Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனந்தாவோடு ஆட்டம் போடும் யாழ் இந்து அன்னை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jhc.jpg

 

 

யாழ் நகர் இந்துக்கல்லூரி

பல கலை பயில் கழகமும் அதுவே

தமிழர் தலை நிமிர் கழகமும் இதுவே

கீதம் இசைத்த கல்லூரி...!

 

நல்லூரின் வீதியிலே

இராசையா திலீபனை

பட்டினிப் போரிலே கிடத்திய கல்லூரி..!

 

பொன்னம்மான் தொடங்கி...

பல நூறு வேங்கைகள்

தமிழீழக் களத்தில் அணிவகுக்க

அழகு பார்த்த கல்லூரி..!

 

ஒப்பரேசன் லிபரேசனிலே

ராதா என்ற சாதனையாளனை

சரித்திரமாக்கிய கல்லூரி..!!

 

இன்று..

கிரிக்கெட் தொடர் என்று

ஆனந்தாவோடு

போடுவதென்ன.. சதிராட்டமா..???!

 

ஆனந்தாவின்

சிங்கள மைந்தர்கள்

கோத்தபாய முதல்

பொன்சேகா கண்டு

பசில் ராஜபக்ச வரை..

பேரினச் சிங்களச் சேனையின்

மூத்த இனவெறியர்கள்..!

அன்னையே தெரியுமா

அந்தச் சேதி உந்தனுக்கு..!

 

தமிழினக் கொலையின்

போர்க்குற்றவாளிகள்

வேறு யாருமல்ல

றோயலும் ஆனந்தாவும்

உந்தித் தள்ளிய

சிங்கள இனவெறியர்கள்..!

அன்னையே புரியுமா

அது உனக்கு..!

 

இன்று நீயோ..

சிங்களச் சேனையின் அடிவருடி..

பொட்டு வைச்சு

மாலைபோட்டு

குனிஞ்சு கும்பிட்டு..

பந்தாடுறாய்..!

அது பந்தல்ல

தமிழர் வாழ்வுரிமை

விளங்குமா உனக்கது..!

இரண்டு இனிங்ஸில் முடிய

அது விளையாட்டல்ல

நூற்றாண்டுகள் பல கண்ட

வரலாறு ஆத்தா..!

 

தமிழர் தலைநிமிர

கீதம் இசைத்து நின்றவளே

வழிகாட்டி வந்தவளே..

இன்று தலை குனிய

வைத்தாயே..!

 

முள்ளிவாய்க்காலில் ஊற்றெடுத்த

தமிழர் இரத்த ஆறு

உந்தன் பாதம் நனைத்தும்

மதியிழந்தனையே..!!

சிங்கத்தின்  கொடுவாளுக்கு

இரையாகி

வீழ்ந்த தமிழ்குடிகளின்

கணக்கு எண்ணி முடியமுன்னே

கொடியேற்றிக் கொண்டாட்டமா..??!

உனக்கேனிந்த அவசரம்

புத்தி பேதலித்ததுமேன் தாயே..!!!

 

உள்ளூரில் ஊட்டிய

போதையா

வெளிநாட்டில்

இருந்து வந்த

கட்டளையா..??!

 

ஆனந்தாவோடு

ஆனந்த நடனமாடும்

யாழ் இந்து அன்னையே...

சொந்த மகவுகளை

நாகர்கோவிலிலும்

செஞ்சோலையிலும்

நவாலியிலும்

ஆனந்தாவின்

கொலைவெறிக்கு..

பறிகொடுத்த பாவிகள் சார்பில்

உந்தன் மைந்தன் இவன்

பந்தடிக்கும் ஈனச்செயல் கண்டு..

ஏங்கித் துடிக்கிறான்..!

ஈனர்கள் சிலர்

உந்தன் பாதத்தின் புனிதம்

சிதைப்பதை

எனியும் நீ

அனுமதிப்பாயா..???!

 

இனியும் நீ

தறிகெட்டு ஆடினால்..

வேண்டாம்

உந்தன் தொப்புள்கொடி உறவு..!

உடனடியாய்

தொடர்பறுப்பேன்

மானத் தமிழிச்சி

மைந்தன் இவன்..

எனி எந்நாளும்

உச்சரிக்கேன்

"இவன் உன் மைந்தன்" என்றே..!!

 

இது எந்தன் முடிவமல்ல

யாழ் இந்து அன்னையே...

மானத்தமிழன்

ஒவ்வொருவன் முடிவும் ஆகும்..!

