Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் பவர் ஸ்டாரை கைது செய்ய போலீஸ் தீவிரம்: அந்தமானுக்கு தப்பி ஓட்டம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நடிகர் பவர் ஸ்டாரை கைது செய்ய போலீஸ் தீவிரம்: அந்தமானுக்கு தப்பி ஓட்டம்!!
 

நாமக்கல் கோர்ட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப் பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி உள்ளது. தனிப்படை போலீசார் நாளை சென்னை செல்கிறார்கள். இதற்கிடையில்  அவர் அந்தமான்  தப்பி ஓடி விட்டதாக  வழக்கு  தொடர்ந்தவரின் வக்கீல் கூறி உள்ளார்.

 

கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் வசித்து வரும் இவர் கடந்த 2008-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரும், ரிக் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான பொன்னுச்சாமி என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடன் பெற்றார். இதற்காக கடந்த 2009-ம் ஆண்டு தொடக்கத்தில் செக் (காசோலை) கொடுத்தார்.

 

அந்த செக் பணம் இல்லாமல் பாங்கியில் இருந்து திரும்பி வந்து விட்டது. இதனால் பொன்னுச்சாமி சார்பில் அவரது மேலாளர் வெங்கடாசலம் பவர் ஆப் அட்டர்னி பெற்று நடிகர் சீனிவாசன் மீது நாமக்கல் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தொடர்ந்து ஆஜர் ஆகவில்லை. இதனால் 2009-ம் ஆண்டு இறுதியில் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. எனினும் அவர் கைது செய்யப்படாமல் இருந்து வந்தார்.

 

இந்த நிலையில் மீண்டும் அவரை கைது செய்ய வலியுறுத்தி வெங்கடாசலம் மீண்டும் மனு கொடுத்தார். இந்த மனுவை ஏற்று கடந்த மாதம் (பிப்ரவரி )15-ந் தேதி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி ஜோதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்ய நாமக்கல் போலீசார் சென்னை சென்றனர்.

அவர் வீட்டில் இல்லை. அவர் அந்தமானுக்கு சென்று இருப்பதாக வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்தனர். இதனால் போலீசார் திரும்பி வந்து விட்டனர்.

 

இது குறித்து வெங்கடாசலத்தின் வக்கீல் கிருஷ்ணன் கூறியதாவது:-

நாமக்கல் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டுடன் சென்னைக்கு சென்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் குறித்து விசாரித்த போது அவர் அந்தமானுக்கு தப்பிவிட்டதாகவும், அவரை தொடர்ந்து தேடி வருதாகவும் நாமக்கல் போலீசார் எங்களிடம் தெரிவித்தனர். இது பற்றிய விவரங்கள் இன்னும் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்படவில்லை.

 

இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

 

இது குறித்து நாமக்கல் இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி கூறியதாவது:-

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்ய நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டு நாமக்கல் போலீஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்று உள்ளது. அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

நாளை நாமக்கல்லில் இருந்து தனிப்படை போலீசார் சென்னை சென்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்ய உள்ளனர்.

 

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனிடம் ரூ 2 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்த பொன்னுச்சாமி கூறியதாவது:-

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் என்னிடம் கடந்த 2008-ம் ஆண்டு சென்னையில் எனக்கு இடம் வாங்க ரூ 2லட்சம் அட்வான்ஸ் வாங்கினார். இடம் வாங்கித் தரவில்லை. அந்தப் பணத்தை கேட்ட போது 2009-ம் ஆண்டு தொடக்கத்தில் எனக்கு செக் கொடுத்தார்.

 

அதை பாங்கியில் கலெக்சன் போட்ட போது பணம் இல்லை என்று திரும்பி வந்து விட்டது. மீண்டும் இது பற்றி அவரிடம் கேட்ட போது மீண்டும் ஒரு செக் கொடுத்தார். அந்த செக்கையும் பாங்கிக்கு அனுப்பிய போது அந்த கணக்கிலும் பணம் இல்லை என்று திரும்பி வந்தது.

 

இதனால் எனது மேலாளருக்கு அவர் மீது வழக்கு தொடர பவர் ஆப் அட்டர்னி கொடுத்தேன். அவரும் வக்கீல் கிருஷ்ணன் என்பவர் மூலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தான் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

http://nadunadapu.com/?p=16186

 

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் பவர் ஸ்டாரை கைது செய்ய போலீஸ் தீவிரம்:

வன்மையாக கண்டிக்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உந்தாளக் கண்டேலே பிடிக்காது. பிடிச்சு உள்ள வையுங்க..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அந்தமானுக்கு போகவில்லை sri lankaவில்தான் ஆள்.

580068_512076708838327_897468674_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய குற்றவாழிகள் மறைந்து கொள்ள அருமையான நாடு sri lankaதான் இத்தாலி போன்ற ஜரோப்பியநாடுகளை விட பலம்வாய்ந்த வல்லரசு sri lanka 500மேற்பட்ட இந்திய தமிழ் மீனவரை கொன்ற போதும் கூட srilanka நட்பு நாடு என்று இந்தியா பல்லிலுத்துக்கொண்டு வீனி வடிய நிக்குது

Edited by purmaal

  • கருத்துக்கள உறவுகள்

போறபோக்கை பாத்தால் அடுத்த முதல்வர் இபர்தான் போல :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.