Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மௌலவியின் தொப்பியை அபகரித்து அவமதிப்பு'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

7-0(1).jpg

-மொஹொமட் ஆஸிக்

மத்ரஸா ஒன்றில் கடமையாற்றும் மௌலவி ஒருவர் அணிந்திருந்த தொப்பியை பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் பலவந்தமாக அபகரித்து அதனை கீழே போட்டு மிதித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கண்டி கல்ஹின்னை பிரதேச மத்ரஸா ஒன்றில் கடமையாற்றும் மௌலவி ஒருவரின் தொப்பியையே குறித்த நபர் இவ்வாறு அவமதித்துள்ளார்.

பூஜாப்பிட்டிய நகரில் வைத்தே இவ்வாறான இக்கட்டான நிலைமைக்கு அவர் முகம் கொடுத்துள்ளார்.  மௌலவி ஒருவர் இவ்வாறான நிலைமைக்கு முகம் கொடுத்ததாக பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் உறுப்பினர் ஏ.எல்.எம். ரஸான் தெரிவித்துள்ளார்.

பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் உரையாற்றும் போதும் அவர் இதனை குறிப்பிட்டார். 

அங்கு அவர் தொடர்ந்து  உரையாற்றுகையில், 

கண்டி- கல்ஹன்னை பஸ் வண்டி ஒன்றில் கல்ஹின்னை பிரதேசத்திலுள்ள மத்ரஸா ஒன்றில் கடமையாற்றும் மௌலவி ஒருவர் பயணித்துக்கொண்டிருந்தார்.

பஸ்; வண்டி பூஜாப்பிட்டிய நகரின் ஊடாக செல்லும் போது அங்கிருந்த ஒரு இளைஞர் (முச்சக்கர வண்டி சாரதி என கூறப்படுகிறது) பஸ் ஜன்னல் வழியாக கையை விட்டு மௌலவி அணிந்திருந்த தொப்பியை கலட்டி எடுத்துள்ளார்.

பின் அதனை கீழே போட்டு மிதித்துள்ளார். இச் செயலை அங்கிருந்த பெரும்பான்மை சகோதரர்கள் எதிர்த்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் முஸ்லிம் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழும் இப்பிரதேசத்திற்கு உகந்ததல்ல. இது முஸ்லிம்களின் மனதை புண்படுத்துகின்றது. எனவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இங்கு உரையாற்றிய பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் அனுர மடலுஸ்ஸ இச் சம்பவம் ஒரு துரதிஷ்டவசமானதாகும். அதனை இட்டு நாங்கள் மன வருத்தம் அடைகின்றோம். இதன் பின் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/61266-2013-03-21-17-25-26.html

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீமிடம் சொல்லுங்க...அவர் இதை வைத்து இன்னொரு லோகல் அமைச்சுப்பதவி  வாங்கிடுவார்....

1958ல் ஐயரின் முதுகில் ஸ்ரீ எழுதி கொலை செய்யப்பட்டார். இதனால் நாம் பெரும்பான்மை சமூகத்துடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடவேண்டி வந்தது. அறிந்தோ அறியாமலோ இன்று கக்கீம் வரை இதை புரிந்து கொள்ளமுடியாமல் தவிக்கிறார்கள். 

மௌளவி தனிய மதப் புத்தகங்களை மட்டும் படியாமல் இலங்கை சரித்திரத்தையும் கொஞ்சம் படிக்கட்டும். அதை முஸ்லீம் மந்திரிகளுக்கும் கொஞ்சம் சொல்லியும் கொடுக்கட்டும். அப்போது அவர் தன்னையும் காப்பாற்றி, தனது சமூகத்தையும் காப்பாற்றி,  அத்தோடு தமிழர் தங்களைத்தாங்கள் காப்பாற்றவும் உதவ முடியும்

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மௌலவியின் தொப்பியை அபகரித்து அவமதிப்பு'

இங்கு உரையாற்றிய பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் அனுர மடலுஸ்ஸ இச் சம்பவம் ஒரு துரதிஷ்டவசமானதாகும். அதனை இட்டு நாங்கள் மன வருத்தம் அடைகின்றோம். இதன் பின் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

கடைசியில் மெளலவிக்கா "வடை போச்சே"..?  :D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

 நீதியமைச்சை தனது கையில் வைத்து இருக்குக் ஹக்கீம் ஜெனிவா வரை நீதி கேட்டு வந்தவர். மௌலவி  ஹக்கீம் நானாவிடம் முறையிடுவது தான் முறை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.