Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்டாலின் வீட்டில் 17 கார்கள் பறிமுதல், 48 கோடிரூபா வரி மோசடி வழக்கு - சிபிஐ மீது மன்மோகன்சிங் அதிருப்தி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
stalin-2132013-150.jpg

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு அரசிற்கு அதிருப்தி அளிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், சி.பி.ஐ., ரெய்டால் நாங்கள் அதிருப்தியில் உள்ளோம். இந்த விவகாரத்தில் அரசிற்கு பங்கு ஏதும் இல்லை என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். இது நடந்திருக்கக்கூடாது. சோதனை நடந்த நேரம் முற்றிலும் எதிர்பாராதது.சி.பி.ஐ., நடவடிக்கைக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிப்போம் என கூறியுள்ளார்.

  

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதற்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், சி.பி.ஐ., விளக்கமளித்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ., வெளியிட்ட அறிக்கையில், சோதனை நடத்தப்பட்டது வழக்கமான நடவடிக்கைகள் தான் என்றும், யாரையும் தனிப்பட்ட முறையில் குறிவைத்து சோதனை நடத்தப்படவில்லை .கார்கள் இறக்குமதியில் விதிமீறல் தொடர்பான வழக்கில் சோதனை நடந்தது. கார்கள் இறக்குமதியில் விதிமீறலால் ரூ.48 கோடி வரி ஏய்ப்பு என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 18 இடங்களில் நடந்த சோதனையில் 17 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கார் இறக்குமதியில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளது.

 

http://seithy.com/breifNews.php?newsID=78657&category=IndianNews&language=tamil

CBI  தேடும் போது பிரதமருக்கு நோடீஸ் கொடுத்துவிட்டு தேடுவதில்லை. இதனால் மௌன விரதி மன்மோகன் சிங்கிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் CBI பழிவாங்கல்களில் பயன்படுத்தபடுவதில்லை என்றால் யூனியன் மந்திரிகள் இப்படிப் பதறி இருந்திருக்க தேவையும் இல்லை.  கருணாநிதியிற்கு ஒரு சின்ன பாடத்திற்காகத்தான் செய்யப்பட்டது. அதனால் அதிகாரம் இல்லாத சிங், சிதம்பரம் போன்றோர்கள்்தமக்கும் பழி வந்துவிடப்போகிறது என்று நினத்துப் பதறுகிறார்கள்.

 

கருணாநிதி இப்படி சிலவற்றை எதிர்பார்த்துத்தான் இருந்திருப்பார். அவர் பதவி விலகலை கடைசிவரையும் பிற்போட்டது இவற்றை தவிர்க்கவே. ஆனால் மாணவர்கள் எல்லாவற்றையும் கெடுத்து கருணாநிதியை இக்கட்டில் போட்டுவிட்டார்கள்.

 

பாம்பின் காலைப் பாமறியும். கொஞ்சமாவது ஆயத்தமாகத்தான் இருந்திருப்பார். அடி கனிமொழி, அழகிரி, ராசாத்தி அம்மாள் போல வேறும் யாராவதுமீதாக இருந்திருந்தால் எளிதாக தாங்கிக்கொள்ளக்கூடியதாக இருந்திருக்கும். அவர் தனக்கு நாரி நோ என்று கூறிக்கொண்டு படுக்கைக்கு போக அவசரப்படுகிறார். அந்த அவசரத்தில் தனது வாரிசாக ஸ்ரலினை கொண்டுவந்துவிட முயல்கிறார். அந்த நேரத்தில் பழுவுக்கு கீழே விழுந்த இந்த அடியை தாங்க கொஞ்சம் கஸ்ட்டப்படத்தான் போகிறார்.

 

ஒருவேளை திரும்பி காங்கிரசிடம் போனால் வழக்கு ஒன்றும் இல்லை என்று ஸ்ரலினை விட்டாலும் விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு கார் இறக்குமதி விவகாரம்: மு.க.ஸ்டாலின் வீடு உள்பட 18 இடங்களில் சி.பி.ஐ. சோதனை

 

  • 21DRAID.jpg
    சி.பி.ஐ. சோதனைக்குப் பின் தனது வீட்டிலிருந்து மு.க.ஸ்டாலின் கிளம்பியபோது அவரைச் சூழ்ந்த தொண்டர்கள். (வலது) தியாகராய நகரில் உள்ள ஸ்டாலின் நண்பர் தொழிலதிபர் ராஜாசங்கர் வீட்டில் சோதனை முடித்து திரும்பும் சி.பி.ஐ. அதிகாரிகள்.

