Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா மீது விசாரணை: கோத்தாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கத் தயாராகிறது புதுடில்லி!

Featured Replies

இந்தியா மீது விசாரணை: கோத்தாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கத் தயாராகிறது புதுடில்லி!

0396aad3-e788-40c3-90b7-3cbd6ba0bbb31.jp

இலங்கையின் மீதான இந்தியத் தலையீடுகள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து சிறிலங்கா படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கும் கருத்து, இந்திய இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருப்பதாக தெரியவருகின்றது.

கொழும்பிலிருந்து வெளியாகும் அரச ஆதரவு ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கியிருந்த சிறிலங்கா படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இலங்கையில் இந்தியத் தலையீடு குறித்து ஆரம்பத்தில் இருந்து விசாரணைகளை நடத்துவது தொடர்பில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், 'கோத்தபாயவின் இந்தக் கருத்து பாரதூரமானது. இந்தியா இதனை ஆழ்ந்த கவனத்தில் கொணடுள்ளது. இந்த விவகாரத்தை ஆராய்ந்து சிறிலங்கா அரசுக்கு புதுடில்லி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும். இது ஒரு சாதாரண விடயமாகக் கருதப்பட்டுவிட முடியாது' என்று இந்தியாவின் மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் இந்தக் கருத்துத் தொடர்பில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகமும்  விரிவான அறிக்கை ஒன்றை புதுடில்லியிலுள்ள இந்திய வெளியுவிவகார அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் சிறிலங்கா அரசுக்கு இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென தமிழ்நாட்டில் வலுவான கோரிக்கை விடுக்கப்பட்டுவரும் நிலையில், கோத்தபாயவின் இந்தக் கருத்து இந்திய மத்திய அரசுக்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக மேலும் அறியமுடிகின்றது.

இதனிடையில், சிறிலங்கா படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் இக்கருத்துக்கு மத்திய அமைச்சர் நாராணயசுவாமி, பாரதீய ஜனதாக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=0396aad3-e788-40c3-90b7-3cbd6ba0bbb3

  • தொடங்கியவர்

பாதுகாப்புக்கொள்கை, வெளிநாட்டுக்கொள்கை, புவிசார் அரசியல் என்ற ஏமாற்றுக் கதைகளுடன் இலங்கை கொடுக்க சீனாவின் பணத்தை கை நீட்டி வாங்கிய சோனியாவின் குடும்பி கட்டாயம் கோத்தாவின் கைகளுக்குள் கிடந்து ஆடும். அன்று அவவின் கைப்பிடி CBI யையின் மீது தளர்ந்திருக்கும்.  கோத்த சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய நீதி மன்றங்கள் சோனியாவை விசாரிக்கும். அவ இத்தாலிக்கு ஓடினாலும் பின் தொடரும் சந்தர்பங்கள் இருக்கிறது. 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா இடமும் டபிள் ஏஜண்டுகள் வச்சிருக்கிரான்கப்பா!!!

சுடச் சுட டக் டக் கெண்டு  இன்போர்மேசன் வந்து குவியித்து!!!

 

:lol: :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் வருகிறது என்றவுடன் வயித்தாலை போகுது அண்ணைக்கு. :lol:  :lol:

 

  • தொடங்கியவர்

எல்லா இடமும் டபிள் ஏஜண்டுகள் வச்சிருக்கிரான்கப்பா!!!

சுடச் சுட டக் டக் கெண்டு  இன்போர்மேசன் வந்து குவியித்து!!!

 

:lol: :lol:

நீங்கள் விலை போற சரக்கு. நாம ஓசிதான். ஆனாலும் உங்களுக்கு டக் டக வர வைக்க முடியுது இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் விலை போற சரக்கு. நாம ஓசிதான். ஆனாலும் உங்களுக்கு டக் டக வர வைக்க முடியுது இல்லையா?

அதாவது என்னை போல வெளிநாட்டில ஓசில இருந்துகொண்டு ""விலை போகாமல்"" " முழங்காலில வாழ்வதை விட  நின்று கொண்டு சாகிறது நல்லது " எண்டு கூவுற  ஆக்கள்.... :lol: :lol:

  • தொடங்கியவர்

அதாவது என்னை போல வெளிநாட்டில ஓசில இருந்துகொண்டு ""விலை போகாமல்"" " முழங்காலில வாழ்வதை விட  நின்று கொண்டு சாகிறது நல்லது " எண்டு கூவுற  ஆக்கள்.... :lol: :lol:

அவளா ஓசியா இல்லை. உழைச்சு tax க்கும் கொடுக்கிறோம். இலங்கையில் கோத்தாவின் உறவுகள் நாம் கஸ்டப்பட்டு முழங்காலிலை நின்று பணிவிடை செய்யவிடாமல் பாதுகாத்து வைத்த ஒன்றுதான். இங்கே நாம் எமது சுதந்திரத்துடன். ஆனால் நீங்கள் நின்றுகோண்டு கூவிகிற இனம் மாதிரி தெரியேலை. கோத்தா மாதிரி  சிங்கள எஜமாங்கள் ஏறி மிதிக்கெக்கை முழங்கலிலை தவண்டு தவண்டு கொக்கரிக்க இனம் மாதிரித்தான் படுகிறது.

