Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய பரப்புக்குள் சீனத் துருப்புக்கள்; இந்தியா எச்சரிக்கை

Featured Replies

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு…எல்லையில் ஆயத்த நிலையில் ராணுவ வீரர்கள்.

 

ஏப்ரல் 27, 2013

 

india-china-border-tension.png

 

 

எல்லையில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கஷ்மீரில் சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ள தவுலத் பேக் ஓல்டி என்ற இடத்தில் இந்திய விமானப் படை மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

மேலும் ஆயத்த நிலையில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருட்களை வழங்கும் பணியில் இந்திய விமானப் படை ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் உள்ள பகுதிக்கு மிக அருகில் நேர் எதிராக சீன துருப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கடந்த 15 ஆம் தேதி, சீன ராணுவம் ஊடுருவியதை அடுத்து இந்திய விமானப்படையின் செயல்பாடு அந்தப் பகுதியில் குறுகிய கால அளவிற்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

 

இதனிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனனை நேற்று சந்தித்த ராணுவத் தளபதி பிக்ரம் சிங், ராணுவத்தைக் கொண்டு பிரச்சனைக்குத் தீர்வு காண்பது உட்பட அரசுக்கு முன் உள்ள பல்வேறு ராணுவ வாய்ப்புகள் குறித்து விவரித்தார்.

 

மேலும், சிவசங்கர் மேனன் தலைமையில் இயங்கும், சீன ஆய்வுக் குழுவும் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

முன்னதாக இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில், இரு தரப்பிலும் இதுவரை 2 கொடி அமர்வுக் கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், எந்த ஒரு சுமுக முடிவும் எட்டப்படவில்லை.

 

ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை என சீனா தொடர்ந்து கூறி வருகிறது. இந்திய - சீன எல்லைப் பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் எல்லையை வரையறுப்பதில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதே இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

 

http://puthiyathalaimurai.tv/india-chinese-troops-ready-at-border

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

சீனாவுக்கு ஒரு நியாயம், பாகிஸ்தானுக்கு ஒரு நியாயமா? - காஷ்மீர் முதல்வர் சீற்றம்!

 

26-04-2013

 

omar-2642013-150.jpg

 

இந்திய எல்லைப் பகுதிகளில் ஊடுருவும் பாகிஸ்தானுக்கு ஒரு நியாயம்; சீனாவுக்கு ஒரு நியாயமா என ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

 

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: எல்லை ஊடுருவல் பிரச்னையில் பாகிஸ்தானையும் சீனாவையும் மத்திய அரசு வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லைக்குள் 10-இலிருந்து 15 கி.மீ. தூரம் வரை ஊடுருவியிருந்தால் என்ன நடந்திருக்கும்? அரசு முதல் அனைவரும் கூக்குரல் எழுப்பி கண்டனம் தெரிவித்திருப்போம்.
 
அதோடு மட்டுமல்லாமல் இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாட பாகிஸ்தானுக்கு தடை; கால்பந்து விளையாட தடை; வர்த்தகத் தொடர்புக்கு தடை; அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து என்றெல்லாம் முழங்கியிருப்போம். அதே சமயம் சீனாவின் ஊடுருவல் பற்றி மத்திய அரசு பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளாததைப் போலவே தோன்றுகிறது. பாகிஸ்தானிடம் காட்டும் அதே வேகத்தை ஏன் சீனாவிடமும் காட்டக்கூடாது? சீன ஊடுருவல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்; பிரச்னை சுமுகமாக முடியும் என்றுதான் பேசி வருகிறோம். இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு ஒரு நியாயம்; சீனாவுக்கு ஒரு நியாயமா?

மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.எல்லை ஊடுருவல், எல்லை தாண்டிய பயங்கரவாதம், போர் நிறுத்த உடன்படிக்கையை மீறுதல் போன்றவற்றின் போது பாகிஸ்தானுடனான அரசியல், தொழில், வர்த்தக, விளையாட்டு உறவுகளை எப்படி உதறித் தள்ளுகிறோமோ அதே போல் சீனாவுடனும் உறவுகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றார் ஒமர் அப்துல்லா.

