியச் சிந்தனை விருதும் கிடைத்துள்ளது. இந்த நாவல் மூலம் தான் ஈட்டிய வருவாயில் ஒரு பகுதியை தஞ்சைப் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட 11 விவசாயக் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் என பகிர்ந்தளித்தார்.

 

இந்த நிலையில், இப்போதே தனது அடுத்த படைப்புக்கான பணிகளை ஆரம்பித்துள்ளார் வைரமுத்து.

இப்போது அவர் எழுதப் போவது தமிழ் ஈழம் தொடர்பான ஒரு நாவல். எனவே அதை தமிழகத்திலிருந்து எழுதாமல், இலங்கைக்கே போய் சில காலம் தங்கியிருந்து அந்த மண்ணையும் மனிதர்களையும் பார்த்து, பேசி, வாழ்ந்து எழுதப் போகிறாராம்.

 

இதுகுறித்து வைரமுத்து கூறுகையில், "எனது அடுத்த படைப்பு ஈழக் காவியமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான களப் பணிகள் மிகப் பெரியவை என்பதால் இலங்கைக்கே சென்று சில காலம் இருக்க ஆசைப்படுகிறேன்.

 

அந்த மண்ணையும், காற்றையும், நிலத்தையும், நீரையும், மனிதர்களையும் தொட்டு உணராமல் படைத்தால், அது முழுமையான படைப்பாக இருக்காதே?," என்றார்.

 

http://tamil.oneindia.in/movies/news/2013/03/vairamuthu-wants-go-sri-lanka-his-next-novel-171515.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

குதிரை ஓடிய பின், வெறும் லாயத்தை கவிதையாக வடிப்பதில்.... பெரிய உணர்வு வந்துவிடாது, என நினைக்கின்றேன்.
உங்களைப் போன்ற கவிஞர்கள் போர் நடந்து கொண்´டிருக்கும் சூழலில் போயிருந்தால்... உண்மையான உணர்வை... பதிவு செய்திருக்க முடியும்.
மூன்று வருடங்களின் பின், அங்கு என்னத்தைப் பார்க்கப் போகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

சிறியன்னவின் கருத்து தான் எனது கருத்தும் கூட..இப்ப இவர் அங்கை போனால் சிங்க்ளம் நல்ல மாரி போலி வேசம் போடும்.....

Edited by பையன்26

இப்பவும் யுத்ததத்தின் எச்சங்களாய் வாழ்ந்து  கொண்டிருக்கும் காடுகளிற்குள் வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் சொந்த மண்ணிலே வாழ விடாமல் தடுக்கப்பட்டுள்ள சம்பூர், பலாலி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களை சந்தித்து அவர்களது உணர்வுகளை அறிந்து கொண்டு காவியம் படைத்தால் ஓரளவிற்கு ஈழத் தமிழர்களின் இன்னலைப் பதிவு செய்ய முடியும்.

 

ஆனால் ஆதற்கு சிங்கள தேசமும் அதன் ஆட்சியாளர்களும் அனுமதிக்கப்போவதில்லை. 

 

இந்த நிலையில் வெளிநாட்டுப் பணத்தின் உபயத்துடன் சொகுசு வாழ்க்கை வாழும் வெள்ளவத்தைத் தமிழர்களையும் யாழ் நகர் உள்ளிட்ட நகர்ப் பகுதி மக்களையும் பார்த்து அவர்தம் வாழ்க்கையை ஈழத் தமிழர்களின் வாழ்க்கையாய்ப் பதிவு செய்தால் அதில் எந்தப் பிரயோசனமும் இருக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழப் பிரசனைபற்றி இந்தியாவின் கொடூரங்களை முதற் பாகமாக வெளியிடுங்கள். 70 வருட போராட்டம் ஒரு புத்தகத்தில் வடிக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்து அவர்களே......
ஈழம் என்பது ஒரு வியாபாரப் பொருளல்ல, அங்கு ஒரு குடும்பத்தின் பின்னால்.... ஆயிரம் கதை இருக்கின்றது. நீங்கள் பேட்டி... எடுத்த பின்பு, அந்தக் குடும்பத்துக்கு, வைரமுத்துவிடம் என்ன... சொன்னாய் என்று, மிரட்ட ஒட்டுக்குழுக்கள் வருவார்கள், அதனைத் தொடர்ந்து... ஸ்ரீலங்கா ராணுவம் வருவான்.... உங்களின் புத்தகம், நல்ல விலை விக்குதோ... தெரியாது. அதுக்குப் பிறகு, நீங்கள் பேட்டி கண்ட ஆள், உயிரோடை இருப்பானோ... தெரியாது.  சூசகமாய்... நடவுங்கள். தயவு செய்து... கருணாநிதியின் குரலாய்... மட்டும் ஒலிக்காதீர்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் இழிநிலைவாழ்வு கருணாநிதிக்கு அல்ல அவருருடன் சேர்ந்த வைரமுத்துவுக்கும் கல்லாகட்ட வாய்ப்புக்களை அள்ளித்தருகின்றது. நல்லா கல்லாகட்டுங்கோ. பொறிக்கிப்பயலுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.