 

jhc1.jpg

 

படங்கள்: jhc.lk

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக்கொள்கின்றேன். சற்றும் எதிர்பாராத நிகழ்வு ஒன்று. இது தொடருமானால் இந்துவுக்கும் எங்களுக்குமிருக்கும் உறவு தொடராது. :(

 

நெடுக்கால போவான்... கவிதையில் உங்கள் ஆதங்கம் புரிகிறது. அழகு நடையிலும் கவிதை அமைந்திருக்கிறது. 

 

ஆனாலும்  யாழ்ப்பாணத்தில் இன்று நிலவுவது முற்று முழுதான இராணுவ ஆட்சி! இந்த நிலையில் எத்தகைய அழுத்தங்களுக்கு அதிபர் ஆளானார் என்று கூற முடியாது.. எனவே இதனையும் கருத்தில் எடுக்க வேண்டும். என்பது எனது கருத்து...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்கள் கருத்துக்களுக்கு யாழ்வாலி மற்றும் மணிவாசகன்.

இராணுவ அழுத்தம் என்பதை ஒரு சாட்டாக வைச்சுக் கொண்டு தவறுகளை பெருக்கிக் கொண்டு போனால் நன்மை அடைவதும் தீவிரமாவதும் அந்த இராணுவ அழுத்தமாக இருக்குமே தவிர.. தமிழ் மக்களுக்கு அந்த அச்ச உணர்வால்.. எள்ளளவு பயனும் இல்லை. மேலும்..

 

போர் காலத்தில் கொழும்பு,கிழக்கு மற்றும் மலையக பாடசாலைகள் சந்திக்காத இராணுவ அழுத்தத்தையா இப்போ இந்துக் கல்லூரி சந்திக்கிறது...??! அப்போதெல்லாம் எந்தத் தமிழ் பாடசாலைகளையும் நட்புடன் நோக்காத சிங்களம்.... இப்போ மட்டும்.. எதுக்கு அதுவும் யாழ் இந்துக்கல்லூரியை விசேடமாக தெரிவு செய்து நட்புப் பாராட்ட வேண்டும்..??!

மேலும் போராட்ட காலவெளியில் யாழ் பரியோவான் கல்லூரி ஒரு அதிபரை இழந்துள்ளது. யாழ் மத்திய கல்லூரி இழந்துள்ளது. கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி இழந்துள்ளது. ஏன்.. இதே போலியான தமிழ் - சிங்கள நட்புறவை நாடப் போய்த்தானே..???!

இன்று அதையே யாழ் இந்துக் கல்லூரி செய்வது எந்தளவு நியாயம்..???!

 

இதே சிங்களத்தால் தானே கோப்பாயில் வைத்து உலங்கு வானூர்தியில் இருந்து இறங்கி வந்து மாணவர்கள் என்று அறிந்தும் தாக்குதல் நடத்திக் கொன்றது சிங்களம். இதே கல்லூரி மீது தானே விமானக் குண்டு வீச்சும் மேற்கொள்ளப்பட்டது.

இவை போதாதா.. இன்றைய சூழல் எமக்கு நட்புப் பாராட்டும் படியாக இல்லை என்று சொல்லி இவ்வாறான நிகழ்வுகளைப் புறக்கணிக்க...???!

இருந்த கொழும்பு பம்பலப்பிட்டி இந்துவுடனான உறவை துண்டிக்க முடிஞ்ச அளவுக்கு ஏன் இல்லாத புது உறவுகள் இப்போது..???! அதுவும் தமிழ் மக்கள் சிங்களம் மீது கடுமையான போர்க்குற்ற மற்றும் மனித உரிமைகள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றம் சுமத்தியுள்ள இவ்வேளையில்..???!

இத்தனை கேள்விகளுக்கும் பதிலை இராணுவ அழுத்தம் என்பதன் ஊடாக மட்டும் தர முனையக் கூடாது. இராணுவ அழுத்தம் போராட்டம் முழுக்க பல்வேறு இடங்களிலும் இருந்துள்ளன. திருமலை... மட்டு நகர்.. வவுனியா நகர்.. அம்பாறை.. மன்னார் நகர்.. போன்றவை அதிக காலம் விடுதலை அடையாத பிரதேசங்களாக இருந்த போதும்.. அவர்கள் இவ்வாறான நட்புக்களை தேடி ஓடவில்லையே..???! யாழ் இந்துவுக்கு மட்டும்.. ஏன் இன்று இது தேவைப்படுகிறது..??!

அதுவும் சிங்கள அரசால் அபிவிருத்தியில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட யாழ் இந்துக்க கல்லூரி இன்று பழைய மாணவர்களின் முயற்சியால் உழைப்பால் செழித்திருப்பதை சிங்களனுக்கு காட்டி பெருமை கொள்ள இதுவா தருணம்..???! :rolleyes::(

 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.