 

http://seithy.com/breifNews.php?newsID=81287&category=IndianNews&language=tamil

 

Edited by துளசி

சிக்கிம் மாநிலமும் அருணாச்சல மாநிலமும் சீனாவிற்கே சொந்தம். இந்தியா என்ற ஒன்று எந்த நூற்றாண்டில் இருந்து இயங்குகிறது? வெள்ளைக்காரன் அரசுகளையும் சிற்றரசுகளையும் பிடிச்சு இந்தியா என்று ஆண்டு விட்டு விட்டுப் போனால் தென்னாசியா முழுதும் இந்தியா ஆகிவிடுமா? தமிழ்நாடு என்ற பகுதி எவ்வளவுகாலமாய் இந்தியா என்று இயங்குகிறது?

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருநாட்டின் மீது இன்னொரு நாடு எல்லைமீறும் செயல்களில் எச்சரிக்கை செய்தால் 

அடுத்த கட்டம் போர் என்பதே அர்த்தம் .

ஹிந்தியர்கள் வரலாற்றில் எல்லாம் தலைகீழாக நடைபெறுகின்றது.

 

எச்சரிக்கைக்குப் பின்னர் விருந்துபசாரத்துடன் பேச்சுவார்த்தைக்கு 

ஹிந்தியக்குழு சீனா பயணம் செய்வது வேடிக்கையானது

 

Religionen in Sikkim Religion     Prozent

  Hinduismus                              60,9 %

Buddhismus                                28,1 %

Christentum                                6,7 %

Islam                                          1,4 %

Andere

2,9 % Verteilung der Religionen (Volkszählung 2001)[6]

 

 

language               Prozent

 

Nepali                 63,0 %

Bhutia                 7,7 %

Hindi                   6,7 %

Lepcha                6,6 %

Limbu                  6,3 %

Sherpa                2,6 %

 

2,4 % Verteilung der Sprachen (Volkszählung 2001)[4]

63%வீதம் நேபாளி மொழி பேசும் சிக்கிம் மாநிலம் நேபாளத்துடன் இணைக்கப் படவேண்டும்.

Edited by யாழ்அன்பு

இதேநடத்தையைத்தான் தமிழ் மீனவர் தாக்கப்படும் போதும், கேரளாமீனவர் தாக்கப்படும் போதும் மத்திய அரசு காட்டுகிறது என்றால் நீங்கள் யாராவது நம்பினீர்களா? 

 

இருந்தாலும் காங்கிரசுக்கெதிராக நாம் ஏதாவது செய்து காஸ்மீர் தனது சுதந்திரத்தை அடைய நாம் செய்யமுடியுமானால் அதை நாம் செய்வோம். 

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கிம் மாநிலமும் அருணாச்சல மாநிலமும் சீனாவிற்கே சொந்தம். இந்தியா என்ற ஒன்று எந்த நூற்றாண்டில் இருந்து இயங்குகிறது? வெள்ளைக்காரன் அரசுகளையும் சிற்றரசுகளையும் பிடிச்சு இந்தியா என்று ஆண்டு விட்டு விட்டுப் போனால் தென்னாசியா முழுதும் இந்தியா ஆகிவிடுமா? தமிழ்நாடு என்ற பகுதி எவ்வளவுகாலமாய் இந்தியா என்று இயங்குகிறது?

The disputed place is in Jammu Kashmir region. Kashmir itself is not part of India in the first place. It was forcefully invaded by India(Pakistan invaded the other half, Asad Kashmir). Therefore, the disputed place only belongs to Kashmiris. they are neither Indians or Pakistanis. 

 

As Yaz anbu mentioned, there wasn't a country called India before Independance. The English forcefully annexed independent kingdoms as a one administrative unit for their purpose (as they did in ceylon, annexing Tamil and Sinhala kingdoms).

 

Therefore, India has no rights to ask China to move back. People of Kashmir have to make that call. Because it is their motherland. India just another invader. Thats all !

