Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிலுவை சுமந்தோர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மரண வீட்டிற்கான அறிகுறி எதுவும் அங்கே இருக்கவில்லை. ஊரே திரண்டு வந்திருந்தாலும்கூட அழுகையோ ஒப்பாரியோ வேறு ஆரவாரச் சத்தமோ இல்லாமல் ஊசி விழுந்தால் கேட்குமளவிற்கு அமைதி உறைந்து போய் இருந்தது.

இடையிடையே விசும்பி விசும்பி அழுகின்ற அம்மாவின் மெல்லிய அழுகையொலியைத் தவிர வேறு சத்தமே இல்லை.

வீட்டின் பெரிய விறாந்தையில் உயரமான ஒரு வாங்கின் மேல் அக்கா கிடத்தப்பட்டிருந்தாள்.

கால்களை ஒன்றின்மேல் ஒன்று வைத்தபடி கைகளிரண்டையும் நீட்டிக்கொண்டு தலை இடதுபுறமாகச் சரிந்து போயிருக்க அக்கா கிடந்தாள்.

முழங்கால்களிலிருந்தும் முழங்கைகளிலிருந்தும் இரத்தம் வழிந்து காய்ந்து போயிருந்தது. உடல் முழுவதும் துப்பாக்கிச் சன்னங்களால் தசை கிழிக்கப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது. கூந்தல் இரத்தம் தோய்ந்து சிவப்பு நிறமாய்க் கலைந்திருந்தது. கை, கால் முழுவதும் இரத்தக்கீறல்கள். நான் அக்காவையே வெறித்துப் பார்க்கின்றேன்.

மரண அவஸ்தையை அனுபவித்த வேதனையில் நெற்றி சுருங்கியிருந்தாலும் முகத்தில் அந்தக் குழந்தைத்தனமான மென்மையும் இதழின் ஓரத்தில் மெல்லிய கீற்றாய் துளிர்விட்டிருக்கின்ற புன்னகையும் இன்னமுந்தான் செத்துப்போகவில்லை.

எனக்கு அழவேண்டும்போல இருக்கிறது. கத்திக் குழறி என் துன்பத்தை எல்லாம் கண்ணீராய்க் கொட்டிவிடவேண்டும்போல் துடிப்பு வருகின்றது.

ஆனால் கண்ணீர் வரவில்லை - கண்ணீரும் கூடக் காய்ந்து போயிருக்க வேண்டும்.

ஷஷஎன்ரை பிள்ளை............. என்ரை பிள்ளை............

விசித்து விசித்து அழும் அம்மாவின் ஓலம் மெதுவாகக் கேட்கின்றது.

மின்னாமல் முழங்காமல் இப்படியொரு சாவு அக்காவுக்கு வருமென அம்மா மட்டுமல்ல யாருமே எதிர்பார்க்கவில்லை.

நேற்று............... வெட்கத்துடன் சிரித்தபடி ஷஷஅவரோடை ரெலிபோன் கதைச்சிட்டு வாறன் || என்று வீட்டைவிட்டுப் போனவள் செத்த பிணமாகத் திரும்பி வருவாள் என்று யார் எதிர்பார்த்தார்கள்?

இரண்டு மாதத்திற்கு முன்னர் தான் அக்காவிற்கு அந்தச் சம்மந்தம் வந்தது.

வெளிநாட்டில் இருக்கின்ற பக்கத்து வீட்டு வேலுப்பிள்ளையின் மகனிடமிருந்து, தான் அக்காவைத் திருமணம் செய்ய விரும்புவதாயும் விரைவில் அவளைத் தன்னிடம் கூப்பிட இருப்பதாயும் செய்தி வந்த போது வீடே ஒருகணம் பூரித்துக்கொண்டது. அக்கா வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் ஒளித்துக்கொண்டாள். அதற்குப் பிறகு அவளுக்கு வீட்டில் ஆறுதலாக இருக்கப் பொழுதே இருக்கவில்லை. வெளிநாட்டிலிருந்து அடிக்கடி அவளுக்குத் தொலைபேசி அழைப்பு வந்து கொண்டிருந்தது. உரும்பிராயிலிருந்து எத்தனையோ இராணுவக் காவலரண்களைத் தாண்டி யாழ்ப்பாணத்திற்குச் சென்று அவனுடன் கதைத்துக்கொள்வாள்.

ஆரம்பத்தில் அவனுடன் தொலைபேசியில் கதைப்பதற்கு அவள் சம்மதிக்கவில்லை.

ஷஷகலியாணம் கட்ட முந்தி அவரோடை என்ன கதை? நான் கதைக்கமாட்டன்|| என வீராய்ப்பு பேசியவள் தொலைபேசியில் அவனது குரலைக் கேட்டவுடன் பெட்டிப்பாம்பாய் அடங்கிவிட்டாள்.

நேற்றும் அவரோடை ரெலிபோன் கதைச்சிட்டு வாறன் || என்று காலையில் வீட்டைவிட்டு வெளியேறியவள் மதியமாகி மாலையாகி இரவாகிய பின்னும் வீடு திரும்பவில்லை.

