Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை... இலங்கை தூதரகம், கேரளாவுக்கு மாற்றம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

586918314b1pgvkyb.jpg

மாணவர்கள் போராட்டம் எதிரொலி: திருவனந்தபுரத்துக்கு போகிறது சென்னை இலங்கை தூதரகம்.

சென்னை: இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் மாணவர் போராட்டத்தின் எதிரொலியாக சென்னையில் செயல்பட்டு வரும் இலங்கை துணை தூதரகத்தை கேரளாவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஈழத்தில் இனப்படுகொலை நிகழ்த்திய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு வார காலத்துக்கும் மேலாக தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து டெல்லியில் செயல்பட்டு வரும் இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி ரொஹான் டயஸ் திடீரென கொழும்புக்கு வரவழைக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட ஆலோசனையின் முடிவில் சென்னையில் உள்ள துணை தூதரகத்தை கேரளா தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்ற முடிவு செய்திருக்கிறது.

தற்ஸ் தமிழ்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கேரள அரசு ஏற்றுக்கொண்டாலும் கேரள மாணவர்கள் அநீதிக்குத் துணைபோகமாட்டார்கள் என்பது விரைவில் தெரியவரலாம்.

இந்தியாவில் கேரள அதிகாரிகளாலும் அரசியல் தலைவர்களாலும்தான் எமக்கு அதிகளவு பிரச்சினைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள நாட்டு தூதரகத்துக்கு சரியான பாதுகாப்பான இடம் கேரளாதான் ஏனெனில் இன அழிப்புக்கு மத்தியில் கிந்திய அரசுடனும் சிறிலங்காவில் சிங்கள அரசுடனும் ஐநாவிலும் முக்கிய பங்கு வகித்தவர்களும் இந்த கேரளா மாநிலத்தவகள்தான். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அளவுக்கு நிலைமைகள் போய்விட்டன.  ஆனால் இதனால் ஏற்படக்கூடிய தொல்லைகள் யாருக்கு அதிகமோ தெரியவில்லை.  இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட வேண்டியேற்படலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.