வெளிநாட்டு கார் இறக்குமதி செய்ததில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக முன்னாள் துணை முதல்வரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வீடு உள்பட சென்னையில் 18 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இது குறித்து சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டதாவது:

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஜோசப் என்பவரை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரி உத்தரவின்பேரில் கேரள போலீஸார் ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் 2011-ல் கைது செய்தனர்.

ஜோசப், வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்து அதை இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் அவர் பல நூறு கோடி மதிப்புள்ள 33 வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்துள்ளார். இதற்கான விதிமுறைகளைப் பின்பற்றாமலும், வரியைச் செலுத்தாமலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ.48 கோடி வரை வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வழக்குத் தொடர்பாக ஜோசப்பை கைது செய்த வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், அதன் பின்னர் இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக காரை இறக்குமதி செய்தவர், வழக்கில் தொய்வு ஏற்படுத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் மீது 9 பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.

இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக வழக்குக்கான ஆதாரங்களையும், தடயங்களையும் சேகரிக்கும் வகையில் அலெக்ஸ் ஜோசப்பிடமிருந்து கார் வாங்கிய நபர்களிடம் விசாரணை நடத்தி, ஆவணங்களைக் கைப்பற்ற சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டனர். இதன் ஒரு பகுதியாக சென்னையில் 18 இடங்களில் ஒரே நேரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை செய்தனர்.

மு.க.ஸ்டாலின் வீட்டில் சோதனை: ஜோசப்பிடம் இருந்து மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி "ஹம்மர் கார்' வாங்கியிருந்தார். இதன் மதிப்பு ரூ.2.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

சென்னை தேனாம்பேட்டை செனடாப் சாலையில் உள்ள ஸ்டாலின் வீட்டுக்கு வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர். வீட்டில் அப்போது உதயநிதி மட்டும் இருந்தார். ஸ்டாலின் நடைப்பயிற்சிக்காக சென்றிருந்தாராம்.

இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள், உதயநிதியிடம் காரை பற்றிய தகவலைக் கேட்டறிந்தனர். சி.பி.ஐ. அதிகாரிகள் வந்தது குறித்த தகவலறிந்த ஸ்டாலினும் வீட்டுக்கு சிறிது நேரத்தில் வந்தார். அவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள், அந்த கார் தொடர்பாக விசாரணை செய்தனர்.

பின்னர் காரையும், காருக்குரிய ஆவணங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டனராம்.

ஆனால் கார் ஒர்க் ஷாப்பில் இருப்பதாகவும், காரின் ஆவணங்கள் வேறு இடத்தில் இருப்பதால் சிறிது நேரத்தில் சி.பி.ஐ. அலுவலகத்தில் கொடுப்பதாகவும் உதயநிதி உத்தரவாதம் அளித்தார். இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

சுமார் 45 நிமிஷம் நடைபெற்ற இந்த விசாரணை குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, விசாரணை குறித்த விரிவான அறிக்கை பின்னர் அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இந்த தகவலறிந்த திமுக தொண்டர்கள் ஸ்டாலின் வீட்டு முன் குவிந்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

17 கார்கள் பறிமுதல்: இதேபோல வெளிநாட்டு கார் வாங்கிய பிரபல தொழிலதிபர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் உள்பட மேலும் 17 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தனர். இச் சோதனையில் கார் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும் 17 வெளிநாட்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. தரப்பில் கூறப்படுகிறது.

இதன் அடுத்தக் கட்டமாக வெளிநாட்டு கார் வாங்கியுள்ள பிறர் வீடுகளிலும் சோதனை நடத்தப்படும் என சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சோதனை நடைபெற்ற இடங்கள்

வெளிநாட்டு கார்கள் இறக்குமதியில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்குக்காக சென்னையில் 18 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

இந்த சோதனை நடத்துவதற்காக தில்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் புதன்கிழமையே சென்னை வந்து முகாமிட்டிருந்தனர். தமிழகத்தில் உள்ள சி.பி.ஐ.  அதிகாரிகள் சோதனையில் ஈடுபடவில்லை. சில கீழ்நிலை அதிகாரிகள் மட்டும் தில்லி அதிகாரிகளுக்குத் துணையாக சோதனை நடந்த இடத்துக்கு வந்தனர்.

