Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாகராஜ சோழன். எம்.ஏ.எம்.எல்.ஏ. திரைவிமர்சனம்

Featured Replies

சாதாரண எம் எல் ஏ வா இருக்கும் ஹீரோ  சி எம்மையே மிரட்டி உதவி சி எம்  ஆகிடறார். அவருக்கும் அவரோட அல்லக்கைக்கும் நடக்கும் காமெடி கலாட்டாக்கள்  கொஞ்சம் .ஆதிவாசிகள் நிலத்தை அபகரிக்க பண்ற அட்டூழியங்கள் கொலைகள் என  இன்னொரு டிராக். எப்படி திரைக்கதை எழுதறதுனு ஒரே குழப்பமாகி சும்மா  வசனங்களாலும் , சத்யராஜ் - மணி வண்ணன் காம்பினேஷன் காட்சிகளால் மட்டுமே  படத்தைத்தூக்கி நிறுத்திடலாம்கற நப்பாசைல எடுத்த படம் இது.

சும்மா சொல்லக்கூடாது , இத்தனை வருஷங்கள் ஆகியும் சத்யராஜ் - மணி வண்ணன் பிரமாதப்படுத்தி இருக்காங்க . எகத்தாளம் , எள்ளல் நக்கல் எல்லாம் செம.ஆனா எல்லாம் பிட்டு பிட்டா இருக்கு. அதான் மைனஸ் . படத்தோட ஒட்டலை. ரொம்ப செயற்கையா இருக்கு

சத்யராஜ்  கெட்டப் கன கச்சிதம். போலீஸ் ஆக வரும் இன்னொரு சத்யராஜ் பாவம் சான்ஸே  இல்லாமல் சும்மா வந்துட்டுப்போறார். மணி வண்ணனின் மகனுக்கு வேறு ஒரு  கேரக்டர் கொடுத்து விட்டதால் அவரை முன்னிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் வேறு சீமான்  பொது வாழ்க்கைலயும் சரி , சினிமா வாழ்க்கைலயும் சரி எந்த அளவுக்கு இமேஜை  வளர்த்து வெச்சிருந்தாரோ அந்த அளவு கெடுத்துக்கிட்டார். முன்பெல்லாம் அவர்  வரும் காட்சிகளில் எல்லாம் அப்ளாஸ் அள்ளும் . இப்போ சிரிப்பா சிரிக்கறாங்க .

 

;இது  போக மிருதுளா  ஹன்சிபா , கோமல் ஷர்மா என  சில பல ஃபிகர்கள் வந்துட்டுப்போகுது. வர்ணிக்கற அளவு பெருசா இல்லை. அமைதிப்படை முதல் பாகத்தை எதிர்பார்த்து செல்பவர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்திப்பார்கள்.

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14583:chola-tasks-emeemele-home&catid=39:cinema&Itemid=107

 

  • கருத்துக்கள உறவுகள்
 
நாகராஜசோழன் எம்.ஏ எம்.எல்.ஏ - விமர்சனம்
 
ரு கேடுகெட்ட அரசியல்வாதிக்கு தன் மகனே ஆப்பு வைக்கும் அதிரடிப் படம் தான் அமைதிப்படை. நாகராஜசோழன் எம்.ஏ எம்.எல்.ஏ. (அமைதிப்படை-2) படத்திலும் அதே கதையமைப்பு தான். அரசியலைப்பற்றி அதேவிதமான சரவெடி வசனங்களை அள்ளிவீசி இருக்கிறார் இயக்குனர் மணிவண்ணன். 
 
n1.jpg
 
வாரிசு அரசியல், அரசியல் கொலைகள், உட்கட்சி விவகாரம், கட்சி தாவுதல், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது, கட்சித் தலைமைக்கே ஆப்பு வைப்பது, என எல்லா விஷயங்களும் இந்தப்படத்தில் இருக்கிறது. 
 
ஒரு மலைப்பகுதியை வெள்ளைக்கார வியாபாரிகளிடம் விற்பதற்கு பேரம்பேசுகிறார் முதலமைச்சர். அந்த மலைவாழ் மக்களின் வலிகளையும், போராட்டத்தையும் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். அமைதிப்படை படத்தில் வந்த நாகராஜசோழன் கேரக்டர் இதிலும் தொடர்கிறது. 
 