சிக்கிம் மாநிலமும் அருணாச்சல மாநிலமும் சீனாவிற்கே சொந்தம். இந்தியா என்ற ஒன்று எந்த நூற்றாண்டில் இருந்து இயங்குகிறது? வெள்ளைக்காரன் அரசுகளையும் சிற்றரசுகளையும் பிடிச்சு இந்தியா என்று ஆண்டு விட்டு விட்டுப் போனால் தென்னாசியா முழுதும் இந்தியா ஆகிவிடுமா? தமிழ்நாடு என்ற பகுதி எவ்வளவுகாலமாய் இந்தியா என்று இயங்குகிறது?

The disputed place is in Jammu Kashmir region. Kashmir itself is not part of India in the first place. It was forcefully invaded by India(Pakistan invaded the other half, Asad Kashmir). Therefore, the disputed place only belongs to Kashmiris. they are neither Indians or Pakistanis. 

 

As Yaz anbu mentioned, there wasn't a country called India before Independance. The English forcefully annexed independent kingdoms as a one administrative unit for their purpose (as they did in ceylon, annexing Tamil and Sinhala kingdoms).

 

Therefore, India has no rights to ask China to move back. People of Kashmir have to make that call. Because it is their motherland. India just another invader. Thats all !

லடாக் ஊடுருவல்:எல்லை குறித்து பேச்சு நடத்த தயார் - சீனா

29 ஏப்ரல் 2013

 

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் 19 கி.மீ. தூரம் வரை சீன ராணுவம் ஊடுருவி உள்ளது. இந்நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக இந்திய பிரதமரின் கருத்தை கவனத்தில் கொண்டு, இந்தியாவுடனான கருத்து வேறுபாடுகளை தீர்க்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என சீனா தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இதனால், அப்பகுதிக்கு இந்தியா, தனது படைகளை அனுப்பி வைத்துள்ளது.

இப்பிரச்சினையில், இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. படைகளை திரும்பப்பெற சீன ராணுவம் மறுத்து விட்டது.

இதற்கிடையே, பிரதமர் மன்மோகன்சிங், இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று கூறினார்.

அதற்கு விளக்கம் அளித்து சீன வெளியுறவு அமைச்சகம் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பிரதமர் மன்மோகன்சிங்கின் கவனத்தை கருத்தை கவனத்தில் கொண்டுள்ளோம். இந்தியாவுடனான கருத்து வேறுபாடுகளை தீர்க்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். இருநாடுகளும் பேச்சுவார்த்தைக்கான வழிமுறை மூலம் தொடர்பு கொண்டுள்ளன. அதே சமயத்தில், எல்லை பகுதியில் அமைதியை கடைபிடிப்போம்.

சமீபகாலமாக, இந்தியாவும், சீனாவும் நட்புரீதியான ஒத்துழைப்பை வளர்த்து வருகின்றன. அதே நேரத்தில், எல்லை தகராறு உள்ளிட்ட பிரச்சினைகளை அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. இந்த பிரச்சினைகள், இருதரப்பு உறவில் பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்க விரும்புகின்றன.

என அதில் தெரிவிக்கபட்டிருந்தது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/29/1130429018_1.htm

இந்தியா அண்மையில் சாம்பூர் மின்நிலையம் சம்பந்தமாக இலங்கை நிறைய மிரட்டப்பார்த்தது. மின்சார உற்பத்தியை சீனா  முழுமையாக கேட்கிறது போலிருக்கு. (சீனா பொறுப்பு எடுக்க முதல் மின்சார கட்டணத்தில் பாரிய விலைஉயர்வு ஏற்பட  இருக்கிறது என்று நான் இன்னொரு இடத்தில் எதிர்வு கூறியிருந்தேன்.) அதனால் இதில் இந்தியா தலையிடுவதை சீனா தடுக்க முயல்கிறது போலிருக்கு. இந்தியா இலங்கை பக்கத்தால் இளக்கினால் மட்டுமே சீனா எல்லைப் பக்கங்களினால் இளக்கும்.

லடாக்: 5 வது கூடாரத்தை அமைத்தது சீனா!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=121934

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.