Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை

Featured Replies

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே பாண்டிங் நகரில் என்.பத்மநாபன் (வயது 44) என்ற தமிழ் வக்கீலுக்கு சொந்தமான பண்ணை உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந் தேதி அங்கு சென்ற அழகுக்கலை பெண் தொழில் அதிபர் சோசிலாவதி (வயது 47) உள்ளிட்ட 4 பேரை காணவில்லை.

சில நாட்கள் கழித்து அவர்களின் எலும்புகள் அந்த பண்ணையில் கண்டெடுக்கப்பட்டன. அதையடுத்து ரத்த மாதிரியும் கிடைத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பத்மநாபனும், அவருடைய பண்ணை ஆட்களும், தமிழர்களுமான டி.தில்லையழகன் (22), ஆர்.மதன் (23), ஆர்.காத்தவராயன் (33) ஆகியோரும் சேர்ந்து, காணாமல் போன 4 பேரையும் கொலை செய்து எரித்து இருப்பது தெரிய வந்தது.

4 பேரின் உடல் பாகங்களையும் அங்குள்ள நீரோடையில் வீசி உள்ளனர். சோசிலாவதியுடன் கொல்லப்பட்டவர்கள் வங்கி அதிகாரி நூரிஷம் முகமது (38), வக்கீல் அகமது காமில் அப்துல் கரிம் (32), டிரைவர் கமருதின் ஷம்சுதின் (44) என்பது தெரிய வந்தது. ஒரு நில பேரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்து இருப்பது கண்டறியப்பட்டது.

பத்மநாபன் உள்பட 4 தமிழர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை, மலேசிய ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில், நேற்று நீதிபதி அக்தர் தாகிர் பரபரப்பு தீர்ப்பு அளித்தார். பத்மநாபன் உள்பட 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து அவர் உத்தரவிட்டார். தீர்ப்பில் அவர் கூறி இருப்பதாவது:-

அழகுக்கலை நிபுணர் சோசிலாவதி விற்ற 2 நிலங்களுக்கு பத்மநாபன் இடைத்தரகர் போல செயல்பட்டார். வாங்குபவரையும், விற்பவரையும் நேரில் சந்திக்க விடாமல் தடுத்து வந்தார். நெருக்குதல் அதிகமானபோது, ஒருதரப்பை கொன்றுவிட்டு தப்பிக்க பத்மநாபன் முடிவு செய்தார்.

துரதிருஷ்டவசமாக, அதற்கு சோசிலாவதி பலியாகி விட்டார். அவருடன் கொல்லப்பட்டவர்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை. தவறான இடத்தில், தவறான நேரத்தில் இருந்ததற்காக அவர்களும் கொல்லப்பட்டு விட்டனர். சோசிலாவதிக்கு பத்மநாபன் ஒரு காசோலை கொடுத்து இருந்தார்.

ஆனால் அவரது வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாதது, அவர் இந்த கொலையை செய்வதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அவர் நெறிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டுள்ளார். நில பேரத்தில் அவர் பாரபட்சமாக செயல்பட தவறி விட்டார்.

கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கிடைக்காததற்காக, மேற்கண்ட 4 பேரையும் தண்டிக்காமல் இருந்துவிட முடியாது. இந்த கொலையை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை குற்றவாளிகள் கூட ஆட்சேபிக்கவில்லை. குற்றவாளிகள், தாங்கள் செய்யும் செயலின் விளைவுகளை நன்கு அறிந்துதான், கொலை செய்யும் ஒரே நோக்கத்துடன் இந்த கொலையை செய்துள்ளனர்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14893:4-people-sentenced-to-death-in-malaysia&catid=37:india&Itemid=103

 

இவர்களை விடுதலை செய்ய வேண்டும் , :)

 

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு

காந்தியைக்கிண்டலடிக்க

கிட்லரைப்போற்ற வேண்டியநிலை................ :(

மலேசியாவில் நாலு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என்று தலைப்ப  மாத்துங்கப்பா 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.