சிறையில் இருக்கும் நாகரஜாசோழனை கட்சித்தலைமை பகைத்துக்கொள்ள, முதலமைச்சரின் ஊழல் ஆதாரங்களை வெளியிடுவேன் என்று போலீசை மிரட்டுகிறார் நாகராஜசோழன். சிறையில் இருந்து வெளியே வந்ததும் கட்சித்தலைமையை மிரட்டி துணைமுதல்வர் பதவியில் அமர்கிறார் நாகராஜசோழன். பிறகு... வழக்கமான அலப்பறைகள் தொடர்கிறது. 
 
தமிழ்நாட்டு அரசியலில் முக்கியமான புள்ளியாக இருக்கும் நாகராஜசோழன் தன் மகனை ஒரு இந்திய அரசியல்வாதியாக்க கனவுகாண்கிறார். ஆனால், அவரது மகனோ ஒரு ஏழை பெண்ணை காதல் திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்துகிறார். வெள்ளைகாரன் தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்க அவனுக்கு ஒரு காட்டுப்பகுதியை கொடுக்க நாகராஜழோழன் முடிவெடுக்கிறார். அதில் ஒரு பெரிய அமௌண்டை கொள்ளையடிக்கலாம் என்பது அவரின் கணக்கு. ஆனால், சில நேர்மையான அதிகாரிகள் அதற்கு சம்மதிக்காததால், அவர்களை தீர்த்துக்கட்ட, பிரச்சனை பெருசாகிறது. 
 
n3.jpg
 
இதற்குள் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைபேசி தன் கட்சிக்குள் சேர்த்துக்கொண்டு, தன்னை முதலமைச்சராக்கும் படி கட்சித்தலைமைக்குச் செக் வைக்கிறார் நாகராஜசோழன். பிறகென்ன மலைவாழ் மக்களின் போராட்டங்கள் பலனளிக்காமல் அவர்கள் போலீசால் சிறைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களை வழிநடத்திய சீமான் போராட்டத்தைக் கைவிடவேண்டிய சூழல் வருகிறது. 
 
ஆடிய ஆட்டங்களெல்லாம் அடங்கிவிட, தன் சொந்த மகனே நாகராஜசோழனுக்கு சூன்யம் வைக்கிறார். இதற்கிடையில நாகராஜசோழன் என்கிற அம்மாவாசயும் மணிமாறன் என்கிற மணியனும் அடிக்கிற லொள்ளு இருக்கே... அதே எனர்ஜி - அதே டைமிங்! பிண்ணிட்டாங்களே...!
 
சீரியசான விஷயங்களை காமெடியோடு போறபோக்கில் அடித்துவிடுவது மணிவண்ணனுக்கே உரிய ஸ்டைல். சி.எம் முதல் பி.எம் வரை ஒருத்தர கூட விட்டுவைக்காம, சும்மா... கலாய்ச்சுட்டாங்களே! 
 
n2.jpg
 
தன் வில்லத்தனமான நடிப்புக்கு வேறுயாரும் நிகரில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் சத்யராஜ். மணிவண்ணனும் அதே குசும்போட இருக்கிறார். படத்தில் சில பிரம்மாண்ட காட்சிகள் இருந்தாலும், இவங்க இருவரும் லொள்ளு செய்கிற காட்சிகள் தான் அசத்தலாக இருக்கிறது. சீமான் அரசியல் மேடைகளில் பேசுகிற அதே உணர்ச்சியுடன் படத்திலும் பேசி நடித்திருக்கிறார். 
 
படத்தில் மலைவாழ் மக்களின் வலிகளை நாம் புரிந்துகொண்டாலும், அதைக் காட்சிப்படுத்திய வித்தில் ஒரு செயற்கைத்தனம் இருந்தது. திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக அமைத்திருக்க முடியும். காட்சிகள் துண்டு துண்டாக இருப்பது படத்தின் மைனல். ஆனால் மேக்கிங்கில் இளைய இயக்குனர்களோடு போட்டி போட்டிருக்கிறார். 
 