கோத்தா தான் இப்படிச் சொல்லவில்லை என்று சொல்வதற்கு நேரம் வருகுதப்பா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவளா ஓசியா இல்லை. உழைச்சு tax க்கும் கொடுக்கிறோம். இலங்கையில் கோத்தாவின் உறவுகள் நாம் கஸ்டப்பட்டு முழங்காலிலை நின்று பணிவிடை செய்யவிடாமல் பாதுகாத்து வைத்த ஒன்றுதான். இங்கே நாம் எமது சுதந்திரத்துடன். ஆனால் நீங்கள் நின்றுகோண்டு கூவிகிற இனம் மாதிரி தெரியேலை. கோத்தா மாதிரி  சிங்கள எஜமாங்கள் ஏறி மிதிக்கெக்கை முழங்கலிலை தவண்டு தவண்டு கொக்கரிக்க இனம் மாதிரித்தான் படுகிறது.

 

நாம் ...

சுதந்திரத்தோட ...

உழைச்சு ....

டக்ஸ் கட்டி ....

எழுத .... படிக்க .... நல்லா தான் இருக்கு ....

உதில ஒரு எட்டு கடைக்கு போகவெல்லே .. தெரியுது ...

 

எந்த நாட்டில இருக்கிறம் எண்டு ...

 

 நம்ம சுதந்திரம் எப்பிடியானது எண்டது பற்றி.... :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ...

சுதந்திரத்தோட ...

உழைச்சு ....

டக்ஸ் கட்டி ....

எழுத .... படிக்க .... நல்லா தான் இருக்கு ....

உதில ஒரு எட்டு கடைக்கு போகவெல்லே .. தெரியுது ...

 

எந்த நாட்டில இருக்கிறம் எண்டு ...

 

 நம்ம சுதந்திரம் எப்பிடியானது எண்டது பற்றி.... :lol: :lol:

 

மகிந்தவின் வேதனத்தில் கருத்து எழுதும் ஆட்களுக்கே இவ்வளவு பிரச்சனை என்றால்................

  • தொடங்கியவர்

நாம் ...

சுதந்திரத்தோட ...

உழைச்சு ....

டக்ஸ் கட்டி ....

எழுத .... படிக்க .... நல்லா தான் இருக்கு ....

உதில ஒரு எட்டு கடைக்கு போகவெல்லே .. தெரியுது ...

 

எந்த நாட்டில இருக்கிறம் எண்டு ...

 

 நம்ம சுதந்திரம் எப்பிடியானது எண்டது பற்றி.... :lol: :lol:

நீங்கள் கலால் வாங்க போயிருக்கிறீர்கள் போலிருக்கு.

இந்தியா மீது விசாரணை: கோத்தாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கத் தயாராகிறது புதுடில்லி!

0396aad3-e788-40c3-90b7-3cbd6ba0bbb31.jp

இலங்கையின் மீதான இந்தியத் தலையீடுகள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து சிறிலங்கா படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கும் கருத்து, இந்திய இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருப்பதாக தெரியவருகின்றது.

 

உப்பிடி தயாராகிறம் எண்டு கொடுக்குக் கட்டி முடிக்கமுன்னம் சிங்களவன் வந்து இருக்கிற கோவணத்தையும் உருவிக்கொண்டு போப்போறன்.    :D

இது ஒரு அரசியல் நாடகம் போலவே தோன்றுகிறது. சில அரசியல்வாதிகளின் வாயை அடைக்க இப்படி கதைக்கப்பட்டிருக்கலாம். ஸ்ரீலங்கா நினைத்திருந்தால் எப்பொழுதே இப்பிரச்சனையை எழுப்பியிருக்கலாம் அதேபோல் இந்தியா நினைத்தால் ஸ்ரீலங்காவின் வாயை அடைப்பதற்கு சிலமணிநேரம் போதுமானது.

 

பிச்சைக்காரர்கள் பதிலடி கொடுக்க நினைப்பது வெறும் கற்பனையாகவே இருக்கும்!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.