அப்பா செய்வதறியாமல் திகைத்துப்போனார். அம்மா ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டாள்.

ஏதாவது சந்தேகத்திலை ஆமி பிடிச்சிருப்பான். பிரச்சினை இல்லையெண்டால் விடிய விட்டிடுவான். நீங்கள் வீணாய்க் கவலைப்படாதேங்கோ|| எனப் பக்கத்து வீட்டார்கள் ஆறுதல் கூறினார்கள்.

இரவு முழுவதும் யாரும் உறங்கவில்லை.

விடிய - இருள் முற்றாக விலகுவதற்கு முன்பேயே அப்பா அக்காவைத் தேடிப் போய்விட்டார்.

ஊரும்பிராய்ச் சந்தியிலிருந்த முதற் காவலரணில் அக்காவைப்பற்றி விசாரித்தபோது அக்காவலரணைத்தாண்டி அவள் அப்பாலே போகவில்லை என்பது தெரிந்தது.

என்ரை பிள்ளை எங்கை? என்ரை பிள்ளையைக் காட்டுங்கோ|| என அப்பா எத்தனையோ முறை கெஞ்சிக் கேட்டுக்கொண்ட பின்பு தான் ஷஷ உங்கடை மகள் புலி. அதுதான் பிடிச்சது|| என இராணுவச்சிப்பாய் ஒருவன் கூறினான்.

என்ரை பிள்ளை புலியில்லை. வெளிநாட்டுக்குப் போக எண்டு இருக்கின்ற பிள்ளையை நீங்கள் தெரியாமல் பிடிச்சுப்போட்டியள். என்ரை பிள்ளையை விடுங்கோ|| என்ற அப்பாவின் சோகமான கதறல் அம் முகாமின் இராணுவ அதிகாரிக்குக் கேட்டிருக்க வேண்டும். அந்த அதிகாரியின் விசாரணைக்குப் பின்னர் அக்காவின் உடல் வெள்ளைத்துணியால் மூடியபடி அப்பாவிற்கு முன்னர் கிடத்தப்பட்டது.

உங்கடை மகள் புலி. அதுதான் சுட்டுக்கொண்டது||. என்றபடி அந்தச் சிப்பாய் வெளியேறினான்.

அக்கா செத்துப்போய்க் கிடந்தாள். துப்பாக்கிச் சன்னங்கள் அவள் உடலைச் சல்லடையாக்கி இருந்தன. கலைந்து போன தலையும் கிழிந்து போன உடையும் உருக்குலைந்து போன உடலும் வெறும் துப்பாக்கிச் சூட்டுக்கு மட்டும் அவள் துடித்து மாண்டதை புலப்படுத்தவில்லை. அவள் மானபங்கப்படுத்தப்பட்டிருக்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனையோ சோகக்கதைகள் எமது மண்ணில் கிருசாந்தி, சாரதம்பாள்,கோணேஸ்வரி..........

வணக்கம் கந்தப்பு,

இணைப்புக்கு நன்றி,

இதுபோல எங்கள் மண்ணில் அன்னியர் செய்யும் அவலங்களையும். புலம்பெயா மண்ணில் எம்மவர் செய்யும் அநியாயங்களையும் கதைகளாக கவிதைகளாக எழுதப்பட வேண்டும்

அன்புடன்

மணிவாசகன்

உண்மைக் கதையை நினைவு படுத்தியிருக்கின்றர் இந்த எழுத்தளார். படையினரால் அநியாயமாக கொல்லப்பட்ட சகோதரிகளுக்குள் ரஐனியும் ஒருவர். கதையை வாசிக்கும்போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

இணைப்பிற்கு நன்றி கந்தப்பு.

கண்ணீர் சிந்தும் நினைவுகளுடன் எழுதிய உண்மைக்கதை உள்ளத்தை உருக்கிவிட்டது.

இப்படி எத்தனை கொலைகள் :lol:

இணைப்பிற்கு நன்றி கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைக் கதையை நினைவு படுத்தியிருக்கின்றர் இந்த எழுத்தளார். படையினரால் அநியாயமாக கொல்லப்பட்ட சகோதரிகளுக்குள் ரஐனியும் ஒருவர். கதையை வாசிக்கும்போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.  

இணைப்பிற்கு நன்றி கந்தப்பு.

உரும்பிராயில் நடந்த சம்பவம் உங்களுக்கு நினைவில் வந்திருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கந்தப்பு,

இணைப்புக்கு நன்றி,

இதுபோல எங்கள் மண்ணில் அன்னியர் செய்யும் அவலங்களையும். புலம்பெயா மண்ணில் எம்மவர் செய்யும் அநியாயங்களையும் கதைகளாக கவிதைகளாக எழுதப்பட வேண்டும்

அன்புடன்

மணிவாசகன்

எரிமலையில் வந்த மற்றைய கதைகள்

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=12153

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=12155

உண்மைச்சம்பவங்கள்

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=12156

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=12157

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=12158

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.