டி.ஷங்கரின் தரமான ஒளிப்பதிவு பாராட்டுக்குறியது. ஜேம்ஸ் வசந்தனின் இசை சுமாரானது என்றே சொல்ல முடியும். பின்னணி இசையை கொஞ்சம் ஜாக்கிரத்தையாகவே கையாண்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.  
 
n6.jpg
 
அமைதிப்படை முதல் பாகத்தை மிஞ்ச முடியாது என்றாலும், அந்தப்படத்தைப் பார்க்காதவர்களும் இந்த நாகராஜசோழனை பார்த்து ரசிக்க முடியும் என்பது நிச்சயம். 
 
சரவெடி வசனங்களில் சில...
 
சத்யராஜ் : இந்த தேர்தல்ல என்ன இலவசமா கொடுக்கலாம்?
 
மணிவண்ணன் : மிக்சி கொடுத்தாச்சுங்ண்ணா... கிரண்டர் கொடுத்தாச்சுங்ண்ணா... டி.வி கொடுத்தாச்சுங்ண்ணா... ஆனா, ஜனங்க பாவம் கரண்டு இல்லாமதாங்ண்ணா கஷ்ட்டப்படுறாங்க. அதனால் வீட்டுக்கு ஒரு ஜனரேட்டர் இலவசமா கொடுக்கலாம்.
 
----------------
 
சத்யராஜ் : மணியா... இந்தா... அவன சுட்டுத்தள்ளு
மணிவண்ணன் : அட, எனக்கு சுடத்தெரியாங்கண்ணா...
சத்யராஜ் : நீ எப்ப இதெல்லாம் பழகுறது?
மணிவண்ணன் : கைநடுக்கதுல உங்கள சுட்டாலும் சுட்டுடுவேன்
சத்யராஜ் : நீ செஞ்சாலும் செய்வ. துப்பாக்கிய குடு. 
 
----------------
 
சத்யராஜ் : என்னய்யா நடக்குது
மத்திய அமைச்சர் : அண்ணா, என் கையில எதுவும் இல்ல. சட்டத்த மீறி என்னால எதுவும் செய்ய முடியாது
சத்யராஜ் : அமைச்சரே, உங்கள நான் ஜெயிக்க வச்சதே சட்டத்த மீறித்தான். மறந்துட்டீங்களா
 
----------------
 
எதிர்கட்சித்தலைவர் : என் கிட்ட 17 எம்.எல்.ஏ இருக்குறாங்க தலைவரே. அதுவும் போன தேர்தல்ல உங்ககூட கூட்டணிவச்சு ஜெய்யிச்சதுதான்
சத்யராஜ் : அத வச்சுக்கிட்டு தானே சட்டசபையில ’ஏய்’ அப்படின்னு சவுண்டு கொடுக்குற 
 
----------------
 
சீமான் : மரமெல்லாம் வெட்டியாச்சுன்னா, மலை எங்க இருக்கும். மழை வந்து மண்ணெல்லாம் போய் வெறும் பாற தான் இருக்கும்
ஜெகன் : அப்போ பாற தான் மிஞ்சுமா
சீமான் : அதத்தான் வெட்டி வித்துடறாங்களே, கல்குவாரி கேள்விப்பட்டதில்ல
ஜெகன் : அப்போ, வெறும் தர தான் மிஞ்சுமா
சீமான் : அதையும் தான் ஃப்ளாட் போட்டு விட்துடறாங்களே
 
இன்னும் படத்தில் எவ்வளவோ இருக்கு...!

 

http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=2218

 

தமிழ் உணர்வாளர்கள் மூவர் ஒரே படத்தில் !!!!!!

தென்னிந்திய சினிமாவைத் தியட்டரில் போய் பார்ப்பது என்று முடிவெடுத்தால் இது போன் றபடங்களைத் தான் முதலில் போய் பார்க்க வேண்டும். எமக்காகக் குரல் கொடுப்பவர்களுக்காக....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.