Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மத முரண்பாட்டுக்கு பௌத்தர்கள் காரணமானவர்கள் இல்லை; ஜனாதிபதி

Featured Replies

மத முரண்பாட்டுக்கு பௌத்தர்கள் காரணமானவர்கள் இல்லை; ஜனாதிபதி

 

 

c2b93529b1fda2327bb76f3408fc7020.jpg இலங்கையில் உள்ள பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்ல. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவே சிலர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்  போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள பௌத்தர்கள் கடும் போக்கானவர்கள் அல்ல. எனினும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மதத்தின் அடிப்படையில் நாட்டை சீர்குலைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் பௌத்தர்கள் ஏனைய மதத்தவர்களைத் துன்புறுத்துவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. எனினும் ஏனைய மத வழிபாட்டுத் தளங்களை அமைத்துக் கொள்ள பௌத்த விஹாரைகளுக்கு சொந்தமான காணிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் பௌத்தர்கள் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை எடுத்து வருகின்றனர் என்பது வெளிப்படையாகும்.

நாட்டில் மத முரண்பாடுகள் கிடையாது, அவ்வாறு முரண்பாடுகள் ஏற்பட பௌத்தர்கள் இடமளிக்க மாட்டார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

http://onlineuthayan.com/News_More.php?id=801062058424754033#

 

  • கருத்துக்கள உறவுகள்

சீ

அப்படி உங்களை குறைத்து மதிப்பிடுவோமா

நீங்கள் உலக பயங்கரவாதிகள்............ :(

Edited by விசுகு

  • தொடங்கியவர்

முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுக்கிறார்கள்!

[Friday, 2013-05-24 22:40:09]
Cow-cut-srilanka-news-150.jpg

மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்ததாக தினக்கதிரில் செய்தி வெளியானதை பார்த்த நேயர் ஒருவர் இந்த படத்தையும் அனுப்பி வைத்ததுடன் ஏன் சிங்களவர்கள் மாடு வெட்டுவதில்லையா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். இலங்கையில் முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுகின்றனர். அதற்கான ஆதாரம் இதோ என இப்படத்தை அனுப்பியிருக்கிறார். இந்த புத்த பிக்கு எந்த உலகில் இருக்கிறார் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார்.

  

இதோ உங்கள் பார்வைக்காக சிங்களவர்கள் மாடு வெட்டும் படம்

 

Cow-cut-srilanka-news-001.jpg
 

 

சத்தியமாய் கேட்கிறேன் .....................எப்படியப்பா இப்படி நாக்கு கூசாமல் ...................... :icon_mrgreen: 

 

  • கருத்துக்கள உறவுகள்

மத முரண்பாட்டுக்கு பௌத்தர்கள் காரணமானவர்கள் இல்லை; ஜனாதிபதி

 

 

சனநாய்திபதி  தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.. அவர்கள் என்றுமே மதமுரண்பாட்டுக்கு காரணம் கிடையாது.. இன முரண்பாட்டுக்கு மட்டுமே காரணம் என்று... அது புரியாமல்  நீங்க .. கருத்து எழுதிகிறீர்கள்

 

  • தொடங்கியவர்

நான் சிலவற்றை எழுதும் போது, நிழலி சொல்வது போல, விளங்காமல் போய்விடுவதுண்டு.  முழு விபரமும் எப்போதும் எழுவது நெடுத்த நீண்ட உலைச்சல்.

 

இதில் ஏன் மாடு வெட்டும்படத்தை போட்டேன் என்பதை சொல்லவில்லை. மகிந்தா இங்கே கோத்தாவால் உண்டி போட்டு வளர்த்து தலதாமாளிகையில் நடத்தி முடித்த பலியின் பின்வந்து அதை பூசி மெழுகுகிறார். அதற்குதான் புத்த மதத்தவர்கள் தீவிர வாதிகள் இல்லை என்கிறார். மொத்ததில் முஸ்லீம்களால் மாடுகள் அறுக்கப்படுவதை தானும் எதிர்க்கிறார்; ஆனால் புதத் பிக்கு செய்தது மட்டும் ஒரு வழமையான புத்த மத நிகழ்சி இல்லை என்று மூடிபோடப்பார்க்கிறார். 

 

நான் போட்ட படத்தின் கருத்து சிங்களவர்களும் மாடு வெட்டும் போது, திட்டமிட்டு நாடு முழுவதையும் கலவரத்தில் இறக்கலாம் என்றும், சிங்களவர்கள் முழுப்பேரிலும் உறங்கிக் கொண்டிருக்கு தீவிரவாததை விழிக்கச்செய்ய வேண்டுமாயின் அதற்கு வெசாக்கை தெரிய வேண்டும் என்றும்தான் இன்று இங்கே இதை செய்திருக்கிறார்கள். முழு சிங்களவரையும் எந்த கணத்திலும் மற்றய மதங்களுக்கு எதிர்ராக திருப்ப முடியும் என்ற உண்மையை அந்த குடும் தெரிந்து வைத்து முள்ளிவாய்க்கால் நிறை வேற்றியது. இன்று இதில் மட்டும் பூசி மெழுகி.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.