தேனாம்பேட்டை செனடாப் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டில் சோதனை நடைபெற்றதே முதலில் தெரியவந்தது. அதேபோல மேலும் 17 இடங்களில் சோதனை நடைபெறுவது வெகுநேரம் கழித்தே தெரிந்தது.

தியாகராய நகர் திருமூர்த்தி நகரில் உள்ள ஸ்டாலின் நண்பர் ராஜாசங்கர் வீடு, சென்னையில் பொழுதுபோக்கு பூங்கா நடத்தும் நிறுவனமான எம்.ஜி.எம். நிறுவனம், போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாசலம், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன், ஆழ்வார்பேட்டை ராம் செட்டி, ஜான்சி ஆகியோரின் வீடு, அலுவலகம், நிறுவனம் உள்ளிட்ட 17 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

முதல் தகவல் அறிக்கையில் இவர்கள் பெயர்கள் இல்லாத நிலையில், வரி ஏய்ப்பு செய்த அலெக்ஸ் ஜோசப் மீதான குற்றத்தை உறுதிப்படுத்துவதற்காக இவர்களின் வீடுகளிலும், அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. தரப்பில் கூறப்படுகிறது.

இவர்களிடம் இருந்த ரோல்ஸ் ராய்ஸ், பென்ஸ், பி.எம்.டபிள்யூ, லேண்ட் ரோவர், டொயோட்டா, மினி கூப்பர், பஜேரோ, ஜாகுவார் ஆகிய இறக்குமதி கார்களில் பறிமுதல் செய்யப்பட்டதற்கான நோட்டீûஸ சி.பி.ஐ. ஒட்டியுள்ளனர். மேலும் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் என சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனராம்.

ஜோசப் வரி ஏய்ப்பு செய்தது எப்படி?

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த அலெக்ஸ் சி.ஜோசப் வெளிநாட்டு கார் இறக்குமதி மூலம் ரூ.500 கோடி வரை முறைகேடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்த விவரம்: கேரள மாநிலத்தவர்கள் வளைகுடா நாடுகளில் அதிகமாக இருப்பதைப் பயன்படுத்தி 15 ஆண்டுகளுக்கு முன்பு முதலில் சிறிய அளவில் கடத்தல் தொழிலில் ஜோசப் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. பின்னர் அத் தொழிலில் படிப்படியாக வளர்ந்து அரசை ஏமாற்றி வெளிநாட்டு கார் இறக்குமதி செய்யும் தொழில் செய்யத் தொடங்கியுள்ளார்.

இதன் மூலம் அவருக்கு முக்கிய பிரமுகர்களின் தொடர்பு கிடைத்ததால், அத் தொழிலை எந்த பயமும் இன்றி செய்துள்ளார். இந்த முறைகேட்டுக்கு வெளிநாடுகளில் வாழ்ந்து இந்தியாவுக்கு இடம்பெயரும் நம் நாட்டினரைப் பயன்படுத்தியுள்ளார்.

வெளிநாடுகளில் வாழ்ந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கு தாங்கள் பயன்படுத்திய பழைய காரை கொண்டு வருவதற்கு வரி விலக்கு உண்டு என்பதால், புதிய கார்களையே பழைய கார்கள் போல் செய்து இறக்குமதி செய்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து புதிய கார்களை இறக்குமதி செய்ய 100 சதவீத இறக்குமதி வரி, 30 சதவீத கலால் வரி, 20 சதவீத பதிவு கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும் என்பதால், இந்த குறுக்கு வழிமூலம் அந்த வரிகளை செலுத்தாமல் அரசுக்கு வரி ஏய்ப்பு செய்தார்.

கடந்த 13 ஆண்டுகளில் ஜோசப் 480 கார்களை இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஜோசப் சுமார் ரூ.500 கோடி வரை அரசுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கேரள காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

http://dinamani.com/tamilnadu/article1511695.ece

  • கருத்துக்கள உறவுகள்

வரி ஏய்ப்பு வழக்கு என்று வரும் போது தேடுதல்கள் நடைபெறுவது வழமையே


ஆனால் ஒரு நாட்டின் பிரதமர் சோதனை நடவடிக்கையைக் கண்டிப்பது


இந்தியாவில் மட்டும் தான் நடக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.